Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

Sunday, June 15, 2008

ஸ்டாலின் பலத்தை திருநெல்வேலி மாநாட்டில் நிரூபித்தார். இப்போது உங்கள் பலத்தை காட்ட இந்த மாநாடு நடத்தப்படுகிறதா? -கனிமொழி பேட்டி


கடலூரில் தி.மு.க. மகளிரணி முதல் மாநில மாநாட்டு கொடியேற்று விழா முடிந்த தும் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

கேள்வி: இத்தனை வருடங்கள் கழித்து முதல் மகளிர் அணி மாநாடு நடத்த காரணம் என்ன?

பதில்: மகளிர் அணி சார்பில் மாநாடு நடத்த வேண்டும் என்று சில வருடங்களாகவே தலைவரிடம் கேட்டு வந்திருக்கிறோம். இப்போது தான் மாநாடு நடத்துவதற்கு அனு மதி தந்திருக்கிறார். மற்றபடி இப்போது மாநாடு நடத்து வதற்கு என்று முக்கிய காரணம் எதுவும் இல்லை.

கேள்வி: மாநாட்டின் நோக்கம் என்ன?

பதில்: பெண்கள் விழிப் புணர்வு அடைய வேண்டும், சட்டமன்றம், நாடாளுமன்றத் தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் மாநாடாக இது இருக்கும். இதனை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த மாநாடு அந்த இட ஒதுக் கீட்டை பெற்றுத் தரும் என்று நம்புகிறோம். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வும், எழுச்சியும், மகிழ்ச்சியும் இந்த மாநாடு ஏற்படுத்தும்.

கேள்வி: அ.தி.மு.க.விடம் பெண்கள் வாக்கு வங்கி உள்ளதால் உங்கள் பக்கமும் பெண்கள் வாக்கு வங்கியை இழுக்க நடக்கும் முயற்சியாக இந்த மாநாடு இருக்குமா?

பதில்: மற்ற கட்சிகளுக்கு தான் பெண்கள் ஆதரவு இருக்கிறது என்று கூறுவது ஒரு மாயை. தி.மு.க. ஆரம்பித்த காலத்தில் இருந்தே பெண்கள் ஆதரவு எங்களுக்கு இருந்து வந்திருக்கிறது. இன்னும் சொல் லப் போனால் பெண்களுக்கு அதிக உரிமைகளை பெற்றுத் தந்ததும், பெண்கள் மேம் பாட்டுக்கு பாடுபடுவது போன்ற செயல்களில் அதிக மாக ஈடுபடுவது தி.மு.க. தான். தி.மு.க.வை மேலும் அதிகமான பெண்களிடம் எடுத்துச் செல்வ தற்கும், பெண்கள் தி.மு.க.வில் அதிகமாக இணைவதற்கும் இந்த மாநாடு பெரிதும் உதவும்.

கேள்வி: உங்களாலும் ஆள் பலத்தை காட்ட முடியும் என்று காட்டுவதற்காக இந்த மாநாடா?

பதில்: அப்படி எந்த நிர்ப் பந்தமும் எங்களிடம் இல்லை. தி.மு.க.வில் ஏற்கெனவே நிறைய பெண் தலைவர்கள் இருக் கிறார்கள். எந்த குறிப்பிட்ட நபரையும் பிரபலப்படுத்த இந்த மாநாட்டை நடத்த வில்லை.

கேள்வி: உள்ளாட்சித்துறை அமைச்சர் அவரது பலத்தை திருநெல்வேலி மாநாட்டில் நிரூபித்தார். இப்போது உங்கள் பலத்தை காட்ட இந்த மாநாடு நடத்தப்படுகிறதா?


பதில்: மு.க.ஸ்டாலின் ஒரு தலைவர். நான் தலைவர் அல்ல. நெல்லை மாநாட்டுக்கும் கடலூர் மாநாட்டுக்கும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அந்த மாநாடு அவரது முடிவு. இந்த மாநாடு மகளிர் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் மாநாடு. அவரை என்னோடு ஒப்பிடக் கூடாது.

இவ்வாறு கனிமொழி பதில் அளித்தார்.

Monday, June 09, 2008

கச்சத் தீவு உரிமைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை பயணம்






தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீனவர் உரிமைக் கோரிக் கைப் பயணம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

கரூரில் நேற்று செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

திட்டத்தைப் பற்றி முடிவு செய்யும் அதிகா ரம் கர்நாடகத்துக்கு இல்லை. அவர்கள் காவிரியை உற்பத்தி செய்யவில்லை. பா.ஜ.க. தோன்றுவதற்கு முன்பே காவிரி இங்கு வந்து கொண்டு இருக் கிறது. மாநிலத்து மாநிலம் ஒரு பேச்சு என்று பா.ஜ.க. செயல் படுகிறது.
கடற்படை, கடலோரப் பாதுகாப்புப் படை இருந்தும் தமிழக மீனவர்களை இலங் கைக் கடற் படையினர் கடத்து வது, கொல்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 420 பேர் கடத்தப் பட்டு 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்களை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் அல்லது கச்சத் தீவு உரிமையை உறுதிப் படுத்த வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி 25 தேதி முதல் 30 தேதி வர கடற்கரை மாவட்டங்களில் மீனவர் உரிமை கோரிக் கைப் பயணத்தை எங்கள் கட்சி நடத்தவுள்ளது.
இவ்வாறு தா. பாண்டியன் கூறினார்.

கச்சத் தீவு உரிமைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை பயணம்

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீனவர் உரிமைக் கோரிக் கைப் பயணம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

கரூரில் நேற்று செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

திட்டத்தைப் பற்றி முடிவு செய்யும் அதிகா ரம் கர்நாடகத்துக்கு இல்லை. அவர்கள் காவிரியை உற்பத்தி செய்யவில்லை. பா.ஜ.க. தோன்றுவதற்கு முன்பே காவிரி இங்கு வந்து கொண்டு இருக் கிறது. மாநிலத்து மாநிலம் ஒரு பேச்சு என்று பா.ஜ.க. செயல் படுகிறது.
கடற்படை, கடலோரப் பாதுகாப்புப் படை இருந்தும் தமிழக மீனவர்களை இலங் கைக் கடற் படையினர் கடத்து வது, கொல்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 420 பேர் கடத்தப் பட்டு 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்களை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் அல்லது கச்சத் தீவு உரிமையை உறுதிப் படுத்த வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி 25 தேதி முதல் 30 தேதி வர கடற்கரை மாவட்டங்களில் மீனவர் உரிமை கோரிக் கைப் பயணத்தை எங்கள் கட்சி நடத்தவுள்ளது.
இவ்வாறு தா. பாண்டியன் கூறினார்.

Wednesday, May 21, 2008

சுப்பிரமணியசாமியை கைது செய்ய வேண்டும்

தன்னிடம் இன்னும் பல அமைச்சர்கள் பேசிய தொலைபேசிப் பேச்சின் குறுந்தகடுகள் உள்ளன என்று மிரட்டும் சுப்பிரமணியசாமி யைக் கைது செய்து அவருக்கு அவை எப்படிக் கிடைத்தன என்று விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று செய் தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் இது பற்றி பேசியது:

தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பது அநாகரீகமானது சட்ட விரோதமானது தனி மனித உரிமைக்கு எதிரானது. இதனை யார் செய்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த விவகாரத்தில் தொலை பேசிகளை ஒட்டுக் கேட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, இதில் சம்பந்தப்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது தவறான முன்மாதிரியாகிவிடும்.

இன்னும் பல அமைச்சர் களின் சி.டி. தன்னிடம் இருப்ப தாக சுப்பிரமணியசாமி மிரட் டுகிறார். எனவே சி.டி.க்கள் அவருக்கு எப்படிக் கிடைத்தன என்பது பற்றி அவரைக் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.

- இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Saturday, May 17, 2008

மருத்துவர் ராமதாஸ் பெயில் மார்க் போடுவதால் ஒன்றும் குறைந்துவிடாது

அரசியல், சமுதாயத் தேர்வுகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரிடம் பாஸ் மார்க் வாங்கியுள்ளேன். மருத்துவர் ராமதாஸ் பெயில் மார்க் போடுவதாலேயே எனக்கு ஒன்றும் குறைந்து விடாது என்று முதல்வர் கலைஞர் அவர்கள் செய்தியளாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி விவரம் வருமாறு:

செய்தியாளர்: கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் நீங்கள் பாஸ் மார்க் பெறவில்லை என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே, இதற்கு உங்கள் பதில் என்ன?

கலைஞர் : நான் ஏற்கெனவே எல்லாப் பாடங்களிலும் பொதுவான அரசியல், சமுதாயத் தேர்வுகளில் தந்தை பெரியாரிடமும், பேரறிஞர் அண்ணாவிடமும், ஏன் பெருந்தலைவர் காமராஜரிடமும் கூட பாஸ் மார்க் வாங்கியிருக்கிறேன். மருத்துவர் ராமதாஸ் எனக்கு பெயில் மார்க் போடுவதாலேயே ஒன்றும் குறைந்துவிடாது. நான் எஸ்.எஸ்.எல்.சி. யிலேயே பெயில் ஆனவன். அதனால்தான் இயக்கத்திலும், பொது வாழ்விலும் ஈடுபட்டு முதலமைச்சராகவே ஆகியிருக்கிறேன். மருத்துவர் ராமதாஸ் சொல்வதால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை. அதை ஒரு Credit ஆகவே கருதுகிறேன்.

செய்தியாளர் : அமைச்சரவையில் மாறுதல் செய்யப் போகிறீர்களா?

கலைஞர்: உண்டென்றும் சொல்வதற் கில்லை; இல்லை யென்றும் சொல்வதற்கில்லை.

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.

Friday, May 16, 2008

ராமதாஸுக்கு செலக்டிவ் அம்னீஷியா!

தி.முக.வைத் தாக்கிக் கொண்டிருந்த ராமதாஸ் சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியையும் தாக்கிப் பேசியிருக்கிறார். ராமதாஸ் சொன்ன புகாருடன் கி. வீரமணியை பெரியார் திடலில் சந்தித்தோம். அர்த்தத்துடனும் ஆவேச அனலுடனும் பேசினார்.

திமுகவுக்கும் ராமதாஸுக் கும் தான் பிரச்னை என்று நினைத்திருந்தோம். இப் போது ராமதாஸ் உங்களை யும் தாக்குகிறார்? உங்களுக் கும் அவருக்கும் என்ன பிரச்னை?

``ராமதாஸ் திடீரென்று நினைத்துக் கொண்டு யாரை வேண்டுமானாலும் தாக்கு வார். இது அவரது அண்மைக் கால வழக்கமாக இருக்கிறது. துணை நகரம் அமைப்பது தொடர்பாக நான் கூறிய கருத்துக்கள் அவருக்குக் கோபத்தை வரவழைத்திருக் கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள வளர்ந்து வரும் மாநகரங்கள் எல்லாவற்றுக்கும் குறிப்பாக சென்னைக்கும் துணைநகரம் அவசியம். இதுபோன்ற வளர்ச் சித் திட்டங்கள் காலத்தின் கட்டாயம். இதைப் புரிந்து கொள்ளாமல் தேவையின்றி என்னையும் முதல்வரையும் சேர்த்து உள்நோக்கம் கற்பிக் கிறார் ராமதாஸ்.

மலேசியாவிலும், சிங்கப் பூரிலும் உள்ள தொழிலதிபர் களுக்கு நிலம் வாங்கிக் கொடுப் பதற்காக, துணைநகரம் வேண்டும் என்று நீங்கள் சொல்வதாக அவர் குறிப்பிட் டிருக்கிறாரே?

``பொறுப்பு வாய்ந்த ஒரு அரசியல் கட்சியின் நிறுவன ரான ராமதாஸ் பொறுப்போடு அரசியல் கருத்துக்களைச் சொல்ல வேண்டாமா? என் மீது குற்றம் சொல்லும் இவர் ஆதாரங்களோடு அதை நிரூ பிப்பாரா? நிரூபிக்க முடியா விட்டால் அவர் நிலைப்பாடு என்ன? ராமதாஸுக்கு எப்போதுமே ஒரு பழக்கம். தனக்குத் தோன்றுவதையெல் லாம் பேசுவார். இப்டியெல் லாம் பேசினோமே என்று பின்பு யோசிக்க மாட்டார். உதாரணத்துக்கு முதலில் அரசியலில் ஈடுபட மாட் டேன் என்றார், சாட்டையைச் சொடுக்குவேன் என்றார். குடும்பத்தாரை அரசியலில் இழுக்க மாட்டேன் என்றார், இப்படியெல்லாம் பேசிய வரின் இன்றைய நிலையை யோசித்துப் பாருங்கள். இப் படிப்பட்ட பெருமைக்குரிய வர்தான் ராமதாஸ்.
இன்னொரு விஷயம். நான் துணைநகரம் வேண்டும் என்று சொன்னபோதுகூட அது எங்கே எந்தப் பகுதியில் எப்படி அமைய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. குறிப்பிட்ட பகுதியில் அமை யக்கூடாது என்று வேறு சிலர் தான் சொல்லுகிறார்கள். அவர்கள் பின்னணியில்தான் நில தாதாக்கள் இருப்பார் களோ என்ற சந்தேகம் நிச்சயம் மக்களுக்கு வரும்.

அதிமுக ஆட்சியின்போது அந்தக் கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளராக இருந் தீர்கள் என்றும் இப்போது திமுகவுக்கு கொ.ப. செ.யாக இருக்கிறீர்கள் என்றும் அவர் கூறுகிறாரே?

``தந்தை பெரியார் காலத் திலிருந்தே மதவெறி கட்சி களை திராவிடர் கழகம் ஆதரித்தது கிடையாது. அதே அடிப்படையில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமான பி.ஜே.பி., தலைமையில் அமைந்த கூட்டணியில் யார் இருந் தாலும் திராவிடர் கழகம் ஆதரிக்காது.
என்னை அணி மாறியவர் என்று சொல்லக் கூடிய மருத்துவர், தன்னைப் பற்றியும் தன் கட்சியைப் பற்றியும் கடந்த பத்து ஆண்டுகளாக மாறி மாறி அவர்கள் எடுத்த நிலைப்பாடுகள் பற்றியும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவற்றை நான் நினைவூட்டி னால் அவருக்கு மிகுந்த சங்கடம் ஏற்படும். சகோதரி யிடம் புதுவை ஒப்பந்தம் செய்தபிறகு, பட்டை நாமத்தை நெற்றியில் சுமந்து கொண்டு வெளியேறியது. இப்போது அவருக்கு நினை வில்லை போலும்.
டாக்டருக்கு அடிக்கடி `செலக்டிவ் அம்னீஷியா வந்து விடுகிறது. ராமதாஸின் அறிககைகயைப் பார்த்த போது கலைஞருடைய ஒரு வசனம்தான் எனக்கு நினை விற்கு வருகிறது. `மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறது என்பதே அது.
தி.மு.க.விற்கு கொள்கை பரப்புச் செயலாளராக இருக் கிறேன் என்று ராமதாஸ் சொல்கிறார். இதை நான் பெருமையாகக் கருதுகிறேன். திராவிடர் கழகம் தாய்க் கழகம். திமுக அதன் அரசியல் வடிவம். சேய்க் கழகம் ஐந்தா வது முறையாக ஆட்சிக்கு வந்த முதல்வர் கலைஞர். 84 வயதிலும் ஒரு இளைஞனைப் போல் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார். நித்தம் நித்தம் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் உதவிக் கொண் டிருக்கிற கலைஞருக்கு ஆதர வாக இருப்பதில் தவறில்லை.

பிற்படுத்தப்பட்டோருக்கு ஐம்பது சதவீத இடஒதுக் கீட்டை எம்.ஜி.ஆர். முதல மைச்சராக இருந்த போது பெற்றுத் தந்தது தி.க.வும், திமுகவும்தான். அதில் 20 சதவீதத்தை மிகவும் பிற்படுத் தப்பட்டவருக்காக ஒதுக்கியது கலைஞர். அதில் ராம தாஸுக்கு துளியும் சம்பந்த மில்லை. இதற்காக கலைஞ ருக்கு நன்றி சொல்லலாம்.

எந்தக் கூட்டணியிலும் சேராமல் பா.ம.க., தனித்து நின்றால் தேர்தலில் எத்தனை இடங்கள் பிடிக்கும் என்று தாங்கள் நினைக்கிறீர்கள்?

``எனக்கு ஆரூடத்திலோ ஜோதிடத்திலோ நம்பிக்கை இல்லை. அப்படிச் சொல்லப் பழக்கப்பட்டவனும் இல்லை. ஆனால் அந்த அனுபவம் அவ ருக்கு ஏற்கெனவே இருக் கிறதே (முகத்தில் புன்னகை) புதுவையில் கூட்டணியில் லாமல் தனித்து நின்றபோது ஒரு இடத்தில்கூட ஜெயிக்க முடியாமல் போனதை மறக் காமல் இருந்தால் சரி; (மீண்டும் புன்னகை).

- திருவேங்கிமலை சரவணன்
நன்றி: `குமுதம் 12.9.2007