Saturday, May 17, 2008

மருத்துவர் ராமதாஸ் பெயில் மார்க் போடுவதால் ஒன்றும் குறைந்துவிடாது

அரசியல், சமுதாயத் தேர்வுகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரிடம் பாஸ் மார்க் வாங்கியுள்ளேன். மருத்துவர் ராமதாஸ் பெயில் மார்க் போடுவதாலேயே எனக்கு ஒன்றும் குறைந்து விடாது என்று முதல்வர் கலைஞர் அவர்கள் செய்தியளாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி விவரம் வருமாறு:

செய்தியாளர்: கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் நீங்கள் பாஸ் மார்க் பெறவில்லை என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே, இதற்கு உங்கள் பதில் என்ன?

கலைஞர் : நான் ஏற்கெனவே எல்லாப் பாடங்களிலும் பொதுவான அரசியல், சமுதாயத் தேர்வுகளில் தந்தை பெரியாரிடமும், பேரறிஞர் அண்ணாவிடமும், ஏன் பெருந்தலைவர் காமராஜரிடமும் கூட பாஸ் மார்க் வாங்கியிருக்கிறேன். மருத்துவர் ராமதாஸ் எனக்கு பெயில் மார்க் போடுவதாலேயே ஒன்றும் குறைந்துவிடாது. நான் எஸ்.எஸ்.எல்.சி. யிலேயே பெயில் ஆனவன். அதனால்தான் இயக்கத்திலும், பொது வாழ்விலும் ஈடுபட்டு முதலமைச்சராகவே ஆகியிருக்கிறேன். மருத்துவர் ராமதாஸ் சொல்வதால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை. அதை ஒரு Credit ஆகவே கருதுகிறேன்.

செய்தியாளர் : அமைச்சரவையில் மாறுதல் செய்யப் போகிறீர்களா?

கலைஞர்: உண்டென்றும் சொல்வதற் கில்லை; இல்லை யென்றும் சொல்வதற்கில்லை.

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.

No comments: