Friday, March 14, 2008

ஆதிதிராவிடரைத் தடுப்பது நியாயமா?

கள்ளக் கையொப்பக்காரன் கரம் கூப்புகிறான். விபச்சாரி விசேஷ அபிஷேகம் செய்விக்கிறாள். குடி கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். ஒழுக்கக் குறைவு உள்ளவன், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செல்பவர்கள். ஆலயங்களில் நுழைய முடியாதபடி தடை உண்டா? இல்லை. ஆனால், ஆதி திராவிடரை மட்டும் ஆலயத்துக்கு வரக்கூடாது என்று தடுக்கிறோம். நியாயமா?

- அறிஞர் அண்ணா (பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு - பக்கம் 312).

No comments: