
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீனவர் உரிமைக் கோரிக் கைப் பயணம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.
கரூரில் நேற்று செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
திட்டத்தைப் பற்றி முடிவு செய்யும் அதிகா ரம் கர்நாடகத்துக்கு இல்லை. அவர்கள் காவிரியை உற்பத்தி செய்யவில்லை. பா.ஜ.க. தோன்றுவதற்கு முன்பே காவிரி இங்கு வந்து கொண்டு இருக் கிறது. மாநிலத்து மாநிலம் ஒரு பேச்சு என்று பா.ஜ.க. செயல் படுகிறது.
கடற்படை, கடலோரப் பாதுகாப்புப் படை இருந்தும் தமிழக மீனவர்களை இலங் கைக் கடற் படையினர் கடத்து வது, கொல்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 420 பேர் கடத்தப் பட்டு 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்களை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் அல்லது கச்சத் தீவு உரிமையை உறுதிப் படுத்த வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி 25 தேதி முதல் 30 தேதி வர கடற்கரை மாவட்டங்களில் மீனவர் உரிமை கோரிக் கைப் பயணத்தை எங்கள் கட்சி நடத்தவுள்ளது.
இவ்வாறு தா. பாண்டியன் கூறினார்.
No comments:
Post a Comment