Wednesday, March 19, 2008

பெண்களுக்கு நகை மாட்டியது ஏன்?

"ஆதியில் பெண்களுக்கு நகைகள் உண்டாக்கப்பட்டதன் கருத்தே பெண்களை அடிமையாக்கவும், அடக்கிப் பயன்படுத்தி வைக்கவும் செய்த தந்திரமேயாகும். காது, மூக்கு முதலிய நுட்பமான இடங்களில் ஓட்டைகளைப் போட்டு அவைகளில் உலோகங்களை மாட்டி வைத்ததானது மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட்டால் அது எப்படி இழுத்துக்கொண்டு ஓடாமல், எதிர்க்காமல் இருக்கப் பயன்படுகிறதோ அதுபோல் பெண்கள் காதில், மூக்கில் ஓட்டைகளைப் போட்டு, ஆணிகள் திருகி இருப்பதால் ஆண்கள் பெண்களைப் பார்த்து கை ஓங்கினால் எதிர்த்து அடிக்க வராமல், எங்கு காது போய்விடுகிறதோ, மூக்கறுந்து போய்விடுகிறதோ என்று தலைகுனிந்து முதுகை அடிக்கத் தயாராக இருப்பதற்காக அது உதவுகிறது. அன்றியும் நிறைய நகைகளை மாட்டிவிட்டால், மாடுகளுக்கு தொழுக்கட்டை கட்டிய மாதிரி வீட்டை விட்டு எங்கும் தனியே போக மாட்டார்கள். நகை போய்விடும் என்று வீட்டோடு கிடப்பார்கள்."

- தந்தை பெரியார்

No comments: