Tuesday, April 05, 2011

வீட்டுக்கு வீடு ஆடுகளா?

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலைஞர் ஆட்சியில் நிகழ்த்தப்பட்டுள்ள கல்விப் புரட்சிபற்றி எடுத்துக் கூறி வருகிறார். அதே நேரத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அம்மையாரின் மனப் போக்கையும் வெளிப்படுத்துகிறார்.

வீட்டுக்கு நான்கு ஆடுகள் தருவதாக ஜெயலலிதா கூறுவதன் பின்னணியை அம்பலப்படுத்துகிறார்.

ஆடு, மாடுகள் மேய்த்துக் கிடந்த பஞ்சம, சூத்திர மக்களுக்குக் கல்வி வாய்ப்பும், உரிமையும் சட்டப்படி தேவை என்பதற்காகப் போராடி வருவது திராவிடர் இயக்கம் - நீதிக் கட்சி - திராவிடர் கழகம் தி.மு.க. போன்ற அமைப்புகள்.

காங்கிரசை ஒழித்தே தீருவேன் என்று சூளுரைத்து காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேறிய தந்தை பெரியார் அவர்கள், காமராசரைப் பச்சைத் தமிழர் என்றும், கல்விக் கண்களைத் திறந்த இரட்சகர் என்றும் போற்றிப் புகழ்ந்தார் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் - ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பார்ப்பனர் அல்லாதாருக்குக் கல்விக் கண்களைத் திறந்து நாடெங்கும் கல்வி ஓடையை அந்தப் பெருமகன் திறந்து விட்ட ஒரே காரணத்துக்காகத்தானே!

உடம்பெல்லாம் மூளை என்று அக்கிரகாரம் போற்றிப் புகழ்ந்த சி.ஆர். ஆச்சாரியார் (ராஜாஜி) இரண்டு முறை சென்னை மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காலகட்டத்தில் எல்லாம் அவர் செய்த முதல் காரியம் என்ன?

1937-1939இல் 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார். 1952-1954இல் 6000 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படிப்பு, அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற வருணாசிரமக் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தாரே!

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதானே மனுதர்மம்?
இதனை எதிர்த்துத் துவக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கம் தமிழர்களுக்குக் கல்வி கிட்டச் செய்வதில் எப்பொழுதுமே கவனமாக இருந்து வந்திருக்கிறது.

காமராசர் அவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவசக் கல்வியை அறிவித்தார் என்றால், அண்ணா அவர்கள் அடுத்த கட்டமாக பி.யூ.சி. வரை இலவசக் கல்வி என்று ஆக்கினார்.

அடுத்த கட்டமாக முதுகலை வரை இலவசக் கல்வி என்னும் பெரும் புரட்சியைச் செய்தவர் நம்முடைய முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் ஆவார்.

இப்படி மேலும் மேலும் கல்வி வளர்ச்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் வீட்டுக்கு வீடு நான்கு ஆடுகள் இலவசமாகத் தருவேன் என்று ஜெயலலிதா கூறுவதன் தாத்பரியம் என்ன?

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில்கூட தி.மு.க. தேர்தல் அறிக்கைக்குப் போட்டியாக +2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டதே தவிர, அதற்கு மேலாக ஒன்றும் அறிவிக்கப்பட முடியவில்லையே!

2005-2006ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் (னுசடியீ டிரவள) 3.81 சதவிகிதமாக இருந்தது. 2009-2010 தி.மு.க. ஆட்சியிலோ அது ஒரு சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதே!

இடைநிலைப் பள்ளிகளில் 2005-2006ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் இடைநிற்றல் 7.58 சதவிகிதமாக இருந்தது. 2009-2010 தி.மு.க. ஆட்சியிலோ 1.79 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதே!

2005-2006ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் கல்லூரிகளில் படித்தோர் 2 லட்சத்து 82 ஆயிரத்து 802; 2010-2011ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியிலோ அது 6 லட்சத்து 9 ஆயிரத்து 421 ஆக உயர்ந்ததே!

நுழைவுத் தேர்வை ஒழித்ததில்கூட அ.தி.மு.க.வின் அணுகுமுறை காரணமாக உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அறிமுகப்படுத்திய நுழைவுத் தேர்வு ரத்து தோல்வி அடைந்து விட்டதே! அதே நேரத்தில் அதே உயர்நீதிமன்றமும் அதற்கு அடுத்து உச்சநீதிமன்றமும் தி.மு.க. கொண்டுவந்த நுழைவுத் தேர்வு ரத்து செல்லும் என்று தீர்ப்பு அளித்துவிட்டதே!

காரணம் என்ன? உள்ளார்ந்த உணர்வுடன், சரியான தீர்வைக் காண வேண்டும் என்ற கவலையுடன், உரிய சட்ட திட்டங்களை நுணுகி ஆய்வு செய்து தி.மு.க. செயல் பட்டதுதான்.

ஓர் ஆட்சியை ஆதரிப்பது - எதிர்ப்பது என்பதில் சமூக நீதியில் - கல்வி அளிப்பதில் ஓர் ஆட்சி எப்படி நடந்து கொள்கிறது என்பது திராவிடர் கழகத்திற்கு முக்கியமான பார்வையாகும்.

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் பற்றியெல்லாம் ஒரு காலத்தில் பேசியவர்தான் ஜெயலலிதா; திராவிடர் கழகத் தலைவரின் அணுகு முறையாலும், நிர்பந்தத்தாலும், அரசியல் சூழலாலும்தான் ஜெயலலிதா அம்மையார் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்னும் பாட்டைக்கு வந்தார் என்பதை மறக்கக் கூடாது.

ஜெயலலிதா மறுபடியும் ஆடு, மாடுகளை வீட்டுக்கு வீடு இலவசமாக அளிப்பேன் என்று கூறுவது ஒரு வகையான பிற்போக்குத்தனமான பார்வை என்பதில் அய்யமில்லை.

----------------”விடுதலை” தலையங்கம் 5-4-2011

தேர்தல் அறிக்கை

தேர்தலில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடு வதுண்டு. அந்த வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, திரா விடர் இயக்க ஒப்பற்ற தலைவர்கள் சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் சி.நடேசன் ஆகியோரின் பெயர்கள் வரலாற்றுப் பெருமையோடு குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுத்தறிவு நெறி பற்றி யும் பதிவு செய்யப்பட் டுள்ளது.

ஆனால் அண்ணா தி.மு.க. என்னும் பெய ருள்ள ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையில் எந்த இடத்திலும் அண்ணாவின் பெயரே பதிவு செய்யப்பட வில்லை என்கிற போது, பெரியார் பெயரும், திரா விடர் இயக்க முன்னோடி களின் பெயர்களும் இடம் பெறும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஜாதி பேதமற்ற சமத் துவ சமுதாயத்தை உரு வாக்க ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவ புரங்களுடன் மேலும் 95 சமத்துவபுரங்கள் உருவாக் கப்படும் என்று தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற மறு மலர்ச்சி பற்றிய எந்த அறிவிப்பும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மருந் துக்கும் இடம் பெறவில்லை.

அதே நேரத்தில் தமிழ் மொழி மேம்பாடு என்னும் தலைப்பின் கீழ் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கீழ்க் கண்ட அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியின் பெருமையை மற்ற மொழி யினரும் உணர்ந்து, அதைப்பற்றி அறிய திருக் குறள், தமிழ்க் காப்பி யங்கள், இலக்கண- இலக் கியங்கள், புராண- இதி காச நூல்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் பல்வேறு வரலாற் றுப் புகழ் பெற்ற நூல் களைப் பல்வேறு இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், சீன, அரேபிய மற்றும் உலகில் அதிக மக்கள் பேசும் மொழிகளில், மொழி மாற்றம் செய்யப்பட்டு, இணைய தளத்தில் இடம் பெறச் செய்து, நமது தமிழ் மொழியின் பெருமை உலக மெங்கும் பரவ வழிவகை செய்யப்படும்.

(அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, பக்கம் 17, 18)

பெரிய புராணத்தையும், கம்ப இராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்று இரா.பி.சேதுப் பிள்ளையோடும், நாவலர் சோமசுந்தர பாரதியா ரோடும் விவாதப் போரிட்டு வென்றவர் அறிஞர் அண்ணா.

அந்த அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரிலும்,உருவத்தைக் கொடியிலும் பொறித்து வைத்துள்ள அண்ணா தி.மு.க.வின் தேர்தல் அறிக் கையில் தமிழில் உள்ள புராணங்களையும், இதிகா சங்களையும் மொழி மாற் றம் செய்யப்போகிறதாம் - வெட்கக்கேடு!

முதலாவதாகத் தமிழ் முன்னேற்ற மடைந்து, உலகப் பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழை யும், மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமி ழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.

- தந்தை பெரியார் (குடிஅரசு 26-1-1936)

பெரியார், அண்ணா கருத்துகள் இவ்வாறு இருக்க அதற்கு மாறாக தமிழில் உள்ள புராண, இதிகாசங்களை மொழி மாற்றம் செய்வதாகக் கூறும் அ.தி.மு.க., பெரியார், அண்ணா பெயர்களை உச் சரிக்கத் தகுதி உடையது தானா?

------ மயிலாடன் --------”விடுதலை” 5-4-2011

Friday, April 01, 2011

சோவின் பார்வை - ஒரு பார்வை

திருவாளர் சோஇராமசாமி அய்யர் தேர்தல் களத்தில் பஞ்சக் கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு தனது பூணூல் மூளையை ஒரு கசக்குக் கசக்கிக் கொண்டு - விடையை முதலில் எழுதிக் கொண்டு கணக்குப் போடும் ஒரு வேலையை இந்த வார துக்ளக்கில் (6.4.2011 - பக்கம் 5,6) செய்துள்ளார்.

அடேயப்பா, அய்யங்கார் அம்மையாரை எப்படியும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்றால் எவ்வளவு சாதுர்யமாகவும், வக்கணையாகவும் பேனா முனையை வளைய விடுகிறார்கள் என்ப தற்கு இந்த விமர்சனக் கட்டுரை ஒன்றே போதுமானது.

1) தேர்தல் கூட்டணியில் தி.மு.க.வோடு காங்கிரஸ் போட்ட கூட்டணியில் பிரச்சினைகள் ஏற்பட்டதால் காங் கிரஸின் ஓட்டு எந்த அளவுக்குக் கழக வேட்பாளர் களுக்குக் கிடைக்கும் என்பதும், கழகத்தினரின் ஓட்டு எந்த அளவுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் என்பதும் நிச்சயமற்ற விஷயங்கள்.

இந்த உறவு மட்டுமல்ல; விடுதலைச் சிறுத்தை கள்; பா.ம.க.,வின் உறவும் இப்படிப்பட்டவைதான்; தலைவர்கள் செய்து கொண்ட சமாதானத்தைத் தொண்டர்கள் செய்து கொள்ளாததால் அவர வர்கள் ஓட்டு அந்தந்தக் கட்சிகளுக்கு போகுமே தவிர மற்றவர்களுக்குக் கிட்டாமல் போகும்.

இப்படி தி.மு.க. கூட்டணிபற்றி வரைந்து தள்ளும் துக்ளக் அ.தி.மு.க. கூட்டணியில் நடந்த நிகழ்வு களைப்பற்றி என்ன எழுதுகிறது?

யாரும் எதிர்பார்க்காத நிலையில் அ.தி.மு.க. தரப்பு, தான் போட்டியிடுகிற தொகுதிகளின் பட்டியலை வேட்பாளர்கள் பெயர்களுடன் வெளியிட்டது - அது அதிர்ச்சியைத் தந்தது என்றெல்லாம் எழுதிவிட்டு பார்ப்பனியத்துக்கே உரித்தான பம்மாத்து வேலையில் இறங்குகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வினரிடையே தொண்டர்கள் மத்தியில் தோன்றிவிட்ட கசப்புணர்வு, அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்படவில்லை. தி.மு.க. கூட்டணியை காங்கிரஸ் தொண்டர்கள் வெறுத்தனர். ஆனால் அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணியை இரு கட்சி தொண்டர்களும் முழுமையாக விரும்பினர் என்று கொஞ்சம்கூட அறிவு நாணயமற்ற முறையில் எழுதுகிறது துக்ளக்.

தங்களைக் கலக்காமல் பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்களோடு 160 இடங்களுக்கு பட்டியலை அறிவித்தபோது என்ன நடந்தது?

இடதுசாரிகள் என்ன என்னவெல்லாம் பேசி னார்கள்? நடிகர் விஜயகாந்த் எப்படியெல்லாம் பேசினார்? இப்பொழுதே இந்த அம்மையார் இப்படி நடந்து கொள்கின்றாரே, தேர்தலுக்குப்பின் எப்படி நடந்து கொள்வார் என்றெல்லாம் பேசவில்லையா?

கூட்டணிக் கட்சியின் தலைவரான ஜெயலலிதா அம்மையாரின் கொடும்பாவி நாடெங்கும் கொளுத்தப் படவில்லையா? சடகோபம் (செருப்படி) சாத்துபடிகள் நடக்கவில்லையா?

இப்படியெல்லாம் அ.தி.மு.க. கூட்டணியில் சாங்கோ பாங்கமாக நடந்திருக்கிறது. அப்படியி ருக்கும் கூட்டணிக் கட்சிக்காரர்களிடம் ஏதும் பிரச்சினையே கிடையாதாம். ஒன்றுபட்டு தேர்தல் பணிகளைச் செய்வார்களாம் - மனம் ஒத்துப் போய் விட்டார்களாம்.
மனம் ஒத்துப் போக வேண்டும் என்றால் செருப்படி விழ வேண்டுமோ!

தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே பிரச் சினைகள் வெடித்தாலும் அது ஒரு விமர்சனம் என்கிற கட்டுக்குள்ளே மட்டுமே கண்ணியமாக இருந்தது. எந்தக் கட்சித் தொண்டரும் இன்னொரு கட்சித் தலைவரின் கொடும்பாவியைக் கொளுத்தவில்லை; கொடி மரத்தை வெட்டவில்லை. ஆனாலும் இந்தக் கூட்டணிக் கட்சி களின் தொண்டர்களிடத்தில் விரிசல் இருக்கிறதாம். இந்தக் கட்சிக்காரர்களின் வாக்குகள் ஒருவருக் கொருவர் கிடைக்காதாம்.

துக்ளக் சோவின் கருத்துப்படி ஒரு கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகள் மனமொத்து இருக்கின்றன என்பதற்கு அடையாளம் - அந்தக் கட்சிக்குள் மோதல் பகிரங்கமாக வெடிக்க வேண்டும் - கூட்டணிக் கட்சித் தலைவரின் கொடும்பாவியைக் கொளுத்த வேண்டும் - அசிங்கமான பொருள்களால் அபிஷேக ஆராதனைகள் நடத்த வேண்டும்.

புரிகிறதா? இதுதான் சோராமசாமியின் விவாதப் புத்தியின் லட்சணம். அடேயப்பா, இவர்தான் அக்கிரகார அகராதியில் அறிவுக் கொழுந்தாம்!

2) தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கிடையாது என்று கலைஞர் அறிவித்து, ஒரு போலி மிரட்டலை விடுத்தபோது - அவருக்கு அழகிரி முதல் வீரமணி வரை பலர் பாராட்டுத் தெரிவித்து - இதுதான் சரி என்று கொண்டாடினர். அ.தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டபோது, இப்படி எந்தக் கட்சியும் மகிழவில்லை. இது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய வித்தியாசம். தி.மு.க. கூட்டணி வெறுப்புற்றவர்களின் ஒப்பந்தம். அ.தி.மு.க. கூட்டணி - விருப்பமுடையோரின் உறவு - என்று எழுதுகிறார் திரு. சோ. இதைவிட உண்மையைக் கவிழ்த்துப் போட்டு யாராலும் காயடிக்க முடியாது.

தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே பிரச்சினை வந்தபோது கருத்துகள் பரிமாறப்பட்டன. இன்னொரு கட்டத்தில் பிரச்சினைக்குத் தீர்வுக் காணப்பட்டுவிட்டது. ஆனால் அ.தி.மு.க. கூட்டணிக்குள் ஒன்றுமே நடக்கவில்லை என்று கோயபல்சு பாணியில் எழுதுகிறாரே - அது உண்மைதானா?

நடிகர் விஜயகாந்த் இருக்கும் திக்கு நோக்கி இடதுசாரிகள் படையெடுக்கவில்லையா? திருமண நிகழ்ச்சிக்குச் சென்று இருக்கும் திரு. வைகோ விரைந்து கொண்டு இருக்கிறார் - மூன்றாவது அணி உருவாக்கப்படும் என்று பேசப்பட வில்லையா?

உள்ளுக்குள் இந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கு வெளியில் வெளிப்புறக் காட்சிகள் (சினிமாக்காரர்கள் ஆயிற்றே) கண ஜோராக நடந்து கொண்டிருக்க வில்லையா?

துக்ளக் ராமசாமி அய்யரின் கணிப்புப்படியே அ.தி.மு.க கூட்டணியில் எல்லாம் சுமுகமாக நடந் தேறிவிட்டது. தலைவர்களுக்குள்ளும், தொண்டர் களுக்குள்ளும் எவ்வித வெறுப்பும் இல்லை என்பது உண்மையானால், ஒரே ஒரு தடவையாவது அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஓர் இடத்தில் அமர்ந்து பொது மக்களைச் சந்திக்காதது ஏன்?
அம்மையார் ஜெயலலிதா தனிக்காட்டு ராணியாக யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்துப் படிக்கும் பிரச்சாரத்தைச் செய்வானேன்?

இதுதான் இந்தக் கூட்டணி ஒற்றுமையாகச் செயல்படுகிறது என்பதற்கு அடையாளமா?
அ.தி.மு.க. கூட்டணி ஒற்றுமையாகச் செயல் படுகிறது என்பதற்கு அடையாளம்தான் - தன்னை வரவேற்க அ.தி.மு.க. கொடியுடன் வந்த தொண்டர் களைப் பார்த்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எரிந்து விழுந்தது - வசைமாரி பொழிந்ததும் என்று சொல்லப் போகிறாரா?

தி.மு.க. கூட்டணி வெறுப்புற்றவர்களின் கூட்டணி என்பதற்கு அடையாளம் - இக் கூட்டணித் தலைவர்கள் ஒரே மேடையில் பேசுவது, பிரச்சாரம் செய்வது தான் என்கிறாரா?
ஜெயலலிதா அம்மையார்மீதான பார்ப்பனப் பாசம் - சூத்திரர் கலைஞரின் மீதான துவேஷம் இந்த இரண்டும் சேர்ந்து சோ போன்ற பார்ப் பனர்களைப் படாதபாடு படுத்துவதாகத் தெரி கிறது! ஆசை, வெட்கம் அறியாது என்பதை வெளிப்படுத்துகிறது. துக்ளக்கின் விமர்சனக் கட்டுரையைப் படிக்கும்போது ஓர் உண்மை மட்டும் வலிமையாக பளிச்சென்று தெரிகிறது. அ.தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடையப் போவதை உணர்ந்த நிலையில், எதையாவது சப்பைக்கட்டுக் கட்டி, தமிழர்களின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவியாவது - சுண்ணாம்பை வெண்ணெய் என்று காட்டியாவது அய்யங்கார் அம்மையாரை அரியணையில் ஏற்ற வேண்டும் என்கிற ஆத்திரத்தில் இருப்பதாகத் தெரிகிறது!

பார்ப்பனர்களின் பேனாவைக் சுழற்றியடிப்பது தான் தமிழர்களின் தலையாயக் கடமை என்பதை தந்தை பெரியார் அவர்கள் நாடி நரம்பில் ஊட்டிச் சென்றாரே - 1971 தேர்தலில்தான் நாடு அதனைக் கண்டதே! யார் அதனை மறந்திருந்தாலும் திருவாளர் சோ ராமசாமி அய்யர் கண்டிப்பாக மறந்திருக் கவே மாட்டார். இப்பொழுது போல அப்பொழுதும் பூணூலை முறுக்கிக் கொண்டு எழுதியவர் அவர்தானே! வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொண்டவர்தானே அந்த அய்யர்வாள் - மறந்திருக்க முடியாதே!

இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது - நாட்டை விட்டு வெளியேற மகா புருஷர்கள் தயாராகிவிட்டனர் என்று ஆச்சாரி யாரை (ராஜகோபாலாச்சாரியாரை) ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்க வைத்தாரே தந்தை பெரியார் - அதனை மறந்துவிட அவர்களால் முடியுமா? இன் னொரு அடியும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. நாம் என்ன செய்ய!

ஒன்றுபடக் கூடாதா?

சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவியதாகச் சொல்வார்களே, அதுபோல சன்னமாக ஓர் ஏத்துவேலையைச் செய்கிறது துக்ளக்.

விடுதலைச் சிறுத்தைகள்; பா.ம.க.வின் உறவும் இப்படிப்பட்டதுதான்; (காங்கிரசுக்கும் - தி.மு.க.வுக்கும் இடையே உள்ள உறவு போன்றது தானாம்!) தலைவர்கள் செய்து கொண்ட சமாதானத்தைத் தொண்டர்கள் செய்து கொள்ளாததால் அவரவர்கள் ஓட்டு அந்தந்த கட்சிகளுக்குப் போகுமே தவிர, மற்றவர்களுக்கும் கிட்டாமல் போகும் - என்கிறார் திருவாளர் சோ. இது சோவின் ஆசையே தவிர, உண்மையல்ல. இதில் சன்னமாக கந்தப் பொடி தூவுவது என்பது விடுதலைச் சிறுத்தைகள் - பா.ம.க உறவும் இப்படித்தான் என்று குறிப்பிட்டு இருப்பது விடுதலைச் சிறுத்தைகள் - பா.ம.க., சேர்வது என்பதை சமூகரீ(நீ)தி கண்ணோட்டத்தில் கைகொடுத்து வரவேற்கக் கூடியவர்கள் நாம். தமிழன் ஒற்றுமை - ஜாதியால் சிதறுண்டுப் போகக் கூடாது என்ற கவலை நமக்கு. ஆனால் துக்ளக் பார்ப்பனப் பார்வையில் அது நடந்து விடக் கூடாது என்பதுதான்; அது நடந்து விட்டதே என்கிறபோது அது தங்கள் இனத்துக்கு ஆபத்து என்று உணர்ந்த நிலையில், கிண்டலாக விடுதலைச் சிறுத்தைகள் - பா.ம.க., உறவு பற்றிச் சிலாகிக்கிறது; 2011-லும் பார்ப்பனர்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை ஒடுக்கப்பட்ட தமிழர்கள் உணர்வார்களாக!

ம.தி.மு.க.வை மறைத்தது - ஏன்?

அ.தி.மு.க. கூட்டணியின் விரிசலை மயிலிறகால் வருடும் துக்ளக் முழுப் பூசணிக் காயை பிடிசோற்றில் மறைத்ததுபோல ஒரு வேலையைச் செய்திருக்கிறது - நரியை நனையாமல் குளிப்பாட்டுவதாகச் சொல்லு வார்களே - அதுபோல!

கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் 35 இடங்களைக் கொடுத்து தன்வசம் வைத்துக் கொண்ட ம.தி.மு.க.வை இந்த முறை அ.தி.மு.க. தலைமை அவமானப்படுத்தி வெளியேற்றியதே - அதைப்பற்றி இந்த விமர்சனக் கட்டுரையில் ஒருவரிகூட எழுதாமல் இருட்டடித்தது ஏன்?

அதில் கை வைத்தால் குளவிக் கூட்டில் கை வைத்த கதையாக, ஆகி விடுமே - அதனால் தானா? தனக்கு வசதியாக இல்லாவிட்டால் அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்ற பார்ப்பனத் தந்திரம்தானே இது!
கடந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ம.தி.மு.க. வாக்குகளை அ.தி.மு.க. பெற்றதே - இந்தமுறை அதன் வாக்குகள் எங்கு போகும் என்று ஒரே ஒரு வரிகூட - எழுதாததன் மர்மம் என்ன? வைகோவின் பிரச்சாரம் அ.தி.மு.க.வுக்குக் கிடைக்காமல் போனதுபற்றி குறிப்பிடத் தவறியது ஏன்? இவற்றையெல்லாம் இருட்டடிப்புச் செய்து விட்டு தேர்தல் விமர்சனம் எழுதுகிறது துக்ளக் என்றால் அந்தப் பார்ப்பனத் தந்திரத்தை - யோக்கியதாம்சத்தை - துக்ளக் வாசகர்களும், வாக்காளர்களும்தான் கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்திக் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரியம், நடமாடும் நாசம் என்றார் அறிஞர் அண்ணா. அதை இந்த இடத்தில் வட்டக் கோடிட்டுத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

------ கருஞ்சட்டை 1-4-2011 -"விடுதலை” யில் எழுதிய கட்டுரை

Wednesday, March 30, 2011

இடதுசாரிகளின் பரிதாபம்!

இடதுசாரிகள் என்ன சொல்லுகிறார்கள்? என்ன வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள்? தி.மு.க. ஆட்சியை அகற்றி விட்டு அதற்குப் பதில் எந்த ஆட்சியை அமர வைக்கப் போகிறார்கள்? 2001 முதல் 2006 வரை தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த ஜெயலலிதா அம்மையாரை அரசுக் கட்டிலில் அமர வைக்கப் போகிறார்கள்.

இந்த 2001-2006 ஜெயலலிதா ஆட்சியின்மீது இந்த இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? கணிப்பு என்ன? அவற்றை ஒரே ஒரு முறை ஆய்வு செய்தால், இந்த இடதுசாரிகளின் இயலா மையை, கருத்துக் குழப்பத்தை, விமர்சனச் சீர்கேட்டை - மலிவான அரசியல் பரிதாபத்தைப் பச்சையாகவே பட்டவர்த்தனமாகவே புரிந்துகொள்ளலாம்.

தகரம் கண்டுபிடிப்பதற்கு முன்பே உண்டியலைக் கண்டுபிடித்தவர்கள் இந்தக் கம்யூனிஸ்டுகள் என்று நிலப்பிரபுத்துவ மனப்பான்மையில் கேலி செய்தவர் இந்த ஜெயலலிதா அம்மையார்தான்.

எஸ்மா, டெஸ்மா என்ற சட்டங்கள் மூலம் ஒரே உத்தரவில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ஆட்சி - அரசு ஊழியர்களை ஆறலைக் கள்வர் போல நள்ளிரவில் கைது செய்து சிறைக் கொட்டடியில் நெட்டித் தள்ளிய ஆட்சி - அத்தகைய ஓர் எதேச்சதிகாரப் போக்குக் கொண்டவரை மீண்டும் முதல் அமைச்சர் சிம்மாசனத் தில் அமர்த்தி அழகு பார்ப்பதுதான் இடதுசாரி களின் நிலைப்பாடா?

பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை - அந்த அடித்தட்டு மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களை அந்தப் பணியிலிருந்து சீட்டுக் கிழித்து அனுப்பிய அம்மையார் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்; அந்தப் பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை மீண்டும் பணி நியமனம் செய்த கலைஞர் தலைமையிலான ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான் இடதுசாரிகளின் வர்க்கப் பார்வையா?

இந்தியக் கம்யூனிஸ்டுக் (மார்க்சிஸ்டு) கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தமிழகம் முழுவதிலும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தலித்திடம் மீண்டும் ஒப்படைக்கக் கட்சி போராடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலில் ஜெயலலிதா சிறுதாவூரில் ஆக்கிரமித் துள்ள தலித் நிலங்களைப் பறிமுதல் செய்யும் போராட்டம் என்னாயிற்று என்று வாக்காளர்கள் கேட்க மாட்டார்களா? தாழ்த்தப்பட்ட மக்கள் ஆவேசமாகக் குரல் கொடுக்க மாட்டார்களா? அந்தப் போராட்டத் தின் அடுத்த கட்டத்தில் இவர்கள் எகிறிக் குதிக் காதது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் செங்குத்தாக எழாதா?

தேர்தல் அறிக்கையில் காணப்படும் இந்த வரிகள் அ.தி.மு.க. பொதுச் செயலாளரின் கவனத்தில் எட்டாத வரைக்கும் சி.பி.எம். கட்சிக்கு நல்லது.

தேர்தல் அறிக்கையில் சி.பி.எம். குறிப்பிட்டுள்ள ஒரு தகவல்:

வேலையின்மை பெருகி இளைஞர்கள் எதிர் காலம் கேள்விக்குறியாகி வரும் நிலையில், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அரசு மற்றும் பொதுத்துறைப் பணிகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் நிரப்பவும் கட்சி பாடுபடும்; வேலை யில்லாத காலத்திற்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கக் கட்சி வற்புறுத்தும் என்று சி.பி.எம். கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

இவர்கள் ஆதரிக்கும் - மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர வைக்கத் துடிக்கும் - அந்த அம்மையார் தானே 5 ஆண்டு காலத்திற்கும் வேலை நியமனத்தடை ஆணை பிறப்பித்தவர்? அரசு ஊழியர்களை ஒரே ஆணை என்னும் குண்டாந் தடியால் மண்டையை உடைத்து வீட்டுக்கு அனுப்பியவர். என்.ஜி.ஜி.ஓ. சங்கப் பொறுப்பாளர்கள் சிவ. இளங்கோ, சு. அறிவுக்கரசு போன்றவர்களின் மண்டை பிளக்கப்பட்டது ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக் காலத்தில்தானே - இவை எல்லாம் இடதுசாரிகளுக்கு வசதியாக மறந்து போன சமாச்சாரங்களா?

அதே நேரத்தில் 2006-2011 தி.மு.க. ஆட்சிக் கால கட்டத்தில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 169 பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் - 60 ஆயிரத்து 55 கோடி ரூபாய் முதலீட்டிலான 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, 13 அரசாணைகள் வெளியிடப்பட்டு, 41 புதிய தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரை 13 தொழிற் சாலைகள் திறக்கப்பட்டது, இந்தத் தி.மு.க. ஆட்சியில் தானே?

படித்து வேலை வாய்ப்பற்ற 4 லட்சத்து 704 இளைஞர்களுக்கு 284 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கியதும் கலைஞர் ஆட்சிதானே?

இவற்றையெல்லாம் மறந்துவிட்டோ அல்லது மறைத்து விட்டோ - இவற்றிற்கெல்லாம் எதிரான ஓர் ஆட்சியைக் கொண்டு வரத் துடியாய்த் துடிப்பது இடதுசாரிகளுக்கு அழகல்ல!

------------------”விடுதலை” 29-3-2011

Tuesday, March 29, 2011

பார்ப்பனர் சங்கம் யாரை ஆதரிக்கிறது?

தமிழ்நாடு பிராமணர் சங்கம் எனும் பெயரில் மக்கள் குரல் ஏட்டில் (24.3.2011) கீழ்க்கண்ட விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது.

முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) 13.04.2011 அன்று நடைபெற இருக்கின்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களையும், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவு எங்களது மாவட்ட அமைப்புக்களின் வழியாகவும் தமிழகம் எங்கும் இருக்கக் கூடிய எங்களது 500 கிளைகள் வழியாகவும் நடைமுறைப்படுத்தப்படும்.
-எம். நாராயணன், மாநிலத் தலைவர்

- என்று விளம்பரம் வெளி வந்துள்ளது.

இந்தத் தேர்தலில் (2011) மட்டும் அல்ல; 2006ஆம் ஆண்டுத் தேர்தலிலும்கூட இதுபோன்ற ஒரு விளம்பரம் வெளி வந்ததுண்டு.

சென்னை தினமலர் ஏட்டில் (26.6.2006-7ஆம் பக்கத்தில் கீழ்க்கண்ட விளம்பரம் வெளியாகியது.

தமிழ்நாடு பிராமண சகோதரர்களுக்கு ஓர் வேண்டு கோள்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நமது பெருமையையும், கவுரவத்தையும் காக்கும் வகையில், நமது சமூகத்தின் அனைத்து வாக்குகளையும் தவறாமல், அ.தி.மு.க. அணிக்கு ஆதரவாக பதிவு செய்து, தமிழக முதல்வர், டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்

- ஜி.ஆர். ரவிச்சந்திரன் B.Com., B.L., வழக்கறிஞர்

தமிழ்நாடு பிராமண சங்கத்தின் சார்பில் முன்னாள் காங்கிரசாரான முக்தா சீனிவாசன் அறிவிக்கப்பட்டு தாமரைச் சின்னத்தில் பா.ஜ.க. வேட்பாளராக நின்றார்.

பா.ஜ.க.வும் - பார்ப்பனர் சங்கமும் ஒன்றுதான் என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி தேவை?

முக்தா - சீனிவாசன் என்ற பார்ப்பன பா.ஜ.க. வேட்பாளர் பேட்டி ஒன்றில் என்ன கூறினார் என்பது முக்கியமானது.

அ.தி.மு.க.வில்தான் பிராமணர்களை வேட்பாளராகப் போட்டுள்ளார். தி.மு.க. போடவேயில்லை. ஜெயலலிதா வைத்தான் ஆதரிக்க வேண்டும் என்றார்.

இந்தத் தகவல்களையும், உண்மை நடப்புகளையும் கணக்கில் கொண்டால்தான் வரும் ஏப்ரல் 13 அன்று தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தலின் தன்மை எந்த அச்சில் சுழலுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

பச்சையாக ஜெயலலிதா நான் பாப்பாத்திதான்! என்று சட்டப் பேரவையிலேயே ஆணவமாகப் பிரகடனப் படுத்தியதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கும் பார்ப்பன ஏடுகள், ஊடகங்கள் இந்த அம்மையாரை விழுந்து விழுந்து ஏன் ஆதரிக்கின்றன? சோ ராமசாமி, குருமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் ஆஸ்தான ஆலோசகர்களாக இருப்பது எந்த அடிப்படையில்?

234 தொகுதிகளில் சிறீரங்கத்தை தேர்ந்தெடுத்து ஜெயலலிதா அங்குப்போய் போட்டியிட வேண்டிய அவசியம் என்ன?

சிறீரங்கம் என்பது பார்ப்பனர்கள் அதிலும் குறிப்பாக அய்யங்கார்ப் பார்ப்பனர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள தொகுதியாகும்.

2009ஆம் ஆண்டு நடந்து முடிந்த திருச்சி மக்களவைத் தேர்தலில் (6 சட்டசபைகள் அடங்கிய தொகுதி) 5 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றிருந்த நிலையிலும் சிறீரங்கம் சட்டமன்ற ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வேட்பாளர் பெற்ற கூடுதல் வாக்குகள் அவரை வெற்றி பெறச் செய்தன என்றால், இந்த சிறீரங்க ரகசியத்தைத் தெரிந்து கொள்ளலாமே!

அய்யங்கார் பெண்மணியான ஜெயலலிதா அம்மையார் தலைமையில் இயங்கும் கட்சிக்குத்தான் வாக்கு அளித்துத் தீருவது என்பதில் பார்ப்பனர்கள் எவ்வளவுக் கட்டுப்பாடாக, உறுதியாக இருக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொண்டால் பார்ப்பனர் அல்லாதார் நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கடமையும், உண்மையும் விளங்காமற் போகாது.

நாட்டில் நடப்பது வெறும் அரசியல் அல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டமே என்பார் பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியார். அது எத்தகைய உண்மை என்பதை நாட்டு நடப்புகள் நல்ல வண்ணம் மக்களுக்குத் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்குள்கூட காமராசர் - ராஜாஜி உள்கட்சிச் சண்டை என்பது இந்த அடிப்படையில்தான் நடந்து வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவற்றை யெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, நடக்க இருக்கும் தேர்தல் என்ற ஆரியர் - திராவிடர் போராட்டத்தில் - தந்தை பெரி யாரும், சுயமரியாதை இயக்கமும் நம் குருதியில் ஊட்டிய அந்தத் தன்மான இனவுணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள் ஆகும்.

Saturday, March 26, 2011

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் தலைவர் கி.வீரமணி

மீண்டும் ஆடு மாடுகளை மேய்க்கப் போக வேண்டுமா?


அ.இ.அ.தி.மு.க, தேர்தல் அறிக்கையிலே சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் என்ன? வீட்டுக்கு வீடு நான்கு ஆடுகளைக் கொடுப்போம் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.

ஆடு, மாடுகளை மேய்த்துக் கிடந்த நம் மக்களுக்குக் கல்வியைக் கொடுக்கச் செய்து, உத்தியோகங்கள் கொடுக்கச் செய்து கரை ஏறச் செய்தவர் தந்தை பெரியார். கல்விக் கண் கொடுத்தவர் பச்சைத் தமிழர் காமராசர் - அறிஞர் அண்ணாவும், மானமிகு கலைஞர் அவர்களும் அடித்தட்டு மக்களை மேலே கொண்டு வரப் பாடுபட்டார்கள்.

ஆனால் ஜெயலலிதா அம்மையாரோ மீண்டும் நம் மக்களை ஆடு மாடுகள் மேய்க்கப் போகச் சொல்லுகிறார்.

மீண்டும் மனுதர்மம் கோலோச்ச வழி செய்கிறார்.

இன்று மனுதர்மத்துக்கும் சமதர்மத்துக்கும்தான் போராட்டம்! சமதர்மம் விரும்புவோர் கலைஞர் தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வர வேண்டாமா?

(சென்னைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில்
தமிழர் தலைவர் கி. வீரமணி
- 25.3.2011
******************

தேர்வில் காப்பி அடித்தால் - தண்டனை! தேர்தலில் காப்பி அடித்தால் என்ன தண்டனை?


இப்பொழுது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்துகொண்டு இருக்கிறது. திடீரென்று பறக்கும் படையினர் தேர்வு எழுதும் மய்யத்திற்கு வந்து பார்வையிடுகிறார்கள். தேர்வில் யாராவது மாணவர்கள் காப்பி அடித்தால் கையும், களவுமாகப் பிடித்து அய்ந்தாண்டுகள் வரை தேர்வு எழுத முடியாது என்று தண்டிக்கின்றனர் - இது தேர்வில்.

இப்பொழுது தேர்தலில் காப்பி அடிக்கிறார்களே! தி.மு.க. தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. அப்படியே காப்பி அடித்துள்ளதே - இதற்கு என்ன தண்டனை?

சம்பந்தா சம்பந்தம் இல்லாத பிரச்சினைகளில் எல்லாம் தலையிடும் தேர்வாணையம் இதுபோல காப்பி அடிப்பவர்கள் விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? (பலத்த கை தட்டல் - சிரிப்பு!). தேர்வில் 5 ஆண்டு தண்டனை என்றால் தேர்தலிலும், தேர்தலில் நிற்கக் கூடாது என்று தண்டனை கொடுக்கலாமே!

(சென்னைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில்
தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்
- 25.3.2011)

***********************

கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் நிற்கவில்லை; தியாகப் பீடத்தின் மீது நிற்கிறார்!


மு.க.ஸ்டாலினை ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம்

சென்னை, மார்ச் 26- தி.மு.க. பொருளாளர், துணை முதல்வர் ஸ்டாலின் கொளத்தூரில் நிற்கவில்லை; தியாகத்தின் மீது நிற்கிறார் என்று அவரைப் பாராட்டி கொளத்தூர் தொகுதி மக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தி.மு.க. பொருளாளர், தமிழக அரசின் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று (25.3.2011) இரவு 7 மணிக்கு கொளத்தூர் தொகுதியைச் சார்ந்த பெரம்பூர் செம்பியம் காந்தி சிலை அருகில் ராகவன் தெருவில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:

ஸ்டாலினை தென்கோடியில் அழைத்தார்கள்

கொள்கைக்கு முதலிடம், லட்சியத்திற்கு முதலிடம் என்ற பார்வையோடுதான் தளபதி ஸ்டாலின் அவர்கள் - நல்ல வாய்ப்பாக அவர் போட்டியிடக்கூடிய புதிதாக உருவாக்கப்பட்டி ருக்கின்ற இந்தக் கொளத்தூர் தொகுதிக்கு கிடைத்திருக்கிறதென்றால், அது நீங்கள் பெற்ற பேறு.

தளபதி ஸ்டாலின் அவர்களை தேர்தலில் நிற்க வைக்க தென்கோடியில் அழைத்தார்கள். பாளையங் கோட்டைத் தோழர்கள்கூட, நீங்கள் இங்கே வந்து நில்லுங்கள் என்று அழைத்தார்கள்.

பாளையங்கோட்டைத் தோழர்களுக்கும், வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் சகோதரர் வி.எஸ். பாபு அவர்களுக்கும் ஏற்பட்ட போட்டியிலே எப்பொழுதும் வெல்லக்கூடிய பாபு இப்பொழுதும் வென்றார்; எப்போதும் வெல்வார் (கைதட்டல்).

பதவிக்கான இயக்கமல்ல

தி.மு.க. வெறும் பதவிக்காக இருக்கிற இயக்கமல்ல. கொள்கைப் பார்வை இருக்கிறது. இந்த இயக்கம் அறிஞர் அண்ணா அவர்களாலே தொடங்கப்பட்ட நேரத்திலே நேற்றுக்கூட தஞ்சையிலே நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் பேசியிருக்கிறார். இது வெறும் பதவிக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல.

தளபதி அவர்களை அழைத்து நீங்கள் இந்தத் தொகுதியில் நில்லுங்கள். நீங்கள் நின்றால் அதைவிட வேறு பெருமை எங்களுக்குக் கிடையாது என்று சொல்லி, தான் பக்குவப்படுத்தப்பட்டிருக்கின்ற இந்தத் தொகுதியை அவர்களை வலியச் சென்று அழைத்து கொளத்தூர் தொகுதி பெருமைபெற வேண்டும் என்று நினைத்து செய்கிறார்கள் என்று சொன்னால் இப்படிப்பட்ட தியாக உணர்வு யாருக்கு இருக்கும்?

சுயநல மனிதர்களுக்கு இருக்காது

சுயநல மனிதர்களுக்கு இருக்காது. பதவியை மட்டுமே நினைப்பவர்களுக்கு இருக்காது. இதனால் தனக்குப் பெருமை என்று கருதி அமைதியாக பணியை செய்து கொண்டிருக்கின்றார் வி.எஸ்.பாபு. அதற்குப் பெயர்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

அதுதான் தி.மு.க!

அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டனுடைய உணர்வு. அதுதான் கழகம் ஒரு குடும்பம் என்று சொல்லுகின்ற அளவுக்கு உண்மையான ஒரு பொருளாகும்.

234 தொகுதிகளிலும் கலைஞர்தான் வேட்பாளர்!

யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல. நான் சொன்னேன். 234 தொகுதியிலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர்தான் வேட்பாளர். அதில் சந்தேகமில்லை. தமிழக மக்கள் இதிலே தெளிவாக இருக்கிறார்கள்.

இந்தக் கொளத்தூர் தொகுதியிலே மற்றவர் களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

தளபதி ஸ்டாலின் தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம். அவரை எல்லோரும் விரும்பியிருக்கிறார்கள் - ஏற்றிருக்கிறார்கள். எந்தத் தரப்பும் தளபதி ஸ்டாலின் அவர்களைக் குறை சொன்னதே கிடையாது.

காரணம் அவர் எல்லோரிடத்திலும் மிக அன்பாக எளிய முறையிலே பழகக் கூடியவர்.

லாட்டரியால் பதவிக்கு வந்தவர் அல்ல!

அவர் ஏதோ திடீரென்று அரசியலுக்கு வந்தவர் அல்ல. அவர் ஒன்றும் வரும் பொழுதே லாட்டரிச் சீட்டு வாங்கிக் கொண்டு வந்தவர் அல்ல.

நான் தளபதி ஸ்டாலின் அவர்களைப் பற்றி பேசும் பொழுது நான் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுகிறேன், ஏன்? காரணம் என்ன?

1976இல் நெருக்கடி காலத்தில் நாங்கள் எல்லாம் சிறைச் சாலையில் 9ஆவது வார்டு அறையில் தள்ளப்பட்டு அதுவும் தொழு நோயாளிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட சாதாரணமான வசதி குறைவாக இருக்கக்கூடிய இடத்திலே அடைத்து வைக்கப்பட்டோம்.

சிறைக் கதவுகளைத் திறந்து சட்ட விரோதமாக, எங்களை அடித்தார்கள். அந்த அடியினால் ரத்தம் சொட்டச் சொட்ட வாங்கிக் கொண்டிருந்தோம்.

இரத்தம் சொட்டச் சொட்ட ஓர் இளைஞர்

சற்று நேரம் கழிந்த பிற்பாடு, ஓர் இளைஞர் அடி வாங்கி இரத்தம் சொட்டச் சொட்ட என்மீதுதான் விழுந்தார். எனக்கு அது பெருமையாக இருக்கிறது. அன்றைக்கே அவர் மனப் பக்குவத்தோடு இருந்தார். தம்பி நாங்கள் எல்லாம் இந்தச் சிறைக் கொடுமைக்கு அனுபவப்பட்டவர்கள்.

ஆனால் நீங்கள் அந்த அனுபவத்தை முதல் முறையாகப் பெறுகிறீர்களே என்று சொன்ன பொழுது, இல்லை அண்ணே! நான் பக்குவமாக இதை ஏற்றுக் கொள்ளக்கூடிய தெம்பு உண்டு என்று சொன்னார்.

தியாகத் தழும்பு

அன்றைக்கு அவருடைய தியாகத் தழும்பு இருக்கிறதே அந்தத் தியாகத்தின் மீதுதான் இந்த மேடையின் மீது அவர் நிற்கிறார்.

அதை மறந்து விடாதீர்கள்- அப்படிப்பட்ட ஒருவர் வேட்பாளராக வந்திருக்கின்றார். எனவே அவர் தியாகத்தின் மீது நிற்கிறார்.

என்னுடைய தளபதி நிற்பதுதான் பெருமை என்று பாபு சொன்னாரே-அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கத்தில்தான் விட்டுக் கொடுக்கின்ற தன்மை இருக்கிறது.
விட்டுக் கொடுப்பவர்கள்

பேரறிஞர் அண்ணா சொன்னார்-விட்டுக் கொடுப்பவர்கள், கெட்டுப்போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை-என்று.

தளபதி ஸ்டாலின் தொகுதியில் பேச வேண்டு மென்று நானே ஆசைப்பட்டேன். ஆகவே வந்திருக்கிறேன்.

மீண்டும் கலைஞர் ஆட்சி!

நாங்கள் எல்லாம் பேசி ஓட்டுக் கேட்டால்தான் நீங்கள் ஓட்டுப் போடுகிறவர்கள் அல்லர். நீங்கள் ஏற்கெனவே முடிவு செய்விட்டீர்கள். இங்கு மட்டுமல்ல, தமிழகத்திலே இருக்கின்ற அத்தனை மக்களும் முடிவு செய்துவிட்டார்கள்.

காரணம், கலைஞர் தலைமை தாங்கினால்தான் மீண்டும் கலைஞர் ஆட்சி மலர்ந்தால்தான். திராவிடம் எழுச்சி பெறும் என்பதை உணர்ந் திருக்கிறார்கள். மனுதர்மம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. சமதர்மம் மலரவேண்டும். ஆரியம் அதனுடைய பொல்லாச் சிறகை விரிக்கக் கூடாது. மீண்டும் திராவிடம் எழுச்சி பெறவேண்டும் என்ற உணர்வோடு மக்கள் வந்திருக்கிறார்கள்.

1971இல் ஊடகங்கள் தி.மு.க.வுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தன. அப்பொழுதுதான் என்றைக் கும் இல்லாத அளவுக்கு தி.மு.க. 183 தொகுதிகளில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

மீண்டும் திரும்பப் போவது 1971 முடிவுதான். அதில் யாருக்கும் சந்தேகமில்லை.

சமுதாய புரட்சியின் விடிவெள்ளி

ஏன் தி.மு.க. ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்றால், இதுதான் சமுதாயப் புரட்சிக்கு விடி வெள்ளியாக ஆகும். எனவே அருமை வாக்காளப் பெருமக்களே! அன்புள்ள தோழர்களே! அருமைத் தாய்மார்களே! ஏப்ரல் 13ஆம் தேதியன்று வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள்!

வாக்குச் சாவடியில் தளபதி மு.க.ஸ்டாலின் பெயர் இருக்கும். அதற்கு நேராக உதயசூரியன் சின்னம் இருக்கும். அந்த உதயசூரியன் சின்னத்தில் பொத்தானை அழுத்துங்கள்!

ஒளிமிகுந்த வாழ்க்கை

பொத்தானை அழுத்திய உடனே விளக்கு எரியும். அந்த விளக்கு எரிந்தால் உங்கள் வீட்டில் விளக்கு எரியும். அந்த விளக்கு எரிந்தால் நாட்டில் விளக்கு எரியும். ஒளி மிகுந்த வாழ்க்கையை நீங்கள் பெறக்கூடிய வாய்ப்பைப் பெற முடியும்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இவ்வாறு பேசி மேலும் ஏராளமான விளக்கங்களை அளித்தார்.

****************************

பேராசிரியரை ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம்


கலைஞர் ஆட்சியில் எல்லா மக்களும்-கட்சியினரும் பயனடைந்தனர் ஜெயலலிதா ஆட்சியில் எலிக்கறிதான் மிஞ்சியது

சென்னை, மார்ச் 26-கலைஞர் ஆட்சியில் பயன் பெறாதவர்களே கிடையாது. எலிக்கறி சாப்பிடுவது நல்லது என்று சொன்ன ஜெயலலிதாவுடன் இடது சாரிகள் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறி, தேர்தல் பிரச்சார உரையாற்றினார்.

தி.மு.க. வேட்பாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களை ஆதரித்து வில்லிவாக்கம் தொகுதி மேடவாக்கத்தில் நேற்று (25.3.2011) திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

இந்தியாவிலேயே ஒப்பற்ற ஆட்சி!

நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் இந்தியாவில் எங்கும் இல்லாத ஓர் ஒப்பற்ற ஆட்சியை கடந்த 5 ஆண்டுகாலமாக - பொற்கால ஆட்சி என்று அனைவரும் விருப்பு வெறுப்பு இன்றி சொல்லக்கூடிய அளவிற்கு சாதனைகளை சரித்திரத் தில் உருவாக்கி, அன்றாடம் செய்திருக்கின்ற பல நற்பணிகளைக் கொண்ட தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகத்தான் வருகின்ற ஏப்ரல் .13 ஆம் தேதி நடைபெறக்கூடிய தேர்தல் ஆகும். இந்தத் தேர்தலிலே இதுவரை வேறு எந்த மாநிலத்தில் இல்லாத சாதனைகளை தமிழகத்திலே கலைஞர் ஆட்சியிலே நிகழ்த்தியிருக்கின்றார்கள்.

உச்சநீதிமன்றம் பாராட்டு

இதை நாம் பாராட்டுவதைவிட, தோழமைக் கட்சிகள் பாராட்டுவதை விட, இதுவரை வரலாறு காணாத வகையிலே உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் தமிழகத்திலே நடைபெறக்கூடிய பொது விநியோகத் திட்டத்தைப் பாராட்டியிருக்கின்றார்கள். அதாவது பெரும்பாலான மக்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய, உயிரூட்டக் கூடிய திட்டம் - அந்தத் திட்டத்தைப் போல மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று பாராட்டிச் சொன்னார்கள்.

அது மட்டுமல்ல; மத்திய அரசையே உச்சநீதிமன்றம் கேட்டது. ஏன் நீங்களும் அதைப் பின்பற்றக் கூடாது, ஏன் மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றக் கூடாது என்று கேட்டார்கள். இதைவிட பெருமை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு - கலைஞர் ஆட்சிக்கு வேறு சரித்திரம் இருக்க முடியாது.

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குப் போடுகின்ற திட்டம் இதுவரை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? கிடையாது. கம்யூனிஸ்ட்டுகள் ஆளுகின்ற மேற்கு வங்காளத் திலே கிடையாது அதே போல கேரளாவிலே கிடையாது. அண்மையிலேதான் அவர்கள் கஷ்டப்பட்டு ஒரு 40 நாள்களுக்கு முன்னாலேதான் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குக் கொடுக்கப் படும் என்ற நிலைக்கு சொல்லியிருக்கிறார்கள்.

50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருள்கள்

வெறும் அரிசியை மட்டும் போட்டால் போதுமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் - இந்த அம்மையார் கேட்டார். தாய்மார்களுக்கு, குடும் பத்திலே இருக்கிறவர்களுக்கு வசதியாக 50 ரூபாய்க்கு பத்து மளிகைப் பொருள்களை கலைஞர் ஆட்சியில் இன்றைக்கும் தந்து கொண்டிருக் கின்றார்கள். இப்படி விநியோகம் செய்த முறையைத் தான் உச்சநீதிமன்றத்திலே பாராட்டினார்கள்.

பட்டினிச்சாவு கிடையாது

தமிழ்நாட்டிலே பட்டினிச்சாவு கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டார்கள். இன்றைக்கு அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்திருக்கின்ற கம்யூனிஸ்ட் நண்பர்கள் கூட , பட்டினிச்சாவு நடந்திருக்கிறது.; அதுவும் எங்கே நடந்திருக்கிறதென்றால் சோழவளநாடு சோறுடைத்து என்று சொல்லுகின்ற தஞ்சை மாவட்டத்திலேதான் நடத்திருக்கிறது என்று அந்த அம்மையாரிடம் சுட்டிக்காட்டினார்கள்.

அன்றைக்கு ஆட்சியில் இருந்த அந்த அம்மையார் எலிக்கறி சாப்பிடுவது சர்வ சாதாரணம் என்றெல்லாம் சொன்னார். ஆனால் இன்றைக்கு அந்த அ.தி.மு.க. அணியில் தான் இடது சாரிகள் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சி தொடர உரிமை

தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்று கேட்பதற்கு உரிமை இருக்கிறது. காரணம் நம்முடைய பேராசிரியர் அவர்கள் இந்தத் தொகுதியிலே வேட்பாளராக இருப்பது இந்தத் தொகுதிக்கு கிடைத்த மிகப்பெரிய அரிய வாய்ப்பு. மிகப் பெரிய பெருமை. இந்தத் தொகுதியிலே பேராசிரியர் அவர்களுக்கு பெருவாரியான வாக்களித்து அவரைத் தேர்ந் தெடுக்க வேண்டும். இந்த 5 ஆண்டு காலத்திலே ஒரு முறை கூட வரி போடப்பட்ட பட்ஜெட் கிடை யாது.

வரிபோடப்படாத பட்ஜெட்

வரி போடாத பட்ஜெட் - மக்களுக்கு சுமை இல்லாத பட்ஜெட். நல்ல சமதர்ம ஆட்சி என்றால் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், படிக்கக் கல்வி இவை அத்தனையையும் தரக்கூடிய வாய்ப்பை கலைஞர் அவர்களுடைய தலைமை யிலேயே இருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, தோழமைக் கட்சிகளினுடைய ஒத்துழைப்போடு மிகச்சிறப்பாக நிறைவேற்றி யிருக்கிறார்கள். சொன்னதைச் செய்வோம். செய்வதையே சொல்வோம் என்ற அந்த உணர் வோடு வந்திருக்கின்ற ஆட்சி, சொன்னதை எல்லாம் செய்து முடித்து விட்டு, தேர்தல் அறிக்கையிலே எவை எவை எல்லாம் சொல்லியிருக்கிறார்களோ அதை எல்லாம் செய்து முடித்து விட்டு, சொல்லாத தையும் செய்த பெருமை இந்தியாவிலேயே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்குத்தான் உண்டு - கலைஞர் ஆட்சிக்குத் தான் உண்டு - பேராசிரியர் நிதியமைச்சராக இருந்து வரலாறு படைத்த ஆட்சிக்குத்தான் உண்டு.

அது மட்டுமல்ல எல்லா குடும்பங்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டி; இது முடியுமா? என்று கேட்பார்கள். இன்றைக்கு முடிந்திருக்கிறது. அடுத்து நமது மகளிர் சங்கடப்படக் கூடாது என்பதற்காக ஒரு திட்டம். பெரும்பாலான வீடுகளிலே மகளிர்கள் வேலைக்குச் செல்கிறார்கள் -ஆண்களும் வேலைக்குப் போகிறார்கள். பெண் களும் வேலைக்குப் போகிறார்கள் - படித்திருக்கின்ற காரணத்தாலே.

மிக்சி - கிரைண்டர்

குடும்பத்தில் மாவரைப்பதற்கு சங்கடப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு ஒரு கிரைண்டரோ அல்லது அவசரமாக அரைக்க ஒரு மிக்ஸியோ வழங்கப்படும் என்று இந்தத் தேர்தல் அறிக்கையிலே கலைஞர் அறிவித்திருக்கின்றார். உழைப்பைக் குறைக்க வேண்டும், ஓய்வைப் பெருக்க வேண்டும், தாய்மார்களுக்கு எளிதில் சிறப்பாக முடிய வேண்டும் என்ற தத்துவப்படி மிக்சி அல்லது கிரைண்டர் என்பதை அறிவித்திருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கலைஞர் அவர்கள் சொன்னது போல முன்பு கதாநாயகன் என்றால் இம்முறை கதா நாயகியான வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதைப் பார்த்து காப்பி அடித்து - இதைக் கூட்டி, அதைப் பெருக்கி - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தனது தேர்தல் அறிக்கையில் மிக்சி, கிரைண்டர், ஃபேன் கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார்.

இலவசத்தால் நாடு அழியுமாம்!

இலவசத்தால் நாடு அழியும் என்று சொன்னவர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கி றார்கள். இலவசத்தால் முடியுமா? என்று கேட்டவர்கள் அங்கு இருக்கின்றார்கள்.

தஞ்சையில் கலைஞர் பேச்சு

நேற்று தஞ்சையிலே நம்முடைய முதல்வர் கலைஞர் பேசும் பொழுது சொன்னார். நான் ஏலம் போடுவதற்காக வரவில்லை. மாறாக இந்த மக்களுக்கு ஏற்றத்தைத் தருவதற்காக ஆட்சி அமைக்க வந்திருக்கிறேன். சமுதாய வளர்ச்சிக்கு இப்படிப்பட்ட திட்டங் களைச் செய்கிறோம்; செய்து வருகிறோம் என்று சொன்னார்கள். கருவறையிலிருந்து கல்லறைவரை யிலே ஒவ்வொரு கட்டத்திற்கும் திட்டங்களை வைத்திருக்கிறார்கள்.

நிதி ஆதாரம் எங்கே?

ஜெயலலிதா அவர்கள் அறிவித்த திட்டங்களை எப்படிச் செய்வார்? அதற்கு நிதி ஆதாரம் என்ன என்பதை அவர்கள் சொல்லவில்லை. இதைப் பற்றியும் அவர்களுக்குக் கவலை இல்லை. மக்கள் மத்தியிலே ஒன்று புரிந்திருக்கிறது-தி.மு.க. சொன்னால் செய்யும்; செய்வதையே சொல்லும் என்று புரிந்திருக்கிறார்கள்.

ஆனால் மற்றவர்கள் சொன்னது கிடையாது. சொன்னதற்கு மாறாகத்தான் செய்தார்கள். அ.தி.மு.க. பொதுச் செயலாளரின் ஆணவம் எந்த அளவுக்கும் மாறவில்லை. என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏப்ரல் 13ஆம் தேதிக்குப் பிறகு ஆறாவது முறையாக அமையப் போவது கலைஞர் ஆட்சிதான் என்பதிலே எந்தவித சந்தேகமும் கிடையாது.

கலைஞர் மீண்டும் பதவிக்கு வரவேண்டும்; பேராசிரியர் மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்ற அவசியத்திற்காக அல்ல. அவர்கள் எத்தனையோ பதவிகளைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இவர்களை விட்டால் இந்தச் சமுதாயம் வாழுமா? இவர்களை விட்டால் நம்முடைய தமிழர்களுக்கு நாதி உண்டா? திராவிட இனம் வளருமா? முன்னேறுமா? அந்தக் கவலை தான் எங்களைப் போன்றவர்களுக்கு.

பயன்பெறாதவர்களே கிடையாது

அருமைத் தாய்மார்களே! அன்புள்ளம் கொண்ட தாய்மார்களே! அனைத்து மக்களுக்கும் வாழ்வு ரிமையை ஏற்படுத்திய ஆட்சி இந்த ஆட்சி. கலைஞ ருடைய ஆட்சியினாலே நேரடியாகவோ, மறைமு கமாகவோ பயன்பெறாதவர்கள் யாரும் கிடையாது. எந்தக் கட்சியும் கிடையாது - எல்லோரும் பயன் பெற்றிருக்கிறார்கள். நன்றி காட்டக் கூடிய வாய்ப்பு என்று கருதி நம்முடைய பேராசிரியர் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்திலே நீங்கள் பொத்தானை அழுத்தினால் வெளிச்சம் தெரியும்; விளக்கு எரியும் அந்த விளக்கு எரிந்தால் உங்கள் வீட்டில் விளக்கு எரியும், நாட்டில் விளக்கு எரியும். வெற்றி திராவிட முன்னேற்றக் கழக அணிக்கே என்று சொல்லி என் உரையை முடிக்கிறேன்.

தமிழர் தலைவரை வரவேற்று
பேராசிரியர் சால்வை அணிவித்து உரை

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை பேராசிரியர் அன்போடு வரவேற்று சால்வை அணிவித்து உரை யாற்றினார். நேற்று வில்லிவாக்கம் தொகுதி மேடவாக்கம், 58ஆம் வட்டம் குட்டியப்பன் தெருவில் தேர்தல் பிரச்சார ஊர்வல புறப்பாட்டின் பொழுது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை வரவேற்று, தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரை வருமாறு: நாம் வாக்காளர்களைச் சந்திக்கின்ற இந்த ஊர்வலத்தில் உங்கள் அனைவரையும் முதலில் நான் வரவேற்கின்றேன்.

எனது நீண்ட நாள் நண்பர், திராவிடர் கழகத்தினுடைய தலைவர், விடுதலை ஆசிரியர் திரு.வீரமணி அவர்கள் வாக்கு கேட்கின்ற இந்த ஊர்வலத்தைத் துவக்கி வைத்து உரையாற்ற இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களை நான் உரையாற்று மாறு கேட்டு அவர்களை அன்போடு வரவேற்கின்றேன்.

-இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் உரையாற்றினார்.

(மேடவாக்கம் 25.3.2011)

*************************

மலையைத் தூக்கி என் தோளில் வையுங்கள், பிறகு மாற்றி வைக்கிறேன்!


தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஒன்றைச் சொல்லுகிறது என்றால், அதனைக் கட்டாயம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தி யில் உண்டு.

சொன்னதைச் செய்ததோடு மட்டுமல் லாமல் சொல்லாததையும் செய்த ஆட்சி கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி யாகும்.

2006 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று அறிவித் திருந்தார் கலைஞர். தேர்தலில் வெற்றி பெற்று, மக்கள் மன்றத் தின்முன் பதவிப் பிர மாணம் எடுத்த அந்த நிகழ்ச்சியிலேயே முதல் உத்தரவாக 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற உத்தரவில் கையொப் பமிட்டவர் கலைஞர் அவர்கள். இது தேர்தலில் சொன்ன வாக்குறுதி-அதனை நிறைவேற்றிக் கொடுத்தார்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப்படவில்லை. அண்ணா நூற்றாண்டு விழாவின்போது முதல மைச்சர் கலைஞர் அதற்கான உத்தரவைப் பிறப் பித்தார். இதனை யாரும் எதிர்பார்க்க வில்லை- யாரும் கேட்கவும் இல்லை. இது தான் செல்லாததையும் செய்த வர் கலைஞர் என்பதற்கு அடையாளம்!

கலைஞர் ஒன்றை அறிவிக்கிறார் என்றால் அதில் நிதானப் போக்கு இருக்கும். சொல்லு கிறோமே-அதனை நிறைவேற்ற முடியுமா? நிதி நிலை ஒத்துழைக்குமா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து வாக்குறுதி அளிக்கிறார். காரணம், அவர் தந்தை பெரி யாரின் மாணவர்.

அதனால்தான் பெண்களின் நலன் கருதி மிக்ஸி அல்லது கிரைண்டர் தரப்படும் என்று கலைஞர் கூறு கிறார். இலவசங்களைச் கேலி செய்து வந்த ஜெயலலிதாவோ மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் மூன்றும் தரப்படும் என்று தி.மு.க.வைக் காப்பியடித்துத் தேர்தல் அறிக்கையிலே குறிப் பிட்டுள்ளார்.

கலைஞர் சொல்லுகிறார் என்றால் மீண் டும் ஆட்சிக்கு வரப்போகிறார், வந்து அந்தப் பொருளை உறுதியாகக் கொடுக்கப் போகிறார். அதனால்தான் பொறுப்பாக, நிதானமாக, நடைமுறை சாத்தியக் கூறுகளை உணர்ந்து வாக்குறுதிகளை அளந்து கொடுக்கிறார்.

இந்த அம்மாவோ ஆட்சிக்கு வரப்போவ தில்லை என்று அவருக்கே தெரியும். அதனால் வாய்க்கு வந்த வாறு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.

தி.மு.க. கூறியுள்ளதை விட அதிகமாகக் கொடுப்பதாக ஜெயலலிதா அறிவித்ததிலி ருந்து ஓர் உண்மை மட்டும் புலப்படுகிறது.

தி.மு.க. சொன்னதைச் செய்துவிடும்- மக்கள் தி.மு.க.வின் நம்பகத்தன்மையை ஒப்புக்கொள்பவர்கள் என்பதை ஜெய லலிதா அறிந்த நிலையில் தான்-அந்த அச்சத்தி னால்தான் தி.மு.க.வைத் தாண்டி வாக்குறுதி களை பொய்யாக வேணும் சொல்லியாக வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது (பலத்த கைத் தட்டல்).

தந்தை பெரியார்தான் பொதுக்கூட் டத்தில் ஒரு கதையைச் சொல்லுவார். இரண்டு ஊர்களுக்கும் இடையில் ஒரு மலை இருந்தது. அந்த மலை இருப்பதன் காரணமாக ஊர் மக்கள் அடுத்த ஊருக்குச் செல்லு வதற்கு வெகுதூரம் நடந்து செல்ல வேண்டி யிருந்தது.

அப்பொழுது ஒரு வழிபோக்குச் சாமியார் அங்கு வந்த சேர்ந்தார். இரண்டு ஊர் மக்க ளையும் கூட்டி, இந்த மலை இரண்டு ஊர்க ளுக்கும் நடுவே இருப்பதால்தானே வெகு தூரம் நடந்துச்செல்லுகிறீர்கள்?

இந்த மலையை அப்புறப்படுத்திவிட்டால், உங்களின் வெகுநாள் கஷ்டம் நீங்கிவிடும் அல்லவா? என்றார் சாமியார்.

இரு ஊர் மக்களும் இப்படி ஓர் ஏற்பாட் டைச் செய்வதற்கு இது வரை யாரும் முன் வர வில்லையே- இவர் பெருஞ்சக்திவாய்ந்த மகான் போல் இருக்கிறது என்று பயபக்தி யுடன், இதற்கொரு வழி சொல்லுங்கள்! என்று கெஞ்சிக் கேட் டனர்.

சொல்லுகிறேன் கேளுங்கள்- இந்த மலையைத் தூக்கி வேறு இடத்தில் வைக்கும் வேலையை என்னிடம் விட்டு விடுங்கள். ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள். அதுவரை இரு ஊர்க்காரர்களும் எனக்கு நல்ல அளவு விருந்தளித்து என் உடல் வலி மையைப் பெருக்கிகொள்ள உதவிட வேண் டும் என்று சாமியார் சொன்னார்.

இரு ஊர் மக்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, போட்டி போட்டுக்கொண்டு சாமியாரை உபசரித்தார்கள்-விருந்து படைத் தார்கள்.

30 நாள்கள் ஓடி விட்டன. சாமியார் மலை யைப் புரட்டப்போகிறார், வேறு இடத்தில் வைக்கப் போகிறார் என்று நம்பி மகிழ்ச்சி யுடன் இரு ஊர் மக்களும் கூடினார்கள்.

எல்லோரும் வந்து விட்டீர்களா? என்று சாமியார் கேட்டுவிட்டு மலையைத் தூக்க ஆயத்தமானார். மக்கள் பரபரப்பாகக் காணப் பட்டனர்.

அப்பொழுது அந்தக் கெட்டிக்கார சாமியார் சொன்னார்,

நான் ரெடி. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் இந்த மலையைத் தூக்கி என் தோள்களில் வையுங்கள். நான் அதைத் தூக்கி மாற்றி வேறு இடத்தில் வைத்து விடுகிறேன் என்றார்.

ஊர் மக்களுக்கோ ஒன்றுமே புரியவில்லை. எங்களுக்கு இந்த மலையைத் தூக்கி சாமி யார் தோளில் வைக்கும் அளவுக்கு ஆற்றல் இருந்தால், இந்தச் சாமியார் எதற்கு? நாங்களே தூக்கி வேறு இடத்தில் வைத்துவிட மாட்டோமா? இந்தச் சாமியார் நம்மை ஏமாற்றி விட்டாரே!

நாம் முட்டாள்களாகி விட்டோமே என்று வருத்தப்பட்டனர்-என்று தந்தை பெரியார் ஒரு கதையைக் கூறுவார்.

அந்தச் சாமியார் கூறிய உறுதிமொழிக் கும், ஜெயலலிதா அம்மையார் தேர்தல் அறிக் கையிலே குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளுக் கும் வித்தியாசம் இல்லை.

வாக்காளர்கள் ஏமாந்து விடக் கூடாது!

(சென்னை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில்
தமிழர் தலைவர் கி.வீர மணி
-25.3.2011

****************************

Friday, March 25, 2011

இலவசங்களைக் கேலி செய்வோர் ஜெயலலிதாவின் இலவசங்கள்பற்றி எழுதுவார்களா?
வறுமை அதிகரிப்பின் அடையாளமே இலவசங்கள் அதிகரிப்பு என்று அதிமுகவோடு கூட்டு வைத்திருக்கும் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூறுகிறது. அக்கட்சியின் அதிகாரப்பூர்மான ஏடான தீக்கதிரில் (21.3.2011 பக்கம் 3) கூறப்பட்டுள்ளது.

அதேபோல அதிமுகவின் ஆலோசகராக இருக்கக்கூடிய திருவாளர் சோ ராமசாமி இலவசங்கள்பற்றி என்ன சொல்லு கிறார்? இன்று வெளிவந்துள்ள துக்ளக் அட்டைப் படம் என்ன சொல்லுகிறது?

கிரைண்டரையோ, மிக்சியையோ, லேப் டாப்பையோ கலைஞர் கொடுத்தால் அதற்குப் பெயர் வசந்த் அண்ட் கோ விளம்பரமாம் - சோ எழுதுகிறார்.

இப்பொழுது அவர் விழுந்து விழுந்து ஆதரிக்கும் இவர் ஆலோசகராக இருக்கும் ஜெயலலிதா இலவசங்களை அள்ளி விட்டிருக்கிறாரே -

கலைஞராவது மிக்சி அல்லது கிரைண்டர் இலவசம் என்கிறார்; ஜெயலலிதாவோ மின்விசிறி, மிக்ஸி, டி.வி. மூன்றையும் இலவசமாகத் தருவேன் என்கிறாரே, 20 கிலோ அரிசி இலவசம் என்கிறாரே - இது மட்டும் வசந்த் அண்ட் கோ விளம்பரம் இல்லையோ!

ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் கண்டுள்ள இலவசங்கள்பற்றி அடுத்த துக்ளக்கில் இதே பாணியில் கிண்டல் செய்வாரா? பதில் சொல்லுவாரா?

இது அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வமான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். என்ற பத்திரிகை.

இதில் ஒரு கார்ட்டூன் வெளிவந்துள்ளது.


என்ன தெரியுமா?

35 கிலோ அரிசி இலவசமாகக் கலைஞர் சொல்லியிருக் கிறாராம் - அதற்காக அரிசி கடத்தல்காரர்கள் சங்கத்திலே இருந்து பெரிய மாலையைத் தூக்கிக் கொண்டு வாழ்த்த வந்திருக்கிறார்கள் என்று கார்ட்டூன் போட்டுள்ளது. இன்று காலை வந்த நமது எம்.ஜி.ஆரில் இந்தக் கார்ட்டூன் வெளி வந்துள்ளது. பாவம் - அதிமுக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அவர்களுக்கு என்ன தெரியும்? ஜெயலலிதா என்ன சொல்லப் போகிறார் என்று நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் உள்ளவர்களுக்கு என்ன தெரியும்?

இலவசமாக அரிசி கொடுத்தால் கள்ள மார்க்கெட்காரர் களுக்கு மகிழ்ச்சி என்று கார்ட்டூன் போட்டுவிட்டது.

கலைஞராவது வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசம் என்றார். ஜெயலலிதாவோ குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறி இருக்கிறாரே - நமது எம்.ஜி.ஆர். ஏட்டின் கார்ட்டூன்படி - இது அரிசி கடத்தல்காரர்களுக்குக் கொள்ளை லாபமோ!

(பலத்த கைதட்டல்; வெடிச் சிரிப்பு!)
- சென்னைப் பெரியார் திடல் சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் 24.3.2011


அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை காமெடி சூரியன் தேவை ஜெயலலிதா தோல்வியுடன் ஒப்புதல்

தமிழர் தலைவர் தெளிவான விளக்கம்

சென்னை, மார்ச் 25- அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை காமெடி அறிக்கை. சூரிய வெளிச்சம் தேவை என்று ஜெயலலிதா ஒப்புக்கொண்டது. அவரது தோல் வியையே காட்டுகிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையை ஈ அடிச்சான் காப்பியாக அவசரமாக அச்சடிக்கப் பட்ட ஒன்று என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை பெரியார் திடலில் தி.மு.க அணியை ஆதரிக்க வேண்டும்-ஏன்? என்னும் தலைப்பில் நேற்று (24.3.2011) சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

நம்பகத்தன்மை இருக்கிறதா?

வருகிற ஏப்.13ஆம் தேதி 14ஆவது சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. மக்களிடையே யாருக்கு வாக்களிக்க வேண்டும்; யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்கிற கடமை தேர்தலிலே நிற்காத, சமுதாயப் புரட்சி இயக்கமான தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகத்திற்கு வழிகாட்டவேண்டிய தன்மை-நம்பகத் தன்மை யாரிடம் இருக்கிறது? எந்த ஆட்சி வந்தால் சமுதாய நலன், இன நலன் காப்பாற்றப்படும் என்பதை இன்று நேற்று அல்ல; தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலிருந்தே வழக்க மாக நடைமுறையிலே பின்பற்றி வருகின்ற ஓர் இயக்கமாகும்.

யாரை ஆதரிக்க வேண்டும்?

திறந்த மனதோடு இருக்கக்கூடிய பொதுமக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய அளவுகோல் என்ன? பெரியார் இந்தத் தேர்தலைப் பற்றி என்ன சொல்லுகிறார்? யாரை ஆதரிக்கச் சொல்லுகிறார்? எப்பொழுதும் தமிழ்மக்கள் எதிர்பார்ப்பது வழமையான ஒன்றாகும். தந்தை பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்திற்கு எந்தவித சுயநலமோ, பதவிக் கண் ணோட்டமோ, விருப்பு-வெறுப்பு என்பதோ என்றைக்கும் இருந்தது கிடையாது.

நம்முடைய மக்களின் நலன் முக்கியம். மக்களின் இழிநிலையைப் போக்க எந்தக் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்பதை தந்தை பெரியார் சொல்லியதற்குப்பிறகு அதற்குப் பிறகு அவரைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்ற பெரியார் தொண்டர்களாகிய எங்களுக்கும் அந்தக் கடமை உண்டு.

அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலை

அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படுவார்கள். நாங்களோ அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலைப்படக் கூடிய வர்கள். எனவே அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையைப் பற்றிய கவலை திராவிடர் கழகத்திற்கு உண்டு. எவ்வளவு சோதனைகள் எங்களுக்கு ஏற்பட்டாலும் அறிவார்ந்த முறையிலே சமுதாயத் திற்குத் தேவையான, சமுதாயத்தை முன்னேற்றக் கூடிய கருத்துகளைச் சொல்லுகிறவர்கள் நாங்கள்.

தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் பற்றிய நூல் பாமர மக்கள் ஏமாந்து விடக்கூடாது. எச்சரிக்கையாக இருந்து ஓட்டுப் போட வேண்டும் என்பதற்காக தி.மு.க ஆட்சியின் சாதனைகளும் அ.தி.மு.க அணியின் வேதனைகளும் என்னும் தலைப்பில் நாங்கள் தயாரித்த நூலை நீங்கள் வாங்க வேண்டும். மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் ஏராளமான தகவல்கள் இந்த நூலிலே உள்ளன.

துளி அளவும் மாறாமல் கலைஞரின் பணி

நமது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஈரோடு குருகுலத்திலே பயின்றவர். அவர் அன்றைக்கு எந்த முடிவோடு பயின்றாரோ அந்த எண்ணம் இன்றளவும், துளி அளவும் மாறாமல் அன்றைக்கு தான் ஏற்றுக்கொண்ட லட்சியம் என்னவோ அதே லட்சியத்தோடு, மாறாமல், ஆட்சி என்பது மக்களுக்குத் தொண்டாற்றக்கூடிய ஒரு வாய்ப்பு என்று கருதி, நாள்தோறும் மக்கள் நலனே முக்கியம் என்று கண்ணும் கருத்துமாகப் பணியாற்றிக் கொண்டு வருகின்ற முதல்வர் கலைஞர் அவர்களின் தகத்தகாய பொற்கால ஆட்சியில் பயன் பெறாதவர்களே கிடையாது.

திருவாரூரில் கலைஞர் பேச்சு

திருவாரூரில் நேற்று கலைஞர் அவர்கள் பேசும்பொழுதுகூட, நான் யாரையும் எதிர்த்துப் பேசி இங்கே போட்டியிட வரவில்லை. எல்லோரும் எனக்கு உறவினர்கள் என்ற பந்தத்தோடு, பாசத்தோடுதான் வந்திருக்கிறேன். என் மண்ணை நேசிக்கிறேன்; திருவாரூர் மக்களை நேசிக்கிறேன் என்று பண்போடு, அரசியல் நனி நாகரித்தோடு பேசினார்.

யார் வரக்கூடாது என்பதற்கு பதினாயிரம் காரணங்கள்

தேர்தலில் யார் வர வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. ஆனால் யார் வரக்கூடாது என்பதற்குப் பதினாயிரம் காரணங்கள் உண்டு. ஏப்.13 அன்று நீங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று பொத்தானை அழுத்தும்பொழுது ஒளிவிடுகின்ற வெளிச்சம்தான் அடுத்து 5ஆண்டுகாலம் தமிழ கத்தை ஒளிரச் செய்ய நிர்ணயம் செய்யப் போகிறது.

எங்கள் பணி-எக்ஸ்ரே பணி

எங்களுடைய பணி என்பது எக்ஸ்ரே போன்ற பணி. உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகக் காட்டுகின்ற பணி. ஃபோட்டோகிராபி பணி அல்ல - டச் செய்து அழகாகக் காட்டுவதற்கு. எக்ஸ்ரேயில் உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகக் காட்டினால்தான் நோயாளிக்கு அடுத்த கிசிச்சையைச் செய்ய முடியும்.

இந்த நாட்டிலே இப்பொழுது நடைபெறுகின்ற போராட்டம் வெறும் அரசியல் போராட்டமல்ல. இனப் போராட்டம்; ஆரியர்-திராவிடர் போராட்டம். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால், கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போன்ற நிலைக்குத்தான் நாம் ஆளாக நேரிடும்.

கதாநாயகன், கதாநாயகி

2006இல் தி.மு.க. தேர்தல் அறிக்கையை கலைஞர் வெளியிட்டார். அதை கதாநாயகன் என்று அன்றைக்குச் சொன்னார்கள். 2011இல் தி.மு.க வெளியிட்டிருக்கின்ற தேர்தல் அறிக்கையோ கதாநாயகி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. நல்ல கதாநாயகனும், நல்ல கதாநாயகியும் சேர்ந்தால் நல்ல குழந்தை பிறக்கும். அது சமதர்மக் குழந்தையாக வரும். சமதர்ம ஆட்சி தமிழகத்திலே மலரும். கலைஞர் அவர்கள் 7000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தார்.

கல்விக்கடன் ரத்து

இப்பொழுது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் முழுவதும் ரத்து என்று அறிவித்தார் (கைதட்டல்).

இந்தப் பிள்ளைகளுக்கு கலைஞர் தாயுமானார், தந்தையுமானார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு கலைஞர் ஆட்சி இருக்கிறது. தலைசிறந்த மனிதாபிமானத்தின் உச்சமாக ஆட்சி திகழ்கிறது.

முதலில் மனிதனுக்கு மூளை சரியாக இயங்க வேண்டும். அப்புறம் வயிறு இயங்க பார்க்கப்படும். கலைஞர் ஆட்சியில் மூளை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார்கள். நமது இன எதிரிகளும் மூளைக்குத்தான் விலங்கு போட் டார்கள். எனவேதான் மூளை சரியாக இருக்கவேண்டும் என்றும், எங்கும் கல்வியைப் பரவச் செய்தார் கலைஞர்.

பசியாத நல்வயிறு
பார்த்த துண்டோ!
என்று புரட்சிக் கவிஞர் எழுதினார்.

பசியாத வயிறு கிடையாது. பணம் நிறைய சேர்ந்தாலும் பசியாத வயிறு இருக்கும். நோய் வந்தாலும் பசி எடுக்காது.

புரட்சிக்கவிஞர் அப்படிச் சொல்லவில்லை. பசியா நல்வயிறு பார்த்ததுண்டோ என்று கேட்டார். பசியாத வயிறு இருக்கக்கூடாது என்று கருணையோடு நினைத்தார் அண்ணா. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொன்னார் அல்லவா?
அண்ணா சொன்னார்- ஒரு படி நிச்சயம்

வறுமையாலே-பசியாலோ, பஞ்சத்தாலோ மக்கள் இருக்கக்கூடாது என்று கருதித்தான் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வரும்பொழுது 1967லே சொன்னார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு படி நிச்சயம் என்று சொன்னார் அன்றைக்கு.

அதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு கலைஞர் செயல்பட்டார். அண்ணாவை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டார். அண்ணா ஆட்சியின் தொடர்ச்சிதானே இப்பொழுது நடைபெறுவது? முன்பாகத்தை அண்ணா எழுதினார். அடுத்த பாகத்தை கலைஞர் எழுதிக்கொண்டிருக்கிறார்.

ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்

ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குப் போடுவோம் என்று 2006ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவர், இந்த அம்மையார் சீறிப் பாய்ந்தார்.

உங்களால் கொடுக்க முடியுமா? இதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டார். பொறுத்திருந்து பாருங்கள். கொடுக்கிறோமா இல்லையா? என்று கலைஞர் சொன்னார். அடுத்து இந்த அம்மையார் நான்கு நாள்கள் கழித்து நாங்களும் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக பத்து கிலோ அரிசி கொடுப்போம் என்று சொன்னார்.

காப்பியடித்துச் சொன்னார்

அவர் சொன்ன பிற்பாடு இந்த அம்மையார் காப்பியடித்துச் சொன்னார். அதனால் இந்த அம்மையார் மீது மக்களிடம் நம்பகத்தன்மை இல்லை என்ற நிலைதான் இன்றைக்கும் இருக்கிறது. முதலில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு போட்டார் கலைஞர். அதற்குப் பிறகு அண்ணா நூற்றாண்டு விழா வந்தது. யாரும் கேட்கவில்லை. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்றார். கலைஞர் அரசின் மக்கள் நலத்திட்டங்களைப் பார்த்து மத்திய அரசே வியப்படைந்தது.

இடதுசாரி மாநிலங்களில் இல்லை

ஏழைகளுக்காகவே வாழ்கிறோம் என்று இடது சாரிகள் சொல்லுகிறார்கள். கேரளாவிலோ, மேற்கு வங்காளத்திலோ ஒரு கிலோ அரிசியை 15 ரூபாய்க்கு, 18 ரூபாய்க்கு விற்றார்கள். அந்தக் காலத்திலேயே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று போட்ட ஒரே ஆட்சி கலைஞருடைய ஆட்சிதான் என்று அவர் கையொப்பமிட்டு நிலைநாட்டினார்.

1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி

அண்ணா நூற்றாண்டில் வெறும் வெளிச்சம் மட்டும் போட்டால் போதாது அண்ணா வினுடைய எண்ணத்திற்கு செயல் உரு கொடுக்க வேண்டும் என்று கருதி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

என்ன இப்படி அறிவித்துவிட்டாரே என்று மேடையில் இருந்தவர்களுக்கு ஒரு தேக்கநிலை இருந்தது. எங்களுக்கெல்லாம் ஓர் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் கலைஞர் அவர்கள் பெரியாரிடத்திலே பயின்றவர்-ஈரோட்டுக் குருகுலத்திலே கணக் கெல்லாம் சரியாகப் போட்டு வைத்துவிட்டு ஏற்பாடெல்லாம் பார்த்துவிட்டு-குதிர் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு-

நினைவுக் குதிர்

தன்னுடைய நினைவுக் குதிர் அது எப்பொழுதும் குறையாத நினைவுக் குதிர்; அதையும் தெளிவாக வைத்துக்கொண்டு ரொம்ப அழகாக இந்தத் திட்டத்தை வெளியில் சொன்னார். ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ என்று அறிவித்தார். இது ஏதோ ஒரு வாரம் போடுவார்கள், பத்துநாள் போடுவார்கள் என்று நினைத்தார்கள். எதிர்க்கட்சித் தலைவராலே குறை சொல்ல முடிந்ததா? வரவேற்கவும் முடியவில்லை; குறை சொல்லவும் முடியவில்லை.

ரசம் வைக்க வேண்டாமா?

அதற்காக என்ன சொன்னார், அரிசி மட்டும் போதுமா? ரசம் வைத்து சாப்பிட வேண்டாமா? குழம்பு வைத்து வைத்து சாப்பிட வேண்டாமா என்று கேட்டார்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

அது கலைஞருக்குத் தெளிவாகத் தெரியும். எதையும் அலட்சியப்படுத்தக் கூடியவர் அல்லர். அவ்வளவு முதிர்ச்சி அடைந்த தலைவராக இன்றைக்கு அவர் காட்சியளிக்கின்றார்.

அப்படியா? என்று நினைத்து, உடனே உணவு அமைச்சர் எ.வ.வேலுவை அழைத்தார். இதற்கு என்ன வழி? நாளைக்கே திட்டத்தோடு வாருங்கள் என்று சொல்லிவிட்டு, அவரே விளக்கமும் சொன்னார். அடுத்து தாய்மார்களுக்கு குழம்பு, ரசம் வைக்க 50 ரூபாய்க்கு பத்து மளிகைப் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இன்றைக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு மளிகைப் பொருள் கிடைக்கிறதா-இல்லையா? சொன்னது போல் செயல்படக்கூடிய ஆட்சி- கலைஞர் ஆட்சி போல் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? (பலத்த கைதட்டல்). கலைஞர் மீது நம்பகத்தன்மை மக்களுக்கு வந்திருக்கிறது. சொன்னதையும் செய்து சொல்லாததையும் கூடுதலாக செய்யக்கூடியவர் கலைஞர் என்ற பெருமையை அவர் உருவாக்கி யிருக்கின்றார்.

அரசு ஊழியர்கள் அம்மா ஆட்சியில் பட்டபாடு

தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதைப் பாருங்கள். அரசு அலுவலர்களின் குறையை அவ்வப்பொழுது களைந்திடவும், அரசு ஊழியர் சங்கங்களின் குறைகளை கேட்டு உரிய காலத்தில் தீர்வுகாணவும் ஆணையம் ஒன்றினை அமைப்போம். -இது கலைஞருடைய அறிக்கை. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் பாருங்கள். அரசு ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது சேவை நமக்கு முழுவதுமாக சென்றடையும் வகையில் இனிமையான (அ.தி.மு.க தேர்தல் அறிக்கை), சுமுகமான சூழல் உருவாக்கப்பட்டு, அவர்களது மனநலம் பேணப்பட்டு, தமிழக அரசு ஊழியர்கள் திறம்பட பணியாற்ற உதவிடுவோம் என்று கூறப்பட்டி ருக்கிறது.

அரசு ஊழியர்களின் மனநலனையும் இனி பார்க்கப் போகிறார்கள். ஏனென்றால் சென்ற ஆட்சியிலேயே அரசு ஊழியர்களின் மன நலனைப் பார்த்தவர்கள். இந்த அம்மாவை நினைத்தாலே அரசு ஊழியர்களுக்கு மனநலம் போய்விடுகிறதே. அரசு ஊழியர் தலைவர்கள் எல்லாம் இங்கே இருக்கி றார்கள். கோ.சூரியமூர்த்தி இங்கே இருக்கிறார். படாத பாடுபட்ட அரசு ஊழியர்கள் இருக்கி றார்கள். ஜெயலலிதா ஆட்சியிலே சாலைப் பணியாளர்கள் செத்தவர்கள் எத்தனைபேர்? நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இந்தத் தேர்தலே அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது அல்லவா? புளுகுவதற்கு எல்லை வேண்டாமா? செத்துப் போன கோயபெல்ஸ் இன்றைக்கு உயிரோடு வந்தால்கூட, அ.தி.மு.க தேர்தல் அறிக்கையைப் பார்த்து தற்கொலை செய்துகொள்வான் (கைதட்டல்).

கெட்டிக்காரன் புளுகே எட்டுநாள்தான்

காமெடி தேர்தல் அறிக்கை இவர்களுடைய நிலைமை என்ன? நமக்கு சோர்வு ஏற்பட்டால், நமக்கு களைப்பு ஏற்பட்டால் காமெடி காட்சிகளை தொலைக்காட்சியில் பார்ப்போம். அதற்குப் பதிலாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் படித்தாலே போதும் (பலத்த கைதட்டல்). இதைவிட நல்ல நகைச்சுவை-கிச்சி கிச்சி மூட்டுவது வேறு எதுவும் கிடையாது. (கைதட்டல்).

ஆறாவது ஊதியக் குழுவால் களையப்படாமல் இருக்கும் எஞ்சிய முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை விரைவாக களைவதற்கு உரிய நடவடிக்கைகள் ஏற்படுத்துவோம் என்று சொல்கிறார். ஆறாவது ஊதியக் குழுவை மருத்துவமனையில் அறிவித்த தலைவர் கலைஞர், அவர் மருத்துவ மனையில் இருக்கிறார். உடனே அறிவித்தார். நான் அவரை மருத்துவமனையில் சந்தித்துக் கேட்டேன், என்னங்க வந்திருக்கிறது? உடல்நலம் இல்லாத நிலையில் என்ன அவசரம் - உடனே அறி விக்கிறீர்கள் என்று கேட்டேன். அய்யோ, உங்களுக்குத் தெரியாதய்யா.

உடனே கம்யூனிஸ்ட் நண்பர்கள் கொடிபிடிக்கப் பார்ப்பார்கள். அவர்களுடைய கையில் இருக்கின்ற கொடியை நாம பிடுங்கிவிட வேண்டாமா? எனக்குத் தெரியும் இது என்று சொன்னார். இன்றைக்கு இடதுசாரி களுடைய நிலை என்ன? அரசு ஊழியர்கள் அனு பவித்து வரும் சலுகைகள் தற்பொழுது தொடரும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு ஞாபகம் வராதா? இரவு 12 மணிக்கு அவர்கள் பட்டபாடு தெரியாதா? இரவு 12 மணிக்கு அரசு ஊழியர்களை எழுப்பினால் போலீஸ் தான் வந்திருக்கிறது போலியிருக்கிறது என்று நினைக்கின்ற அளவுக்கு அரசு ஊழியர்கள் கொடுமை அனுபவித்தவர்கள் ஆயிற்றே!

டெஸ்மா, எஸ்மா, அம்மா இதை இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா (கைதட்டல்). அரசு ஊழியர்கள் அவ்வளவு பேருக்கும் மறுவாழ்வு கொடுத்த ஆட்சி கலைஞரின் பொற்கால ஆட்சி! (கைதட்டல்). இந்த அம்மையார் காலத்தில் நிறுத்தப்பட்ட சம்பளம் உள்பட சேர்த்துக் கொடுக்கக்கூடிய அளவுக்கு கலைஞர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி மேலும் பல கருத்துகளை எடுத்துக்கூறி விளக்கினார்.

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி

-தமிழர் தலைவர் வருணனை

காமராசர் அவர்கள் வந்ததற்குப் பிறகு, கலைஞர் அவர்கள் வந்ததற்குப் பிறகு, கல்வி நீரோடை இன்றைக்கு நாடெல்லாம் பாய்ந்திருக்கிறது. மன்னர்கள் ஆட்சி காலத்திற்கு முன்பு ஒரு விழுக்காடு இருந்த கல்வி அறிவு இன்றைக்கு 72 விழுக்காடு வளர்ந்திருக்கிறது. படித்தவர்கள் வந்திருக்கிறார்கள். தடுக்கி விழுந்தால் கலைஞர் ஆட்சியில் பொறியாளர்கள் மீதுதான் விழ வேண்டும். டாக்டர்கள் மீதுதான் விழ வேண்டும். அந்த அளவுக்கு படித்தவர்கள் வந்திருக்கிறார்கள். படிப்பு என்பதிலே முக்கியமானது தொழில் கல்வி படிப்புதான். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அவர் நுழைவுத் தேர்வை கொண்டு வந்தார். அதன் விளைவு நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே படித்து முன்னேறி வந்தார்கள். கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்புக் கிட்டவில்லை.

தி.க.வும், தி.மு.க.வும் 21 ஆண்டுகள் போராடின

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக்கழகமும் 21 ஆண்டுகளாகப் போராடி அந்த நுழைவுத் தேர்வை ஒழித்தோம். அதனால்தான் கல்விக்கண் திறக்கப்பட்டது. எங்கு பார்த்தாலும் பள்ளிக் கட்டடங்கள், பொறியியல், கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளைக் காணலாம்.

தேவடியாகுப்பம்

நம்முடைய நிலை என்ன தெரியுமா? திருவண்ணா மலைக்கு அருகில் உள்ள ஓர் ஊருக்குப் பெயரே தேவடியாகுப்பம் என்று இருந்தது. அவ்வளவு இழிவாக நம்மை வைத்திருந்தார்கள். தஞ்சையிலே தொம்பன்குடிசை என்று ஒரு பகுதி இருந்தது. நமக்குத் தெரிந்த ஒரு ஆட்சி வந்த பிறகு தான் அந்தப் பகுதிக்கு தொல்காப்பியர்சதுக்கம் என்றே பெயர் சூட்டப்பட்டது.

இன்றைக்கு சென்னை மாநகர மேயராக வந்திருக் கின்றவர் மா.சுப்பிரமணியன். அவர் ஒரு சீரிய பகுத்தறிவாளர். அவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி நடக்கக் கூடியவர். கார்ப்பரேசன் பள்ளிக் கூடங்களில் படிக்கும் பள்ளிப் பிள்ளைகளுக்கெல்லாம் இலவசமாக மடிக்கணினியை வழங்கினார்.

ஒரு காலத்தில் கார்ப்பரேசன் பள்ளிக் கூடம் என்றால் கீழ்த்தரமான பள்ளிக்கூடமாக நினைக்கப்பட்டது.

கார்ப்பரேசன் பள்ளிகளில் மடிக்கணினி

இன்றைக்கு அந்த நிலையை மாற்றி உயர்தர பள்ளிகளுக்கு ஈடாக கார்ப்பரேசன் பள்ளிகள் எந்த வகையிலும் குறைந்தவையல்ல என்று சாதனைப்படைத்து வருகிறார்.

திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது கூட முதல்வர் கலைஞர் சொன்னார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தோம். வேறுபாடு இல்லாமல் அதை அனைத்துப் பிள்ளைகளுக்கும் கொடுங்கள் என்று கூட்டணிக் கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர்.

அனைவர்க்கும் அனைத்தும் பாகுபாடு இன்றி அனைத்துப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று கலைஞர் அறிவித்தாரே!

அனைவர்க்கும் அனைத்தும் வழங்கக் கூடியவர்தான் கலைஞர் அவர்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் - இந்த அம்மையார் அப்படியே காப்பியடித்து வெளியிட்டிருக்கின்றார்.

காப்பி அடிப்பு

இந்த அம்மையாரை யாராவது நம்புவார்களா?

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்து - தானுந்தன்

பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி

என்ற பாடலுக்கு ஏற்ப தேர்தல் அறிக்கையை இந்த அம்மையார் வெளியிட்டிருக்கின்றார்.

(தமிழர் தலைவர் கி.வீரமணி உரையிலிருந்து - சென்னை பெரியார் திடல் 24.3.2011)

சூரியனை மூடச் சொல்லுமா தேர்தல் ஆணையம்? தமிழர் தலைவர் தர்க்கரீதியான கேள்வி

தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றம் கண்டித்த பிறகு தான் தனது போக்கை மாற்றிக் கொள்வேன் என்று இருக்கக் கூடாது. அதற்கு முன்னாலேயே அறிவுபூர்வமான சிந்தனை வரவேண்டும். பெரியார் சிலை, அண்ணா சிலை, காமராஜர் சிலை, எம்.ஜி.ஆர் சிலைகளை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சொல்வதா?

அதற்கும், ஓட்டுப் போடுவதற்கும் என்ன சம்பந்தம்? அப்படிப் பார்த்தால் தேர்தல் ஆணையம் இப்படி உத்தரவு போடுகிறது என்று வைத்துக் கொள்வோம். எல்லோரும் ஏப்ரல் 13ஆம் தேதி வரை கையை கட்டிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கையை நீட்டினால் அது காங்கிரஸ் சின்னம் (கைதட்டல்).

சூரியன் நாளை முதல் உதயமாகக் கூடாது. தேர்தல் ஆணையத்தின் ஆணை இது. காரணம் என்ன வென்றால் சூரியன் தேர்தல் சின்னம்; ஆகவே அதை மூடி விட வேண்டும் என்று சொன்னால் அறிவுக்குப் பொருத்தமா? (கைதட்டல்).

இலை இருக்கக் கூடாது, எல்லா மரத்திலும் இருக்கின்ற இலைகளையும் கழிச்சிக் கட்ட வேண்டும்.

மாம்பழம் எங்கேயும் இருக்கக் கூடாது, கடைகளிலும் விற்கக் கூடாது என்ற உத்தரவு போடுவார்களா? என்னய்யா அர்த்தம், அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டாமா? பகுத்தறிவாளர்கள் நாங்கள். எங்களுக்கு அரசியல் கண்ணோட்டமில்லை. நாட்டு மக்கள் முன்னேற்றக் கண்ணோட்டம், விஞ்ஞானக் கண்ணோட்டம் தான் உண்டு. கேலிப்பொருளாக தேர்தல் ஆணையம் ஆகக் கூடாது. நியாயத்தை நிலை நாட்டக் கூடியவர்களாக ஆகுங்கள்.

மக்கள் உங்கள்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை இழக்கும்படி நடந்து கொள்ளாதீர்கள்.

(தமிழர் தலைவர் கி.வீரமணி உரையிலிருந்து - சென்னை பெரியார் திடல் 24.3.2011)
இதுகூடத் தெரியவில்லை அம்மாவுக்கு?

இது அ.தி.மு.க. தேர்தல் அறிக் கையில் சொல்லப்பட்டிருக்கிறது - கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையில் இருப்பதாகும். இதில் கொஞ்சமாவது யோசனை செய்து எழுதியிருக்கின்றனரா? நான் கடுமையான வார்த்தைகள் சொல்பவன் அல்ல. அது நமக்குத் தேவையும் அல்ல. கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி அவரவர்கள் குடிவந்து விட்டார்கள். அதுவே இந்த அம்மாவுக்குத் தெரியவில்லை (பலத்த சிரிப்பு, கைதட்டல்).

வீட்டு வசதி சாத்தியம் இல்லை என்கிறார் ஜெயலலிதா. எங்கே பார்த் தாலும் வீடுகள் கட்டிக் கொடுத் திருக்கிறார் கலைஞர்.

ஒரு தெளிவு இருக்க வேண் டாமா? மக்கள் எதைச் சொன்னாலும் நம்புவார்கள் என்று நினைப்பதா? மக்களை எப்படி எடை போடு கிறார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

எனவே இது அந்த அம்மாவின் அறியாமையைக் காட்டுகிறது. வாக்காளர்களை எவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறார் என்பதைப் பற்றி பொது மக்கள் சிந்திக்க வேண்டும். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் எங்களின் நோக்கம். கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறையில் இருப்பதாலும், மக்களுக்கு நிதிச் சுமையை ஏற்றக் கூடிய ஏமாற்று வேலை என்பதாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நவீன பசுமைத் திட்டத்தை ஏற்படுத்தும் என்கிறது அதிமுக தேர்தல் அறிக்கை. நவீன பசுமை வீட்டுத் திட்டத்தில் எப்பொழுதும் காய்கறிகள் எல்லாம் மேலேயே தொங்கும் (பலத்த கைதட்டல்). முருங்கைக்கீரை, முளைக்கீரை எல்லாம் பக்கத்திலேயே குடி இருக்கும்.

நவீன பசுமை வசதித் திட்டம். அனைவருக்கும் குறைந்த விலை யில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள சூரியசக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப் படும் என்று தேர்தல் அறிக்கை யிலே அம்மையார் சொல்லி யிருக்கிறார்.

பாவம், ஒன்று தெரிந்து கொள் ளுங்கள் - இந்த அம்மாவுக்கு மேல் உதிப்பது சூரிய வெளிச்சம் தான். (கைதட்டல்). சூரிய வெளிச்சத்தை ஜெயலலிதா வால் கூடத் தடுக்க முடியாது (கை தட்டல்).

கலைஞர் கட்டிய வீட்டிற்குள் சூரிய வெளிச்சம் வருகிறதோ இல்லையோ, இந்த அம்மா கட்டுகிற வீட்டில் சூரிய வெளிச்சம் வரும் என்றால் இந்த அம்மையார் தன் னுடைய தோல்வியை பெருமன தோடு ஒப்புக் கொண்டுவிட்டார்; ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார் (பலத்த கைதட்டல்).

எழுதியவன் ஏட்டைக் கெடுத் தான்.
படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்.

எழுதிக் கொடுத்தவன் இஷ்டத் திற்கு எழுதிக் கொடுத்துவிட்டான். இந்த அம்மா அதைப் பார்க்கவில்லை. சூரியன் என்றாலே இந்த அம்மா வுக்கு அலர்ஜி ஆச்சே. என்னய்யா யாரோ தி.மு.க. காரன் நமது கட்சிக்குள்ளேயே புகுந்திருக்கிறான் என்று நினைக்கும்.

இந்த அம்மா சூரிய வெளிச்சம் - சூரிய மின்சார சக்தியைத்தானே நம்ப வேண்டியிருக்கிறது? எனவே வீடுகளைக் கட்டிக் கொடுத்தவர் களை நம்புவார்களா? கட்டப் போகிறோம் என்று சொல்கிறவர் களை நம்புவார்களா? நினைத்துப் பார்க்க வேண்டும்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் உரையிலிருந்து சென்னை பெரியார் திடல் 24.3.2011


பேசு நா இரண்டுடையாய் போற்றி, போற்றி!

ஆரிய மாயைபற்றி அண்ணா சொன்னது
எவ்வளவு சரி என்பது புரிகிறதா?

இலவச டி.வி., இலவச கியாஸ் அடுப்பு என்று தி.மு.க., தந்தது கண்டும், மேலும் சில இலவசங் களை தி.மு.க. தந்தபோது அக்கிர கார சோ இராமசாமிகளின், அவரது சீடக் கோடி வைத்திய நாதன்களின் குடுமிகள் ஆடியது கொஞ்சமா, நஞ்சமா? இலவசங்கள் மூலம் பொருளாதாரமே பாழ்பட்டு விடுகிறதே என்று அங்கலாய்த் தார்கள்.

இப்போது சிறீரங்கம் அய்யங் கார் அம்மையார் தி.மு.க. தேர்தலை மிஞ்ச இலவச ஏலத்தைப் போடத் துவங்கி விட்டவுடன்,

அவாள் அப்படிச் செய்யும்போது இவாளால் சும்மாயிருக்க முடியுமோ என்று ராகத்தை தலைகீழாக மாற்றி வாசிக்கத் துவங்கி விட்டனரே!

இதுதான் ஆரியம்!

இரட்டை நாக்கு பேர்வழிகளைப் புரிந்து கொண்டு,

நல்லாட்சி மலர தி.மு.க. கூட்டணிக்கே வாக்களியுங்கள்.

----------------”விடுதலை” 24-3-2011


தி.மு.க.வையே ஆதரிக்க வேண்டும் - ஏன்?

தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும் - அ.தி.மு.க. அணியின் வேதனைகளும் எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள நூல் திராவிடர் கழக வெளியீடாக வந்துள்ளது. நேற்று சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் அந்நூல் வெளியிடப்பட்டது.

80 பக்கங்களைக் கொண்ட இந்நூலுக்கான நன்கொடை வெறும் பத்தே ரூபாய்தான். அடக்க விலைக்கும் குறைவாகவே வழங்கப்படுகிறது. வெளியீட்டு நிகழ்ச்சியிலேயே 960 புத்தகங்களை பொது மக்கள் பெற்றுக் கொண்டார்கள்.

தி.மு.க. ஆட்சி கடந்த அய்ந்து ஆண்டுகளில் எத்தகைய சாதனைகளைச் செய்துள்ளது. சொன்னதை எப்படியெல்லாம் நிறைவேற்றியுள்ளது என்பது புள்ளி விவரங்களுடனும் ஆதாரங்களுடனும் ஒரு பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.

வேறு எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் செய்ய நினைக்காத - செய்யத் துணியாத சமூகப் புரட்சித் திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றியிருக்கிறது.

குறிப்பாக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, தமிழ் செம்மொழி, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு, நாடெங்கும் 240 இடங்களில் ஜாதிஒழிப்பு - தீண்டாமை ஒழிப்புத் திட்டமான பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள், தீட்சிதர்ப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் கொள்ளை போன சிதம்பரம் நடராசன் கோயிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தமை, வடலூரில் வள்ளல் இராமலிங்க அடிகளார் அவர்களால் உண்டாக்கப்பட்ட சத்ய ஞான சபையில் அவர் கொள்கைக்கு விரோதமாக உருவ வழிபாடு நடத்தி, பகற் கொள்ளையடித்த பார்ப்பன அர்ச்சகரை சட்ட ரீதியாக வெளியேற்றியமை - இன்னோரன்ன திட்டங்களை கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியேயன்றி வேறு எந்த ஆட்சியாலும் செய்திருக்க முடியுமா என்பது காரண காரியங்களோடு இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

தீண்டாமை வெறியின் காரணமாகத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் மற்றும் கொட்டக்கச்சியேந்தல் ஆகிய ஊராட்சி களில் தேர்தலை நடத்திக் காட்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை, துணைத் தலைவர்களை தலைநகரமான சென்னைக்கு அழைத்து வந்து பாராட்டு விழா நடத்திய சமூகப் புரட்சிக் கொள்கையையுடையது தான் தி.மு.க. ஆட்சியாகும்.

தொழிற் கல்லூரிகளில் சேர்ந்திட நுழைவுத் தேர்வு என்கிற பார்ப்பன வஞ்சகம் தி.மு.க. ஆட்சியால்தான் சட்ட ரீதியாகத் தடுக்கப்பட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாகக் கூறி, உரிய முறையைப் பின்பற்றாத தால்தான் நீதிமன்றத்தில் தோல்வி காணப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறிய யோசனையை அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளாததால்தான் அந்த நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் சமூக நீதியில் உண்மையான அக்கறை கொண்ட கலைஞர் அவர்கள், கழகத் தலைவர் கூறிய யோசனையின் அடிப்படையில் கல்வியாளர்கள் குழு ஒன்றை ஏற்படுத்தி, அவர்கள் தந்த கருத்தின் அடிப்படையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தைச் செய்ததால் நீதிமன்றத்திலும் அச்சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பும் பெறப்பட்டது.

இந்த நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமாக மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கில் நுழைய முடிந்தது. முதல் தலைமுறையைச் சேர்ந்த இவர்கள் தொழிற் நுட்பப் பட்டதாரிகளாகக் கம்பீரமாக வெளிவந்து, சமூக நிலையிலும் பொருளாதார நிலையிலும் தலை தூக்கி நிற்கும் ஓர் உன்னத நிலை முகிழ்த்துக் கிளம்பியது.

சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்த்தெடுக்கப் பட்டாலன்றி சம அந்தஸ்துடன் சமூகத்தில் வீறுநடை போட முடியாது என்னும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட - அதனையே சுவாச மாகக் கொண்ட ஒருவர் முதல் அமைச்சராகத் தமிழ் நாட்டில் 5ஆம் முறையாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டதால் இத்தகு சாதனைகள் எட்டப்பட்டன.

சமூகத்தில் பெரும்பான்மையினரான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள்தான் பெரும்பாலானவர்கள் ஆவார்கள். ஆனால் அவர்கள் சமூக நிலையிலும், கல்வி ரீதியிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கிடந்தார்கள். அவர்களைக் கைதூக்கி விடுவதுதான் சமூக ஜனநாயகம் என்று உணர்ந்த, அந்தத் திசையில் செயல்பட்டு வரும் தி.மு.க. ஆட்சியை மீண்டும் கொண்டு வர மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான இந்த வெகு மக்கள் முன் வருவார்களாக!

----------------”விடுதலை” தலையங்கம் 24-3-2011