Saturday, May 31, 2008

சம்பிரதாயங்கள் தகர்கின்றன பெண்கள் பிணம் சுமந்து சுடுகாடு சென்றனர்


புதுக்கோட்டை மாவட்டம் தொண்டமாநல்லூர் கிராமத்தில் இறந்துபோன பெண் ஒருவரை அவரது உறவுக்காரப் பெண்களே சுமந்து சென்று சுடுகாட்டில் இறுதிச் சடங்கு நடத்திய சம்பவம் நடந்துள்ளது. ஆண்கள் மட்டும் தான் இந்தச் சடங்கைச் செய்யவேண்டும் என்றிருந்ததை மாற்றியுள்ள இம்மாதிரி நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் சீரங்கத்தில் திராவிடர் கழக மகளிரால் நிகழ்த்தப் பெற்று வரலாற்றை உருவாக்கியுள்ளது. மயிலாடுதுறையிலும் இதுபோல் நடைபெற்றுள்ளது.

அந்த வகையில் திருச்சி, தமிழ் கலை இலக்கியப் பெருமன்றப் பொறுப்பாளர் கவித்துவனின் துணைவியார் சுகுணாவின் முயற்சியால் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனை உறவினர் களும், ஊர்க்காரர்களும் எதிர்த்துள்ளனர். சுடுகாட்டுக்குப் பெண்கள் வரக்கூடாது என்றனர். தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துக் கூறி கவித்துவன் கிராம மக்களைச் சம்மதிக்கச் செய்தார்.

கவித்துவனுடைய வாழ்விணையரும் பகுத்தறிவாளர். இறந்த உடலைப் பெண்கள் தூக்கிச் செல்வது தவறல்ல என்று கூறினார். முதலில் எதிர்த்தவர்களே, பின்னர் பாராட்டினர் என்கிற செய்தியை சுகுணா தெரிவித்தார். அவருடன் குமாரி, அனுராதா, பெர்சியா, பாவனா ஆகியோர் உடலைச் சுமந்தனர்.

No comments: