Wednesday, May 21, 2008

சுப்பிரமணியசாமியை கைது செய்ய வேண்டும்

தன்னிடம் இன்னும் பல அமைச்சர்கள் பேசிய தொலைபேசிப் பேச்சின் குறுந்தகடுகள் உள்ளன என்று மிரட்டும் சுப்பிரமணியசாமி யைக் கைது செய்து அவருக்கு அவை எப்படிக் கிடைத்தன என்று விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று செய் தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் இது பற்றி பேசியது:

தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பது அநாகரீகமானது சட்ட விரோதமானது தனி மனித உரிமைக்கு எதிரானது. இதனை யார் செய்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த விவகாரத்தில் தொலை பேசிகளை ஒட்டுக் கேட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, இதில் சம்பந்தப்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது தவறான முன்மாதிரியாகிவிடும்.

இன்னும் பல அமைச்சர் களின் சி.டி. தன்னிடம் இருப்ப தாக சுப்பிரமணியசாமி மிரட் டுகிறார். எனவே சி.டி.க்கள் அவருக்கு எப்படிக் கிடைத்தன என்பது பற்றி அவரைக் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.

- இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

No comments: