Friday, May 16, 2008

என் அனுபவம்

சாதாரணமாக, சிந்திக்கத் துவங்கிவிட்டோமானால், எந்தச் சங்கதியையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்கிற பழக்கத்துக்கு வந்து-விட்டோமானால் - அப்புறம் தானாக எல்லாச் சங்கதிகளின் குறைகளையும் போக்கிக் கொள்ள முடியும். என்னைப் பற்றியே எடுத்துக் கொண்டால் - நான் சிறு வயதிலேயே 10, 11 வயதி-லேயே வியாபாரத்துக்கு வந்து விட்டேன். இயற்கையிலேயே, சிறு வயதிலிருந்து நான் கொஞ்சம் துடுக்காயும், எந்தச் சங்கதியையும் - ஏன், எப்படி என்று கேட்டுக்கொண்டே இருப்-பவனுமாய் இருந்ததோடு, வியாபாரத் துறை-யில் வேறு இருந்ததால் பலரிடம் பழகும் வாய்ப்-புக் கிடைத்தது; அதன் மூலம் பல அனுபவங்-களும், உண்மைகளும் தெரியவந்தன. சாதாரண-மாகச் சொல்லுவார்கள், ‘பையன் மந்தமாய் இருந்தால், அவனை வியாபாரத்தில் போட்-டால் புத்திசாலியாகி விடுவான்; இல்லாவிட்டால் சுங்கக் ‘கேட்’டில் போட்டால் திருந்தி-விடுவான்’ என்று. ஏன் என்றால், இவைகளில் பலதரப்பட்ட மனிதர்களுடன் அவன் பழகவும், அவர்களிடம், அவரவர்களுக்குத் தகுந்த மாதிரயான காரியம் செய்துகொள்ளவும், சமாளித்துக் கொள்ளவும் வேண்டும்.

அப்படியிருக்கிறபோது, அவனுக்குத் தானாக அறிவு வந்துவிடும் என்கிற கருத்தில் சொல்லுவார்கள். இன்னும் தேவடியாள் வீட்-டுப் பிள்ளைகள் புத்திசாலிகளாக இருப்பதற்-குக் காரணம் என்னவென்றால், அவர்களும் பல ரகமான மனிதர்களிடம் பழகவும், காரியம் சாதித்துக் கொள்ளவும் வேண்டியிருப்பதனால் இயற்கையாகவே அறிவு வந்து விடுகிறது.
எதற்குச் சொல்கிறேன் - ‘இதைச் சிந்தித்தால் பாவம், இந்தக் காரியத்தை ஆராய்ந்தால் பாவம்’ என்று சொல்லிச் சொல்லி நம்மைப் பயமுறுத்திவிட்ட காரணத்தினால் இப்போது
எந்தச் சங்கதியையும் நம்மால் ஆராயமுடியாமல் போய்விட்டது. கொஞ்சம் துணிச்சலாக இந்தப் பக்கம் திரும்பிவிட்டோமானால் அப்புறம் வேகமாக வளர்ச்சி காணமுடியும்.
இப்போது நாம் வாழ்கிற இந்தக் காலம் மிகவும் புரட்சிகரமான காலமாகும். கடந்த 50 வருட காலத்துக்குள் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

----------- தந்தைபெரியார் - மாயவரத்தில், 6.6.1954-ல் சொற்பொழிவு, ‘விடுதலை’, 11.6.1954

No comments: