Monday, May 19, 2008

மருத்துவர் ராமதாசுக்கு அமைச்சர் க. பொன்முடி அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பதில்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர் களுக்குப் பதில் அளிக்கும் வகையி லும், உயர்கல்வித் துறையின் சிறப் பான செயல்பாடுகள்பற்றி பொது மக்கள் தெரிந்துகொள்ளும் வகை யிலும் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் டாக்டர் க. பொன்முடி அடுக்கடுக்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

அதுபற்றிய செய்திக் குறிப்பு வருமாறு:-

1. பல்வேறு சட்டச் சிக்கல் கள் - சூழல்களை சமாளித்து தொழிற் படிப்பிற்கான நுழை வுத் தேர்வு ரத்து செய்யப்பட் டது. - இதனால் கடந்த ஆண்டை விட கிராமப்புற மாணவர்கள் 43.9 சதவிகிதம் பேர் முன்பைவிட கூடுதலாகப் பயன்பெற்றனர்.

சுயநிதிக் கல்லூரிகள்

2. கடந்த ஆட்சியில் சுய நிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 50 சத விகிதம் நிர்வாக ஒதுக்கீடு 50 சதவிகிதம் என்றி ருந்ததை மாற்றி, அரசு ஒதுக் கீடு 65 சதவிகிதம், நிர்வாக ஒதுக் கீடு 35 சதவிகிதம் என நிர்ண யித்ததால் 2007-2008இல் மட் டும் மேலும் 56,041 மாணவர் கள் பயன் பெற்றனர். தனியார் கல்லூரிகள் உயர்நீதி மன்றத் தில் இதற்கு எதிர்ப்பான தீர்ப் பைப் பெற்ற போதும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் மூலம் மீண்டும் 65 - 35 தொடர்ந்தது.

3. கடந்த ஆட்சியில் அரசு நிதி உதவியோடு பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள் துவக்கப்படவில்லை. ஆனால் கலைஞர் ஆட்சியில் இரண்டு ஆண்டுகளில் மேட்டூர், வால் பாறை, பெரம்பலூர், ஒரத்த நாடு, சுரண்டை, குளித்தலை ஆகிய ஆறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளன.

கட்டண ரத்தால் பலன்

4. அரசு கல்லூரி மாணவர் களுக்கான கல்விக் கட்ட ணத்தை அறவே ரத்து செய்த தன் மூலமாகவும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கியதன் மூல மாகவும் அனைத்து அரசுக் கல்லூரிகளில் சுழற்சி முறை'' கொண்டு வந்ததன் மூலமாக வும், அரசுக் கல்லூரிகளிலும் கலந்தாய்வு முறையில் மாண வர் சேர்க்கை கொண்டு வந்த தாலும் கடந்த இரண்டு ஆண் டுகளில் 1,57,957 பேர் அதிக மாக கல்லூரிகளில் சேர்ந்துள் ளதை ராமதாஸ் அறிவாரா?

உயர் கல்வியில் கடந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் வித்தியாசமே இல்லை - என்று உள்நோக்கமே இல்லாத உண்மை விளம்பி'' கூறுகிறார்.

கடந்த ஆட்சியில் அரசு கல்லூரிகளில் உருவாக்கப் பட்டு அதிக நிதிக் கட்டணம் வசூலித்த சுயநிதிப் பாடப் பிரி வுகள் பொது வகைப் பாடப் பிரிவுகளாக மாற்றப்பட்டது கலைஞர் ஆட்சியில் தான் என்பது தெரியுமா?

அரசுப் பொறியியல் கல் லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ. 12,550 லிருந்து ரூ. 7,550 ஆக குறைக்கப்பட்டதும் இந்த ஆட்சியில் தான் என்பதாவது தெரியுமா?

பாலிடெக்னிக்குக்கும் கட்டணம் ரத்து!


சென்ற ஆண்டு முதல் அனைத்து அரசு கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் ரத்து செய்ததால் 3,74,254 மாணவ மாணவியர் பயன் அடைந்தது மட்டுமின்றி இந்த ஆண்டு அந்தச் சலுகை அரசு பாலிடெக்னிக் களுக்கு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் சுமார் 25 ஆயிரம் மாணவர்கள் பயன் அடைய உள்ளதாவது தெரியுமா? அவர்களுக்கு சென்ற ஆண்டு முதல் இல வசப் பாடப் புத்தகம் வழங்கப் படுவதையாவது அறிவாரா?

கடந்த ஆட்சியில் கெஸ்ட் லெட்சரர் என்று சொல்லி ஆசிரியர்கள் அவமானப்படுத் தப்பட்டதோடு பணி நியம னமே தடை செய்யப்பட்டதே! அத்தடையை நீக்கி 2007-2008இல் 914 விரிவுரையாளர் களும் - அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2,600 விரிவுரை யாளர்களும் நியமனம் செய்யப் பட்டு இந்த ஆண்டில் தாழ்த் தப்பட்டவர்களுக்கான 522 பின்னடைவுப் பணியிடங்க ளோடு மேலும் 540 விரிவுரை யாளர்கள் நியமிக்கப்பட விருக்கிறார்களே, அது டாக் டர் ராமதாசுக்குத் தெரியாதா?

அண்ணா பல்கலைக் கழ கம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு பரவலாக்கப் பட்டுள்ளதை அறியாரா?
மேலும் இந்த ஆண்டில் இப்பல்கலைக் கழகங்களின் மூலமாக திண்டி வனம், விழுப் புரம், பண்ருட்டி, நாகப்பட்டி னம், ராமநாதபுரம், அரியலூர் ஆகிய ஆறு இடங்களில் அரசு கட்டணத்தோடு (7550 ரூபாய்) பொறியியல் கல்லூரி கள் தொடங்கப்பட்டு புதிய தாக 1440 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது ராம தாசுக்குத் தெரியாதா?

மேலும் சென்ற ஆண்டே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் படிப்புகள் காலி இருந்ததைத் தவிர்க்கவும், மேலும் பலர் சேரவும், கிரா மப்புற மாணவர்கள் பயன் பெறவும், குறைந்த பட்ச மதிப் பெண்களை குறைத்ததற்கு கூட உள்நோக்கம் கற்பிக்க முனையலாமா?

மூன்று மத்தியப் பல்கலைக் கழகங்கள்

கல்வியாளர் டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் முதல் அமைச்சருக்கு 11.5.2008 அன்று எழுதிய கடிதத்தை டாக்டர் ராமதாஸ் ஒரு முறை யாவது படிக்க வேண்டுகிறேன். 13.5.2008 நாளிட்ட இந்து'' நாளேட்டில் தலைவர் கலைஞர் டெல்லியில் மாண்புமிகு மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் அவர்களோடு கொண்ட தொடர்பால் தமிழகத்திற்குக் கிடைத்திருக்கின்ற மூன்று மத்திய பல்கலைக் கழகங் களைப்பற்றி - அந்தப் பத்திரி கையின் செய்தியாளர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையையும் தயவு செய்து எல்லாம் தெரிந்த டாக்டர் ராமதாஸ் படிக்க வேண்டுகிறேன்.

மேலும் தமிழகத்தில் அறி விக்கப்பட்டுள்ள ஏழு புதிய ஒருமைப் பல்கலைக் கழகத்தைப் பற்றியும் அவரும் வேறு கட்சியினரும் பல்வேறு கருத் துகளை கூறி வருகின்றனர். மத்திய அரசின் தேசிய அறிவு சார் ஆணையம் (National Knowledge Commission) இந்தி யாவில் 1500 பல்கலைக் கழகங் களாவது தோன்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். கல் வித்தரம் உயர, சிறந்த கல்லூரி கள் ஆராய்ச்சியை வளர்க்க பல்கலைக் கழகங்களாக உயர்த் தப்பட வேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர். இதில் தனி யார் மற்றும் அரசு பல்கலைக் கழகங்கள் அடங்கும்.

கல்வியியற் பல்கலைக் கழகம்

டாக்டர் ராமதாஸ் 'அரசு கல்லூரிகளை விட்டு விட்டு தனியார் கல்லூரிகள் மீது என்ன கரிசனை' என்கிறார். அய்ந்து அரசு கல்லூரிகள் - மாநிலக் கல்லூரி - ராணி மேரிக் கல்லூரி - குடந்தை கல்லூரி (ஆண்கள்-பெண்கள்) கோவை கல்லூரி - இவை அய்ந்தும்- ஒருமை (Unitary) பல் கலைக் கழகங்களாக மாற்றப் படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை பணிவுடன் தெரி விக்கிறேன்.

மேலும் 'கல்வியி யற் பல்கலைக் கழகமும்' இந்தி யாவிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ளது அவருக்குத் தெரியாதா? மேலும் சில சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இது குறித்துக் கருத்துகளை தெரி வித்துள்ளன. இவைகள் பல் கலைக் கழகங்களாக மாற்றப் படுவதால் தற்போது அவை களுக்கு அரசு கொடுத்து வரும் நிதி கண்டிப்பாக நிறுத் தப்பட மாட்டாது. மேலும் புதிய பல்கலைக் கழகங்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழுவின் நிதியும் கிடைக்கும், மாணவர்களுக்கு ஆராய்ச்சி வாய்ப்பும் பெருகும். தற்போது அரசுக் கல்லூரிகளுக்கு உள்ள சலுகைகள் அனைத்தும் இப் புதிய ஒருமைப் பல்கலைக் கழக மாணவர்களுக்கும், ஆசி ரியர்களுக்கும் தொடரும். ஆகவே தான் கல்வியின் தரத்தை உயர்த்தவும் ஆசிரி யர்களின் நிலையை மேம் படுத்தவும், பல்கலைக் கழக மானியக் குழுவின் பரிந்துரை களின்படியும் தேசிய அறிவு சார் ஆணையக் கருத்தின் படி யும் ஏழு புதிய பல்கலைக் கழ கங்கள் அறிவிக்கப்பட்டுள் ளன. இவைகளின் நிறைகுறை களைப் பற்றி ஆர்வமுடையவர் களுடனும், சட்டமன்ற ஆய் வுக் குழுவுடனும் (Select Committee) இந்த அரசு விவா தித்து விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்ப தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments: