Saturday, May 31, 2008

சம்பிரதாயங்கள் தகர்கின்றன பெண்கள் பிணம் சுமந்து சுடுகாடு சென்றனர்


புதுக்கோட்டை மாவட்டம் தொண்டமாநல்லூர் கிராமத்தில் இறந்துபோன பெண் ஒருவரை அவரது உறவுக்காரப் பெண்களே சுமந்து சென்று சுடுகாட்டில் இறுதிச் சடங்கு நடத்திய சம்பவம் நடந்துள்ளது. ஆண்கள் மட்டும் தான் இந்தச் சடங்கைச் செய்யவேண்டும் என்றிருந்ததை மாற்றியுள்ள இம்மாதிரி நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் சீரங்கத்தில் திராவிடர் கழக மகளிரால் நிகழ்த்தப் பெற்று வரலாற்றை உருவாக்கியுள்ளது. மயிலாடுதுறையிலும் இதுபோல் நடைபெற்றுள்ளது.

அந்த வகையில் திருச்சி, தமிழ் கலை இலக்கியப் பெருமன்றப் பொறுப்பாளர் கவித்துவனின் துணைவியார் சுகுணாவின் முயற்சியால் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனை உறவினர் களும், ஊர்க்காரர்களும் எதிர்த்துள்ளனர். சுடுகாட்டுக்குப் பெண்கள் வரக்கூடாது என்றனர். தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துக் கூறி கவித்துவன் கிராம மக்களைச் சம்மதிக்கச் செய்தார்.

கவித்துவனுடைய வாழ்விணையரும் பகுத்தறிவாளர். இறந்த உடலைப் பெண்கள் தூக்கிச் செல்வது தவறல்ல என்று கூறினார். முதலில் எதிர்த்தவர்களே, பின்னர் பாராட்டினர் என்கிற செய்தியை சுகுணா தெரிவித்தார். அவருடன் குமாரி, அனுராதா, பெர்சியா, பாவனா ஆகியோர் உடலைச் சுமந்தனர்.

Thursday, May 29, 2008

வைதீக திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் மு.க. ஸ்டாலின் பேச்சு


வைதீக திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்
சுயமரியாதைத் திருமணங்களில் மட்டுமே கலந்து கொள்வேன்
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு



வைதீகப் புரோகிதத் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன். சுயமரியாதைத் திருமணங்-களில் மட்டுமே கலந்து கொள்வேன் என்று நெல்லையில் நடைபெற்ற ஒரு மணவிழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி விளக்கமளித்துப் பேசினார்.


இந்தத் திருமணம் வைதீக முறைப்படி நடந்திருந்தால் நான் கட்டாயம் கலந்து கொண்டு இருக்க மாட்டேன். இங்கு வாழ்த்திப் பேசிய பலர் வாழ்த்திப் பேசி இருக்க முடியாது. இங்கு ஒரு புரோகிதர் இருந்து நெருப்பை மூட்டி புகையை உருவாக்கி அனைவரையும் கண்ணீர் வடிக்கச் செய்து கொண்டிருப்பார். அப்போது சில மந்திரங்களை சொல்வார். அது யாருக்கும் புரியாது. அதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டால் அவருக்கே தெரியாது. யாரும் புரியாத நிலையில் தான் அந்தத் திருமணம் நடக்கும்.

ஆனால் சீர்திருத்த திருமணத்தில் மணமக்களை நாங்கள் வாழ்த்துகிறோம். இது எல்லோருக்கும் புரிகிறது. இந்தத் திருமணத்தில் தமிழில் வாழ்த்துகிறார்கள். எனவே இதை தமிழ் திருமணம் என்று அழைக்கலாம். இதனால் தான் தற்போது சீர்திருத்த திருமணம் அதிக அளவில் நடைபெறுகிறது
.

தமிழகத்தில் தற்போது உங்கள் ஒத்துழைப்புடன் சிறப்பான நல்லாட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளான ரூ.2+க்கு ஒரு கிலோ அரிசி, கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி, சத்துணவில் வாரத்தில் 2 முட்டை, இலவச கலர் டி.வி. என அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச கலர் டி.வி. வழங்கப்படும். இதற்கு நிதிகள் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் நினைக்கலாம் நம்ம பக்கத்து கிராமத்தில் உள்ளவர்களுக்கு டி.வி. கிடைத்து விட்டதே, நமக்குக் கிடைக்கவில்லையே என்று கவலைப்படத் தேவையில்லை. அனைவருக்கும் கலர் டி.வி. கிடைக்கும். ஒரே நேரத்தில் கொள் முதல் செய்து கொடுக்க முடியாது என்பதால் தான் படிப்படியாக கொடுக்கப்படுகிறது. திருமண வீட்டிற்கு ஆயிரம் பேர் வந்திருப்பீர்கள் இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது.

இதனால் பலர் பந்திக்குக் காத்திருக்கிறார்கள். அது போல காத்து இருங்கள். கட்டாயம் அனைவருக்கும் டி.வி. கிடைக்கும். சொன்னதையும் சொல்லாததையும் செய்யும் இந்த ஆட்சிக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதம் ஓர் அடிமைக் கருவி




``நான்காவது, அய்ந்தாவது சாதியாக்கி, பார்ப்பனரல்லா மக்களை மடமையில் அழுத்தி வைக்கவே வேத, புராண, மதம் வழி செய்கிறது. இதைக் கொஞ்சம் எடுத்துச் சொல்ல, திருத்த முயற்சித்தாலும், `நா°திகன்’, `மதத் துவேஷி’, `வகுப்புத் துவேஷி’ என்று சொல்லித் தலையில் கல்லைத் தூக்கி வைத்துவிட்டால் என்ன அர்த்தம்?’’

--------- தந்தைபெரியார் ``விடுதலை’’, 17.5.1957

Tuesday, May 27, 2008

அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள்

உலகத்தை எல்லாம் உண்டாக்கி, அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தும் சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரால்தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு)கின்றது என்று சொல்லப்படுமானால், அவரை நடுநிலைமையுடையவனென்று சொல்லுவதைவிட பாரபட்சமுடையவரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரத்தியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன. அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகிறது என்று சொல்லுவதைவிட அவரால் அதிகத் தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது. அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜூ இருக்கின்றது. (அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன. அவர் ஜீவன்களுக்கு நன்மையே செய்கிறாரென்பதைவிட தீமையே செய்கின்றார் என்பதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன. அவரால் நன்மை அடைந்தவர்களைவிட தீமையடைந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன. அவர் நாகரிகமுடையவர் என்று சொல்லுவதைவிட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன. அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட, அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கையை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன. அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள், சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்துகொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப்பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார். உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லையென்று கருதித் தினம் சவரம் செய்துகொள்ளுவதைப் பார்க்கின்றோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக்கொண்டே வருவதையும் பார்க்கின்றோம். இது என்ன, கடவுளுடன் மனிதன் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

----------தந்தைபெரியார் - "குடிஅரசு" -6-12-1947

Wednesday, May 21, 2008

சுப்பிரமணியசாமியை கைது செய்ய வேண்டும்

தன்னிடம் இன்னும் பல அமைச்சர்கள் பேசிய தொலைபேசிப் பேச்சின் குறுந்தகடுகள் உள்ளன என்று மிரட்டும் சுப்பிரமணியசாமி யைக் கைது செய்து அவருக்கு அவை எப்படிக் கிடைத்தன என்று விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று செய் தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் இது பற்றி பேசியது:

தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பது அநாகரீகமானது சட்ட விரோதமானது தனி மனித உரிமைக்கு எதிரானது. இதனை யார் செய்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த விவகாரத்தில் தொலை பேசிகளை ஒட்டுக் கேட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, இதில் சம்பந்தப்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது தவறான முன்மாதிரியாகிவிடும்.

இன்னும் பல அமைச்சர் களின் சி.டி. தன்னிடம் இருப்ப தாக சுப்பிரமணியசாமி மிரட் டுகிறார். எனவே சி.டி.க்கள் அவருக்கு எப்படிக் கிடைத்தன என்பது பற்றி அவரைக் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.

- இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

வரதராசன் வருத்தமும்-கலைஞர் விளக்கமும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மதிப்புக்குரிய தோழர் வரதராசன் அவர்கள்; அவர் களின் கட்சி ஏடு "தீக்கதிரி"ல் எழுதி யுள்ள "மனம் திறந்து ஒரு வாழ்த்து!" என்ற கட்டுரையைப் படித்தேன்.

"கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமை" என்று நான் எனது அறிக்கை ஒன்றில் "குமுறியிருப் பதை"; அவர் தனது கட்சிக்கும் சேர்த்துத் தவறாக எடுத்துக் கொண்டமைக்காக நான் மிகவும் வருந்துகிறேன். குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்க வேண்டுமே தவிர; விருப்போ வெறுப்போ அதனை வெளிப்படையாகக் கூறி நயம்பட இடித்துரைத்துத் திருத்துகின்ற நிலை யில் "கூட்டணி தர்ம"த்தை எல்லா கட்டங்களிலும் கலந்துபேசி கடைப் பிடிக்கிற மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் என் அறிக்கையில் காணும் அந்த வாசகத்திற்குத் தங்களுக்குப் பொருந்தாத பொருளை ஏன் காண வேண்டும் என்பதே என் கவலை!

மற்றபடி; மனம் திறந்து அவர் எழுதியுள்ள என்னைப் பற்றிய வாழ்த்துக் கட்டுரையை (மேற்கண்ட இந்த ஒரு விளக்கத்தைத் தவிர வேறெதுவும் கூறாமல்) வரிக்குவரி அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

- மு.கருணாநிதி

இதோ; வரதராசன் அவர்களின் வாழ்த்துரை:

"தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதி, வரும் ஜூன் 3ந்தேதிய தனது 85-வது பிறந்த நாள் தொடர்பாக விடுத்துள்ள இரண்டு அறிக்கைகள் பொருள் பொதிந்தவை.

‘என் மனநிலை கருதியும், உடல்நிலை கருதியும், வாழ்த்துக்களை ஏற்றிடும் பணி யிலிருந்து எனக்கு விலக்கும் ஓய்வும் வழங்க வேண்டுமென்று உற்ற நண்பர்களையும், உயிரனைய உடன் பிறப்புக்களையும் கேட்டுக் கொள்கிறேன்’ என்பது கலைஞரின் முதல் அறிக்கை வாசகம்.

கலைஞர் தலைமையிலான இன்றைய தமிழக அரசு இரண்டாண்டுகளை நிறைவு செய்து, மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்த நாளில் வெளியான அறிக்கை இது.

அன்றைய தினம் தமிழக சட்டமன்றப் பேரவையில் இந்த ஆட்சிக்கான வாழ்த்துக்களை இதர பல கட்சியினரோடு மார்க்சிஸ்ட் கட்சியும் தனது சட்டமன்றக் குழுத் தலைவர் சி.கோவிந்த சாமியின் உரை வழியாகப் பதிவு செய்தது.

ஆனால், இன்றைய தமிழக ஆட்சியில் ‘இரண் டாண்டு சாதனைப் பட்டியலை விட வேதனைப் பட்டியல்தான் அதிகம்’ என்று ஒரு ‘தீர்ப்பையே’ வழங்கியுள்ள தினமணி நாளேட்டின் தலையங்கம்(மே-15) கீழ்க்கண்ட கேள்விகளை முதல்வருக்கு முன்வைத்து அவர் தெளிவுபடுத்தக் கோரியது:

‘அவரது (முதலமைச்சரது) மனநிலையைப் பாதிக்கும் பிரச்சனை குடும்பத்திலுள்ள குழப்பங்களா, தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது அதிருப்தியா, இல்லை தோழமைக் கட்சிகளின் செயல்பாடா? இதையும் அவரே தெளிவுபடுத்தினால் நலம்!’ என்று அந்தத் தலையங்கத்தை நிறைவு செய்திருக்கிறார் தினமணி ஆசிரியர்.

கலைஞரின் இரண்டாவது அறிக்கை அதே நாளில் ஏடுகளில் இடம் பெற்றுள்ளது. தினமணியின் கேள்விகளை எதிர்பார்த்து அதன் கேள்விகளுக்கு விடை பகருவது போலவே இந்த அறிக்கை அமைந்துள்ளதுதான் தற்செயலாக நடந்துள்ள விசித்திரம்!

எனினும் ‘பிறந்த நாள் கொண்டாட வேண்டாம்’ என்ற கலைஞரின் வேண்டுகோளுக்குப் பல்வேறு பிரச்சனைகளால் அவருக்கு எழுந்துள்ள மன உளைச்சல்களே முக்கிய காரணம் - உடல்நிலை அல்ல என்பதை இந்த அறிக்கை தெளிவாக்கி யிருக்கிறது.

‘சேது சமுத்திரத் திட்டம் தொங்கலில் விடப் பட்டிருப்பது; விபரீத தீவிரவாதம் தலைவிரித்தாடி கொண்டிருப்பது’ ஆகிய இரண்டும் கலைஞரின் ஏக்கப் பெருமூச்சுக்கு காரணமாக அமைந் திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சொல்லப் போனால், இந்தப் பிரச்சனைகளில் அவருக்குள்ள ஆதங்கத்தை, மார்க்சிஸ்ட் கட்சி பகிர்ந்து கொள்ளவே செய்கிறது. பெரும்பாலான தமிழ் மக்களும் அதே உணர்வைத்தான் வெளிப் படுத்துவார்கள்.

‘என்னுடன் இருப்போர் தன்னலம் மறப்போர் - தாயக நலத்துக்காக உயிரையும் துறப்போர் என்ற பீடும் பெருமிதமும் வாய்க்கும் வரையில் எனக்கு ஏன் பிறந்த நாள் விழா?’ என்று கலைஞரின் அறிக்கை வாசகம் தனது உடன்பிறப்புகளைப் பற்றிய அவரது கவலை. இந்தக் கவலையை அழுத்தமாகப் பதிவு செய்யவேண்டிய எல்லைக்கு நிலைமை சென்றிருப்ப தாகக் கலைஞர் கருதியிருக்கிறார் என்றால், தி.மு.க நண்பர்கள் இதை ஓர் எச்சரிக்கை மணியொலியாக எடுத்துக் கொள்வது நல்லது.

ஆனால், ‘கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமை’ என்று கலைஞரின் அறிக்கை, தோழமைக் கட்சியினரது செயல்பாட்டை - இன்ன கட்சிகள் என்று சுட்டப்படாத நிலையில் பொத்தாம் பொதுவாக கூறப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

‘நாடு வாழ, நலிவு தீர, நானிலம் தழைக்க’ என்ற உயரிய நோக்கங்கள் எல்லா அரசியல் இயக் கங்களுக்கும் பொதுவானவை. இந்த நோக்கங்கள் நிறைவேற வேண்டுமென்றால் ‘யார் ஆட்சிக்கு வரக்கூடாது’ என்ற மதிப்பீட்டின் விளைவாகத் தோழமைக் கட்சிகள் ஒன்று சேர்ந்து அரசியல் போராட்டத்தில் - அது தேர்தலின் போதானாலும் சரி, இதர சந்தர்ப்பங்களிலும் சரி - கூட்டணியாக அமைகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை மத்திய அரசில் வகுப்புவாத - மதவெறி சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற உணர்வோடுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் ஆதரவைத் தொடர்கிறது. அந்த அரசின் - சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட - தவறான கொள்கைகளில் மாற்றம் கண்டிட தி.மு.க.வுடன் தோழமையைத் தொடர்ந்து வந்துள்ளது.

தமிழ்நாட்டில் ‘கடந்த கால மக்கள் விரோத, எதேச்சதிகார ஆட்சியைத் தூக்கியெறிய வேண் டும்’ என்ற அறைகூவலோடுதான், தி.மு.க.வுடன் தோழமைக் கரம் கோர்த்துத் தேர்தல் களத்தில் நின்றோம். இந்த ஆட்சியை குறுக்கு வழியில் வீழ்த்திட துடிக்கும் தீய சக்திகளின் முயற்சியை முறியடிப்பதிலும் துணை நிற்கிறோம்.

ஆனால் ‘கூட்டணி’, ‘தோழமைக் கட்சி’ என்பதிலேயே மாறுபட்ட நிலைப்பாடுகளுக்கிடை யிலும், பொதுவான பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து என்பது அடங்கியிருக்கிறது அல்லவா? அதனால்தானே தோழமை நீடிக்கிற போதும், தனித்தனிக் கட்சிகளாக நாம் அவரவர் செயல் பாடுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்! எனவே, ஆட்சிக்கு ஆதரவும், தோழமையும் ஒரு பக்கம் நீடிப்பதும், மக்கள் பிரச்சனைகளில் சுயேட்சையான நிலைப்பாட்டையும், இயக்கத்தையும் மேற்கொள்ளுவதும், ஒரு ஜனநாயகக் கடமையே என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

எனவேதான், கலைஞரின் இதர பல கவலை களையும், ஆதங்கங்களையும் பகிர்ந்து கொள்கிற போதே ‘கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை’ என்ற அவரது கூற்றுக்கு அப்பால் நிற்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

தமிழ்நாட்டில் தோழமைக் கட்சிகளாக இருப்பதிலிருந்து அடிப்படையில் வேறுபட்டது மார்க்சிஸ்ட் கட்சி. இதர மூன்று இடதுசாரிக் கட்சிகளோடு கொண்டுள்ள தோழமை மேற்குவங்கம், திரிபுரா, கேரள மாநிலங்களில் ஒரு பொதுவான இடதுசாரித் திட்டத்தின் அடிப்படையில் கூட்டணி ஆட்சியிலேயே நீடிக்கிற தோழமை அது. ஆனால், இந்த இடதுசாரிக் கட்சிகளேகூட மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக சுயேட்சையான நிலைப்பாட்டை எடுத்ததையும், ஏன் கடுமையான விமர்சனக் கணைகளையும் தொடுத்ததையும், நாடறியும் அல்லவா? அதற்காக தோழமை இடதுசாரிக் கட்சிகளை சி.பி.ஐ (எம்) சினந்ததோ, முனிந்ததோ இல்லையே! கருத்து வேறுபாடுகளைக் களைய ஜனநாயக ரீதியில் விவாதம் அல்லவா நடத்துகிறோம்!

இவற்றை நாம் இங்கே எடுத்து வைப்பது, கலைஞரின் அறிக்கைக்கு ஒரு பதிலாக அல்ல.

‘தோல்வி கண்டு துவளாமை;

துரோகம் கண்டு தளராமை’

- என்பதுதான் கலைஞரின் அரசியல் முதிர்ச்சிக்கான அடையாளங்கள்.

எனவே, 85வது பிறந்த நாளில் தளர்வுக்கும், சலிப்புக்கும் இடந்தராமல் மக்கள் தொண்டினைத் தொடருங்கள் என்ற வேண்டுகோளோடு, இந்த மனம் திறந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை உரித்தாக்கு கிறோம். நகுதற் பொருட்டன்று நட்பு என்பது வள்ளுவன் வாக்கு! "

- என். வரதராசன்

மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

----------- நன்றி: முரசொலி

Monday, May 19, 2008

கடவுளுக்கு அறிவு உண்டா? - சார்லஸ் பிராட்லா

எல்லாம் அறிந்தவர் என்று கூறப்படும் கடவுள் கண்டு அறியும் ஆற்றல் உள்ளவராக இருக்கமுடியாது

மாபெரும் கண்டு அறியும் ஆற்றலை ஒரு மனிதன் பெற்றிருக்கும் அதே நேரத்தில், மிகக் குறைந்த நினைவாற்றலையும் அவன் பெற்றிருக்கக் கூடும்; அல்லது அதிக நினைவாற்ற-லையும், குறைந்த கண்டறியும் ஆற்றலையும் பெற்றிருக்கக்கூடும். என்றாலும் இக் கண்டறி-யும் ஆற்றல், நினைவாற்றல் இரண்டும் நுண்ணறிவில் சேர்க்கப் பட்டுள்ளன. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட காட்சிகளைக் கண்டு ஒப்பிடும் ஆற்றல், மதிப்பீடு செய்யும் ஆற்றல், எதிர்வினையாற்றும் ஆற்றல் ஆகிய அனைத்தையும் இதே போன்று குறிப்பிடலாம். இவை அனைத்தும், மனதின் அனைத்து நிலைகளும் நுண்ணறிவு என்னும் சொல்லில் சேர்க்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற சொல் என்ன பொருள் தருவதாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கடவுள் நுண்ணறிவு பெற்றதாக இருக்க முடியாது என்று நாம் பதில் அளிக்கிறோம். கண்டு அறியும் ஆற்றல் என்பது ஒரு புதிய கருத்தைப் பெறுவது ஆகும் என்ப-தால், அவரால் எப்போதும் எதையும் கண்டு அறியமுடியாது. ஆனால் கடவுளோ அனைத்-தும் அறிந்தவர் என்று கூறப்படுகிறது; அதனால் அவரது கருத்துகள் அனைத்தும் எப்போதுமே நிலையானவையாகத்தான் இருக்க முடியும். ஒன்று அவர் எப்போதும் கண்டு அறிந்து கொண்டவராகவும், அறிந்து கொள்பவராகவும் இருக்க வேண்டும் அல்லது எதையும் கண்டு அறியாதவராக இருக்க வேண்டும். கடவுள் எப்போதும் எதையும் கண்டு அறிபவராக இருக்க முடியாது; அவ்வாறு அவர் இருந்தால், எப்போதும் அவர் புதிய அறிவைப் பெறு-பவராகவே இருப்பார். ஏதேனும் ஒரு நிலையில் அவர் இப்போது பெற்றிருக்கும் அறிவை விடக் குறைந்த அறிவையே பெற்றிருக்கும் நிலை இருந்திருக்க வேண்டும். அப்படியானால் அவர் முழுமையான அறிவைப் பெற்றவராக இருந்திருக்கவில்லை. அப்படியானால் அவர் கடவுளாகவே இருக்க முடியாது.

புரிந்து கொள்ளும் பகுத்தறிவு அற்ற முழுமையான நுண்ணறிவு இருக்க முடியுமா?
எதையும் கடவுளால் மறக்கவோ, நினைவு கூறவோ , ஒப்பிட்டுக் காணவோ, எதிர்வினை-யாற்றவோ, மதிப்பிடவோ இயலாது. புரிந்து கொள்ளுதல் என்பது இல்லாமல் முழுமையான நுண்ணறிவு என்பது இருக்க முடியாது. கலிரிட்ஜ் கூறுகிறார்: “புலன் அறிவுகளால் மதிப்பீடு செய்யும் ஆற்றலே நுண்ணறிவு என்பதாகும்.” எவருடைய ஆற்றல்? யாரோ ஒருவரின் ஆற்றல்? கடவுள் தன் உணர்வால் கண்டு அறிவும்படியானதாக, கடவுளைத் தாண்டி இருக்கும் ஏதேனும் ஒன்று உள்ளதா? பகுத்தறிவு இன்றி முழுமையான நுண்ணறிவு என்பது இருக்க முடியாது. கடந்த காலத்தைப் பற்றி அறிந்திருந்து, நிகழ்கால பட்டறிவு கொண்டு, எதிர்காலத்தில் ஏற்பட இயன்ற பட்டறிவை ஏறக்குறைய முன்னதாக ஊகித்துக் கூறும் மனநிலையையே பகுத்தறிவு என்று நாம் குறிப்பிடுகிறோம். கடவுளைப் பொறுத்தவரை அவருக்குக் கடந்த காலமும் , எதிர் காலமும் இருக்கமுடியாது. அதனால் பகுத்தறிவு என்பது அவருக்கு இயலாத ஒன்று. மனஉறுதியும், விருப்பமும் இல்லாமல் முழுமையான நுண்ணறிவு என்பது இருக்க முடியாது. கடவுளுக்கு இது உள்ளதா? கடவுள் உறுதியாக விரும்-பினால், அனைத்து ஆற்றல் பெற்ற அவரின் விருப்பம் தடை செய்ய முடியாததாக இருக்க வேண்டும். எல்லையற்றவரின் விருப்பம் மற்ற அனைத்து விருப்பங்களையும் நீக்கிய-தாகத்தான் இருக்க வேண்டும்.

நினைவாற்றலோ, பகுத்தறியும் ஆற்றலோ கடவுளுக்கு இருக்க முடியாது
கடவுள் எதையும் எப்போதும் கண்டறிய-முடியாது. கண்டு அறிவதும், புலன்களால் உணர்வதும் ஒன்று போலானவை. ஒவ்வொரு உணர்வும் ஒன்று மகிழ்ச்சி அளிப்பதாகவோ அல்லது துன்பம் அளிப்பதாகவோ இருக்கிறது. கடவுள் மாற்ற முடியாதவர், மாற இயலாதவர் என்றால் அவரை மகிழ்ச்சி அடையவோ துயரம் அடையவோ செய்ய இயலாது. ஒவ்வொரு புதிய உணர்வும் மன, உடல் நிலை-யில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். மாற்ற முடியாத வராக இருக்கும் கடவு-ளால் மாற இயலாது. உணர்ந்து அறிவது என்பதே அனைத்துக் கருத்துக்களுக்கும் தோற்று வாயாகும். ஆனால், மனதிற்கு வெளி-யே உள்ள பொருள்களை மட்டுமே உணர்ந்து அறிய முடியும். கடவுள் எல்லையற்றவராக இருந்தால், அவருக்கு வெளியில் எந்தப் பொருளும் இருக்க முடியாது. எனவே உணர்ந்தறிவது என்பது அவரால் இயலாதது. ஆனால், கண்டறியும் ஆற்றல் இன்றி நுண்ணறிவு எங்கேயிருந்து வந்தது?

மாற்றமற்றதாகக் கருதப்படும் கடவுளுக்கு மதிப்பீடு செய்யும் ஆற்றலும் இருக்க முடியாது
மாற்ற இயலாத கடவுளுக்குக் கடந்த காலம், எதிர்காலம் என்பது இல்லை என்பதால், கடந்த காலத்தைப் பற்றிய நினைவாற்ற-லையோ, எதிர்காலத்தைப் பற்றிப் பகுத்தறியும் ஆற்றலையோ கடவுள் கொண்டிருக்க முடியாது. கடந்த, நிகழ், எதிர் என்னும் சொற்கள் மாற்றத்-தைக் குறிப்பனவாகும். காலம் கடப்பதை அவை உறுதிப்படுத்துகின்றன. மாற்ற முடி-யாத கடவுளிடம் மாற்றம் ஏற்படுவது என்பது இயலாதது. கண்டறியும் ஆற்றலோ, நினைவாற்றலோ, பகுத்தறியும் ஆற்றலோ இன்றி நுண்ணறிவு என்பதை நீ கொண்டிருக்க முடியுமா? மதிப்பீடு செய்யும் ஆற்றலைக் கடவுள் பெற்றிருக்க இயலாது. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சிந்தனைகளை இணைத்துக் காண்பதோ, பிரித்துக் காண்ப-தோ மதிப்பிடும் செயலில் அடங்கியுள்ளது. இதற்கு மனநிலை மாற்றமும் தொடர்பு கொண்டது. மாற்ற முடியாத கடவுளிடம் மாற்றம் என்பது இருக்கமுடியாதது. கண்டு-அறியும் ஆற்றலோ, நினைவாற்றலோ, பகுத்தறியும் ஆற்றலோ, மதிப்பிடும் ஆற்றலோ இன்றி நுண்ணறிவை மட்டும் நீ எவ்வாறு பெற்றிருக்க இயலும்? கடவுளால் சிந்திக்க முடியாது. நினைக்கப்படும் பொருள், நினைக்கப் படாத பொருளில் இருந்து பிரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே சிந்தனை என்பதன் விதியாகும். வேறு வகையில் சிந்திப்பது என்று சொன்னால், ஏதுமில்லாத-தைப் பற்றி சிந்திப்பதாகும்; எந்த தெளிவான குறியீடும் இன்றி ஒரு கருத்தைக் கொள்வது என்பது எந்தக் கருத்துமே அற்றதாகும். என்றாலும் இவ்வாறு பிரித்துக் காண்பது மாற்றத்தை உள்ளடக்கியது. மாற்ற முடியாத கடவுளிடம் மாற்றம் என்பது இருக்க முடியாது. நினைவாற்றலில், நினைவு கூறப்படும் பொருள் மறந்துபோன பொருள்களிடமிருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவே வேறு-படுத்திக் காணப் பட வேண்டும். கடவுளால் மறக்க இயலுமா? சிந்தனை என்பது இன்றி நுண்ணறிவை உன்னால் பெற்றிருக்க இயலுமா?- தெய்வத்தின் ஆற்றல்களில் ஒன்றாக எல்லை-யற்ற நுண்ணறிவைத் தான் குறிப்பிடவில்லை என்றும், மனித இனத்தில் ஓரளவு எல்லையற்ற நுண்ணறிவு காணப்படுகிறது என்று குறிப்பிடுவதாகவும், ஆத்திகர் இதற்கு பதில் அளித்தால், நுண்ணறிவு என்று வேறு எதை அவர் குறிப்பிடுகிறார் என்பதைத் தெளிவாகவும், குறிப்பாகவும் விளக்க அவர் கடமைப்பட்டுள்ளார். இதைச் செய்யாதவரை, மேலே கூறப்பட்டவைகளுக்கு விடை தேவை.
காரண காரிய தத்துவம் இனியும் செல்லுபடியாகாது

வேறொரு ஆன்மீகக் கோட்பாடு இவ்வாறு கூறுகிறது: “ஒவ்வொரு காரியத்துக்கும் ஓர் காரணம் இருக்க வேண்டும். முதற் காரணமான பிரபஞ்சம் எல்லையற்றதாக இருக்க வேண்டும்; அந்த முதற்காரணமான பிரபஞ்சமே கடவு-ளாக இருக்கவேண்டும்.” கடவுள்தான் முதல் காரணம் என்று கூறுவதற்கொப்பாகும் இது. காரணம் என்பதால் என்ன புரிந்து கொள்ளப்-படுகிறது? முழுமையாக விளக்குவதானால், அச் சொல்லுக்கு எந்த மதிப்புமே இல்லை. அதனால் காரணம் என்பது எல்லையற்றதாக, முடிவற்றதாக இருக்க முடியாது. முதல் காரணம் என்பதால் அறிந்து கொள்ளப்படுவது என்ன? ‘வட்ட முக்கோணம்’ என்ற சொற்-றொடர் என்ன பொருள் அளிக்குமோ அதை விட அதிகமான பொருளை ‘முதல் காரணம்’ என்ற சொல் நமக்கு அளித்துவிடவில்லை. காரணமும் காரியமும் தொடர்புடைய சொற்கள். ஒவ்வொரு காரணமும் ஏதோ சில முன்நிகழ்வுகளின் பாதிப்பாகும்; அவ்வாறே ஒவ்வொரு பாதிப்பும் அதன் தொடர்-விளைவாகும். முதன்மையான, தொடக்க காரணம் ஒன்றினால் உயிர்வாழ்ந்திருப்பது முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்கவே முடியாது.

உயிரினத் தோற்றத்தின் தொடக்கத்தைக் கண்டறிவது அவ்வளவு எளிதானதல்ல
பிரபஞ்சத்தின் தொடக்கம் என்று கூறப்-பட்டுள்ளதை ஆத்திகர் சிந்தித்துப் பார்க்கவே இல்லை; ஆனால் சிந்தித்துப் பார்க்காமலே ஒப்புக் கொள்ளப்பட்டதாகும் அது. மோன்-டக்னியின் மொழியில் கூறுவதானால், “தாங்கள் நம்புவதை மனிதர்கள் அவர்களாகவே தங்களை நம்பச் செய்து கொள்கிறார்கள்.” படைப்பு என்று அழைக்கப் படுவதை நம்புவது என்பது, அறியாத ஒன்றின் தலைவாயில் முன் நுண்ணறிவு என்பது விழுந்து வணங்குவதைத் தவிர வேறொன்றுமில்லை. தொடர்ந்த, முடிவற்ற உயிரினத் தோற்றத்தின் வழியில் உயிர் வாழ்ந்திருத்தல் என்ற கோட்பாடே தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்பதை மட்டும் நம்மால் அறிய முடிகிறது. இந்த வழியில் தொடக்கம் என்று எதுவும் நமக்கு இருக்கவில்லை; இருள் சூழ்ந்த கடந்த காலத்தில் அதனை நாம் தேடுகிறோம். ஆனால் நம்மால் சிறிது தொலைவுதான் செல்லமுடிகிறது; நாம் எவ்வளவு தூரம் சென்றாலும், இன்னும் செல்லவேண்டிய தூரம் மிக அதிகமானதாகவே உள்ளது.

வரையறைக்குட்பட்ட பாதிப்பிலிருந்து எல்லையற்ற முதற்காரணத்தை எவ்வாறு ஊகித்தறிய முடியும்?

‘பிரபஞ்ச காரணம்’ என்று பின்னர் எதைக் குறிப்பிடுகிறீர்கள்? அதன் முழுமையான முக்கியத்துவத்துடன் காரணம் என்பதற்கு °பினோசா கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கிறார்: “ காரணம் என்று சொல்வதன் மூலம் நான் புரிந்து கொள்ள இயன்றது, உயிர் வாழ்ந்திருத்தல் என்பதில் அடங்கியிருக்கும் உட்கருத்து என்றோ அல்லது அதன் இயல்பு உயிர்வாழ்ந்திருத்தல் என்று மட்டுமோ கருத இயன்றது என்பதுதான்.” காரணம் மற்றும் உயிர்வாழ்ந்திருத்தல் என்ற இரு சொற்களும் ஒரே பொருளை அளிப்பவையாக °பினோசா கருதுகிறார். இவ்வாறு இச்சொற்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு ஏதேனும் எதிர்ப்பு இருந்தால், “நோக்கங்களும் அவற்றை எட்டுவதற்கான வழிகளும்” என்று கூறும் இதே போன்ற சொற்றொடருக்கு உள்ள முக்கியத்துவத்தை விட அதிக பொருள் எதையும் அது பெற்றிருக்கவில்லை. “ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும்.” ஒவ்வொரு காரியம் என்று கூறுவது காரியங்கள் என்ற பன்மையைக் குறிக்கிறது. ஒவ்வொரு காரியமும் முடிவற்றதாக இருக்க வேண்டும்; அப்படியானால், வரையறை கொண்ட பாதிப்பிலிருந்து, உலகளாவிய, எல்லையற்ற முதற்காரணத்தை தத்துவ ரீதியாக எவ்வாறு ஊகித்தறியமுடியும்?