சேது சமுத்திரத்திட்டம் நிறைவேற்றுவதில் மாற்றுப்பாதை குறித்து பா.ம.க.நிறுவனர் திரு. இராமதாசு சொன்ன கருத்து குறித்து தி.க.தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலையில் (5-2-08) மாற்றுப்பாதை சரியான முடிவல்ல.6 ஆவது வழித்தடம் தான் சரியானது.இராமதாசு அவர்களும் இதையே வலியுறுத்த வேண்டும் என்று கூறுயிருந்தார்.இதற்கு மறுமொழியாக மருத்துவர் இராமதாசு அவர்கள் 8-2-08 தமிழ் ஓசை இதழில் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு தைலாபுரத்தில் செய்தியாளர்களைக் கூட்டி கலைஞர் அவர்களையும், கி.வீரமணி அவர்களையும் சகட்டுமேணிக்கு திட்டி பேட்டி அளித்துள்ளார். எங்களைப்போன்றவர்கள் மருத்துவர் இராமதாசு அவர்களின் பேட்டியைப் படித்து மிகுந்த மனவேதனைக்கு உள்ளானோம். ஏனெனில் சேதுசமுத்திரத்திட்டம் நிறைவேறுவதற்கு யாரையும் விட பல ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு, இதுகுறித்து பல நூல்களையும், மாநாடுகளையும் நடத்தியது, நடத்தி வருவது திராவிடர்கழகமும் அதன் தலைவர் கி.வீரமணி அவர்களும் என்பதை நாடு நன்கு அறியும்.
நிலைமை இப்படியிருக்க மருத்துவர் இராமதாசு அவர்களோ இவர் யார் நமக்கு ஆலோசனை சொல்ல என்று "பெரியண்ணன்"பாணியில் பேட்டி அளித்த விதம் நடுநிலையாளர்களின் மனதை வேதனைப்படுத்தியதோடு அவர்களிடமிருந்து ஒருவிதமான வெறுப்பு கிளம்பியுள்ளது என்பதுதான் தற்போதைய உண்மை நிலை.
அந்தப்பேட்டியில் புதிதாக மானமிகு கி.வீரமணி அவர்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டு சொல்லியுள்ளாரா என்றால் அதுவும் இல்லை. ஏற்கனவே சொல்லியுள்ள அதே குற்றச்சாட்டுக்களை மீண்டும் சுமத்தியுள்ளார்.அதெற்கெல்லாம் விரிவாகவும், விளக்கமாகவும் விடையளித்து வெளிவந்துள்ள நூல்களின் பட்டியலை கீழே தந்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் படித்து உண்மை நிலையை அறிய வேண்டுகிறேன்.
சான்று நூல்கள்:
1.கி.வீரமணி அவர்கள் எழுதிய "டாக்டர் ராமதாசுக்கு பதில்" (1991)
2.மின்சாரம் அவர்கள் எழுதிய "டாக்டர் இராமதாஸ் அவர்களுக்கு மீண்டும் ஒரு மடல்" (1993)
3.மின்சாரம் அவர்கள் எழுதிய "டாக்டர் இராமதாசுக்கு தேவை வைத்தியம்!" (1999)
தமிழ் ஓசை இதழில் மருத்துவர் இராமதாசு அவர்கள் அளித்த பேட்டிக்கு தி.க.தலைவர். கி.வீரமணி அவர்கள் அளித்த பதில் இதோ.
மதவாதச் சக்திகளுக்குத் துணை போகக்கூடாது மருத்துவர்
இராமதாசு என்பதுதான் எங்கள் அறிக்கையின் நோக்கம்
மருத்துவரின் அறிக்கையை பா.ஜ.க., மாநிலத் தலைவர் இல. கணேசன்
துணைக்கு அழைத்துக் கொண்டுள்ளாரே!
நாங்கள் சுட்டிக்காட்டியது நடந்துவிட்டதே! ஆத்திரப்படாமல் நிதானமாகச் சிந்திக்கட்டும்!
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் விளக்கம்
பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் கூறி யுள்ளதற்குப் பதில் அளித்தார் செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்
மருத்துவர் இராமதாசு அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தோடு நில்லாமல், செய்தியாளர்களிடமும் அதுபற்றி தெரிவித்துள்ளதால், அவருக்கு நாங்கள் எழுதிய கடிதத்தையும் வெளியிட நேர்ந்தது என்று செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.
முதலமைச்சருக்கு அவர் கடிதத்தின் நகலை அனுப்பியதால், இப் பொழுது ஒரு வழிப் பாதையாக அமைந்துவிடக்கூடாது என்பதால், நானும் நகல் ஒன்றை முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளேன் என்றார்.
கடிதம் வருமாறு:
மதிப்பிற்குரிய பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு
வணக்கம்.
தங்கள் 6.2.2008 நாளிட்ட மடல் கிடைத்தது. நன்றி.
"விடுதலை"யில் எழுதப்பட்ட அறிக்கை, தலையங்கம் குறித்து அதிக அளவு உணர்ச்சி வயப்பட்டுள்ளீர்கள் என்பதை தங்கள் கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது.
சற்று நிதானமாகப் படிந்திருந்தால் அதில் ஆத்திரப்படுவ தற்கோ, உணர்ச்சி வயப்படுவதற்கோ ஒன்றுமில்லை.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது நீண்ட காலமாக தமிழர்கள் எதிர்பார்க்கும் ஒரு முக்கியமான திட்டமாகும். அந்தத் திட்டத்தை தற்போதுள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றும்போது அதனைத் தடுக்க பல்வேறு சக்திகள் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. ராமர் பாலம் என்ற ஒரு கற்பனையை எடுத்துக் கொண்டு ஆறாம் வழித் தடத்திற்குப் பதில் வேறு பாதையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குறுக்குச் சால் ஓட்டுகின்றன. வேறு வழிகள் ஆய்வு செய்யப்பட்டு சாத்தியமற்றவை என்று வல்லுநர்களால் முடிவு செய்யப்பட்டன; மேலும் இப்பொழுதுள்ள வழித் தடத்தில் 60 சதவீதப் பணிகள் முடிந்து விட்டன.
துணைப் போகக்கூடாது
இந்த நிலையில் பா.ம.க., நிறுவனர் இதற்குத் துணை போகலாமா என்று விடுதலையில் குறிப்பிட்டிருப்பதன் நோக்கம்- எந்த வகை யிலும் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தாங்கள் துணைப் போகக் கூடாது என்பதுதான்.
திட்டத்தின்மீது கொண்டுள்ள அக்கறையின் காரணமாக நல்லெண்ணத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்தாகும் இது.
தங்கள் சொன்ன கருத்தை எடுத்துக்காட்டி, நாங்கள் சொல்லுவதை டாக்டர் ராமதாசும் ஏற்றுக் கொண்டு இருக்கிறார் என்று தமிழக பா.ஜ.க., தலைவர் இல. கணேசன் கூறியிருப்பதையும் இந்த நேரத்தில் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். துணைபோகலாமா என்று நாங்கள் எழுதியதற்கு இது தான் முக்கிய காரணமாகும்.
இந்தத் திட்டம் நடக்கக் கூடாது என்று கருதுபவர்கள் அரசியல் காரணங்களுக்காகக் கூறும் நிலையில் மாற்று வழித்தடம் தேடலாம் எனக் கூறுவது ஏமாற்று வழித்தடமே ஆகும். மதிப்பிற்குரிய மருத்துவர் இராமதாசு அவர்களும் இந்த நிலையைக் கூறலாமா? விடுதலை அறிக்கை வரிகளில் காணப்படும் சாரத்தினைச் சிந்தித்தால், ஏமாற்று வழித் தடம் பற்றிக் கூறுவோரின் கருத்துக்கு எந்த வகையிலும் பலம் சேர்த்து விடக் கூடாது என்பது தெரிய வரும். இதனைக் குற்றச்சாற்றாக எடுத்துக் கொள்ளாமல் ஆக்க ரீதியாக எடுத்துக் கொள்வீர்கள் என்று எதிர்பார்த்தோம்; ஆனால் தங்கள் கடிதம் ஏமாற்றத்தைத்தான் அளிக்கிறது.
முதலமைச்சர் கடைசியாகக் கூறியது என்ன?
முதல் அமைச்சர் கலைஞர் 2007 செப்டம்பரில் கூறியதைத்தானே நானும் கூறியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மை தான்; அதன்பின் அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டு முதல் அமைச்சர் வெளியிட்ட கருத்தை நீங்கள் ஏன் வசதியாக மறந்து விட்டீர்கள் அல்லது மறைக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
உறுதியான நிலைப்பாடு எனக் கூறவில்லை என்று தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். நிலைப்பாட்டில் என்ன உறுதியான நிலைப்பாடு, உறுதியற்ற நிலைப்பாடு?அரசியலில் தங்கள் அளவுக்கு அனுபவம் பெறாததால் இது எனக்கு விளங்கவில்லை என்று கருதுகிறேன்.
கோபப்படுவானேன்?
"இனிமேலாவது மருத்துவர் இராமதாசைப் போன்றவர்கள் இத்திட்டத்தினை உடனடியாக முடித்து வைக்க ஆறாம் வழித் தடத்தினை மாற்றாத அரசியல் வழித் தடத்தில் நடைபோடுவார் - போட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று எழுதி யுள்ளதற்கு மிகவும் கோபப்பட்டுள்ளீர்கள். அரசியலில் உங்களது ஆலோசனை எதுவும் தேவையில்லை என்றெல்லாம் அனல் பறக்க எழுதியுள்ளீர்கள்.
ராமர் பாலம் என்று கூறி ஆறாம் வழித் தடத்தில் திட்டத்தை நிறை வேற்றக் கூடாது என்று கூறும் அரசியல் கட்சிகளின் வழித் தடத்தில் தாங்கள் நடைபோட வேண்டாம் என்று கூறுவதில் என்ன பிழை இருக்கிறது?
அப்படியே பார்த்தாலும் தேர்தலுக்குத் தேர்தல் தாங்கள் அணிமாறுவதும் வாடிக்கைதானே!
எங்களுக்கு அரசியல் வேண்டாம் என்று அருள்வாக்கு கூறி யுள்ளீர்கள். அரசியலில் திராவிடர் கழகத்தின் பங்கு என்ன என்ற எல்லை எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். தந்தை பெரியார் அவர்கள் நீதிக் கட்சி காலத்திலிருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் சரியாகவே வழிகாட்டிச் சென்றுள்ளார்.
எந்தக் காலத்திலும் திராவிடர் கழகம் பா.ஜ.க., இருக்கும் அணியை ஆதரிப்பது கிடையாது எனவே எங்கள் கொள்கை தெளி வானது - செயல் முறையும் ஆரோக்கியமானதே!
அதே நேரத்தில் அரசியலில் தங்கள் நிலை என்ன?
"எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது?"
"இன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது? எங்கள் கட்சி உட்பட எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணுதான் அடிப்படை" என்று பேட்டி கொடுத்தீர்கள். ('ஆனந்தவிகடன்' 13.9.1998)
இப்படி அரசியல் நடத்தும் நீங்கள் கொள்கைகளைப் பற்றி பேசுவதுதான் வேடிக்கை! இத்தகைய தங்களுக்கு அரசியல் வழியைப்பற்றி எடுத்துக் கூற எங்களுக்குத் தகுதியில்லைதான் ஒப்புக் கொள்கிறோம்.
பெரியாரின் பாதையில் தொடர்ந்து நாங்கள் பயணிக்க வேண் டும் என்று தாங்கள் அறிவுரை கூறியுள்ளதற்கு நன்றி. அதனை யார் சொன்னாலும், சொல்லா விட்டாலும் திராவிடர் கழகம் செய்யும் - செய்து கொண்டு தானிருக்கும். பெரியார் பாதையில் செல்வதால் தான் ராமன் பாலம் பிரச்சினையில் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளோம். அதே நேரத்தில் அரசியலில் யார் ஆட்சிக்கு வந்தால் என்ன, வரா விட்டால் என்ன என்று பொறுப்பில்லாமல் திராவிடர் கழகம் நடந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் சொல்லுவது பெரியார் பாதை அல்ல - சரியான கருத்தும் ஆகாது!
மதச் சார்பற்ற ஓர் அணியை உருவாக்குவதில் எங்கள் பங்கு என்ன என்பது ஊருக்கே தெரிந்த ஒன்றே!
இப்பொழுது வேண்டுமானால் தங்களுக்கு மறந்து போயி ருக்கலாம்.
அன்று பாராட்டவில்லையா?
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்ததையும் குறை கூறி யுள்ளீர்கள்.
69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது திராவிடர் கழகம் தயாரித்துக் கொடுத்த திட்டத்தின்படி புதிய சட்டம் இயற்றி, அதனைக் காப்பாற்றியதற்காகத்தான் அந்தப் பட்டம்! அப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டதால்தான் இன்றைக்கும் தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருக்கிறது. அதற்குமுன் எம்.ஜி.ஆர். ஆட்சியில் 9 ஆயிரம் வருமான வரம்பை எதிர்த்தும் போராடியதனால் வந்த 50-இல் இருந்ததுதான், 30, 20 என்பது பிரிக்க முடிந்தது. அந்தக் காலம் (1979-80) தாங்கள் அரசியலுக்கே வராத காலம்! அந்த நிலையை இங்கு உருவாக்கிக் கொடுத்ததால்தான் 30 சத விகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் 20 சதம் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்பு என்பதை மறந்து விட்டீர்களே!
இதில் வேடிக்கை என்னவென்றால் 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் உரிய நேரத்தில் எடுத்துச் செல்வதற்கு மறந்து விட்டது அன்றைய அதிமுக அரசு. இந்த முக்கிய கடமையிலிருந்து தவறிய ஆட்சிக்குத் தலைமை தாங்கிய அம்மையாருக்கு சமூகநீதிக் காத்த வீராங்கனை என்று தஞ்சையில் பட்டம் வழங்கி மகிழ்ந்த நீங்கள் கடந்து வந்துள்ள பாதையும் தெரிய வந்தது என்று எழுதியுள்ளீர்கள். அப்படியென்றால் இந்த மிகப் பெரிய குற்றத்தைச் செய்த அந்த அம்மையாருடன் அதற்குப் பிறகு 2001-இல் கூட்டணி வைத்துக் கொண்டது எப்படி? ஏன்? எல்லா முடிவுகளையும் சகோதரியிடத்திலேயே விட்டு விட் டேன் என்று சரண் அடைந்தது - ஏன்? எத்தனை சகோதரியை, எத்தனைப் புரட்சித் தலைவியைப் போட்டு அழைத்தீர்கள் அந்தக் கால கட்டத்தில்?
" திமுக உயர்த்தி பிடித்த கொள்கைகள் என்ன? அதிமுக உயர்த்தி பிடிக்காத கொள்கைகள் என்ன? சொல்லுங்கள், இதைப்பற்றி கருணாநிதியிடம் நேரடியாக ஒரே மேடையில் பேசத் தயாராக இருக்கிறேன். 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றி பல காரியங்கள் செய்திருக்கிறார் ஜெயலலிதா" என்று நீங்கள் பேட்டி கொடுக்கவில்லையா? (நமது எம்.ஜி.ஆர். 18.1.1998) இப்படிப்பட்ட நீங்கள் சமூகநீதி காத்த வீராங்கனை பட்டம் பற்றி இப்பொழுது பேசலாமா?
பட்டம் கொடுத்த கால கட்டம் வேறு. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட கால கட்டம் வேறு - இரண்டையும் குழப்பலாமா?
பட்டிமன்றம் நடத்தத் தயாராக இல்லை
பழைய தகவல்களை எல்லாம் எடுத்துக் காட்டி பட்டிமன்றம் நடத்த நாங்கள் தயாராக இல்லை.
ஈழத் தமிழர் பிரச்சினையிலிருந்து, ஜாதிப் பெயரைச் சொல்லி சமூக நீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்களை வீட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு புறக்கணிக்கச் சொன்னதிலிருந்து, கலைஞர் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்தால் என்ன என்னவெல்லாம் பறிபோகும்? தேர்தல் என்றால் என்ன, அரசியல் கட்சிகள் என்றால் என்ன என்று தாங்கள் திருவாய் மலர்ந்ததை எல்லாம் பட்டியல் போட ஆரம்பித்தால். அது உங்களுக்குத் தேவையில்லாத மன உளைச்சலை மேலும் அதிகமாக ஏற்படுத்தக் கூடும் என்பதால் அதனை விவரிக்க விரும்பவில்லை.
மற்றபடி உங்களுக்குள்ள பொது வாழ்க்கையின் கடல் போன்ற அனுபவமும்; முதிர்ச்சியும் எங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்; அதனால் தான் நீங்கள் யார் எங்களுக்கு அறிவுரைகூற என்ற தொனியில் எழுதியுள்ளீர்கள். அது சரி, தினம் தினம் அறிக்கைகள்மூலம், பேட்டிகள்மூலம் மற்றவர்களுக்கு அறிவுரைகள் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே, அது எப்படி? அறிவுரை கூறும் மொத்தக் குத்தகையையும் தாங்கள் மட்டும் ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டுள்ளீர்களோ!
தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்களாகிய எங்களுக்கென்று கொள்கைப் பார்வை ஒவ்வொன்றிலும் உண்டு. அதனைத் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதை மட்டும் அடக்கத்தோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
அன்புடன்
தலைவர்,
திராவிடர் கழகம்
------------------------- "விடுதலை" 9-2-08
இது ஏதோ மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு எதிராக எழுதியது என்று நினைக்க வேண்டாம் கொள்கைவழியில் மருத்துவர் இராமதாசு அவர்களும் செயல்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதியது.
Sunday, February 10, 2008
Saturday, February 09, 2008
பார்பனர்களின் அட்டுழியங்கள் பாரீர்
குடிஅரசு’வின் கேள்விக் கணைகள் .--ஆரியரா? அவர் அடிமைகளா?
1. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தது யார்?
2. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?
3. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்?
4. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்?
5. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி, இவைகளைச் சுட்டுத் தின்று சுரா பானமருந்தியது யார்?
6. வருணாச்சிரம தருமத்தை ஆதரிப்பவன் யார்?
7. மனுதர்ம சாத்திரம் எழுதி நம்மை ஏமாற்றி வந்த கூட்டம் எது?
8. புராண ஆபாசக்கதைகளை எழுதி நம்மை ஏய்த்து வந்தவன் யார்?
9. திருப்பதிக்குப் போய் மொட்டையடிக்காமல் திரும்பி வருபவன் யார்?
10. மோட்ச லோகத்துக்கு வழிகாட்டி டிக்கெட் கொடுப்பவன் யார்?
11. திவசம், திதி, கருமாதி, கலியாணம், சடங்குகள் நடத்தி வைப்பவன் யார்?
12. திராவிடன் கட்டிய கோவில்களில் அதிகாரம் செலுத்தபவன் யார்?
13. திராவிடன் கட்டிய சத்திரமானிய வருமானத்தில் உண்டு களிப்பவன் யார்?14. கஷ்டப்பட்டுக் கோயில் கட்டியது யார்? உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது யார்?
15. சத்திரம் கட்டியது யார்? மானிய சொத்தில், சாய்ந்து சாப்பிடுவது யார்?
16. பல சாதிகளை உண்டு பண்ணியது யார்?
17. உடன்கட்டை ஏறும்படிச் செய்து பெண்களை வஞ்சித்தது யார்?
18. திராவிடன் ஆசாரத்துடன் பக்தி பண்ணினால் கண்ணைத் தோண்டிக் காட்டில் விட்டவன் யார்?
19. திராவிடன் ஆரியப் பாஷையைப் பேசியதற்காக நாக்கை அறுத்தது யார்?
20. திராவிடனை அரக்கனாகவும், சூத்திரனாகவும், குரங்காகவும் எழுதிவைத்தவன் யார்?
21. திராவிட இனத்தவரை முன்னுக்கு வரவொட்டாமல் முட்டுக்கட்டை போடுவது யார்?
22. திராவிட நாட்டுப் பிரிவினையைக் கூடாதென்று கொக்கரிப்பவர் யார்?
23. உழைப்பின்றி ஊரார் உழைப்பில் உண்டுகளிப்பவன் யார்?
24. கடவுளைத் தரிசிக்கத் தரகனாக இருப்பவன் யார்?
25. தென்னாட்டானைச் சுரண்டுபவன் யார்?
26. மதவெறி பிடித்து மதிகெட்டுத் தகாத காரியம் செய்தலைபவன் யார்?
27. தர்ப்பைப் புல்லையும், பஞ்சாங்கத்தையும் காட்டி, இன்றும் ஏமாற்றுபவன் யார்?
28. நீ சுவாமி என்று கும்பிட்டால் இடதுகையை நீட்டி உன்னை அவமதிப்பவன் யார்?
29. பெண்களை ஆடல், பாடல் கற்பித்து சினிமாவில் சேர்த்துப் பணம் சம்பாதிப்பவன் யார்?
30. கெஞ்சிக் கூத்தாடி லஞ்சங் கேட்கும் பஞ்சாங்கம் யார்?
31. இந்திப் படிப்பைக் கட்டாயப் பாடமாகக் கொணர்ந்தது யார்?
32. நான்கு சாதிகளை உண்டு பண்ணியவன் யார்?
33. மதவெறி பிடித்தலையும், மடையனும், முட்டாளும் யார்?
34. முதல் சாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் யார்?
35. தொழிலாளி கூலி கேட்டதற்கு மலபார் போலீசை விட்டு அடித்தது யார்?
36. வில் வித்தை கற்ற ஏகலைவன் கட்டை விரலை நறுக்கிக் கொடுக்கும்படி கேட்டவன் யார்?
37. வேதம் ஓதிப் பாதகம் விளைவிப்பவன் யார்?
38. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மிடம் வரி வாங்குபவன் யார்?
39. ஹரிஜன சகோதரரை அக்ரகாரத்துக்குள் விடாமல் தடுப்பவன் யார்?
40. சாதி வேறு, சமயம் வேறு, கலை வேறு என்பவன் யார்?
41. சாதியைக் கடவுள் படைத்தார் என்று சொல்லி தர்ப்பை ஏந்துங் கை வாளுமேந்தும் என்றவன் யார்?
42. உலகம் போற்றும் உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது யார்?
43. காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்?
44. காந்தியாருக்கு ராம் தூன் பசனை பண்ணி ஓலமிட்டழுதது யார்?
45. காந்தியார் கொலை வழக்குகளை பிரசுரிக்கக் கூடாதென்பவன் யார்?
46. காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை இருட்டடிப்பு செய்துவிட்டது யார்?
47. காந்தியார் கொலைக்கு நியாயம் வழங்கும்படி கேட்ட கழகத்தவர்களைத் தடை உத்தரவு போட்டுச் சோதனையிட்டவன் யார்?
48. சரித்திர ஆதாரப்படி அன்றிலிருந்து கொலை செய்து வரும் கூட்டம் எது?
49. திராவிடனைத் தலையெடுக்கவொட்டாமல் தட்டி விட்டுக் கொண்டிருப்பவன் யார்?
50. திராவிடச் சம்புகன் தலையை வெட்டி ஆரியப் பிள்ளையைப் பிழைக்க வைத்தது யார்?
51. காந்தியாரைக் கொலை செய்த விநாயகக் கோட்சே கூட்டம் எது?
52. காந்தியார் சதியாலோசனை சம்பந்தப்பட்ட ரிக்கார்டுகளைக் களவாடியவன் யார்?
53. அடுத்துக் கெடுப்பதில் அசகாயசூரனாய், கூடியிருந்து குடி கெடுப்பவன் யார்?
54. தஞ்சை நாயக்கர் வம்சத்தை வேற்றரசரிடம் காட்டிக் கொடுத்தவன் யார்?
55. சமணர்களைக் கழுவேற்றியது யார்?
56. சந்திர குப்தனுக்கு சாம்ராச்சியம் கிடைக்கும்படி செய்தது யார்?
57. நவ நந்தர்களின் ஆட்சியை வேரறுத்தவன் யார்?
58. சிறுத்தொண்டனைப் பிள்ளைக்கறி சமைத்துக் கேட்டது யார்?
59. வல்லாள மகாராசாவின் மனைவியைப் பெண்டாளக் கேட்டது யார்?
60. அசோக வம்சத்தரசரை அழித்தவன் யார்?
61. சைவனுக்குக் கந்தபுராணமும், வைஷ்ணவனுக்கு இராம புராணமும் கட்டியது யார்?
62. தேவடியாள் வீட்டில் தரகனாக இருப்பவன் யார்?
63. தாசிகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக் கொடுப்பவன் யார்?
64. அரிச்சந்திரனைப் பொய் சொல்லும்படி படாதபாடு படுத்தியது யார்?
65. திராவிட மக்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த கூட்டம் எது?
66. பல காமாந்தகாரக் கடவுளர்களையுண்டு பண்ணி யது யார்?
67. நம்மைப் பல சாதிகளாக்கி மொழி, கலை, நாகரீகம், வாணிபம் ஆகிய பல துறைகளிலும் வீழ்ச்சியுறச் செய்தது யார்?
68. எண்ணத் தொலையாத கடவுளை உண்டாக்கி எழுதியது யார்?
69. கடவுளுக்கும் மனைவி, கூத்தி, பிள்ளை குட்டிகள் இருப்பதாக எழுதியவன் யார்?
70. எவ்விதத் தொடர்புமின்றிச் சாஸ்திர ரீதியாகப் பிரித்து வைத்தது யார்?
71. காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்திய கூட்டம் எது?
விடை: பார்ப்பனர்கள் ------------------------------- "குடி அரசு" 22-1-1949
1. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தது யார்?
2. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?
3. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்?
4. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்?
5. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி, இவைகளைச் சுட்டுத் தின்று சுரா பானமருந்தியது யார்?
6. வருணாச்சிரம தருமத்தை ஆதரிப்பவன் யார்?
7. மனுதர்ம சாத்திரம் எழுதி நம்மை ஏமாற்றி வந்த கூட்டம் எது?
8. புராண ஆபாசக்கதைகளை எழுதி நம்மை ஏய்த்து வந்தவன் யார்?
9. திருப்பதிக்குப் போய் மொட்டையடிக்காமல் திரும்பி வருபவன் யார்?
10. மோட்ச லோகத்துக்கு வழிகாட்டி டிக்கெட் கொடுப்பவன் யார்?
11. திவசம், திதி, கருமாதி, கலியாணம், சடங்குகள் நடத்தி வைப்பவன் யார்?
12. திராவிடன் கட்டிய கோவில்களில் அதிகாரம் செலுத்தபவன் யார்?
13. திராவிடன் கட்டிய சத்திரமானிய வருமானத்தில் உண்டு களிப்பவன் யார்?14. கஷ்டப்பட்டுக் கோயில் கட்டியது யார்? உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது யார்?
15. சத்திரம் கட்டியது யார்? மானிய சொத்தில், சாய்ந்து சாப்பிடுவது யார்?
16. பல சாதிகளை உண்டு பண்ணியது யார்?
17. உடன்கட்டை ஏறும்படிச் செய்து பெண்களை வஞ்சித்தது யார்?
18. திராவிடன் ஆசாரத்துடன் பக்தி பண்ணினால் கண்ணைத் தோண்டிக் காட்டில் விட்டவன் யார்?
19. திராவிடன் ஆரியப் பாஷையைப் பேசியதற்காக நாக்கை அறுத்தது யார்?
20. திராவிடனை அரக்கனாகவும், சூத்திரனாகவும், குரங்காகவும் எழுதிவைத்தவன் யார்?
21. திராவிட இனத்தவரை முன்னுக்கு வரவொட்டாமல் முட்டுக்கட்டை போடுவது யார்?
22. திராவிட நாட்டுப் பிரிவினையைக் கூடாதென்று கொக்கரிப்பவர் யார்?
23. உழைப்பின்றி ஊரார் உழைப்பில் உண்டுகளிப்பவன் யார்?
24. கடவுளைத் தரிசிக்கத் தரகனாக இருப்பவன் யார்?
25. தென்னாட்டானைச் சுரண்டுபவன் யார்?
26. மதவெறி பிடித்து மதிகெட்டுத் தகாத காரியம் செய்தலைபவன் யார்?
27. தர்ப்பைப் புல்லையும், பஞ்சாங்கத்தையும் காட்டி, இன்றும் ஏமாற்றுபவன் யார்?
28. நீ சுவாமி என்று கும்பிட்டால் இடதுகையை நீட்டி உன்னை அவமதிப்பவன் யார்?
29. பெண்களை ஆடல், பாடல் கற்பித்து சினிமாவில் சேர்த்துப் பணம் சம்பாதிப்பவன் யார்?
30. கெஞ்சிக் கூத்தாடி லஞ்சங் கேட்கும் பஞ்சாங்கம் யார்?
31. இந்திப் படிப்பைக் கட்டாயப் பாடமாகக் கொணர்ந்தது யார்?
32. நான்கு சாதிகளை உண்டு பண்ணியவன் யார்?
33. மதவெறி பிடித்தலையும், மடையனும், முட்டாளும் யார்?
34. முதல் சாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் யார்?
35. தொழிலாளி கூலி கேட்டதற்கு மலபார் போலீசை விட்டு அடித்தது யார்?
36. வில் வித்தை கற்ற ஏகலைவன் கட்டை விரலை நறுக்கிக் கொடுக்கும்படி கேட்டவன் யார்?
37. வேதம் ஓதிப் பாதகம் விளைவிப்பவன் யார்?
38. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மிடம் வரி வாங்குபவன் யார்?
39. ஹரிஜன சகோதரரை அக்ரகாரத்துக்குள் விடாமல் தடுப்பவன் யார்?
40. சாதி வேறு, சமயம் வேறு, கலை வேறு என்பவன் யார்?
41. சாதியைக் கடவுள் படைத்தார் என்று சொல்லி தர்ப்பை ஏந்துங் கை வாளுமேந்தும் என்றவன் யார்?
42. உலகம் போற்றும் உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது யார்?
43. காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்?
44. காந்தியாருக்கு ராம் தூன் பசனை பண்ணி ஓலமிட்டழுதது யார்?
45. காந்தியார் கொலை வழக்குகளை பிரசுரிக்கக் கூடாதென்பவன் யார்?
46. காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை இருட்டடிப்பு செய்துவிட்டது யார்?
47. காந்தியார் கொலைக்கு நியாயம் வழங்கும்படி கேட்ட கழகத்தவர்களைத் தடை உத்தரவு போட்டுச் சோதனையிட்டவன் யார்?
48. சரித்திர ஆதாரப்படி அன்றிலிருந்து கொலை செய்து வரும் கூட்டம் எது?
49. திராவிடனைத் தலையெடுக்கவொட்டாமல் தட்டி விட்டுக் கொண்டிருப்பவன் யார்?
50. திராவிடச் சம்புகன் தலையை வெட்டி ஆரியப் பிள்ளையைப் பிழைக்க வைத்தது யார்?
51. காந்தியாரைக் கொலை செய்த விநாயகக் கோட்சே கூட்டம் எது?
52. காந்தியார் சதியாலோசனை சம்பந்தப்பட்ட ரிக்கார்டுகளைக் களவாடியவன் யார்?
53. அடுத்துக் கெடுப்பதில் அசகாயசூரனாய், கூடியிருந்து குடி கெடுப்பவன் யார்?
54. தஞ்சை நாயக்கர் வம்சத்தை வேற்றரசரிடம் காட்டிக் கொடுத்தவன் யார்?
55. சமணர்களைக் கழுவேற்றியது யார்?
56. சந்திர குப்தனுக்கு சாம்ராச்சியம் கிடைக்கும்படி செய்தது யார்?
57. நவ நந்தர்களின் ஆட்சியை வேரறுத்தவன் யார்?
58. சிறுத்தொண்டனைப் பிள்ளைக்கறி சமைத்துக் கேட்டது யார்?
59. வல்லாள மகாராசாவின் மனைவியைப் பெண்டாளக் கேட்டது யார்?
60. அசோக வம்சத்தரசரை அழித்தவன் யார்?
61. சைவனுக்குக் கந்தபுராணமும், வைஷ்ணவனுக்கு இராம புராணமும் கட்டியது யார்?
62. தேவடியாள் வீட்டில் தரகனாக இருப்பவன் யார்?
63. தாசிகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக் கொடுப்பவன் யார்?
64. அரிச்சந்திரனைப் பொய் சொல்லும்படி படாதபாடு படுத்தியது யார்?
65. திராவிட மக்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த கூட்டம் எது?
66. பல காமாந்தகாரக் கடவுளர்களையுண்டு பண்ணி யது யார்?
67. நம்மைப் பல சாதிகளாக்கி மொழி, கலை, நாகரீகம், வாணிபம் ஆகிய பல துறைகளிலும் வீழ்ச்சியுறச் செய்தது யார்?
68. எண்ணத் தொலையாத கடவுளை உண்டாக்கி எழுதியது யார்?
69. கடவுளுக்கும் மனைவி, கூத்தி, பிள்ளை குட்டிகள் இருப்பதாக எழுதியவன் யார்?
70. எவ்விதத் தொடர்புமின்றிச் சாஸ்திர ரீதியாகப் பிரித்து வைத்தது யார்?
71. காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்திய கூட்டம் எது?
விடை: பார்ப்பனர்கள் ------------------------------- "குடி அரசு" 22-1-1949
Wednesday, February 06, 2008
பாரதியும் தலித்துகளும்
வரலாற்று வாக்கிலான வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட மாறுதல்கள், நெருக்கடிகள், எதிர் கொள்ளப்பட்ட சிக்கல்கள், ஈட்டப்பட்ட சாதனைகள், அனுபவித்த தோல்விகள், துயரங்கள், வர்க்கப் பிரிவினைகள், வர்க்க நலன்கள், சாதிப் பிரிவுகள், அதன் கொடுமைகள், தேசியக் கருத்தாடல்கள், மத, இன, மொழி புலங்களின் மீதான விவாதங்கள், அவை அனைத்தினூடாக மனித சமூகம், இன்றுவரை உண்மைகளைத் தேடிக் கொண்டிருக்கிறது. இதுவரை கண்டடைந்த தத்துவங்களுக்கும், தேடிக் கொண்டிருக்கும் உண்மைகளுக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவதால், மனித சமுகம் போலிகளிடம் தஞ்சமடைய நேரிடுகிறது. அத்தகைய ஆபத்துகளிலிருந்து மக்களை மீட்பவர்களே மாமனிதர்கள். சிந்தனை நேர்மையும் செயலூக்கமுமே மாமனிதனை உருவாக்குகிறது. அந்த வகையில்,
இந்தியத்தின் தேசியக் கவி பொதுவுடமை புரட்சிக்கவி என்றெல்லாம் புகழப்படும் சுப்ரமணிய பாரதியார் கூட மாமனிதர் தான். பாரதி மாமனிதராக உருவாக்கப்பட்டதில் நாம் வருத்தம் கொள்ளவில்லை. சாதிக்கொரு மாமனிதனைக் கொண்டிருக்கும் நாடல்லவா இது! மாமனித பீடத்தைக் கட்டிக் கொடுத்து அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும், பாரதி பற்றாளர்களிடம் நாம் சொல்ல விரும்புகிறோம்; பாரதியின் ‘மாமனிதர்’ பட்டம், அய்யத்திற்குரியது!
ஒரு முழுமையான ‘புரட்சிவாதி’ என்று கார்ல் மார்க்ஸால் புகழப்பட்ட ஷெல்லியின் ‘தாசன்’ என்று தன்னை அடையாளப்படுத்துவதில் பெருமை அடைந்திருக்கிறார் பாரதி. பாரதி, முதன் முதலாக ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திவந்த “சக்ரவர்த்தினி’’ என்ற மாதப் பத்திரிகையின் 1908ஆம் ஆண்டு ஜூலை இதழில் துளசி பாய் சரித்திரத்தின் இறுதிப்பகுதி வெளியிடப்பட்டுள்ளது. அதனடியில் ‘ஷெல்லி தாசன்’ என்று கையப்பமிடப்பட்டுள்ளது. அது பாரதி இட்ட கையொப்பமாகும். இளமைக்காலத்தில் எட்டயபுரத்தில் வாழ்ந்த நாட்களிலேயே ‘ஷெல்லியன் சங்கம்’ என்ற சங்கத்தை (Shelleyan Guild) பாரதி ஏற்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் ஷெல்லி மீது அளவற்ற பற்றுதல் கொண்டவராக பாரதி இருந்திருப்பதை அறியமுடிகிறது.
இயல்பான மக்கள் விடுதலையை, சமூக சமத்துவத்தைத் தனது கவிதைகளின் ஆதார சுருதியாகக் கொண்டவர் ஷெல்லி. தனது 18ஆவது வயதில் ‘உரிமைகளின் பிரகடனம்’ என்ற துண்டுப் பிரசுரத்தை எழுதி வெளியிட்டவர்.
ஷெல்லி இறந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் துண்டு பிரசுரத்தை அடிப்படையாகக் கொண்டு கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்தது. சோசிலிச கருத்துருவாக்கங்களின் முன்னோடியாக விளங்கிய ஷெல்லியின் ‘தாசராக’ இருக்க எண்ணிய பாரதியின் ஆழ்மனம், சனாதன இந்து தர்மத்தின் மீது வெறிகொண்ட பற்றுடையதாக இருந்தது. சனாதனத்தை வலியுறுத்தும் இந்து வேத இதிகாசங்களின் மீது ஆழ்ந்த பற்றுடைய ஒரு மனிதர், அதற்கு நேரெதிரான கொள்கைகளையுடையவருக்கு ‘தாசராக’ இருப்பது சாத்தியமற்றது.
ஷெல்லியிடமிருந்து பாரதி கற்றுக் கொண்ட ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்,’ ஆகிய வார்த்தைகளுக்கு எதிரான சனாதன இந்து மத கருத்தை தீவிரமாக வலியுறுத்தி கொண்டிருந்தார் பாரதி. அதன் பின்னும் ஏன் ஷெல்லியின் மீது தன் மரணகாலம் வரை பற்றுடையவராக பாரதி இருந்தார் என்பதற்கு வேறு காரணமிருந்தது.
ஷெல்லியின் கவிதை வளமும், உவமை வேகமும், நவீன மொழியாடல்களும் பாரதிக்குத் தேவைப்பட்டன. பாரதியின் கவிதைகளில் மேலோங்கி நிற்கும் ‘சுட்டுணர்ச்சிக் குறியீடுகள்’ ஷெல்லியிடமிருந்து எடுத்தாளப்பட்டவை. அதற்காக, பாரதி எந்த இடத்திலும் ஷெல்லிக்கு நன்றி பாராட்டவில்லை. ‘பாரதிக்காக தமிழ்மொழி காத்துக்கிடந்தது’ என்று எழுதத் துணியும் தமிழ் மரபுக் காவலர்கள், பாரதியின் கவிதாளுமை ஷெல்லியிடமிருந்து திருடப்பட்டவை என்பதை ஏற்றுக் கொள்ள முன்வருவார்களா?
சனாதன தர்மத்தின் மீது ஆழ்ந்த பற்றுடைய ஒருவர் தன்னை முற்போக்குவாதியாக காட்டிக் கொள்ள முயற்சித்தால் அது அவருக்குச் சிரமமான வேலையாக இருக்கும். ஆனால், பாரதிக்கு அது சுலபமான வேலையாக இருந்தது. ஷெல்லியிடமிருந்து கற்றுக்கொண்ட பொதுவுடைமை முற்போக்குத்தனத்திற்கும், தன் பாரம்பரிய பார்ப்பன சனாதனத்திற்கும் இடையே தாவித் தாவித் திரியும் பாரதியின் ‘கவிதாளுமை’ உண்மையில் அவருடையதுதான்.
அவரது முற்போக்கான சிந்தனைகள்கூட, அவர் உயிரினும் மேலாக நேசித்த நால்வருண சமூகத்தை காப்பாற்றவே முயற்சித்தன. இதைத் தான் புரட்சியாளர் அம்பேத்கார், ‘அறிவு விபச்சாரம்’ என்றார். அவர் பாரதியை நோக்கி இந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை, இந்தியா வின் ‘மகாத்மா’வைப் பார்த்து இந்த வார்த்தைகளைச் சொன்னார்.
1906ஆம் ஆண்டின் முற்பகுதியில் பாரதி தொடங்கிய ‘இந்தியா’ பத்திரிகையின் முகப்பில், ‘ஸ்வதந்திரம் ஸமத்துவம் ஸகோதரத்துவம்’ என்ற முழக்கத்தை பதித்தார். அப்போதே. அவருக்கு மிக உயர்ந்த மனித மதிப்பீடுகளின்பால் அக்கறையும், அதையே நோக்கமாகவும் கொள்ளும் உறுதியும் ஏற்பட்டதாக நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், 1917 ஆம் ஆண்டிலே நடந்த ரஷியப் புரட்சி பற்றி, ‘‘கொலையாலும், கொள்ளையாலும், அன்பையும், ஸமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத்தாமே உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்’’ என்று எழுதுகிறார். பதிலாக, சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அடைய பாரதி சொல்லித்தரும் பாடம் அபத்தமானது என்பதைவிட ஆபத்தான நால்வருண வழி என்று சொல்ல வேண்டும்.
“மிராசுதாரர்கள் அவர்களாகவே முன்வந்து ஏழைகளிடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும்.’’, “தொழில் நிர்வாக சங்கம் அமைக்க வேண்டும்’’, “இன்னின்ன தொழிலிற்கு இன்னின்னார் தகுதி உடையவர் என்று தீர்மானம் செய்ய வேண்டும்’’, “கிராமத்தில் உள்ள அத்தனை பேருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்துவிடுகிறோம்’’, பிள்ளை பிள்ளை தலைமுறைக்கு இந்த ஒப்பந்தம் தவற மாட்டோம். இந்த படிக்கு இந்த ஆலயத்தில் தெய்வ சந்நிதியில் எங்கள் குழந்தைகள் மேல் ஆணையிட்டு பிரதிக்ஞை செய்துகொடுக்கிறோம்’’, “செப்புப் பட்டயம் எழுதி இந்தக் கோயிலில் அடித்து வைக்கிறோம்’’ இதில் கண்ட கொள்கைகளின்படி கிராம வாழ்க்கை நடத்தப்படுமாயின் வறுமையாவது, அதைக் காட்டிலும் கொடியதாகிய வறுமையச்சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும் பரஸ்பர நட்பும் பரிவுணர்வும் உண்டாகும். அதனை உலகத்தாரெல்லாருங்கைக் கொண்டு நன்மையடைவார்கள்’’ என்று எழுதுகிறார்.
இதில் வெளிப்படுவது அவரது அறியாமை என்று நீங்கள் சொல்லுவீர்களா? சுதந்திரமும் சமத்துவமும் சகோதரத்துவமும், பண்ணையார்கள் பட்டயம் எழுதி கோயிலில் சத்தியம் செய்வதன் மூலம் கிடைத்துவிடுமா? இதை படிப்பறிவற்ற பாமரனின் தற்குறித்தனம் என்பீர்களா? அல்லது மகா கவியாகவும், பத்திரிகையாளனாகவும் பொதுவுடைமை பெண்ணிய புரட்சிக்கவியாகவும், மாபெரும் தேச விடுதலைப் போராட்ட தியாகியாகவும் வாழ்ந்த ஒரு மனிதரின் வாக்குமூலம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது இரண்டுமல்ல என்று நான் துணிந்து சொல்கிறேன். மாறாக, சாதிய ஒடுக்கு முறையும், பண்ணை நிலவுடைமைச் சுரண்டலும் தங்கு தடையற்று நிகழ்ந்துகொண்டிருந்த கிராமங்களில் சமூக மேலாண்மை செய்து கொண்டிருந்த ஆச்சாரம் மிகுந்த ஒரு பார்ப்பனரின் குரல் அது. அக்குரலை புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்லது மறுப்பவர்கள் இந்துப் பார்ப்பனியத்தின் சுமை தாங்கிகள்தானே தவிர வேறில்லை.
சுதந்திரத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னூறாண்டுகளுக்கும் மேலாகக் போராடி வருகிறார்கள். மனித உரிமைகள் மறுக்கப்பட்டுவரும் ஒரு நாட்டில் வாழும் அம்மக்கள் எல்லாராலும் ஏமாற்றப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதற்கு யார் பொறுப்பு என்று நீங்கள் கேட்கக் கூடும். சாதி இழிவில் அம்மக்களை அமிழ்த்தி வைத்திருக்கும் சக்தி எது என்ற வினாவுக்குப் பதில் இல்லாமல் இல்லை. “சாதிக் கருத்தியலை மக்கள் சிந்தனையிலே பதித்து வைத்திருக்கிற இந்துமதமே அல்லது இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற வேத சாஸ்திரங்களே ஒடுக்கப்பட்ட மக்களின் பயங்கர எதிரி’’ என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். “ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் வேத சாஸ்திரங்களின் பிடியிலிருந்து விடுவியுங்கள்; மக்களின் மனங்களில் சாஸ்திரங்கள் உருவாக்கி வைத்திருக்கின்ற நாசகரமான கருத்தமைவுகளை நீக்கித் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று வழிகாட்டுகிறார் அம்பேத்கர்.
வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி இந்து வேதங்களையும் இதிகாசங்களையும் நால்வருண முறையையும் போற்றிப் புகழும் ஒரு பார்ப்பனக் கவிஞனிடமிருந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்ன கிடைக்கும்? என்ன கிடைத்தது என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்!
“பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நமது முதற் கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்துப் பட்லர்களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களில் உள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றி பேச்சு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக்கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச் சொல்லு. அவர்களோடு ஸமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன்; அவர்களையெல்லாம் உடனே ஒன்றுசேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள்; மடாதிபதிகளே! நாட்டுக்கோட்டைச் செட்டிகளே! இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள்.’’
பூதாகரமான எதிரியாக நம் கண் முன்னே விரிந்து நிற்கும் பாரதி அதோடு நிற்கவில்லை.
“இனிமேல் பறையன் கை நீட்டாமல் இருப்பதற்கு வழிவகை தேடிக்கொள்ளுங்கள். சென்னைப் பட்டணத்திலே நாலு பட்லர்கள் ஹிந்து மதத்தை உல்லங்கனம் செய்தபோதிலும் நாட்டிலுள்ள பறையர்கள் எல்லாரும் உண்மையான ஹிந்துக்களே என்பதை மறந்துவிடக்கூடாது’’ என்ற தனது முன்னோர்களின் சதிச்செயலை வழி மொழிகிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களை இந்து சாதியக் கட்டமைப்பில் நிலை நிறுத்திவைத்து, அதன் மூலம் தனது சமூக மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிக்கும் இந்துப் பார்ப்பன சாதிப் பயங்கரத்தின் நிழலாய் பரவும் பாரதி,
“சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’’
என்று குழந்தைத் தாலாட்டுப் பாடுகிறார். அதையும் நமது முற்போக்கு வாதிகள் பாரதியின் ‘சாதி எதிர்ப்பு’ என்ற கணக்கில் கொண்டு வருவதை எப்படி புரிந்து கொள்வது! இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டும்!
நால் வருண விதிமுறைகளைச் சட்டங்களாக்கிய மநுவின் வாரிசாகவே வந்து நின்று, வகை பிரிக்கிறார் பாரதி. “போலீஸ் வேவுத் தொழில் செய்பவன் பிராமணன் ஆகமாட்டான். குமாஸ்தா வேலை செய்பவன் ஷத்திரியன் ஆகமாட்டான். சோம்பேறியாக முன்னோர் வைத்து விட்டுப் போன பொருளையழித்துத் தின்பவன் வைசியன் ஆகமாட்டான். கைத்தொழில்களையெல்லாம் இறக்கக் கொடுத்து விட்டு சோற்றுக்குக் கஷ்டமடைவோர் சூத்திரர் ஆகமாட்டார். இவர்களெல்லாம் மேம்பாடுடைய சூரிய வர்ணங்கள் நான்கிற்கும் புறம்பாகிய நீச கூட்டத்தார். நமது தேசம் முன்போலக் கீர்த்திக்கு வர வேண்டுமென்றால், உண்மையான வகுப்புகள் ஏற்பட வேண்டும்.’’ இவ்வாறு நால்வருண படிநிலைச் சமூகத்தைக் கொண்டுவரத் துடிக்கும் பாரதிக்கும், இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாதிகளுக்கும் வேறுபாடு இருக்கிறதா? இந்து அடிப்படைவாதத்தை நூறாண்டுகளுக்கு முன்பு மிகத் தீவிரமாக வலியுறுத்திப் பேசிய பாரதி, ஒரு மதச்சார்பற்ற நாட்டின் தேசிய கவியாக கருதப்படுவதை வெட்கக் கேடு என்று சொன்னால் அது தவறாகிவிடாது.
கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்ததினால், மிகப்பெரும் புரட்சி நடத்திவிட்டதாக பாரதியும் கருதினார்; அவரது ஆதரவாளர்களும் கருதுகிறார்கள். அத்தகையப் பூணூல் வெட்டப்படும் ஆட்டிற்குப் போட்ட மாலையாகத்தானிருக்குமே தவிர, கனகலிங்கம் பார்ப்பனராகி விட்டாரா? சாதி இழிவிலிருந்து மீண்டுவிட்டுரா? பாரதியால் அதை உறுதிசெய்ய முடிந்ததா? பாரதி வழியில், அவரது பற்றாளர்கள் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் அணிவிக்க ஏற்பாடு செய்திருக்கலாமே! கனகலிங்கத்திற்குப் போடப்பட்ட பூணூல், பெரும் ஆச்சார மாற்றமாக கருதப்படுகிறது.
வேத இதிகாசங்களில் ஆழ்ந்த பற்றுடைய பாரதி, குரூரமும் அழுக்கும் நிறைந்த பார்ப்பன பழமைவாதிகளை வெறுத்தார். இந்திய தேசத்தின் கீர்த்தி மீண்டும் வருவதற்கு நால்வருண சமூக அமைப்பு மீண்டும் ஒழுங்கு செய்யப்படவேண்டும்; அதற்கு தீனிக்காக அலையும் வயிறு தள்ளிய பழமை ஆச்சார சடங்குகளை உயர்வாகக் கருதிய பார்ப்பனர்களை எதிர்க்கத் துணிந்தார். அதன் வெளிப்பாடாக, பல சூழ்நிலைகளில் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமானார். மீண்டும் தெளிந்தார். கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்தது இந்தப் போராட்டங்களினூடாக நிகழ்ந்த கூத்து. அவ்வளவே! அதைப் புரட்சி எனச் சொல்லுவோரின் முகம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பாரதியின் தேசாபிமானமும், இந்து மதப்பற்றும், பவுத்த எதிர்ப்புக் கருத்து நிலையும், மீண்டும் மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் மிகப்பெரும் எதிரியாக கொண்டு வந்து நிறுத்துகின்றன. அவற்றைப் பற்றிய விவாதங்களை, நேரங்கருதி விலக்குகிறேன்.
பாரதி மிகத் தீவிரமாக இயங்கிய காலத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் இயக்கங்கள் ஏராளமாகச் செயல்பட்டன. பண்டிதர் அயோத்திதாசர், சென்னைப் பட்டிணத்திலே யாவரும் அறியும்படி இயக்கம் நடத்தியவர். 1907 லே சென்னை ராயப்பேட்டையில் சாக்கிய பவுத்த சங்கத்தை நிறுவி, ஜி. அப்பாத்துரையார், பெரியசாமிப்புலவர், குருசாமி, முருகேசம் போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டுள்ளார்கள். அவர்களோடு எவ்வித தொடர்பும் இல்லாமல், இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு எதிராக எழுதி வந்தவர் பாரதி.
ரெட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றோர் இந்திய அளவில் பலரும் அறிந்திருக்கக்கூடிய வலிமையான தலைவர்களாகச் செயலாற்றினர். அவர்களோடும் பாரதிக்குத் தொடர்பு இருந்ததாக ஆதாரங்கள் இல்லை. தென்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களின் மறுமலர்ச்சிக்குத் தீவிரமாகச் செயலாற்றிய பெருமாள் பீட்டர் போன்றவர்களுடன் பாரதிக்கு அறிமுகம் கிடைத்ததற்கான ஆதாரங்களும் இல்லை. எனவே பாரதியின் வாழ்வும் எழுத்தும், அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு ஆக்கப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக அம்மக்களை, சாதிப்படி நிலைச் சமூகத்தில் அமிழ்த்தி, இந்துப் பார்ப்பன சாதியமைப்பிற்குள்ளாகவே அவர்களுக்கு நியாயம் வழங்க துடித்தார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் என்று சொல்லித்தான், போராடிப் பெற்ற இரட்டை வாக்குரிமையை வஞ்சகமாகப் பறித்தார் காந்தி. அக்கொடுஞ்செயல் நடந்து முடிந்து முக்கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனாலும் தங்களின் அரசியல் உரிமைகளுக்காக தாழ்த்தப்பட்ட மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதே தளத்தில்தான் பாரதியும் நிற்கிறார். ஆனால், அவர் பறித்தது எதுவுமில்லை. ஆனால் அவரது கருத்துகளை, வாழ்வியலை புதுப்பித்துக் கொண்டிருப்பதன் மூலமும், போற்றிக் கொண்டிருப்பதன் மூலமும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான பார்ப்பன சாதியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதுதான் இங்கே வேதனையுடன் குறிப்பிடவேண்டியதாக இருக்கிறது.
வேத இதிகாசப்பற்று, இனவெறி, சமஸ்கிருத மோகம், சனாதனப் பற்று, மூடநம்பிக்கை, ஆணவம், சூழ்ச்சி, தந்திரம், பாரத சிந்தனை, பவுத்த எதிர்ப்பு போன்ற அனைத்துப் பார்ப்பனத் தன்மையோடும் வாழ்ந்து முடித்த பாரதியை தேசியக் கவியாக்கி வைத்திருப்பதன் பொருள் என்ன? முற்போக்குவாதியாகவும் பொதுவுடைமையாளராகவும், பெண்ணிய சிந்தனையாளராகவும் சித்திரித்துக் கொண்டிருப்பவர்களின் நோக்கம் என்ன? கவிதை பாடியதற்காகவும் பூணூல் அணிவித்ததற்காகவும், இன்னும் சில உளறல்களுக்காகவும் பாரதிக்கு சாதி எதிர்ப்பாளர் என்ற பட்டம் சூட்டி மகிழ்வதன் பின்னணி என்ன? என்பதைப் பற்றியே நாம் பெரிதும் கவலையுறுகிறோம்.
காலத்திற்குப் பொருந்தாத பயன்பாடற்ற பாரதியின் தத்துவவியல் கோட்பாடுகளும் கண்ணோட்டமும் இன்றைய இந்து மதவெறி அடிப்படைவாதிகளுக்கு மட்டுமே பயன்தரத்தக்கன. பாரதியின் கவிதைகள் காலச்சாற்றை இழந்து நிற்கின்றன. அத்தகையவற்றை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அதனடியில் மறைந்து நிற்கும் நவீன இந்துத்துவ பயங்கரவாதத்தின் தளபதிகள், இந்திய போலிப் பொதுவுடைமைவாதிகள், தமிழ்மரபுக் காவலர்கள் தான் இன்றைய காலச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்கள் முன் நிற்கும் பாரதிகளாகத் தெரிகிறார்கள். பாரதியின் விசம் தடவிய வார்த்தைகளைப் போலவே, இவர்களது வார்த்தைகளும் வெளிப்படுகின்றன.
பாரதி மீதான விமர்சனங்களுக்கு இவர்கள் தரும் பதிலுரைகளில் வெளிப்படும் ‘தலித் எதிர்ப் புணர்வும்’, ‘பார்ப்பனப் பற்றும்’ அவர்களை யார் என அடையாளப்படுத்துகிறது. அவர்களின் இனமரபுக் குறியீடாய் பாரதி வீற்றிருப்பது புரிகிறது. பொதுவுடைமைக் கருத்தியல்களையும், பெண்விடுதலை முழக்கங்களையும், சாதி எதிர்ப்புக் கருத்துகளையும் தனது படைப்புகளில் கொண்டு வந்ததற்காக பாரதிக்குப் புகழ் மகுடம் சூட்டப்படுகிறது என்றால், பாரதியைவிட மிக அழுத்தமாக, துல்லியமாக, அர்ப்பணிப்புடன் தனது கவிதைகளில் பதிவு செய்த பாரதிதாசனுக்கல்லவா இந்த போலி முற்போக்குவாதிகள் மகுடம் சூட்டியிருக்க வேண்டும். அவர்கள் நோக்கம் அதுவல்ல!
நீண்ட நெடுங்காலமாக கொடிகட்டிப் பறக்கும் பார்ப்பன மேலாதிக்கத்தின் விளைவாகத்தான் பாரதி இன்று வரையிலும் பீடத்தில் அமர வைக்கப்பட்டிருக்கிறார். பாரதிக்கு வழங்கப்பட்டிருப்பது இலக்கிய மதிப்போ, தத்துவ மதிப்போ, அரசியல் மதிப்போ அல்ல. தங்களை சமத்துவச் சிந்தனையாளர்களாக, சமூக உணர்வாளர்களாக காட்டிக் கொள்ள எத்தனித்தவர்களால் வழங்கப்பட்ட போலி மிகை மதிப்பு! பார்ப்பன அறிவுஜீவிகளாலும், இடைநிலைச் சாதிய தமிழாளர்களாலும், போலிப் பொதுவுடைமைவாதிகளாலும் பாரதிக்கு கட்டியெழுப்பப்பட்ட மகாகவிப் பீடம், ஒடுக்கப்பட்ட மக்கள், சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களை பெரும் வீச்சாகக் கிளம்பி நிறைக்கிறபோது தகர்ந்து சரியும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
பயன்பட்ட நூல்கள்:
1. பாரதியும் ஷெல்லியும், ரகுநாதன், நியு செஞ்சுரி புக் ஹஷஸ், 1979.
2. சுப்பிரமணிய பாரதி கட்டுரைகள், ஸ்ரீ. சி. சுப்பிரமணிய பாரதி, பாரதி பிரசுராலயம், 1946.
3. பாரதியார் கவிதைகள், சி. சுப்பிரமணிய பாரதியார், பாரதி பதிப்பகம், 1960.
4. தமிழ் கவிதைகளில் பாரதியின் தாக்கம், க.த.திருநாவுக்கரசு, தமிழ்க் கடல் பதிப்பகம், 1984
5. The works of P.B. Shelley. The wordsworth Poetey library
6. திராவிட இயக்கப் பார்வையில் பாதியார், வாலாசா வல்லபன், தமிழ்க் குடியரசு பதிப்பகம், 2005
7. பாரதிய ஜனதா பார்ட்டி: விமர்சனமும் விளக்கமும், தொகுப்பு கலகம், 2004
8. பாரதி வளர்த்தது பார்ப்பனியமே: வெற்றிமணி பெரியார் நெறியன் பதிப்பகம், 1987
9. பாரதியின் தத்துவ இயல் கோட்பாடுகள், முனைவர், து.மூர்த்தி, புலமை வெளியீடு, 1994
------------நன்றி:"விழி" டிசம்பர்-2007 இதழில் திரு.யாக்கன் அவர்கள் எழுதிய கட்டுரை
இந்தியத்தின் தேசியக் கவி பொதுவுடமை புரட்சிக்கவி என்றெல்லாம் புகழப்படும் சுப்ரமணிய பாரதியார் கூட மாமனிதர் தான். பாரதி மாமனிதராக உருவாக்கப்பட்டதில் நாம் வருத்தம் கொள்ளவில்லை. சாதிக்கொரு மாமனிதனைக் கொண்டிருக்கும் நாடல்லவா இது! மாமனித பீடத்தைக் கட்டிக் கொடுத்து அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும், பாரதி பற்றாளர்களிடம் நாம் சொல்ல விரும்புகிறோம்; பாரதியின் ‘மாமனிதர்’ பட்டம், அய்யத்திற்குரியது!
ஒரு முழுமையான ‘புரட்சிவாதி’ என்று கார்ல் மார்க்ஸால் புகழப்பட்ட ஷெல்லியின் ‘தாசன்’ என்று தன்னை அடையாளப்படுத்துவதில் பெருமை அடைந்திருக்கிறார் பாரதி. பாரதி, முதன் முதலாக ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திவந்த “சக்ரவர்த்தினி’’ என்ற மாதப் பத்திரிகையின் 1908ஆம் ஆண்டு ஜூலை இதழில் துளசி பாய் சரித்திரத்தின் இறுதிப்பகுதி வெளியிடப்பட்டுள்ளது. அதனடியில் ‘ஷெல்லி தாசன்’ என்று கையப்பமிடப்பட்டுள்ளது. அது பாரதி இட்ட கையொப்பமாகும். இளமைக்காலத்தில் எட்டயபுரத்தில் வாழ்ந்த நாட்களிலேயே ‘ஷெல்லியன் சங்கம்’ என்ற சங்கத்தை (Shelleyan Guild) பாரதி ஏற்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் ஷெல்லி மீது அளவற்ற பற்றுதல் கொண்டவராக பாரதி இருந்திருப்பதை அறியமுடிகிறது.
இயல்பான மக்கள் விடுதலையை, சமூக சமத்துவத்தைத் தனது கவிதைகளின் ஆதார சுருதியாகக் கொண்டவர் ஷெல்லி. தனது 18ஆவது வயதில் ‘உரிமைகளின் பிரகடனம்’ என்ற துண்டுப் பிரசுரத்தை எழுதி வெளியிட்டவர்.
ஷெல்லி இறந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் துண்டு பிரசுரத்தை அடிப்படையாகக் கொண்டு கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்தது. சோசிலிச கருத்துருவாக்கங்களின் முன்னோடியாக விளங்கிய ஷெல்லியின் ‘தாசராக’ இருக்க எண்ணிய பாரதியின் ஆழ்மனம், சனாதன இந்து தர்மத்தின் மீது வெறிகொண்ட பற்றுடையதாக இருந்தது. சனாதனத்தை வலியுறுத்தும் இந்து வேத இதிகாசங்களின் மீது ஆழ்ந்த பற்றுடைய ஒரு மனிதர், அதற்கு நேரெதிரான கொள்கைகளையுடையவருக்கு ‘தாசராக’ இருப்பது சாத்தியமற்றது.
ஷெல்லியிடமிருந்து பாரதி கற்றுக் கொண்ட ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்,’ ஆகிய வார்த்தைகளுக்கு எதிரான சனாதன இந்து மத கருத்தை தீவிரமாக வலியுறுத்தி கொண்டிருந்தார் பாரதி. அதன் பின்னும் ஏன் ஷெல்லியின் மீது தன் மரணகாலம் வரை பற்றுடையவராக பாரதி இருந்தார் என்பதற்கு வேறு காரணமிருந்தது.
ஷெல்லியின் கவிதை வளமும், உவமை வேகமும், நவீன மொழியாடல்களும் பாரதிக்குத் தேவைப்பட்டன. பாரதியின் கவிதைகளில் மேலோங்கி நிற்கும் ‘சுட்டுணர்ச்சிக் குறியீடுகள்’ ஷெல்லியிடமிருந்து எடுத்தாளப்பட்டவை. அதற்காக, பாரதி எந்த இடத்திலும் ஷெல்லிக்கு நன்றி பாராட்டவில்லை. ‘பாரதிக்காக தமிழ்மொழி காத்துக்கிடந்தது’ என்று எழுதத் துணியும் தமிழ் மரபுக் காவலர்கள், பாரதியின் கவிதாளுமை ஷெல்லியிடமிருந்து திருடப்பட்டவை என்பதை ஏற்றுக் கொள்ள முன்வருவார்களா?
சனாதன தர்மத்தின் மீது ஆழ்ந்த பற்றுடைய ஒருவர் தன்னை முற்போக்குவாதியாக காட்டிக் கொள்ள முயற்சித்தால் அது அவருக்குச் சிரமமான வேலையாக இருக்கும். ஆனால், பாரதிக்கு அது சுலபமான வேலையாக இருந்தது. ஷெல்லியிடமிருந்து கற்றுக்கொண்ட பொதுவுடைமை முற்போக்குத்தனத்திற்கும், தன் பாரம்பரிய பார்ப்பன சனாதனத்திற்கும் இடையே தாவித் தாவித் திரியும் பாரதியின் ‘கவிதாளுமை’ உண்மையில் அவருடையதுதான்.
அவரது முற்போக்கான சிந்தனைகள்கூட, அவர் உயிரினும் மேலாக நேசித்த நால்வருண சமூகத்தை காப்பாற்றவே முயற்சித்தன. இதைத் தான் புரட்சியாளர் அம்பேத்கார், ‘அறிவு விபச்சாரம்’ என்றார். அவர் பாரதியை நோக்கி இந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை, இந்தியா வின் ‘மகாத்மா’வைப் பார்த்து இந்த வார்த்தைகளைச் சொன்னார்.
1906ஆம் ஆண்டின் முற்பகுதியில் பாரதி தொடங்கிய ‘இந்தியா’ பத்திரிகையின் முகப்பில், ‘ஸ்வதந்திரம் ஸமத்துவம் ஸகோதரத்துவம்’ என்ற முழக்கத்தை பதித்தார். அப்போதே. அவருக்கு மிக உயர்ந்த மனித மதிப்பீடுகளின்பால் அக்கறையும், அதையே நோக்கமாகவும் கொள்ளும் உறுதியும் ஏற்பட்டதாக நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், 1917 ஆம் ஆண்டிலே நடந்த ரஷியப் புரட்சி பற்றி, ‘‘கொலையாலும், கொள்ளையாலும், அன்பையும், ஸமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத்தாமே உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்’’ என்று எழுதுகிறார். பதிலாக, சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அடைய பாரதி சொல்லித்தரும் பாடம் அபத்தமானது என்பதைவிட ஆபத்தான நால்வருண வழி என்று சொல்ல வேண்டும்.
“மிராசுதாரர்கள் அவர்களாகவே முன்வந்து ஏழைகளிடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும்.’’, “தொழில் நிர்வாக சங்கம் அமைக்க வேண்டும்’’, “இன்னின்ன தொழிலிற்கு இன்னின்னார் தகுதி உடையவர் என்று தீர்மானம் செய்ய வேண்டும்’’, “கிராமத்தில் உள்ள அத்தனை பேருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்துவிடுகிறோம்’’, பிள்ளை பிள்ளை தலைமுறைக்கு இந்த ஒப்பந்தம் தவற மாட்டோம். இந்த படிக்கு இந்த ஆலயத்தில் தெய்வ சந்நிதியில் எங்கள் குழந்தைகள் மேல் ஆணையிட்டு பிரதிக்ஞை செய்துகொடுக்கிறோம்’’, “செப்புப் பட்டயம் எழுதி இந்தக் கோயிலில் அடித்து வைக்கிறோம்’’ இதில் கண்ட கொள்கைகளின்படி கிராம வாழ்க்கை நடத்தப்படுமாயின் வறுமையாவது, அதைக் காட்டிலும் கொடியதாகிய வறுமையச்சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும் பரஸ்பர நட்பும் பரிவுணர்வும் உண்டாகும். அதனை உலகத்தாரெல்லாருங்கைக் கொண்டு நன்மையடைவார்கள்’’ என்று எழுதுகிறார்.
இதில் வெளிப்படுவது அவரது அறியாமை என்று நீங்கள் சொல்லுவீர்களா? சுதந்திரமும் சமத்துவமும் சகோதரத்துவமும், பண்ணையார்கள் பட்டயம் எழுதி கோயிலில் சத்தியம் செய்வதன் மூலம் கிடைத்துவிடுமா? இதை படிப்பறிவற்ற பாமரனின் தற்குறித்தனம் என்பீர்களா? அல்லது மகா கவியாகவும், பத்திரிகையாளனாகவும் பொதுவுடைமை பெண்ணிய புரட்சிக்கவியாகவும், மாபெரும் தேச விடுதலைப் போராட்ட தியாகியாகவும் வாழ்ந்த ஒரு மனிதரின் வாக்குமூலம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது இரண்டுமல்ல என்று நான் துணிந்து சொல்கிறேன். மாறாக, சாதிய ஒடுக்கு முறையும், பண்ணை நிலவுடைமைச் சுரண்டலும் தங்கு தடையற்று நிகழ்ந்துகொண்டிருந்த கிராமங்களில் சமூக மேலாண்மை செய்து கொண்டிருந்த ஆச்சாரம் மிகுந்த ஒரு பார்ப்பனரின் குரல் அது. அக்குரலை புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்லது மறுப்பவர்கள் இந்துப் பார்ப்பனியத்தின் சுமை தாங்கிகள்தானே தவிர வேறில்லை.
சுதந்திரத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னூறாண்டுகளுக்கும் மேலாகக் போராடி வருகிறார்கள். மனித உரிமைகள் மறுக்கப்பட்டுவரும் ஒரு நாட்டில் வாழும் அம்மக்கள் எல்லாராலும் ஏமாற்றப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதற்கு யார் பொறுப்பு என்று நீங்கள் கேட்கக் கூடும். சாதி இழிவில் அம்மக்களை அமிழ்த்தி வைத்திருக்கும் சக்தி எது என்ற வினாவுக்குப் பதில் இல்லாமல் இல்லை. “சாதிக் கருத்தியலை மக்கள் சிந்தனையிலே பதித்து வைத்திருக்கிற இந்துமதமே அல்லது இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற வேத சாஸ்திரங்களே ஒடுக்கப்பட்ட மக்களின் பயங்கர எதிரி’’ என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். “ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் வேத சாஸ்திரங்களின் பிடியிலிருந்து விடுவியுங்கள்; மக்களின் மனங்களில் சாஸ்திரங்கள் உருவாக்கி வைத்திருக்கின்ற நாசகரமான கருத்தமைவுகளை நீக்கித் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று வழிகாட்டுகிறார் அம்பேத்கர்.
வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி இந்து வேதங்களையும் இதிகாசங்களையும் நால்வருண முறையையும் போற்றிப் புகழும் ஒரு பார்ப்பனக் கவிஞனிடமிருந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்ன கிடைக்கும்? என்ன கிடைத்தது என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்!
“பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நமது முதற் கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்துப் பட்லர்களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களில் உள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றி பேச்சு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக்கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச் சொல்லு. அவர்களோடு ஸமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன்; அவர்களையெல்லாம் உடனே ஒன்றுசேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள்; மடாதிபதிகளே! நாட்டுக்கோட்டைச் செட்டிகளே! இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள்.’’
பூதாகரமான எதிரியாக நம் கண் முன்னே விரிந்து நிற்கும் பாரதி அதோடு நிற்கவில்லை.
“இனிமேல் பறையன் கை நீட்டாமல் இருப்பதற்கு வழிவகை தேடிக்கொள்ளுங்கள். சென்னைப் பட்டணத்திலே நாலு பட்லர்கள் ஹிந்து மதத்தை உல்லங்கனம் செய்தபோதிலும் நாட்டிலுள்ள பறையர்கள் எல்லாரும் உண்மையான ஹிந்துக்களே என்பதை மறந்துவிடக்கூடாது’’ என்ற தனது முன்னோர்களின் சதிச்செயலை வழி மொழிகிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களை இந்து சாதியக் கட்டமைப்பில் நிலை நிறுத்திவைத்து, அதன் மூலம் தனது சமூக மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிக்கும் இந்துப் பார்ப்பன சாதிப் பயங்கரத்தின் நிழலாய் பரவும் பாரதி,
“சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’’
என்று குழந்தைத் தாலாட்டுப் பாடுகிறார். அதையும் நமது முற்போக்கு வாதிகள் பாரதியின் ‘சாதி எதிர்ப்பு’ என்ற கணக்கில் கொண்டு வருவதை எப்படி புரிந்து கொள்வது! இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டும்!
நால் வருண விதிமுறைகளைச் சட்டங்களாக்கிய மநுவின் வாரிசாகவே வந்து நின்று, வகை பிரிக்கிறார் பாரதி. “போலீஸ் வேவுத் தொழில் செய்பவன் பிராமணன் ஆகமாட்டான். குமாஸ்தா வேலை செய்பவன் ஷத்திரியன் ஆகமாட்டான். சோம்பேறியாக முன்னோர் வைத்து விட்டுப் போன பொருளையழித்துத் தின்பவன் வைசியன் ஆகமாட்டான். கைத்தொழில்களையெல்லாம் இறக்கக் கொடுத்து விட்டு சோற்றுக்குக் கஷ்டமடைவோர் சூத்திரர் ஆகமாட்டார். இவர்களெல்லாம் மேம்பாடுடைய சூரிய வர்ணங்கள் நான்கிற்கும் புறம்பாகிய நீச கூட்டத்தார். நமது தேசம் முன்போலக் கீர்த்திக்கு வர வேண்டுமென்றால், உண்மையான வகுப்புகள் ஏற்பட வேண்டும்.’’ இவ்வாறு நால்வருண படிநிலைச் சமூகத்தைக் கொண்டுவரத் துடிக்கும் பாரதிக்கும், இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாதிகளுக்கும் வேறுபாடு இருக்கிறதா? இந்து அடிப்படைவாதத்தை நூறாண்டுகளுக்கு முன்பு மிகத் தீவிரமாக வலியுறுத்திப் பேசிய பாரதி, ஒரு மதச்சார்பற்ற நாட்டின் தேசிய கவியாக கருதப்படுவதை வெட்கக் கேடு என்று சொன்னால் அது தவறாகிவிடாது.
கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்ததினால், மிகப்பெரும் புரட்சி நடத்திவிட்டதாக பாரதியும் கருதினார்; அவரது ஆதரவாளர்களும் கருதுகிறார்கள். அத்தகையப் பூணூல் வெட்டப்படும் ஆட்டிற்குப் போட்ட மாலையாகத்தானிருக்குமே தவிர, கனகலிங்கம் பார்ப்பனராகி விட்டாரா? சாதி இழிவிலிருந்து மீண்டுவிட்டுரா? பாரதியால் அதை உறுதிசெய்ய முடிந்ததா? பாரதி வழியில், அவரது பற்றாளர்கள் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் அணிவிக்க ஏற்பாடு செய்திருக்கலாமே! கனகலிங்கத்திற்குப் போடப்பட்ட பூணூல், பெரும் ஆச்சார மாற்றமாக கருதப்படுகிறது.
வேத இதிகாசங்களில் ஆழ்ந்த பற்றுடைய பாரதி, குரூரமும் அழுக்கும் நிறைந்த பார்ப்பன பழமைவாதிகளை வெறுத்தார். இந்திய தேசத்தின் கீர்த்தி மீண்டும் வருவதற்கு நால்வருண சமூக அமைப்பு மீண்டும் ஒழுங்கு செய்யப்படவேண்டும்; அதற்கு தீனிக்காக அலையும் வயிறு தள்ளிய பழமை ஆச்சார சடங்குகளை உயர்வாகக் கருதிய பார்ப்பனர்களை எதிர்க்கத் துணிந்தார். அதன் வெளிப்பாடாக, பல சூழ்நிலைகளில் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமானார். மீண்டும் தெளிந்தார். கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்தது இந்தப் போராட்டங்களினூடாக நிகழ்ந்த கூத்து. அவ்வளவே! அதைப் புரட்சி எனச் சொல்லுவோரின் முகம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பாரதியின் தேசாபிமானமும், இந்து மதப்பற்றும், பவுத்த எதிர்ப்புக் கருத்து நிலையும், மீண்டும் மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் மிகப்பெரும் எதிரியாக கொண்டு வந்து நிறுத்துகின்றன. அவற்றைப் பற்றிய விவாதங்களை, நேரங்கருதி விலக்குகிறேன்.
பாரதி மிகத் தீவிரமாக இயங்கிய காலத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் இயக்கங்கள் ஏராளமாகச் செயல்பட்டன. பண்டிதர் அயோத்திதாசர், சென்னைப் பட்டிணத்திலே யாவரும் அறியும்படி இயக்கம் நடத்தியவர். 1907 லே சென்னை ராயப்பேட்டையில் சாக்கிய பவுத்த சங்கத்தை நிறுவி, ஜி. அப்பாத்துரையார், பெரியசாமிப்புலவர், குருசாமி, முருகேசம் போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டுள்ளார்கள். அவர்களோடு எவ்வித தொடர்பும் இல்லாமல், இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு எதிராக எழுதி வந்தவர் பாரதி.
ரெட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றோர் இந்திய அளவில் பலரும் அறிந்திருக்கக்கூடிய வலிமையான தலைவர்களாகச் செயலாற்றினர். அவர்களோடும் பாரதிக்குத் தொடர்பு இருந்ததாக ஆதாரங்கள் இல்லை. தென்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களின் மறுமலர்ச்சிக்குத் தீவிரமாகச் செயலாற்றிய பெருமாள் பீட்டர் போன்றவர்களுடன் பாரதிக்கு அறிமுகம் கிடைத்ததற்கான ஆதாரங்களும் இல்லை. எனவே பாரதியின் வாழ்வும் எழுத்தும், அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு ஆக்கப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக அம்மக்களை, சாதிப்படி நிலைச் சமூகத்தில் அமிழ்த்தி, இந்துப் பார்ப்பன சாதியமைப்பிற்குள்ளாகவே அவர்களுக்கு நியாயம் வழங்க துடித்தார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் என்று சொல்லித்தான், போராடிப் பெற்ற இரட்டை வாக்குரிமையை வஞ்சகமாகப் பறித்தார் காந்தி. அக்கொடுஞ்செயல் நடந்து முடிந்து முக்கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனாலும் தங்களின் அரசியல் உரிமைகளுக்காக தாழ்த்தப்பட்ட மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதே தளத்தில்தான் பாரதியும் நிற்கிறார். ஆனால், அவர் பறித்தது எதுவுமில்லை. ஆனால் அவரது கருத்துகளை, வாழ்வியலை புதுப்பித்துக் கொண்டிருப்பதன் மூலமும், போற்றிக் கொண்டிருப்பதன் மூலமும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான பார்ப்பன சாதியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதுதான் இங்கே வேதனையுடன் குறிப்பிடவேண்டியதாக இருக்கிறது.
வேத இதிகாசப்பற்று, இனவெறி, சமஸ்கிருத மோகம், சனாதனப் பற்று, மூடநம்பிக்கை, ஆணவம், சூழ்ச்சி, தந்திரம், பாரத சிந்தனை, பவுத்த எதிர்ப்பு போன்ற அனைத்துப் பார்ப்பனத் தன்மையோடும் வாழ்ந்து முடித்த பாரதியை தேசியக் கவியாக்கி வைத்திருப்பதன் பொருள் என்ன? முற்போக்குவாதியாகவும் பொதுவுடைமையாளராகவும், பெண்ணிய சிந்தனையாளராகவும் சித்திரித்துக் கொண்டிருப்பவர்களின் நோக்கம் என்ன? கவிதை பாடியதற்காகவும் பூணூல் அணிவித்ததற்காகவும், இன்னும் சில உளறல்களுக்காகவும் பாரதிக்கு சாதி எதிர்ப்பாளர் என்ற பட்டம் சூட்டி மகிழ்வதன் பின்னணி என்ன? என்பதைப் பற்றியே நாம் பெரிதும் கவலையுறுகிறோம்.
காலத்திற்குப் பொருந்தாத பயன்பாடற்ற பாரதியின் தத்துவவியல் கோட்பாடுகளும் கண்ணோட்டமும் இன்றைய இந்து மதவெறி அடிப்படைவாதிகளுக்கு மட்டுமே பயன்தரத்தக்கன. பாரதியின் கவிதைகள் காலச்சாற்றை இழந்து நிற்கின்றன. அத்தகையவற்றை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அதனடியில் மறைந்து நிற்கும் நவீன இந்துத்துவ பயங்கரவாதத்தின் தளபதிகள், இந்திய போலிப் பொதுவுடைமைவாதிகள், தமிழ்மரபுக் காவலர்கள் தான் இன்றைய காலச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்கள் முன் நிற்கும் பாரதிகளாகத் தெரிகிறார்கள். பாரதியின் விசம் தடவிய வார்த்தைகளைப் போலவே, இவர்களது வார்த்தைகளும் வெளிப்படுகின்றன.
பாரதி மீதான விமர்சனங்களுக்கு இவர்கள் தரும் பதிலுரைகளில் வெளிப்படும் ‘தலித் எதிர்ப் புணர்வும்’, ‘பார்ப்பனப் பற்றும்’ அவர்களை யார் என அடையாளப்படுத்துகிறது. அவர்களின் இனமரபுக் குறியீடாய் பாரதி வீற்றிருப்பது புரிகிறது. பொதுவுடைமைக் கருத்தியல்களையும், பெண்விடுதலை முழக்கங்களையும், சாதி எதிர்ப்புக் கருத்துகளையும் தனது படைப்புகளில் கொண்டு வந்ததற்காக பாரதிக்குப் புகழ் மகுடம் சூட்டப்படுகிறது என்றால், பாரதியைவிட மிக அழுத்தமாக, துல்லியமாக, அர்ப்பணிப்புடன் தனது கவிதைகளில் பதிவு செய்த பாரதிதாசனுக்கல்லவா இந்த போலி முற்போக்குவாதிகள் மகுடம் சூட்டியிருக்க வேண்டும். அவர்கள் நோக்கம் அதுவல்ல!
நீண்ட நெடுங்காலமாக கொடிகட்டிப் பறக்கும் பார்ப்பன மேலாதிக்கத்தின் விளைவாகத்தான் பாரதி இன்று வரையிலும் பீடத்தில் அமர வைக்கப்பட்டிருக்கிறார். பாரதிக்கு வழங்கப்பட்டிருப்பது இலக்கிய மதிப்போ, தத்துவ மதிப்போ, அரசியல் மதிப்போ அல்ல. தங்களை சமத்துவச் சிந்தனையாளர்களாக, சமூக உணர்வாளர்களாக காட்டிக் கொள்ள எத்தனித்தவர்களால் வழங்கப்பட்ட போலி மிகை மதிப்பு! பார்ப்பன அறிவுஜீவிகளாலும், இடைநிலைச் சாதிய தமிழாளர்களாலும், போலிப் பொதுவுடைமைவாதிகளாலும் பாரதிக்கு கட்டியெழுப்பப்பட்ட மகாகவிப் பீடம், ஒடுக்கப்பட்ட மக்கள், சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களை பெரும் வீச்சாகக் கிளம்பி நிறைக்கிறபோது தகர்ந்து சரியும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
பயன்பட்ட நூல்கள்:
1. பாரதியும் ஷெல்லியும், ரகுநாதன், நியு செஞ்சுரி புக் ஹஷஸ், 1979.
2. சுப்பிரமணிய பாரதி கட்டுரைகள், ஸ்ரீ. சி. சுப்பிரமணிய பாரதி, பாரதி பிரசுராலயம், 1946.
3. பாரதியார் கவிதைகள், சி. சுப்பிரமணிய பாரதியார், பாரதி பதிப்பகம், 1960.
4. தமிழ் கவிதைகளில் பாரதியின் தாக்கம், க.த.திருநாவுக்கரசு, தமிழ்க் கடல் பதிப்பகம், 1984
5. The works of P.B. Shelley. The wordsworth Poetey library
6. திராவிட இயக்கப் பார்வையில் பாதியார், வாலாசா வல்லபன், தமிழ்க் குடியரசு பதிப்பகம், 2005
7. பாரதிய ஜனதா பார்ட்டி: விமர்சனமும் விளக்கமும், தொகுப்பு கலகம், 2004
8. பாரதி வளர்த்தது பார்ப்பனியமே: வெற்றிமணி பெரியார் நெறியன் பதிப்பகம், 1987
9. பாரதியின் தத்துவ இயல் கோட்பாடுகள், முனைவர், து.மூர்த்தி, புலமை வெளியீடு, 1994
------------நன்றி:"விழி" டிசம்பர்-2007 இதழில் திரு.யாக்கன் அவர்கள் எழுதிய கட்டுரை
Monday, February 04, 2008
பெரியாரா? பாரதியாரா?
கேள்வி:பெண்ணடிமைத்தனம் தீர களத்தில் இறங்கிய பெரியாரைப் பாராட்டாமல் பாடல் எழுதிய பாரதியாரைத் தானே வெகுமக்கள் பாராட்டுகின்றனர்?
தி.க.தலைவர் கி.வீரமணி அவர்களின் பதில்:
நம்மை நீண்ட நாளாக உறுத்தும் பிரச்சனை இது.பெண்ணுரிமைக்கே ஏதோ சுப்ரமணிய பாரதியார் தான்"அத்தாரிட்டி" மாதிரி, "பாரதி கண்ட புதுமைப்பெண் " என்றெல்லாம் முற்போக்குச் சிந்தனை உள்ளவர்கள் கூட"ஒரு வழிப்பார்வையாளராக" இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.
பெரியார் கண்ட "புரட்சிப்பெண்ணுக்கும்", பாரதி கண்ட "புதுமைப்பெண்ணுக்கும்" மிகுந்த வேறுபாடு உண்டு.எங்கும் மேற் சொன்ன சொற்றடர்கள் விவாதப் பொருளாய் பரவிவிடல் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும்.இன்னும் சில "அறிஞர்கள்" பெரியாருக்கு முன்பே பாரதி பெண்ணுரிமை பற்றி பேசினார் என்று காலக்கணக்கினை மட்டும் காட்டி மறைமுகமாக பெரியாரைப் பின்னுக்கு தள்ளிவிட முயலுகின்றனர். காலமா முக்கியம்?கனபரிமாணம்,பெண்ணுரிமை பற்றிய பேச்சு மட்டுமா? கொள்கை,திட்டம்,இயக்கம்-இந்த அடிப்படை தேர்வில் "பாரதி" மதிப்பெண் பெற முடியாதே!
-------"விடுதலை"-ஞாயிறுமலர்- 23-4-2000
----------------- நூல்: "அறிந்து கொள்வீர் புரிந்து கொள்வீர்"
நன்றி:www.thamizhoviya.blogspot.com
தி.க.தலைவர் கி.வீரமணி அவர்களின் பதில்:
நம்மை நீண்ட நாளாக உறுத்தும் பிரச்சனை இது.பெண்ணுரிமைக்கே ஏதோ சுப்ரமணிய பாரதியார் தான்"அத்தாரிட்டி" மாதிரி, "பாரதி கண்ட புதுமைப்பெண் " என்றெல்லாம் முற்போக்குச் சிந்தனை உள்ளவர்கள் கூட"ஒரு வழிப்பார்வையாளராக" இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.
பெரியார் கண்ட "புரட்சிப்பெண்ணுக்கும்", பாரதி கண்ட "புதுமைப்பெண்ணுக்கும்" மிகுந்த வேறுபாடு உண்டு.எங்கும் மேற் சொன்ன சொற்றடர்கள் விவாதப் பொருளாய் பரவிவிடல் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும்.இன்னும் சில "அறிஞர்கள்" பெரியாருக்கு முன்பே பாரதி பெண்ணுரிமை பற்றி பேசினார் என்று காலக்கணக்கினை மட்டும் காட்டி மறைமுகமாக பெரியாரைப் பின்னுக்கு தள்ளிவிட முயலுகின்றனர். காலமா முக்கியம்?கனபரிமாணம்,பெண்ணுரிமை பற்றிய பேச்சு மட்டுமா? கொள்கை,திட்டம்,இயக்கம்-இந்த அடிப்படை தேர்வில் "பாரதி" மதிப்பெண் பெற முடியாதே!
-------"விடுதலை"-ஞாயிறுமலர்- 23-4-2000
----------------- நூல்: "அறிந்து கொள்வீர் புரிந்து கொள்வீர்"
நன்றி:www.thamizhoviya.blogspot.com
இழிவை மாற்றிக் கொள்வதற்கு வழி
ஆதிதிராவிடர்கள் என்கிற பெயரால் எனக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் அளித்துக் கொடுத்திருப்பதற்கு, இரண்டொரு வார்த்தை சொல்லுகிறேன். நீங்கள் ஆதிதிராவிடர்கள் என்ற ஒரு பெயர் பெற்று இருப்பது, உங்கள் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட இழிவை மாற்றிக் கொள்வதற்கு அனுகூலமானதென்று நினைத்திருக்கிறீர்கள். உங்களைக் கொஞ்ச காலத்திற்கு முன்பு பறையர்கள், சக்கிலியர்கள், பள்ளர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், அவ்வார்த்தைகளுக்கு என்ன பொருளும், தத்துவமும் இருந்தனவோ, அதே பொருள்தான் ‘ஆதிதிராவிடர்' என்ற வார்த்தையிலும் இருக்கிறதேயல்லாமல், எந்த விதத்திலாவது அது மறைவு பட்டதாகக் காணவில்லை.
அதுபோலவே, பறையர் என்கிற பெயர் மாறி, ஆதிதிராவிடர் என்கிற பெயர் வந்ததனால், ‘பறையருக்குண்டான' இழிவுத் தத்துவம் ஒரு சிறிதும் மாறாமல், ஆதிதிராவிடர் என்றால், பறையன் - இழிந்த மகன் என்ற அர்த்தத்தைக் கொடுப்பதோடு, தேசத்தின் யோக்கியதையையும் இழிவு படுத்தத்தக்கதான பொருளும் அதில் அடங்கி இருக்கிறது. இதைவிடப் பழைய பெயரே மேலானதென்பது எனது அபிப்பிராயம். சமூகத்திற்கோ, சங்கத்திற்கோ ஒரு பெயர் வைக்க வேண்டுமானால், எந்தக் குற்றத்தை நீக்குவதற்காகவோ அல்லது எவ்வித இழிவை விலக்குவதற்காகவோ, எம்மாதிரி முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்பதற்காக நாம் கருதி இருக்கிறோமோ, அந்தக் கருத்தைக் கொண்டதான பெயரை ஒரு பிரச்சாரத்திற்கோ, இயக்கத்திற்கோ இடுவதுதான் அறிவுடைமையாகும்.
எத்தனையோ சமூகத்தார், தங்களை மற்றவர்கள் இழிவுபடுத்துவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாமென்று கருதி, எவ்வளவோ பெயர்களை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எந்த இழிவை மறைக்க நினைத்தார்களோ, அது ஒரு சிறிதும் மறைக்கப்படாமலும், அந்தப் பெயர் ஏற்படுவதற்கு முன் எப்படி இருந்தார்களோ - அது போலவேதான் இருந்து வருகின்றார்களே தவிர, புது மாதிரியான மாறுதல் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை.
உதாரணமாக, ஆசாரிமார்கள், தேவாங்க சமூகத்தார்கள் முதலியவர்கள் தங்களுக்கு விஸ்வ பிராமணர்கள், தேவாங்கப் பிராமணர்கள் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டதாலும், நாயக்கர்மார்கள், படையாச்சிமார்கள், நாடார்மார்கள் தங்களுக்குப் பல்ஜிய சத்திரியர்கள், வன்னிய சத்திரியர்கள், அக்னி குலச் சத்திரியர்கள் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டாலும், நாட்டுக்கோட்டை நகரத்தார், நகரத்துச் செட்டியார், கோமுட்டிச் செட்டியார், வேளாளர் முதலியோர் தங்களுக்கு முறையே தன வைசியர், நகரத்து வைசியர், ஆரிய வைசியர், வாணிய வைசியர், பூவைசியர் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டாலும், புராணங்கள் மூலமாக இதற்கு ஆதாரம் கண்டுபிடித்தாலும் மற்றும் எத்தனையோ வகுப்பார் எத்தனையோ மாற்றுப் பெயர்களை வைத்துக் கொண்டு இருந்தாலும், இந்தப் பெயர்களல்லாத ‘சூத்திரர்கள்' என்கிற பெயருக்குண்டான பொருளும், தத்துவமும், உண்மையும் கிரகிக்கப்படுகின்றனவே அல்லாமல், சிறிதாவது மாற்றம் ஏற்படாததோடு - எந்தக் கொள்கையை உத்தேசித்து இந்தப் பெயரை வைத்துக் கொள்கிறோமோ, அந்தக் கொள்கைகளின் மூலமாகவே நாம் நம்மைவிட மற்றொரு கூட்டத்தார் உயர்வு என்பதையும், மற்றொரு கூட்டத்தாரைவிட நாம் தாழ்ந்தவர்கள் என்பதையும் ஒப்புக் கொண்டதோடு, அதை நிலைநிறுத்தவும் பாடுபட்டவர்கள் ஆகிறோம்.
ஆகவே, இம்மாதிரிப் பெயர்களை வைத்துக் கொள்வது ‘சப்தம்' மாத்திரத்தில் உயர்வாகத் தோன்றினாலும், தத்துவத்தின் மூலமாக அதில் தாழ்மையே இருக்கிறது. ஆதிதிராவிடர் என்று சொல்லிக் கொள்பவர்களாகிய நீங்கள் உங்களை யார் தாழ்ந்தவர்கள் என்று சொல்லுகிறார்களோ, யார் கொடுமைப்படுத்துகிறார்களோ, யார் அதற்கு ஆதாரமாய் இருக்கிறார்களோ ‘அவர்கள்' பெயரை வைத்து ‘அவர்கள் அல்லாதார்' என்பதாக வைத்துக் கொண்டால் - அந்தப் பெயரும், கொடுமையும் ஞாபகத்தில் இருப்பதோடு, அதிலிருந்து விலகுவதற்கு உண்டான அறிவும், சக்தியும் அதிலிருந்து ஏற்படும். இந்தக் கூட்டத்திலேயே ஒரு கனவான் உங்களை ‘ஒடுக்கப்பட்÷டார்' என்றழைக்கலாம் என்பதாகச் சொல்கிறார். எனக்கு அதுகூட அவ்வளவு சரியான பெயர் என்பதாகத் தோன்றவில்லை.
வேண்டுமானால், ‘ஒடுக்கினவர்கள் அல்லாதார்', ‘கொடுமைக்காரர்கள் அல்லாதார்', ‘அயோக்கியர்கள் அல்லாதார்' என்று பெயர் வைத்துக் கொண்டால், அவர்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்க்காமல் சீக்கிரத்தில் இக்கொடுமை நீங்கவும் மார்க்கம் ஏற்படும். அப்படி ஏற்பட்டதுடன், இந்தப் பெயர் மறைந்து விடுவதற்கும் அனுகூலம் ஏற்படும். அப்படிக்கில்லாமல் சத்திரியர், வைசியர், அருந்ததியர், ஆதிதிராவிடர், இந்திரகுலத்தார், நீலகண்டனார், பார்க்கவனார் என்று, இம்மாதிரிப் பெயர் வைத்துக் கொள்வதால் - நமக்கு நாமே சொல்லிக் கொண்டு, கற்ப கோடிக்காலம் இந்த இழிவிலேயே இருக்க வேண்டியதுதானே ஒழிய, நாம் கோரும் பலன் ஒரு சிறிதும் அதனால் உண்டாகாது.
-----தந்தைபெரியார் அவர்கள்
20.7.1927 அன்று சிறுவயலில் ஆதிதிராவிட வணிகர் சங்கத்தில் ஆற்றிய உரை
அதுபோலவே, பறையர் என்கிற பெயர் மாறி, ஆதிதிராவிடர் என்கிற பெயர் வந்ததனால், ‘பறையருக்குண்டான' இழிவுத் தத்துவம் ஒரு சிறிதும் மாறாமல், ஆதிதிராவிடர் என்றால், பறையன் - இழிந்த மகன் என்ற அர்த்தத்தைக் கொடுப்பதோடு, தேசத்தின் யோக்கியதையையும் இழிவு படுத்தத்தக்கதான பொருளும் அதில் அடங்கி இருக்கிறது. இதைவிடப் பழைய பெயரே மேலானதென்பது எனது அபிப்பிராயம். சமூகத்திற்கோ, சங்கத்திற்கோ ஒரு பெயர் வைக்க வேண்டுமானால், எந்தக் குற்றத்தை நீக்குவதற்காகவோ அல்லது எவ்வித இழிவை விலக்குவதற்காகவோ, எம்மாதிரி முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்பதற்காக நாம் கருதி இருக்கிறோமோ, அந்தக் கருத்தைக் கொண்டதான பெயரை ஒரு பிரச்சாரத்திற்கோ, இயக்கத்திற்கோ இடுவதுதான் அறிவுடைமையாகும்.
எத்தனையோ சமூகத்தார், தங்களை மற்றவர்கள் இழிவுபடுத்துவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாமென்று கருதி, எவ்வளவோ பெயர்களை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எந்த இழிவை மறைக்க நினைத்தார்களோ, அது ஒரு சிறிதும் மறைக்கப்படாமலும், அந்தப் பெயர் ஏற்படுவதற்கு முன் எப்படி இருந்தார்களோ - அது போலவேதான் இருந்து வருகின்றார்களே தவிர, புது மாதிரியான மாறுதல் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை.
உதாரணமாக, ஆசாரிமார்கள், தேவாங்க சமூகத்தார்கள் முதலியவர்கள் தங்களுக்கு விஸ்வ பிராமணர்கள், தேவாங்கப் பிராமணர்கள் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டதாலும், நாயக்கர்மார்கள், படையாச்சிமார்கள், நாடார்மார்கள் தங்களுக்குப் பல்ஜிய சத்திரியர்கள், வன்னிய சத்திரியர்கள், அக்னி குலச் சத்திரியர்கள் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டாலும், நாட்டுக்கோட்டை நகரத்தார், நகரத்துச் செட்டியார், கோமுட்டிச் செட்டியார், வேளாளர் முதலியோர் தங்களுக்கு முறையே தன வைசியர், நகரத்து வைசியர், ஆரிய வைசியர், வாணிய வைசியர், பூவைசியர் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டாலும், புராணங்கள் மூலமாக இதற்கு ஆதாரம் கண்டுபிடித்தாலும் மற்றும் எத்தனையோ வகுப்பார் எத்தனையோ மாற்றுப் பெயர்களை வைத்துக் கொண்டு இருந்தாலும், இந்தப் பெயர்களல்லாத ‘சூத்திரர்கள்' என்கிற பெயருக்குண்டான பொருளும், தத்துவமும், உண்மையும் கிரகிக்கப்படுகின்றனவே அல்லாமல், சிறிதாவது மாற்றம் ஏற்படாததோடு - எந்தக் கொள்கையை உத்தேசித்து இந்தப் பெயரை வைத்துக் கொள்கிறோமோ, அந்தக் கொள்கைகளின் மூலமாகவே நாம் நம்மைவிட மற்றொரு கூட்டத்தார் உயர்வு என்பதையும், மற்றொரு கூட்டத்தாரைவிட நாம் தாழ்ந்தவர்கள் என்பதையும் ஒப்புக் கொண்டதோடு, அதை நிலைநிறுத்தவும் பாடுபட்டவர்கள் ஆகிறோம்.
ஆகவே, இம்மாதிரிப் பெயர்களை வைத்துக் கொள்வது ‘சப்தம்' மாத்திரத்தில் உயர்வாகத் தோன்றினாலும், தத்துவத்தின் மூலமாக அதில் தாழ்மையே இருக்கிறது. ஆதிதிராவிடர் என்று சொல்லிக் கொள்பவர்களாகிய நீங்கள் உங்களை யார் தாழ்ந்தவர்கள் என்று சொல்லுகிறார்களோ, யார் கொடுமைப்படுத்துகிறார்களோ, யார் அதற்கு ஆதாரமாய் இருக்கிறார்களோ ‘அவர்கள்' பெயரை வைத்து ‘அவர்கள் அல்லாதார்' என்பதாக வைத்துக் கொண்டால் - அந்தப் பெயரும், கொடுமையும் ஞாபகத்தில் இருப்பதோடு, அதிலிருந்து விலகுவதற்கு உண்டான அறிவும், சக்தியும் அதிலிருந்து ஏற்படும். இந்தக் கூட்டத்திலேயே ஒரு கனவான் உங்களை ‘ஒடுக்கப்பட்÷டார்' என்றழைக்கலாம் என்பதாகச் சொல்கிறார். எனக்கு அதுகூட அவ்வளவு சரியான பெயர் என்பதாகத் தோன்றவில்லை.
வேண்டுமானால், ‘ஒடுக்கினவர்கள் அல்லாதார்', ‘கொடுமைக்காரர்கள் அல்லாதார்', ‘அயோக்கியர்கள் அல்லாதார்' என்று பெயர் வைத்துக் கொண்டால், அவர்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்க்காமல் சீக்கிரத்தில் இக்கொடுமை நீங்கவும் மார்க்கம் ஏற்படும். அப்படி ஏற்பட்டதுடன், இந்தப் பெயர் மறைந்து விடுவதற்கும் அனுகூலம் ஏற்படும். அப்படிக்கில்லாமல் சத்திரியர், வைசியர், அருந்ததியர், ஆதிதிராவிடர், இந்திரகுலத்தார், நீலகண்டனார், பார்க்கவனார் என்று, இம்மாதிரிப் பெயர் வைத்துக் கொள்வதால் - நமக்கு நாமே சொல்லிக் கொண்டு, கற்ப கோடிக்காலம் இந்த இழிவிலேயே இருக்க வேண்டியதுதானே ஒழிய, நாம் கோரும் பலன் ஒரு சிறிதும் அதனால் உண்டாகாது.
-----தந்தைபெரியார் அவர்கள்
20.7.1927 அன்று சிறுவயலில் ஆதிதிராவிட வணிகர் சங்கத்தில் ஆற்றிய உரை
Sunday, February 03, 2008
கும்பாபிசேகத்தின் ரகசியம்
நடேசக் குருக்கள்: ஏண்டா சுப்பா, இந்த 4, 5 மாதமாய் நம்ம கோயிலுக்கு அபிஷேகம் வர்றதில்லை; பிரார்த்தனை வர்றதில்லை; முன்னைப் போல அதிக ஜனங்கள் அர்ச்சனை செய்ய வர்றதில்லையே, என்ன சங்கதி?
சுப்புக் குருக்கள்: சங்கதியா! ஈரோட்டிலே ராமசாமி நாயக்கன் இருக்கான் அல்ல, அவன் குடிஅரசு எண்ணு ஒரு பேப்பர் போட்றான்; அதில் சும்மா இதையே எழுதுறான். பாப்பானுக்கு பணம் கொடுக்காதே; பாப்பான் காலில் விழாதே; பாப்பானைக் கொண்டு சடங்கு செய்யாதே; கோயிலுக்குப் போனால் நீயாகவே சாமி கும்பிட்டு விட்டு வந்துடு; அவன் தீபார்த்தனை காட்ட நீ கும்பிடாதே; அவன்கிட்ட பிரசாதம் வாங்காதே என்று இப்படியெல்லாம் எழுதியும், போற பக்கம் எல்லாம் பேசியும் நம்ம தலையில் கை வெச்சுகிட்டு வர்றான். அவன் பேச்சைக் கேட்டுக்கிட்டு இந்த சூத்திரன்கள், தானே வர்றது; தானே கும்பிடறது; பேசாமல் போயிடறது, இப்படி பண்ணுராங்கடான்னா.
நடேசக் குருக்கள்: அப்படியா! அடடா! அவனுக்கு என்ன கேடு வந்தது? அவப்பா ரொம்ப பிராமண விசுவாசியாச்சுதே! எத்தனை சமாராதனை, எத்தனை கோயில் எத்தனை சத்திரம், சாவிடி, தண்ணிப் பந்தல், உச்சவம், உபநயனம், கல்யாணம் இதெல்லாம் செய்திருக்க, அப்படிப்பட்ட வயிற்றில் இப்படி பிள்ளையா பிறக்கனும்? அய்யய்யோ! கர்மம் உடுமா? அவன் இன்னம் கொஞ்சநாளில் என்ன கெதி ஆகப் போறான் எண்ணு பாரு. முன்னே மூணு நாலு தரம் ஜெயிலுக்குப் போயிம் அவனுக்குப் புத்தி வல்ல; இப்ப சீக்கிரத்தில் ஜெயிலுக்குப் போகப் போறானா இல்லையா எண்ணு பார்த்துகிட்டு இரு. ராஜத்து வேஷம், பிராமண துவேஷம் யாரை சும்மா விட்டது, இவனை விடுறதுக்கு? ஆனாலும், இதனாலே இப்ப நமக்கு இந்த 2, 3 மாசமாய் சுத்தமா வரும்படி இல்லையே; அதுக்கென்ன பண்ணறது? இப்ப வரவர தெவசத்துக்குக் கூட எந்த சூத்திரனும் நம்மைக் கூப்பிடறது இல்லை; நமக்கு முன்னையெல்லாம் ஒரு இடை இழுத்துவிட்டு அரிசி, பருப்பு, காசு எவ்வளவு தாராளமாகக் குடுப்பாங்கோ, இப்ப அதுகூட இல்லையே; இதென்ன சங்கதி? இந்த வருஷம் பிராமணன் மேலே சங்கராந்தி வந்துட்டதா என்ன? ஒண்ணும் தெரியவில்லையே!
சுப்புக் குருக்கள்: வரும்படியைப் பத்தி கவலைப்படாதே, நான் ஒரு வழி சொல்லுறேன்; அப்படிக் கேக்கறையா?
நடேசக் குருக்கள்: சொல்லித் தொலையப்பா! சோத்துக்கில்லாத பார்ப்பான் சொன்னபடி எல்லாம் கேப்பான் எண்ணு நீ கேட்டதில்லையா? சொல்லு, சொல்லு!
சுப்புக் குருக்கள்: சொல்லுகிறேன், வெளியில் சொல்லாதே!
நடேசக் குருக்கள்: இது வேறே கர்மமா? நான்தான் சுத்த சுத்தமா சோத்துக்கு சாகறேன்; இன்ன இதை வெளியில் சொல்றது வேறையா? கொஞ்சம் சொல்லப்பா சட்டுண்ணு!
சுப்புக் குருக்கள்: சுத்திமுத்தியும் பார்த்துக்கோ, ஆராவது வந்துடப் போறாங்கோ!
நடேசக் குருக்கள்: ஒருத்தரும் இல்லை; சொல்லித் தொலை!
சுப்புக் குருக்கள்: அது என்னான்னாக்கா, கோயிலில் சாமி இருக்குதல்ல, அதை ஆட்டிப் பிடுங்கி, கீழே தள்ளி படுக்க வெச்சிடு; காத்தாலெ கோயிலைப் போய் நீ பாத்ததாகவும்," கோயில் கதவு ஒடச்சி எவனோ உள்ளே போயி சாமியை ஆட்டி கீழே தள்ளிப் போட்டு, அதிலே இருந்த தங்கம், வெள்ளி, நவரத்னமெல்லாம் எவனோ எடுத்துக்கிட்டுப் போயிட்டான்; கும்பாபிஷேகம் பண்ணவேணும், இல்லாவிட்டால் ஊருக்கு ஆகாது; தர்மகர்த்தாவுக்கு தோஷம்; கமிட்டி யாருக்கு பாவம்!" அப்படிண்ணு சொல்லிப் போடு; கமிட்டியார் கும்பாபிஷேகம் பண்ற வரைக்கும் சாமிக்குக் கீழே போட்டு இருந்த தங்கம், வெள்ளிக்காசு, நவரத்னம் இதை வித்து சாப்பிட்டுகிட்டு இரு; இது தெரியாத உனக்கு?
நடேசக் குருக்கள்: இது நல்ல யோசனை தான்! நானும் இதற்கு முன்னாலேயே சாமியை ஆட்டித் தள்ளி, அதுக்குக் கீழே இருந்ததை எடுத்துக்கிட்டு, சாமியை சும்மாதான் நிக்கவச்சி இருக்கிறேன்; அர்ச்சனை பண்ற பூ பெலமா சாமி மேலே பட்டாலே சாமி ஆடும்! அது மாத்தரமா? எங்க கோயிலில் இருக்கிற எந்த சாமியைத் தொட்டாலும் சட்டுண்ணு படுத்துக்கும்! எல்லாம் ஆட்டிப் பிடுங்கி, அதிலிருந்ததை முன்னையே எடுத்துத் திண்ணு போட்டோம். ஆனதனாலே சாமியை பாடுபட்டு ஆட்டி கீழே தள்ள வேண்டியதில்லை; தொட்டால் போதும், தானே கீழே விளுந்துடும்!
சுப்புக் குருக்கள்: அப்படியானாக்கா, இன்னைக்கு ராத்திரியே சாமியை தள்ளிப்போடு; இருட்டு காலம் தானே, யாரு பாப்பாங்கோ! கும்பாபிஷேகம் பண்ணினாக்கா உனக்கும் கிடைக்கும், எனக்கும் கிடைக்கும், இன்னம் மத்த பிராமணாளுக்கும் தச்சனை, வேட்டி, சமாராதனை இதெல்லாம் கிடைக்கும். ஒரு வாரம் எப்படியும் தாட்டிக்கிலாம். தச்சனை, வேட்டி, குடம், சொம்பு முதலானதும் மாசக்கணக்கா வரும். அப்பரம் இதை மாதிரி ஒவ்வொரு ஊரிலேயும் பண்ணச் சொன்னாக்க இந்த வருஷத்து சங்கதி முடிஞ்சுபோகும்; மேலேக்கு பாத்துக்கலாம். அதுக்குள்ளே அவனும் ஜெயிலுக்கு போய்ட்டாக்க மத்தவனுங்கொ இந்த புத்தி வுட்டுடுவானுங்கோ.
நடேசக் குருக்கள்: சரி சரி, ராத்திரிக்குப் போய் தள்ளிப் போட்டே வந்துடுறேன்; நீ எங்கயும் போயிடாதே; தருமகர்த்தாகிட்ட சொன்ன உடனே அவன் ஒரு முட்டாளு ஆனதனாலே கும்பாபிஷேகம் உடனே பண்ண வேணும் எண்ணு சொல்ற தர்மகர்த்தா, அவன் உடனே ஏற்பாடு பண்ணராப்லெ இருந்தா உடனே உன்னை வந்து கூப்பிடுறேன் தெரியுமா!
சுப்புக் குருக்கள்: ஆமா, ஆமா, உங்க தர்மகர்த்தாகூட ஒரு பயித்தியக்காரன்தான். அவனுக்கு சும்மா மேலும் கீளும் சாம்பலைப் பூசத்தான் தெரியும். அரகரா சிவசிவ எங்கத்தான் தெரியும். மத்தபடி நீ சொல்லரதுதான் வேதவாக்கு. உடனே செய்வான். நானும் சத்திரத்திலேயே படுத்திருக்கிறேன். காலமே நேரத்திலேயே வந்து சொல்லு தெரியுமா!
நடேசக் குருக்கள்: சரி போயிட்டு வா; நீ நல்லா இருக்கணும். நல்ல கஷ்ட காலத்திலே சரியான யோசனை சொன்னே; சரி, சரி.
சொன்னே; சரி, சரி.
---------------தந்தைபெரியார்-"குடிஅரசு"-29-05-1927
சுப்புக் குருக்கள்: சங்கதியா! ஈரோட்டிலே ராமசாமி நாயக்கன் இருக்கான் அல்ல, அவன் குடிஅரசு எண்ணு ஒரு பேப்பர் போட்றான்; அதில் சும்மா இதையே எழுதுறான். பாப்பானுக்கு பணம் கொடுக்காதே; பாப்பான் காலில் விழாதே; பாப்பானைக் கொண்டு சடங்கு செய்யாதே; கோயிலுக்குப் போனால் நீயாகவே சாமி கும்பிட்டு விட்டு வந்துடு; அவன் தீபார்த்தனை காட்ட நீ கும்பிடாதே; அவன்கிட்ட பிரசாதம் வாங்காதே என்று இப்படியெல்லாம் எழுதியும், போற பக்கம் எல்லாம் பேசியும் நம்ம தலையில் கை வெச்சுகிட்டு வர்றான். அவன் பேச்சைக் கேட்டுக்கிட்டு இந்த சூத்திரன்கள், தானே வர்றது; தானே கும்பிடறது; பேசாமல் போயிடறது, இப்படி பண்ணுராங்கடான்னா.
நடேசக் குருக்கள்: அப்படியா! அடடா! அவனுக்கு என்ன கேடு வந்தது? அவப்பா ரொம்ப பிராமண விசுவாசியாச்சுதே! எத்தனை சமாராதனை, எத்தனை கோயில் எத்தனை சத்திரம், சாவிடி, தண்ணிப் பந்தல், உச்சவம், உபநயனம், கல்யாணம் இதெல்லாம் செய்திருக்க, அப்படிப்பட்ட வயிற்றில் இப்படி பிள்ளையா பிறக்கனும்? அய்யய்யோ! கர்மம் உடுமா? அவன் இன்னம் கொஞ்சநாளில் என்ன கெதி ஆகப் போறான் எண்ணு பாரு. முன்னே மூணு நாலு தரம் ஜெயிலுக்குப் போயிம் அவனுக்குப் புத்தி வல்ல; இப்ப சீக்கிரத்தில் ஜெயிலுக்குப் போகப் போறானா இல்லையா எண்ணு பார்த்துகிட்டு இரு. ராஜத்து வேஷம், பிராமண துவேஷம் யாரை சும்மா விட்டது, இவனை விடுறதுக்கு? ஆனாலும், இதனாலே இப்ப நமக்கு இந்த 2, 3 மாசமாய் சுத்தமா வரும்படி இல்லையே; அதுக்கென்ன பண்ணறது? இப்ப வரவர தெவசத்துக்குக் கூட எந்த சூத்திரனும் நம்மைக் கூப்பிடறது இல்லை; நமக்கு முன்னையெல்லாம் ஒரு இடை இழுத்துவிட்டு அரிசி, பருப்பு, காசு எவ்வளவு தாராளமாகக் குடுப்பாங்கோ, இப்ப அதுகூட இல்லையே; இதென்ன சங்கதி? இந்த வருஷம் பிராமணன் மேலே சங்கராந்தி வந்துட்டதா என்ன? ஒண்ணும் தெரியவில்லையே!
சுப்புக் குருக்கள்: வரும்படியைப் பத்தி கவலைப்படாதே, நான் ஒரு வழி சொல்லுறேன்; அப்படிக் கேக்கறையா?
நடேசக் குருக்கள்: சொல்லித் தொலையப்பா! சோத்துக்கில்லாத பார்ப்பான் சொன்னபடி எல்லாம் கேப்பான் எண்ணு நீ கேட்டதில்லையா? சொல்லு, சொல்லு!
சுப்புக் குருக்கள்: சொல்லுகிறேன், வெளியில் சொல்லாதே!
நடேசக் குருக்கள்: இது வேறே கர்மமா? நான்தான் சுத்த சுத்தமா சோத்துக்கு சாகறேன்; இன்ன இதை வெளியில் சொல்றது வேறையா? கொஞ்சம் சொல்லப்பா சட்டுண்ணு!
சுப்புக் குருக்கள்: சுத்திமுத்தியும் பார்த்துக்கோ, ஆராவது வந்துடப் போறாங்கோ!
நடேசக் குருக்கள்: ஒருத்தரும் இல்லை; சொல்லித் தொலை!
சுப்புக் குருக்கள்: அது என்னான்னாக்கா, கோயிலில் சாமி இருக்குதல்ல, அதை ஆட்டிப் பிடுங்கி, கீழே தள்ளி படுக்க வெச்சிடு; காத்தாலெ கோயிலைப் போய் நீ பாத்ததாகவும்," கோயில் கதவு ஒடச்சி எவனோ உள்ளே போயி சாமியை ஆட்டி கீழே தள்ளிப் போட்டு, அதிலே இருந்த தங்கம், வெள்ளி, நவரத்னமெல்லாம் எவனோ எடுத்துக்கிட்டுப் போயிட்டான்; கும்பாபிஷேகம் பண்ணவேணும், இல்லாவிட்டால் ஊருக்கு ஆகாது; தர்மகர்த்தாவுக்கு தோஷம்; கமிட்டி யாருக்கு பாவம்!" அப்படிண்ணு சொல்லிப் போடு; கமிட்டியார் கும்பாபிஷேகம் பண்ற வரைக்கும் சாமிக்குக் கீழே போட்டு இருந்த தங்கம், வெள்ளிக்காசு, நவரத்னம் இதை வித்து சாப்பிட்டுகிட்டு இரு; இது தெரியாத உனக்கு?
நடேசக் குருக்கள்: இது நல்ல யோசனை தான்! நானும் இதற்கு முன்னாலேயே சாமியை ஆட்டித் தள்ளி, அதுக்குக் கீழே இருந்ததை எடுத்துக்கிட்டு, சாமியை சும்மாதான் நிக்கவச்சி இருக்கிறேன்; அர்ச்சனை பண்ற பூ பெலமா சாமி மேலே பட்டாலே சாமி ஆடும்! அது மாத்தரமா? எங்க கோயிலில் இருக்கிற எந்த சாமியைத் தொட்டாலும் சட்டுண்ணு படுத்துக்கும்! எல்லாம் ஆட்டிப் பிடுங்கி, அதிலிருந்ததை முன்னையே எடுத்துத் திண்ணு போட்டோம். ஆனதனாலே சாமியை பாடுபட்டு ஆட்டி கீழே தள்ள வேண்டியதில்லை; தொட்டால் போதும், தானே கீழே விளுந்துடும்!
சுப்புக் குருக்கள்: அப்படியானாக்கா, இன்னைக்கு ராத்திரியே சாமியை தள்ளிப்போடு; இருட்டு காலம் தானே, யாரு பாப்பாங்கோ! கும்பாபிஷேகம் பண்ணினாக்கா உனக்கும் கிடைக்கும், எனக்கும் கிடைக்கும், இன்னம் மத்த பிராமணாளுக்கும் தச்சனை, வேட்டி, சமாராதனை இதெல்லாம் கிடைக்கும். ஒரு வாரம் எப்படியும் தாட்டிக்கிலாம். தச்சனை, வேட்டி, குடம், சொம்பு முதலானதும் மாசக்கணக்கா வரும். அப்பரம் இதை மாதிரி ஒவ்வொரு ஊரிலேயும் பண்ணச் சொன்னாக்க இந்த வருஷத்து சங்கதி முடிஞ்சுபோகும்; மேலேக்கு பாத்துக்கலாம். அதுக்குள்ளே அவனும் ஜெயிலுக்கு போய்ட்டாக்க மத்தவனுங்கொ இந்த புத்தி வுட்டுடுவானுங்கோ.
நடேசக் குருக்கள்: சரி சரி, ராத்திரிக்குப் போய் தள்ளிப் போட்டே வந்துடுறேன்; நீ எங்கயும் போயிடாதே; தருமகர்த்தாகிட்ட சொன்ன உடனே அவன் ஒரு முட்டாளு ஆனதனாலே கும்பாபிஷேகம் உடனே பண்ண வேணும் எண்ணு சொல்ற தர்மகர்த்தா, அவன் உடனே ஏற்பாடு பண்ணராப்லெ இருந்தா உடனே உன்னை வந்து கூப்பிடுறேன் தெரியுமா!
சுப்புக் குருக்கள்: ஆமா, ஆமா, உங்க தர்மகர்த்தாகூட ஒரு பயித்தியக்காரன்தான். அவனுக்கு சும்மா மேலும் கீளும் சாம்பலைப் பூசத்தான் தெரியும். அரகரா சிவசிவ எங்கத்தான் தெரியும். மத்தபடி நீ சொல்லரதுதான் வேதவாக்கு. உடனே செய்வான். நானும் சத்திரத்திலேயே படுத்திருக்கிறேன். காலமே நேரத்திலேயே வந்து சொல்லு தெரியுமா!
நடேசக் குருக்கள்: சரி போயிட்டு வா; நீ நல்லா இருக்கணும். நல்ல கஷ்ட காலத்திலே சரியான யோசனை சொன்னே; சரி, சரி.
சொன்னே; சரி, சரி.
---------------தந்தைபெரியார்-"குடிஅரசு"-29-05-1927
Saturday, February 02, 2008
காதல் என்றால் என்ன?
அன்பு,ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர வேறு ஒரு பொருளைக் கொண்டதென்ற சொல்லும் படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசகம் எழுதப்படுவதாகும். ஏனெனில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி, அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல் திருப்தியில்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும்.
ஆனால் காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எது வரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயதில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்குக் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும் பொருளற்ற தன்மையும் உண்மையற்ற தன்மையும் நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.
ஆனால் அந்தப்படி யோசிப்பதற்கு முன்னே இந்தக் காதல் என்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழுக்கில் அது எப்படிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள் “காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல, அன்பு -நேசம் -ஆசை -காமம் என்பவை வேறு, காதல் வேறு, நட்பு வேறு என்றும் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுத்துவதாகும். அக் காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமே இல்லை என்றும்,
அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும். அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும் பிறகு வேறு ஒருவரிடமும் அந்தக் காதல் ஏற்படாது அந்தப்படி மீறி அந்தப் பெண்ணுக்கோ ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது.
மேலும் இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும் ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.
ஆனால் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபோகமும் மக்களின் அனுபவ ஞானமும் இல்லாதவர்கள் என்றோ அல்லது இயற்கையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றே தான் கருத வேண்டி இருக்கின்றது.
அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாவதர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்கின்றோம்.
இன்னும் திறந்து வெளிப்படையாய்த் தைரியமாய் மனித இயற்கையையும் சுதந்திரத்தையும் சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும் தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்வது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித் தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் தான் சொல்ல வேண்டும்.
இவ்வளவு பெருமையையும் அணியையும் அலங்காரத்தையும் கொடுத்துப் பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி அது என்ன? அது எப்படி உண்டாகிறது? என்பதை யோசித்துப் பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா? என்பது ஒரு புறமிருந்தாலும் தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறு பொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதன் வேறுவிதமான பிரயோகமும் நமக்குத் தென்படவில்லை.
அன்றியும் அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத் தவிர வடமொழி மூலத்தை அனுசரித்துக் காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள் தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றப்படித் தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண்பெண் சேர்க்கைக்கூட்டு முதலியவை சம்மந்தமான விஷயங்களும் அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்களையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகிறதே தவிர காதலுக்கென்று வேறு பொருளில்லை.
ஆதலால் இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அர்த்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டு பிடித்தார்களென்பதும் நமக்கு விளங்கவில்லை.
நிற்க, இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானாகவே உண்டாவதாயிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில் எந்த ஆதாரத்தின் மீது என்பவைகளைக் கவனித்தால், பெண் ஆணையோ ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்ப்பதாலும் அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும் உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்க கேட்க நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.
இந்தப் படியும் கூட ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில் கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு வேண்டும் என்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கிறானோ அதுபோல் தான் இந்தக் காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர வேற எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப்படவில்லை.
எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தைத் திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது.
அதாவது அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்குப் பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோதான் யாரும் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும் போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம். அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம்.
உதாரணமாக ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு யார் என்று இவர்களில் ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஒரு அரசன் குமாரத்தி என்று சொல்லுகின்றாள். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?
நிற்க, அவன் தன்னைச் சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்துத் தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லிவிட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு “மறுஜென்மத்தாலும்” இவனை விட்டுப் பிரியக்கூடாது என்று கருதி விடுகிறாள். நான்கு நாள் பொறுத்த பின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும் சேவகன் மகன் என்றும் அறிந்தாள் என்று வைத்துக்கொள்வோம்.இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா?அல்லது இருந்தாக வேண்டுமா? என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும் மறுக்கும் தன்மையும் விளங்கும்.
இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இது போலவே இன்னமும் தான் முதலில் நினைத்ததற்கு அல்லது தனது நன்மைக்கும் திருப்திக்கும் இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க்காத கெட்ட காரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன்படுமா? அதை எவ்வளவு தான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் உண்மைக்காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.
நிற்க, உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகிய பின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக் கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளைக் கவனிக்கும் போது சரீர மாறுபாடாலும் பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாற முடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய்க் கருத நேர்ந்தால் அது பொய்யாகவோ மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்குச் சந்தேகப்படும்படி விட்டால் அப்போது கூடக் காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக் காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கி விடக்கூடிய காதல் குற்றமான காதலா?என்பதற்கு என்ன மறுமொழி பகர முடியும்?
காதல் கொள்ளும் போது காதலர்கள் நிலமை, மனப்பான்மை, பக்குவம், லஷியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சக் காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லஷியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியிலும் துன்பத்திலும் அழுந்த வேண்டியதுதானா? என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம்.
ஒரு ஜதைக் காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும் வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்னடுமா? விரோதமில்லையானால் ஓருவர் ஞானியாகி துறவியாகிவிட்டால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக் விரோதமாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்காமல் போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும், ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.
அது போலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும் வெறுப்புக் கொள்வதும் பிரிவதும் இயற்கையேயாகும். பலவீனமாய் இருக்கும் போது ஏமாந்து விடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாத போது கட்டுப்பட்டு விடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையேயல்லவா?
உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஓரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களையெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்தத் தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனிடமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம். ஆகவே இந்தத் தாசி கொண்டது காதலா? அல்லது வாழ்க்கைக்கு ஒரு செளகரியமான வழியா? இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக் கொண்டே வந்தால் இது ஒத்த காதல் ஆகிவிடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளை விடச் சிறிது கூடச் சிறந்தது அல்லவென்பது விளங்கிவிடும்.
அதற்கு ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து ஆண் பெண்களுக்குள் புகுத்திவிட்டதால் ஆண் பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்மென்று கருதி எப்படிப் பக்திவான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால் அநேகர் தங்களைப் பக்திவான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதிப் பூச்சுப் போடுவதும் பட்டை நாமம் போடுவதும் சதா கோவிலுக்குப் போவதும் பாட்டுக்கள் பாடி அழுவதும் வாயில் சிவ சிவ என்று சொல்லிக்கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்திமான்களாகக் காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், எப்படிக் குழந்தைகள் துங்குவது போல் வேஷம் போட்டுக் கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக ‘தூங்கினால் கால் ஆடுமே’ என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்க வேண்டுமென்று கருதிக் காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படிப் பெண்கள் இப்படி இப்படி இருப்பது தான் கற்பு என்றால் பெண்கள் அது போலவெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லி விட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்துவிட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்….
ஆகவே ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும் அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அ.றிணைப் பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையிலிருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக் கூடியதென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாற வேண்டியது தான் என்றும், மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம்.
ஆகவே, இதிலிருந்து நாம் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் அன்பும் ஆசையும் நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப்திக்குமேயொழிய மனதிற்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல் அன்பும் ஆசையும் நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இதை எழுதுகின்றோம். இதுவும் ஏன் எழுதவேண்டியதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் ‘இது காதலல்ல’, ‘அது காதலுக்கு விரோதம்’, ‘அது காம இச்சை’, ‘இது மிருக இச்சை’, ‘இது விபச்சாரம்’ என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒரு விதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப் பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்றுப் பார்த்துவிடலாம் என்றே இதைப் பற்றி எழுதலானோம்.
(18.01.1931′குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதிய தலையங்கம்.)
ஆனால் காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எது வரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயதில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்குக் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும் பொருளற்ற தன்மையும் உண்மையற்ற தன்மையும் நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.
ஆனால் அந்தப்படி யோசிப்பதற்கு முன்னே இந்தக் காதல் என்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழுக்கில் அது எப்படிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள் “காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல, அன்பு -நேசம் -ஆசை -காமம் என்பவை வேறு, காதல் வேறு, நட்பு வேறு என்றும் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுத்துவதாகும். அக் காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமே இல்லை என்றும்,
அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும். அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும் பிறகு வேறு ஒருவரிடமும் அந்தக் காதல் ஏற்படாது அந்தப்படி மீறி அந்தப் பெண்ணுக்கோ ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது.
மேலும் இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும் ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.
ஆனால் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபோகமும் மக்களின் அனுபவ ஞானமும் இல்லாதவர்கள் என்றோ அல்லது இயற்கையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றே தான் கருத வேண்டி இருக்கின்றது.
அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாவதர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்கின்றோம்.
இன்னும் திறந்து வெளிப்படையாய்த் தைரியமாய் மனித இயற்கையையும் சுதந்திரத்தையும் சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும் தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்வது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித் தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் தான் சொல்ல வேண்டும்.
இவ்வளவு பெருமையையும் அணியையும் அலங்காரத்தையும் கொடுத்துப் பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி அது என்ன? அது எப்படி உண்டாகிறது? என்பதை யோசித்துப் பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா? என்பது ஒரு புறமிருந்தாலும் தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறு பொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதன் வேறுவிதமான பிரயோகமும் நமக்குத் தென்படவில்லை.
அன்றியும் அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத் தவிர வடமொழி மூலத்தை அனுசரித்துக் காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள் தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றப்படித் தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண்பெண் சேர்க்கைக்கூட்டு முதலியவை சம்மந்தமான விஷயங்களும் அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்களையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகிறதே தவிர காதலுக்கென்று வேறு பொருளில்லை.
ஆதலால் இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அர்த்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டு பிடித்தார்களென்பதும் நமக்கு விளங்கவில்லை.
நிற்க, இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானாகவே உண்டாவதாயிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில் எந்த ஆதாரத்தின் மீது என்பவைகளைக் கவனித்தால், பெண் ஆணையோ ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்ப்பதாலும் அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும் உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்க கேட்க நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.
இந்தப் படியும் கூட ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில் கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு வேண்டும் என்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கிறானோ அதுபோல் தான் இந்தக் காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர வேற எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப்படவில்லை.
எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தைத் திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது.
அதாவது அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்குப் பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோதான் யாரும் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும் போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம். அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம்.
உதாரணமாக ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு யார் என்று இவர்களில் ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஒரு அரசன் குமாரத்தி என்று சொல்லுகின்றாள். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?
நிற்க, அவன் தன்னைச் சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்துத் தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லிவிட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு “மறுஜென்மத்தாலும்” இவனை விட்டுப் பிரியக்கூடாது என்று கருதி விடுகிறாள். நான்கு நாள் பொறுத்த பின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும் சேவகன் மகன் என்றும் அறிந்தாள் என்று வைத்துக்கொள்வோம்.இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா?அல்லது இருந்தாக வேண்டுமா? என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும் மறுக்கும் தன்மையும் விளங்கும்.
இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இது போலவே இன்னமும் தான் முதலில் நினைத்ததற்கு அல்லது தனது நன்மைக்கும் திருப்திக்கும் இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க்காத கெட்ட காரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன்படுமா? அதை எவ்வளவு தான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் உண்மைக்காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.
நிற்க, உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகிய பின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக் கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளைக் கவனிக்கும் போது சரீர மாறுபாடாலும் பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாற முடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய்க் கருத நேர்ந்தால் அது பொய்யாகவோ மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்குச் சந்தேகப்படும்படி விட்டால் அப்போது கூடக் காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக் காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கி விடக்கூடிய காதல் குற்றமான காதலா?என்பதற்கு என்ன மறுமொழி பகர முடியும்?
காதல் கொள்ளும் போது காதலர்கள் நிலமை, மனப்பான்மை, பக்குவம், லஷியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சக் காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லஷியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியிலும் துன்பத்திலும் அழுந்த வேண்டியதுதானா? என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம்.
ஒரு ஜதைக் காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும் வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்னடுமா? விரோதமில்லையானால் ஓருவர் ஞானியாகி துறவியாகிவிட்டால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக் விரோதமாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்காமல் போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும், ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.
அது போலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும் வெறுப்புக் கொள்வதும் பிரிவதும் இயற்கையேயாகும். பலவீனமாய் இருக்கும் போது ஏமாந்து விடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாத போது கட்டுப்பட்டு விடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையேயல்லவா?
உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஓரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களையெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்தத் தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனிடமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம். ஆகவே இந்தத் தாசி கொண்டது காதலா? அல்லது வாழ்க்கைக்கு ஒரு செளகரியமான வழியா? இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக் கொண்டே வந்தால் இது ஒத்த காதல் ஆகிவிடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளை விடச் சிறிது கூடச் சிறந்தது அல்லவென்பது விளங்கிவிடும்.
அதற்கு ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து ஆண் பெண்களுக்குள் புகுத்திவிட்டதால் ஆண் பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்மென்று கருதி எப்படிப் பக்திவான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால் அநேகர் தங்களைப் பக்திவான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதிப் பூச்சுப் போடுவதும் பட்டை நாமம் போடுவதும் சதா கோவிலுக்குப் போவதும் பாட்டுக்கள் பாடி அழுவதும் வாயில் சிவ சிவ என்று சொல்லிக்கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்திமான்களாகக் காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், எப்படிக் குழந்தைகள் துங்குவது போல் வேஷம் போட்டுக் கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக ‘தூங்கினால் கால் ஆடுமே’ என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்க வேண்டுமென்று கருதிக் காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படிப் பெண்கள் இப்படி இப்படி இருப்பது தான் கற்பு என்றால் பெண்கள் அது போலவெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லி விட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்துவிட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்….
ஆகவே ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும் அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அ.றிணைப் பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையிலிருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக் கூடியதென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாற வேண்டியது தான் என்றும், மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம்.
ஆகவே, இதிலிருந்து நாம் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் அன்பும் ஆசையும் நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப்திக்குமேயொழிய மனதிற்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல் அன்பும் ஆசையும் நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இதை எழுதுகின்றோம். இதுவும் ஏன் எழுதவேண்டியதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் ‘இது காதலல்ல’, ‘அது காதலுக்கு விரோதம்’, ‘அது காம இச்சை’, ‘இது மிருக இச்சை’, ‘இது விபச்சாரம்’ என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒரு விதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப் பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்றுப் பார்த்துவிடலாம் என்றே இதைப் பற்றி எழுதலானோம்.
(18.01.1931′குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதிய தலையங்கம்.)
Subscribe to:
Posts (Atom)