Friday, May 16, 2008

ராமதாஸுக்கு செலக்டிவ் அம்னீஷியா!

தி.முக.வைத் தாக்கிக் கொண்டிருந்த ராமதாஸ் சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியையும் தாக்கிப் பேசியிருக்கிறார். ராமதாஸ் சொன்ன புகாருடன் கி. வீரமணியை பெரியார் திடலில் சந்தித்தோம். அர்த்தத்துடனும் ஆவேச அனலுடனும் பேசினார்.

திமுகவுக்கும் ராமதாஸுக் கும் தான் பிரச்னை என்று நினைத்திருந்தோம். இப் போது ராமதாஸ் உங்களை யும் தாக்குகிறார்? உங்களுக் கும் அவருக்கும் என்ன பிரச்னை?

``ராமதாஸ் திடீரென்று நினைத்துக் கொண்டு யாரை வேண்டுமானாலும் தாக்கு வார். இது அவரது அண்மைக் கால வழக்கமாக இருக்கிறது. துணை நகரம் அமைப்பது தொடர்பாக நான் கூறிய கருத்துக்கள் அவருக்குக் கோபத்தை வரவழைத்திருக் கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள வளர்ந்து வரும் மாநகரங்கள் எல்லாவற்றுக்கும் குறிப்பாக சென்னைக்கும் துணைநகரம் அவசியம். இதுபோன்ற வளர்ச் சித் திட்டங்கள் காலத்தின் கட்டாயம். இதைப் புரிந்து கொள்ளாமல் தேவையின்றி என்னையும் முதல்வரையும் சேர்த்து உள்நோக்கம் கற்பிக் கிறார் ராமதாஸ்.

மலேசியாவிலும், சிங்கப் பூரிலும் உள்ள தொழிலதிபர் களுக்கு நிலம் வாங்கிக் கொடுப் பதற்காக, துணைநகரம் வேண்டும் என்று நீங்கள் சொல்வதாக அவர் குறிப்பிட் டிருக்கிறாரே?

``பொறுப்பு வாய்ந்த ஒரு அரசியல் கட்சியின் நிறுவன ரான ராமதாஸ் பொறுப்போடு அரசியல் கருத்துக்களைச் சொல்ல வேண்டாமா? என் மீது குற்றம் சொல்லும் இவர் ஆதாரங்களோடு அதை நிரூ பிப்பாரா? நிரூபிக்க முடியா விட்டால் அவர் நிலைப்பாடு என்ன? ராமதாஸுக்கு எப்போதுமே ஒரு பழக்கம். தனக்குத் தோன்றுவதையெல் லாம் பேசுவார். இப்டியெல் லாம் பேசினோமே என்று பின்பு யோசிக்க மாட்டார். உதாரணத்துக்கு முதலில் அரசியலில் ஈடுபட மாட் டேன் என்றார், சாட்டையைச் சொடுக்குவேன் என்றார். குடும்பத்தாரை அரசியலில் இழுக்க மாட்டேன் என்றார், இப்படியெல்லாம் பேசிய வரின் இன்றைய நிலையை யோசித்துப் பாருங்கள். இப் படிப்பட்ட பெருமைக்குரிய வர்தான் ராமதாஸ்.
இன்னொரு விஷயம். நான் துணைநகரம் வேண்டும் என்று சொன்னபோதுகூட அது எங்கே எந்தப் பகுதியில் எப்படி அமைய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. குறிப்பிட்ட பகுதியில் அமை யக்கூடாது என்று வேறு சிலர் தான் சொல்லுகிறார்கள். அவர்கள் பின்னணியில்தான் நில தாதாக்கள் இருப்பார் களோ என்ற சந்தேகம் நிச்சயம் மக்களுக்கு வரும்.

அதிமுக ஆட்சியின்போது அந்தக் கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளராக இருந் தீர்கள் என்றும் இப்போது திமுகவுக்கு கொ.ப. செ.யாக இருக்கிறீர்கள் என்றும் அவர் கூறுகிறாரே?

``தந்தை பெரியார் காலத் திலிருந்தே மதவெறி கட்சி களை திராவிடர் கழகம் ஆதரித்தது கிடையாது. அதே அடிப்படையில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமான பி.ஜே.பி., தலைமையில் அமைந்த கூட்டணியில் யார் இருந் தாலும் திராவிடர் கழகம் ஆதரிக்காது.
என்னை அணி மாறியவர் என்று சொல்லக் கூடிய மருத்துவர், தன்னைப் பற்றியும் தன் கட்சியைப் பற்றியும் கடந்த பத்து ஆண்டுகளாக மாறி மாறி அவர்கள் எடுத்த நிலைப்பாடுகள் பற்றியும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவற்றை நான் நினைவூட்டி னால் அவருக்கு மிகுந்த சங்கடம் ஏற்படும். சகோதரி யிடம் புதுவை ஒப்பந்தம் செய்தபிறகு, பட்டை நாமத்தை நெற்றியில் சுமந்து கொண்டு வெளியேறியது. இப்போது அவருக்கு நினை வில்லை போலும்.
டாக்டருக்கு அடிக்கடி `செலக்டிவ் அம்னீஷியா வந்து விடுகிறது. ராமதாஸின் அறிககைகயைப் பார்த்த போது கலைஞருடைய ஒரு வசனம்தான் எனக்கு நினை விற்கு வருகிறது. `மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறது என்பதே அது.
தி.மு.க.விற்கு கொள்கை பரப்புச் செயலாளராக இருக் கிறேன் என்று ராமதாஸ் சொல்கிறார். இதை நான் பெருமையாகக் கருதுகிறேன். திராவிடர் கழகம் தாய்க் கழகம். திமுக அதன் அரசியல் வடிவம். சேய்க் கழகம் ஐந்தா வது முறையாக ஆட்சிக்கு வந்த முதல்வர் கலைஞர். 84 வயதிலும் ஒரு இளைஞனைப் போல் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார். நித்தம் நித்தம் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் உதவிக் கொண் டிருக்கிற கலைஞருக்கு ஆதர வாக இருப்பதில் தவறில்லை.

பிற்படுத்தப்பட்டோருக்கு ஐம்பது சதவீத இடஒதுக் கீட்டை எம்.ஜி.ஆர். முதல மைச்சராக இருந்த போது பெற்றுத் தந்தது தி.க.வும், திமுகவும்தான். அதில் 20 சதவீதத்தை மிகவும் பிற்படுத் தப்பட்டவருக்காக ஒதுக்கியது கலைஞர். அதில் ராம தாஸுக்கு துளியும் சம்பந்த மில்லை. இதற்காக கலைஞ ருக்கு நன்றி சொல்லலாம்.

எந்தக் கூட்டணியிலும் சேராமல் பா.ம.க., தனித்து நின்றால் தேர்தலில் எத்தனை இடங்கள் பிடிக்கும் என்று தாங்கள் நினைக்கிறீர்கள்?

``எனக்கு ஆரூடத்திலோ ஜோதிடத்திலோ நம்பிக்கை இல்லை. அப்படிச் சொல்லப் பழக்கப்பட்டவனும் இல்லை. ஆனால் அந்த அனுபவம் அவ ருக்கு ஏற்கெனவே இருக் கிறதே (முகத்தில் புன்னகை) புதுவையில் கூட்டணியில் லாமல் தனித்து நின்றபோது ஒரு இடத்தில்கூட ஜெயிக்க முடியாமல் போனதை மறக் காமல் இருந்தால் சரி; (மீண்டும் புன்னகை).

- திருவேங்கிமலை சரவணன்
நன்றி: `குமுதம் 12.9.2007

No comments: