Monday, May 19, 2008

கடவுளுக்கு அறிவு உண்டா? - சார்லஸ் பிராட்லா

எல்லாம் அறிந்தவர் என்று கூறப்படும் கடவுள் கண்டு அறியும் ஆற்றல் உள்ளவராக இருக்கமுடியாது

மாபெரும் கண்டு அறியும் ஆற்றலை ஒரு மனிதன் பெற்றிருக்கும் அதே நேரத்தில், மிகக் குறைந்த நினைவாற்றலையும் அவன் பெற்றிருக்கக் கூடும்; அல்லது அதிக நினைவாற்ற-லையும், குறைந்த கண்டறியும் ஆற்றலையும் பெற்றிருக்கக்கூடும். என்றாலும் இக் கண்டறி-யும் ஆற்றல், நினைவாற்றல் இரண்டும் நுண்ணறிவில் சேர்க்கப் பட்டுள்ளன. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட காட்சிகளைக் கண்டு ஒப்பிடும் ஆற்றல், மதிப்பீடு செய்யும் ஆற்றல், எதிர்வினையாற்றும் ஆற்றல் ஆகிய அனைத்தையும் இதே போன்று குறிப்பிடலாம். இவை அனைத்தும், மனதின் அனைத்து நிலைகளும் நுண்ணறிவு என்னும் சொல்லில் சேர்க்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற சொல் என்ன பொருள் தருவதாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கடவுள் நுண்ணறிவு பெற்றதாக இருக்க முடியாது என்று நாம் பதில் அளிக்கிறோம். கண்டு அறியும் ஆற்றல் என்பது ஒரு புதிய கருத்தைப் பெறுவது ஆகும் என்ப-தால், அவரால் எப்போதும் எதையும் கண்டு அறியமுடியாது. ஆனால் கடவுளோ அனைத்-தும் அறிந்தவர் என்று கூறப்படுகிறது; அதனால் அவரது கருத்துகள் அனைத்தும் எப்போதுமே நிலையானவையாகத்தான் இருக்க முடியும். ஒன்று அவர் எப்போதும் கண்டு அறிந்து கொண்டவராகவும், அறிந்து கொள்பவராகவும் இருக்க வேண்டும் அல்லது எதையும் கண்டு அறியாதவராக இருக்க வேண்டும். கடவுள் எப்போதும் எதையும் கண்டு அறிபவராக இருக்க முடியாது; அவ்வாறு அவர் இருந்தால், எப்போதும் அவர் புதிய அறிவைப் பெறு-பவராகவே இருப்பார். ஏதேனும் ஒரு நிலையில் அவர் இப்போது பெற்றிருக்கும் அறிவை விடக் குறைந்த அறிவையே பெற்றிருக்கும் நிலை இருந்திருக்க வேண்டும். அப்படியானால் அவர் முழுமையான அறிவைப் பெற்றவராக இருந்திருக்கவில்லை. அப்படியானால் அவர் கடவுளாகவே இருக்க முடியாது.

புரிந்து கொள்ளும் பகுத்தறிவு அற்ற முழுமையான நுண்ணறிவு இருக்க முடியுமா?
எதையும் கடவுளால் மறக்கவோ, நினைவு கூறவோ , ஒப்பிட்டுக் காணவோ, எதிர்வினை-யாற்றவோ, மதிப்பிடவோ இயலாது. புரிந்து கொள்ளுதல் என்பது இல்லாமல் முழுமையான நுண்ணறிவு என்பது இருக்க முடியாது. கலிரிட்ஜ் கூறுகிறார்: “புலன் அறிவுகளால் மதிப்பீடு செய்யும் ஆற்றலே நுண்ணறிவு என்பதாகும்.” எவருடைய ஆற்றல்? யாரோ ஒருவரின் ஆற்றல்? கடவுள் தன் உணர்வால் கண்டு அறிவும்படியானதாக, கடவுளைத் தாண்டி இருக்கும் ஏதேனும் ஒன்று உள்ளதா? பகுத்தறிவு இன்றி முழுமையான நுண்ணறிவு என்பது இருக்க முடியாது. கடந்த காலத்தைப் பற்றி அறிந்திருந்து, நிகழ்கால பட்டறிவு கொண்டு, எதிர்காலத்தில் ஏற்பட இயன்ற பட்டறிவை ஏறக்குறைய முன்னதாக ஊகித்துக் கூறும் மனநிலையையே பகுத்தறிவு என்று நாம் குறிப்பிடுகிறோம். கடவுளைப் பொறுத்தவரை அவருக்குக் கடந்த காலமும் , எதிர் காலமும் இருக்கமுடியாது. அதனால் பகுத்தறிவு என்பது அவருக்கு இயலாத ஒன்று. மனஉறுதியும், விருப்பமும் இல்லாமல் முழுமையான நுண்ணறிவு என்பது இருக்க முடியாது. கடவுளுக்கு இது உள்ளதா? கடவுள் உறுதியாக விரும்-பினால், அனைத்து ஆற்றல் பெற்ற அவரின் விருப்பம் தடை செய்ய முடியாததாக இருக்க வேண்டும். எல்லையற்றவரின் விருப்பம் மற்ற அனைத்து விருப்பங்களையும் நீக்கிய-தாகத்தான் இருக்க வேண்டும்.

நினைவாற்றலோ, பகுத்தறியும் ஆற்றலோ கடவுளுக்கு இருக்க முடியாது
கடவுள் எதையும் எப்போதும் கண்டறிய-முடியாது. கண்டு அறிவதும், புலன்களால் உணர்வதும் ஒன்று போலானவை. ஒவ்வொரு உணர்வும் ஒன்று மகிழ்ச்சி அளிப்பதாகவோ அல்லது துன்பம் அளிப்பதாகவோ இருக்கிறது. கடவுள் மாற்ற முடியாதவர், மாற இயலாதவர் என்றால் அவரை மகிழ்ச்சி அடையவோ துயரம் அடையவோ செய்ய இயலாது. ஒவ்வொரு புதிய உணர்வும் மன, உடல் நிலை-யில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். மாற்ற முடியாத வராக இருக்கும் கடவு-ளால் மாற இயலாது. உணர்ந்து அறிவது என்பதே அனைத்துக் கருத்துக்களுக்கும் தோற்று வாயாகும். ஆனால், மனதிற்கு வெளி-யே உள்ள பொருள்களை மட்டுமே உணர்ந்து அறிய முடியும். கடவுள் எல்லையற்றவராக இருந்தால், அவருக்கு வெளியில் எந்தப் பொருளும் இருக்க முடியாது. எனவே உணர்ந்தறிவது என்பது அவரால் இயலாதது. ஆனால், கண்டறியும் ஆற்றல் இன்றி நுண்ணறிவு எங்கேயிருந்து வந்தது?

மாற்றமற்றதாகக் கருதப்படும் கடவுளுக்கு மதிப்பீடு செய்யும் ஆற்றலும் இருக்க முடியாது
மாற்ற இயலாத கடவுளுக்குக் கடந்த காலம், எதிர்காலம் என்பது இல்லை என்பதால், கடந்த காலத்தைப் பற்றிய நினைவாற்ற-லையோ, எதிர்காலத்தைப் பற்றிப் பகுத்தறியும் ஆற்றலையோ கடவுள் கொண்டிருக்க முடியாது. கடந்த, நிகழ், எதிர் என்னும் சொற்கள் மாற்றத்-தைக் குறிப்பனவாகும். காலம் கடப்பதை அவை உறுதிப்படுத்துகின்றன. மாற்ற முடி-யாத கடவுளிடம் மாற்றம் ஏற்படுவது என்பது இயலாதது. கண்டறியும் ஆற்றலோ, நினைவாற்றலோ, பகுத்தறியும் ஆற்றலோ இன்றி நுண்ணறிவு என்பதை நீ கொண்டிருக்க முடியுமா? மதிப்பீடு செய்யும் ஆற்றலைக் கடவுள் பெற்றிருக்க இயலாது. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சிந்தனைகளை இணைத்துக் காண்பதோ, பிரித்துக் காண்ப-தோ மதிப்பிடும் செயலில் அடங்கியுள்ளது. இதற்கு மனநிலை மாற்றமும் தொடர்பு கொண்டது. மாற்ற முடியாத கடவுளிடம் மாற்றம் என்பது இருக்கமுடியாதது. கண்டு-அறியும் ஆற்றலோ, நினைவாற்றலோ, பகுத்தறியும் ஆற்றலோ, மதிப்பிடும் ஆற்றலோ இன்றி நுண்ணறிவை மட்டும் நீ எவ்வாறு பெற்றிருக்க இயலும்? கடவுளால் சிந்திக்க முடியாது. நினைக்கப்படும் பொருள், நினைக்கப் படாத பொருளில் இருந்து பிரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே சிந்தனை என்பதன் விதியாகும். வேறு வகையில் சிந்திப்பது என்று சொன்னால், ஏதுமில்லாத-தைப் பற்றி சிந்திப்பதாகும்; எந்த தெளிவான குறியீடும் இன்றி ஒரு கருத்தைக் கொள்வது என்பது எந்தக் கருத்துமே அற்றதாகும். என்றாலும் இவ்வாறு பிரித்துக் காண்பது மாற்றத்தை உள்ளடக்கியது. மாற்ற முடியாத கடவுளிடம் மாற்றம் என்பது இருக்க முடியாது. நினைவாற்றலில், நினைவு கூறப்படும் பொருள் மறந்துபோன பொருள்களிடமிருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவே வேறு-படுத்திக் காணப் பட வேண்டும். கடவுளால் மறக்க இயலுமா? சிந்தனை என்பது இன்றி நுண்ணறிவை உன்னால் பெற்றிருக்க இயலுமா?- தெய்வத்தின் ஆற்றல்களில் ஒன்றாக எல்லை-யற்ற நுண்ணறிவைத் தான் குறிப்பிடவில்லை என்றும், மனித இனத்தில் ஓரளவு எல்லையற்ற நுண்ணறிவு காணப்படுகிறது என்று குறிப்பிடுவதாகவும், ஆத்திகர் இதற்கு பதில் அளித்தால், நுண்ணறிவு என்று வேறு எதை அவர் குறிப்பிடுகிறார் என்பதைத் தெளிவாகவும், குறிப்பாகவும் விளக்க அவர் கடமைப்பட்டுள்ளார். இதைச் செய்யாதவரை, மேலே கூறப்பட்டவைகளுக்கு விடை தேவை.
காரண காரிய தத்துவம் இனியும் செல்லுபடியாகாது

வேறொரு ஆன்மீகக் கோட்பாடு இவ்வாறு கூறுகிறது: “ஒவ்வொரு காரியத்துக்கும் ஓர் காரணம் இருக்க வேண்டும். முதற் காரணமான பிரபஞ்சம் எல்லையற்றதாக இருக்க வேண்டும்; அந்த முதற்காரணமான பிரபஞ்சமே கடவு-ளாக இருக்கவேண்டும்.” கடவுள்தான் முதல் காரணம் என்று கூறுவதற்கொப்பாகும் இது. காரணம் என்பதால் என்ன புரிந்து கொள்ளப்-படுகிறது? முழுமையாக விளக்குவதானால், அச் சொல்லுக்கு எந்த மதிப்புமே இல்லை. அதனால் காரணம் என்பது எல்லையற்றதாக, முடிவற்றதாக இருக்க முடியாது. முதல் காரணம் என்பதால் அறிந்து கொள்ளப்படுவது என்ன? ‘வட்ட முக்கோணம்’ என்ற சொற்-றொடர் என்ன பொருள் அளிக்குமோ அதை விட அதிகமான பொருளை ‘முதல் காரணம்’ என்ற சொல் நமக்கு அளித்துவிடவில்லை. காரணமும் காரியமும் தொடர்புடைய சொற்கள். ஒவ்வொரு காரணமும் ஏதோ சில முன்நிகழ்வுகளின் பாதிப்பாகும்; அவ்வாறே ஒவ்வொரு பாதிப்பும் அதன் தொடர்-விளைவாகும். முதன்மையான, தொடக்க காரணம் ஒன்றினால் உயிர்வாழ்ந்திருப்பது முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்கவே முடியாது.

உயிரினத் தோற்றத்தின் தொடக்கத்தைக் கண்டறிவது அவ்வளவு எளிதானதல்ல
பிரபஞ்சத்தின் தொடக்கம் என்று கூறப்-பட்டுள்ளதை ஆத்திகர் சிந்தித்துப் பார்க்கவே இல்லை; ஆனால் சிந்தித்துப் பார்க்காமலே ஒப்புக் கொள்ளப்பட்டதாகும் அது. மோன்-டக்னியின் மொழியில் கூறுவதானால், “தாங்கள் நம்புவதை மனிதர்கள் அவர்களாகவே தங்களை நம்பச் செய்து கொள்கிறார்கள்.” படைப்பு என்று அழைக்கப் படுவதை நம்புவது என்பது, அறியாத ஒன்றின் தலைவாயில் முன் நுண்ணறிவு என்பது விழுந்து வணங்குவதைத் தவிர வேறொன்றுமில்லை. தொடர்ந்த, முடிவற்ற உயிரினத் தோற்றத்தின் வழியில் உயிர் வாழ்ந்திருத்தல் என்ற கோட்பாடே தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்பதை மட்டும் நம்மால் அறிய முடிகிறது. இந்த வழியில் தொடக்கம் என்று எதுவும் நமக்கு இருக்கவில்லை; இருள் சூழ்ந்த கடந்த காலத்தில் அதனை நாம் தேடுகிறோம். ஆனால் நம்மால் சிறிது தொலைவுதான் செல்லமுடிகிறது; நாம் எவ்வளவு தூரம் சென்றாலும், இன்னும் செல்லவேண்டிய தூரம் மிக அதிகமானதாகவே உள்ளது.

வரையறைக்குட்பட்ட பாதிப்பிலிருந்து எல்லையற்ற முதற்காரணத்தை எவ்வாறு ஊகித்தறிய முடியும்?

‘பிரபஞ்ச காரணம்’ என்று பின்னர் எதைக் குறிப்பிடுகிறீர்கள்? அதன் முழுமையான முக்கியத்துவத்துடன் காரணம் என்பதற்கு °பினோசா கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கிறார்: “ காரணம் என்று சொல்வதன் மூலம் நான் புரிந்து கொள்ள இயன்றது, உயிர் வாழ்ந்திருத்தல் என்பதில் அடங்கியிருக்கும் உட்கருத்து என்றோ அல்லது அதன் இயல்பு உயிர்வாழ்ந்திருத்தல் என்று மட்டுமோ கருத இயன்றது என்பதுதான்.” காரணம் மற்றும் உயிர்வாழ்ந்திருத்தல் என்ற இரு சொற்களும் ஒரே பொருளை அளிப்பவையாக °பினோசா கருதுகிறார். இவ்வாறு இச்சொற்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு ஏதேனும் எதிர்ப்பு இருந்தால், “நோக்கங்களும் அவற்றை எட்டுவதற்கான வழிகளும்” என்று கூறும் இதே போன்ற சொற்றொடருக்கு உள்ள முக்கியத்துவத்தை விட அதிக பொருள் எதையும் அது பெற்றிருக்கவில்லை. “ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும்.” ஒவ்வொரு காரியம் என்று கூறுவது காரியங்கள் என்ற பன்மையைக் குறிக்கிறது. ஒவ்வொரு காரியமும் முடிவற்றதாக இருக்க வேண்டும்; அப்படியானால், வரையறை கொண்ட பாதிப்பிலிருந்து, உலகளாவிய, எல்லையற்ற முதற்காரணத்தை தத்துவ ரீதியாக எவ்வாறு ஊகித்தறியமுடியும்?

No comments: