Thursday, March 20, 2008

இந்திய சமுதாயத்தில் ஜாதீ

இந்தியாவில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஜாதீயம் நான்கு பிரிவுகளாக ஆரம்பமாயி-ருக்கிறது. நாளடைவில் ஜாதிப் பிரிவுகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இன வேற்று-மையும், நிற வேறுபாடும், தொழில் வித்தியாசம் போன்றவை ஜாதீயம் ஏற்படுவதற்கு அடிப்-படைக் காரணங்களாக இருந்திருக்கின்றன. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஜாதிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கூடியிருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டு முதல் ஜாதிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. நீக்குப் போக்கற்ற தன்மையும், இறுக்கமும் நாளடைவில் கூடியிருக்கிறது.

தற்பொழுது, இந்திய சமுதாயத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாதிப்பிரிவுகள் உள்ளன. இந்திய சமுதாயம்தான் உலகில் மிக அதிகமான பிளவுகளுடைய சமுதாயமாகும்.
ஒவ்வொரு ஜாதிப்பிரிவினரும் தனித்தனியான சமுதாயமாகச் செயல்படுகிறார்கள். ஒவ்வொரு ஜாதிப்பிரிவினரும் தங்களுடைய ஜாதிப்பிரிவுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த அகமண முறையால், ஒவ்வொரு ஜாதியினரும் தங்களுக்கென்று தனி ஒழுக்க நெறிகளையும், பழக்க வழக்கங்-களையும், சடங்குகளையும், சம்பிரதாயங்-களையும் ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள். திருமண உறவை ஜாதிப்பிரிவுக்குள்ளேயே நடத்திக் கொள்வதால் ஜாதிப்பற்றும், வெறியும் மேலோங்கி நிற்கிறது. இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களிடம் கூட ஜாதீய உணர்வு தொடர்ந்து நீடிக்கிறது.

கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள் கூட பார்ப்பன கிறித்துகள் என்றும், நாயர் கிறித்துவர் என்றும் கூறிக்கொண்டு பெருமைப்-பட்டுக் கொள்கிறார்கள். இசுலாமிற்கு மாறியவர்கள் கூட ராஜ்புத், முசுலீம், தியாகி முசுலீம் என்று சொல்லிப் பெருமைப்-படு-கிறார்கள். தென் இந்தியாவில் உயர் ஜாதிகளி-லிருந்து கிறித்துவ மதத்திற்கு மாறியவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதிகளிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மாறியவர்களைச் சமமாக நடத்து-வதில்லை. அந்த அளவிற்கு, ஜாதிய உணர்வு இந்திய மக்களின் மனோநிலையை ஆட்டிப்-படைக்கிறது.
ஜாதீய உணர்வு மக்களது ஒழுக்கத்தையும் நடத்தையையும் வெகுவாகப் பாதிக்கிறது.

முதலாவதாக, தங்களுடைய ஜாதீய நலனைப் முக்கியமாகக் கருதும்படி செய்கிறது. ஜாதீய எல்லை-க்கு அப்பால் சிந்திக்காதவாறு எண்ணங்-களைக் கட்டுப்படுத்துகிறது. சமு-தாயத்-தின் பொது நலனிலும், முன்னேற்றத்-திலும் அக்கறை காட்டாமலிருக்கும்படி செய்து விடுகிறது.
சக மனிதர்களை மனிதர்களாக நோக்காமல், உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ நோக்கும்-படிச் செய்கிறது. பிற ஜாதீய மக்களைத் தேவையில்லாமல் சந்தேகத்துடன் நோக்கும்-படிச் செய்கிறது. ஜாதிப்படித்தட்டில் தன் ஜாதியை விடத் தாழ்ந்த படித்தட்டிலுள்ள மக்களை இழிவாக நடத்தும்படிச் செய்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், ஜாதீய உணர்வு மனித உறவைக் கொச்சைப்படுத்துகிறது. சக மனிதர்களிடம் நியாயமில்லாமல் நடக்கும்-படிச் செய்கிறது. இதனால், பல ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் கூட்டாக ஒரு காரியத்தில் ஈடுபடும்போது, ஒற்றுமையின்மை நிலவுகிறது. உள்சண்டை நிலவுகிறது.

ஜாதியினருக்கிடையே உள்ள பொறாமை உணர்வு ஒற்றுமைக்குக் கேடாக உள்ளது. ஜாதிப் போட்டியின் காரணமாக அரசியல், சமூக, பொருளாதாரச் செயல்பாடுகள் அனைத்தும் மந்தமாக நடைபெறுகின்றன. பல்வேறு ஜாதி மக்களிடையே நிலவும் போட்டியால், அதிக மனித சக்தி இப்போட்டி-யைச் சமாளிப்பதற்கே செலவாகிறது.

பார்ப்பனப் புரோகிதர்கள் ஜாதீயத்திற்கு மதச் சாயம் பூசி, அதைக் கடைபிடிப்பது மதக் கடமை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஜாதீயத்தின் மூலமாக அவர்கள் பெரிதும் பயன-டைவதால், அவ்வாறு வியாக்யானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஜாதீயத்தைப் பற்றி பல குழப்பமான எண்ணங்கள் மக்கள் மனதை ஆட்கொண்டி-ருக்-கிறது. பெரும்பான்மை மக்கள் ஜாதீயத்தின் தீய விளைவுகளை உணராமல் இருக்கிறார்கள். உயர்கல்வி பெற்றவர்கள் கூட ஜாதீயம் என்பது கடைப்பிடிக்க வேண்டியதா அல்லது ஒழிக்-கப்பட வேண்டியதா என்பது பற்றி அறிவுத் தெளிவற்றவர்களாக இருக்கிறார்கள். இந்திய சரித்திரத்தைக் கவனமாகப் படித்துப் பார்த்தால், இந்திய சமுதாயம் அரசி-யல் ரீதியாகவும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் தாழ்ந்த நிலையை அடைந்த-தற்கு ஜாதீயமே காரணமாக இருக்கிறது. இந்திய சமுதாயம் பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்ததால், அயலார் படையெடுப்புகளில் தோல்வி கண்டது. அயலார்களிடம் அடிமைப்-பட்டது. மேலும், ஜாதீயம் வேலைகளில் உயர்வு தாழ்வு கற்பித்த காரணத்தாலும், உழைப்பவர்-களுக்கு தகுந்த உரிமையும், கவுரவமும் அளிக்-காத காரணத்தாலும் பொருளாதார சீரழிவும் ஏற்பட்டிருக்கிறது.
பெரும்பான்மை மக்களுக்குத் தங்களுடைய அறிவையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படாத காரணத்தால், அறிவியல் துறைகளிலும் பின்தங்கி, பெரும்-பான்மை மக்களின் மனித சக்தி, சமுதாயத்தின் வளத்தைப் பெருக்குவதற்கும், அறிவியல் வளர்ச்சிக் காரியங்களுக்கும் கிட்டவில்லை. ஒரு சமுதாயத்தின் மக்கள் ஒன்றுகூடி, ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால் முன்னேற்றம் அடைவதற்கான சாத்தியக்கூறு-கள் அதிகமாகிறது. சமுதாயத்தின் ஒழுக்க-நெறிகள் அனைவருக்கும் சம உரிமைகள் அளிக்கும் பட்சத்தில் மனிதசக்தி வீணாவது குறைகிறது. சம உரிமை அளிக்காத பட்சத்தில் மனித சக்தி வீணாவது அதிகமாகி விடுகிறது.

கடந்த சில நூற்றாண்டுகளில், இந்திய சமுதாயத்தில் பல நல்ல சமுதாய மாற்றங்கள் நடந்திருக்-கின்றன. பதினெட்டாம் நூற்றாண்-டில் இந்து சமுதாயத்தில் ஜாதியின் பெயரால் கொடுமைகள் கடுமையாகவும், கொடூர-மாகவும் இருந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆங்கி-லேயர்-களின் ஆட்சி இந்திய சமுதாயத்தில் நல்ல பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது.

கல்வி பரவலாக்கப்பட்டது சமூக மாற்றத்-திற்கு உதவியது. அனைத்து மக்களும் தங்களு-டைய சாதிக்குரிய வேலைகளைச் செய்யாமல், வேறு தொழில்களை அல்லது வேலைகளை மேற்கொள்ள வாய்ப்பளித்தது. சுதந்திரம் அடைந்தவுடன் இந்திய அரசு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் உயர்விற்கான காரியங்களில் கவனம் செலுத்தியது. கல்வியி-லும், பொருளாதாரத்திலும் பின்தங்கியிருந்த சாதி மக்களை கல்வியிலும், பொருளாதாரத்-திலும் உயர்த்த பல நடவடிக்கைகள் எடுத்தன. இந் நடவடிக்கைகள் பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தின.

இதுதவிர, தொழில் வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, போக்குவரத்து சாதனங்களின் வளர்ச்சி போன்றவைகளின் பலனாக பல்வேறு ஜாதி மக்களும் நெருங்கிப் பழக வாய்ப்பு ஏற்பட்டன. ஒவ்வொரு ஜாதியினரும் பிற சாதியினரைப் பற்றிக் கொண்டிருந்த தப்-பெண்ணங்-கள் நீங்கின. இம்மாற்றங்களால், ஜாதியின் அடிப்படையில் நிகழ்ந்து கொண்டி-ருந்த கொடுமைகள் குறைந்தன.

மனிதன் இயற்கையில் சமூக வாழ்க்கை வாழ விரும்புகிறவன் என்பது மனோதத்துவர்களின் கருத்து. சக மனிதர்களுடன் இணக்கமாக வாழ மனிதன் பழக்கப்படுத்த வேண்டியதில்லை. மனிதனிடம் இத்திறன் இயற்கையாகவே இருக்-கிறது. உலக மக்கள் அனைவரும் சமத்துவ கருத்தை ஏற்று, சக மனிதர்களுடன் இணக்க-மாக வாழத் திறன் உடையவர்கள். இந்திய மக்களும் சமத்துவ கருத்துகளை ஏற்கும் திறன் படைத்தவர்கள்தான். நம்நாட்டில் இந்து மதமும், ஜாதீயமும் தான் சமத்துவ கருத்துகளை ஏற்பதற்குத் தடைகளாக இருக்கின்றன.
ஜாதீயத்தைப் பற்றி சரித்திர அறிஞர், அர்னால்ட் டாயின்பீ தன்னுடைய சரித்திர ஆய்வு என்ற புத்தகத்தில் ஜாதீயம் சமூகத்தின் பெரிய தீய சக்தியாக உருவாகும் வாய்ப்போடு இருக்கிறது; ஜாதீயம் மதத்தின் சம்மதத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றவுடன் அதனுடைய தீயவிளைவுகள் மிகவும் பேருரு நிலைக்கு வளர்ந்து விடுகிறது என்கிறார். அவர் விமர்-சனம் செய்ததுபோல், ஜாதீயம் இந்திய சமுதாயத்தை இழிவான நிலைக்கு இட்டுச் செல்லும் பயங்கரவாதியாகச் செயல்படுகிறது.

உண்மையான மதத்திறன் குறிக்கோள் சக மனிதர்களிடம் அன்பு செலுத்தவும், சமுதாய நலனுக்கும், உயர்வுக்கும் உழைக்கும் ஆர்வத்-திற்குத் தூண்டுகோலாகச் செயல்படுவதாகும் எனப்படுகிறது. மனித சமுதாய நலனுக்குத் தன்னுடைய சக்தியை சந்தோஷமாகவும், இலவசமாகவும் அர்ப்பணிக்கக்கூடிய மனோநி-லையைக் கொண்ட சுதந்திரமான, பொறுப்-பான நபர்களை உருவாக்குவது தான் உண்மை-யான மதத்தின் இலக்கு என்று புகழ்பெற்ற விஞ்ஞானி அல்பெர்ட் அய்ன்ஸ்டைன் சொல்கிறார். மதம் சம்பந்தமான விளக்கங்களை ஒப்புக் கொண்டால், இந்து மதம் உண்மை-யான மதம் அல்ல.

இந்து மதத்துறவி விவேகானந்தர் இந்து மதத்தின் இக்குறைபாட்டை உணர்ந்து ஜாதீயத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்-தார். உலகில் எந்த மதமும், தன்னுடைய மத நம்பிக்கையாளர்களை, இந்து மதம் கொடு-மைப்-படுத்துவது போல் செய்வதில்லை என்கிறார். இதற்கு நிவாரணமும் சொன்னார். இந்து மதம், இஸ்லாம் மதத்தின் சமத்துவ கொள்கையையும், கிறிஸ்துவமதத்தின் தொண்டு மனப்பான்மையையும் உள்வாங்கிக் கிரகித்துக் கொள்ள வேண்டும் என்றார். இந்து மதம் அவ்வாறு செய்யாவிட்டால், பிழைக்-காது என்று எச்சரித்தார்.

ஜாதீயத்தின் தன்மை வலிமை இழந்து கொண்டே போகிறது. ஆனால் ஜாதி என்ற குழு உணர்வு வலிமை பெற்றுவிட்டது. இப்போக்கு கட்டுப்படுத்தப் படாவிட்டால் சாதிச் சண்டைகள் பெருகி விடும். பொருளா-தார நிலை உயர்வால் மட்டும் ஜாதீய உணர்வை வலுவிழக்கவோ, சாகடிக்கவோ இயலாது என்பதுதான். மனமாற்றம் மூலமாகவே ஜாதீய உணர்வைப் போக்க முடியும்.

மனமாற்றம் நடைபெற மக்களிடையே விழிப்புணர்ச்சி உண்டாக்குவதுடன், ஜாதீயத்-தை பல்வேறு முனைகளில் தாக்க வேண்டும். ஜாதீயத்தை நிலைநாட்டும் அனைத்து அமைப்புகளையும் அழிக்க வேண்டும். ஜாதீயம் சம்பந்தமான அறிவுபூர்வமான விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும். ஜாதீயத்தை ஒழிக்க வேண்டியதின் காரணங்களை வெகுஜன ஊடகங்கள் மூலமாகத் தெளிவாக விளக்க வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஏனெனில், அது ஜாதீயத்தை ஒழிக்க நல்ல கருவியாகும்.
அரசியல் கட்சிகள் ஜாதிப் பிரச்சினையைத் தொடவும், தலையிடவும் விரும்பவில்லை. பல அரசியல் கட்சிகள் ஜாதீயம் முக்கியமற்ற பிரச்சினை என்று கருதுகின்றன. சில அரசியல் கட்சிகள், ஜாதீயம் ஒரு சிறு சமூகப் பிரச்சினை என்று சொல்லித் தப்பித்துக் கொள்கின்றன. அனைத்து அரசியல் கட்சி-களும் ஜாதியப் பிரச்சினையில் தலையிடத் தயாராய் இல்லை.

உண்மையில், பல அரசியல் தலைவர்கள் ஜாதியமைப்பை தங்களுடைய செயல்பாடு-களுக்கு வசதியாகக் கருதுகின்றனர். சாதி உணர்வைத் தூண்டி தேர்தல்களில் எளிதாக வெற்றிபெற முடிவதால், ஜாதியமைப்பை வசதியாகக் கருதுகின்றனர்.

ஜாதி அமைப்பிலிருந்து வெளிவருபவர்களுக்கு, அரசு சமூக பாதுகாப்பு அளிக்கவேண்டும். சாதீய கட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களை சமூக பிரதிஷ்டம் செய்தல், சமூகத்திலிருந்து விலக்கல் போன்ற நியாயமற்ற செயல்பாடுகள் சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகக் கருதவேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறிய கருத்துகள் ஆழ்ந்து சிந்திக்கப்-பட வேண்டியவை. ஜாதிக் கட்டுப்பாடு-களுக்குக் கட்டுப்பட மறுப்பவர்களை சமூக பிரதிஷ்டம் செய்து, துன்பப்படுத்தும் செயல்பாடுகள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகக் கருதப்-பட வேண்டும். அவற்றைச் செயல்படுத்தும் ஜாதீயத் தலைவர்கள்மீது சட்டப்படி நட-வடிக்கை எடுக்க வேண்டும்.

அய்ரோப்பாவின் சமூக முன்னேற்றத்தைப் பார்த்தால், மேற்கு அய்ரோப்பாவில் கி.பி.14-ஆம் நூற்றாண்டு தொடங்கி 17ஆம் நூற்-றாண்டு வரையிலான காலகட்டத்தில் அறிவி-யல் மறுமலர்ச்சி அல்லது புத்துணர்வு ஏற்பட்டிருக்-கிறது. பதினாறாம் நூற்றாண்டி-லிருந்து 17ஆம் நூற்றாண்டுக் கால கட்டத்தில் பிரபுத்துவ மதிப்பீடுகள் முன்னேற்றத்திற்குத் தடைகளாக இருப்பதை உணர்ந்தார்கள். உடன் அம்மதிப்பீடுகளை நீக்கிக் கொண்டார்-கள். சமத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்டார்கள். சமத்துவத்தின் அடிப்-படையில் சமூக அமைப்பையும், ஒழுங்கையும் மாற்றிக் கொண்டார்கள்.

அவர்கள் மாற்றம் செய்து கொண்டது போல், நாம் சமத்துவமின்மையை நிலை-நாட்டும் நம்பிக்கைகளையும், பழக்க வழக்-கங்களையும் ஒழிக்கவேண்டும். சம உரிமை-யையும், சம வாய்ப்பை அளிக்கும் அனைத்து மதிப்பீடுகளையும் செயல்படுத்த வேண்டும். ஜாதீயத்தை மேன்மைப்படுத்தும் பல நம்பிக்-கைகளையும், பழக்க வழக்கங்களையும் ஒட்டு மொத்தமாக மாற்றுவதன் மூலமே, நாம் ஜாதீயத்தின் பிடியிலிருந்து விடுபட முடியும்.

நம்முடைய சமுதாயத்தில் பல ஜாதிகளைச் சார்ந்த மக்களுக்கிடையேயான திருமணங்களை எளிதாகப் பிரபலப்படுத்தி விடலாம். இது அமெரிக்க அய்க்கிய நாட்டில் அல்லது தென் ஆப்ரிக்காவில் இரு இன மக்களிடையே (வெள்ளை, கருப்பு என்ற இரு நிறத்தவரிடையே) திருமணங்களைப் பிரபலப்படுத்துவது போல் கடினமான காரியமல்ல. நம்முடைய சமுதாயத்தில் பல்வேறு ஜாதியினருக்கிடையே திருமணங்களைப் பிரபலப்படுத்துதல் மிக எளிதானது. ஏனெனில், புறத்தோற்றத்தைப் பார்த்தோ, தோலின் நிறத்தைப் பார்த்தோ, தலை மயிரின் தன்மையைப் பார்த்தோ ஒருவரின் ஜாதியைச் சொல்ல இயலாது.
ஆகவே, சமத்துவ மனப்பான்மையை நன்கு பரவலாக்கினால், பல்வேறு ஜாதிகளை ஒன்றாக இணைத்து, நம்முடைய சமுதாயத்தை சாதியற்ற சமுதாயமாக மாற்றுவது மிக எளிதான காரியமாகும்.

-------------- நன்றி: உமன்ஸ் எரா, புதுடில்லி

No comments: