Sunday, June 08, 2008

நாம் இந்து அல்ல

நாலு தலைச்சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்று தலைச்சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறுதலை சாமி, ஆறுமுகச்சாமி, ஆளிவாய்ச்சாமி பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள் காக்கை மீது பறக்கும் கடவுள், தலை மீது தைய்யலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் ரசமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவைகளை நமது தெய்வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழவேண்டும். இந்தச் சேதியைக் கேட்டால் உலக நாகரீக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிட கேவலமானவர்கள் என்று கேலி செய்வாரே. இந்த கண்ராவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நாம் தலையில் தூக்கிப்போட்டுக்கொள்ள, நமக்கு மனம் எப்படித்துணியும்? ஆகவேதான் நாம் இந்து அல்ல என்று கூறுகிறோம்!

---- பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரை - "ஆரிய மாயை" - 26.09.1943

No comments: