இலவசங்களைக் கேலி செய்வோர் ஜெயலலிதாவின் இலவசங்கள்பற்றி எழுதுவார்களா?
வறுமை அதிகரிப்பின் அடையாளமே இலவசங்கள் அதிகரிப்பு என்று அதிமுகவோடு கூட்டு வைத்திருக்கும் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூறுகிறது. அக்கட்சியின் அதிகாரப்பூர்மான ஏடான தீக்கதிரில் (21.3.2011 பக்கம் 3) கூறப்பட்டுள்ளது.
அதேபோல அதிமுகவின் ஆலோசகராக இருக்கக்கூடிய திருவாளர் சோ ராமசாமி இலவசங்கள்பற்றி என்ன சொல்லு கிறார்? இன்று வெளிவந்துள்ள துக்ளக் அட்டைப் படம் என்ன சொல்லுகிறது?
கிரைண்டரையோ, மிக்சியையோ, லேப் டாப்பையோ கலைஞர் கொடுத்தால் அதற்குப் பெயர் வசந்த் அண்ட் கோ விளம்பரமாம் - சோ எழுதுகிறார்.
இப்பொழுது அவர் விழுந்து விழுந்து ஆதரிக்கும் இவர் ஆலோசகராக இருக்கும் ஜெயலலிதா இலவசங்களை அள்ளி விட்டிருக்கிறாரே -
கலைஞராவது மிக்சி அல்லது கிரைண்டர் இலவசம் என்கிறார்; ஜெயலலிதாவோ மின்விசிறி, மிக்ஸி, டி.வி. மூன்றையும் இலவசமாகத் தருவேன் என்கிறாரே, 20 கிலோ அரிசி இலவசம் என்கிறாரே - இது மட்டும் வசந்த் அண்ட் கோ விளம்பரம் இல்லையோ!
ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் கண்டுள்ள இலவசங்கள்பற்றி அடுத்த துக்ளக்கில் இதே பாணியில் கிண்டல் செய்வாரா? பதில் சொல்லுவாரா?
இது அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வமான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். என்ற பத்திரிகை.
இதில் ஒரு கார்ட்டூன் வெளிவந்துள்ளது.
என்ன தெரியுமா?
35 கிலோ அரிசி இலவசமாகக் கலைஞர் சொல்லியிருக் கிறாராம் - அதற்காக அரிசி கடத்தல்காரர்கள் சங்கத்திலே இருந்து பெரிய மாலையைத் தூக்கிக் கொண்டு வாழ்த்த வந்திருக்கிறார்கள் என்று கார்ட்டூன் போட்டுள்ளது. இன்று காலை வந்த நமது எம்.ஜி.ஆரில் இந்தக் கார்ட்டூன் வெளி வந்துள்ளது. பாவம் - அதிமுக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அவர்களுக்கு என்ன தெரியும்? ஜெயலலிதா என்ன சொல்லப் போகிறார் என்று நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் உள்ளவர்களுக்கு என்ன தெரியும்?
இலவசமாக அரிசி கொடுத்தால் கள்ள மார்க்கெட்காரர் களுக்கு மகிழ்ச்சி என்று கார்ட்டூன் போட்டுவிட்டது.
கலைஞராவது வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசம் என்றார். ஜெயலலிதாவோ குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறி இருக்கிறாரே - நமது எம்.ஜி.ஆர். ஏட்டின் கார்ட்டூன்படி - இது அரிசி கடத்தல்காரர்களுக்குக் கொள்ளை லாபமோ!
(பலத்த கைதட்டல்; வெடிச் சிரிப்பு!)
- சென்னைப் பெரியார் திடல் சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் 24.3.2011
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை காமெடி சூரியன் தேவை ஜெயலலிதா தோல்வியுடன் ஒப்புதல்
தமிழர் தலைவர் தெளிவான விளக்கம்
சென்னை, மார்ச் 25- அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை காமெடி அறிக்கை. சூரிய வெளிச்சம் தேவை என்று ஜெயலலிதா ஒப்புக்கொண்டது. அவரது தோல் வியையே காட்டுகிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையை ஈ அடிச்சான் காப்பியாக அவசரமாக அச்சடிக்கப் பட்ட ஒன்று என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
சென்னை பெரியார் திடலில் தி.மு.க அணியை ஆதரிக்க வேண்டும்-ஏன்? என்னும் தலைப்பில் நேற்று (24.3.2011) சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
நம்பகத்தன்மை இருக்கிறதா?
வருகிற ஏப்.13ஆம் தேதி 14ஆவது சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. மக்களிடையே யாருக்கு வாக்களிக்க வேண்டும்; யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்கிற கடமை தேர்தலிலே நிற்காத, சமுதாயப் புரட்சி இயக்கமான தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகத்திற்கு வழிகாட்டவேண்டிய தன்மை-நம்பகத் தன்மை யாரிடம் இருக்கிறது? எந்த ஆட்சி வந்தால் சமுதாய நலன், இன நலன் காப்பாற்றப்படும் என்பதை இன்று நேற்று அல்ல; தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலிருந்தே வழக்க மாக நடைமுறையிலே பின்பற்றி வருகின்ற ஓர் இயக்கமாகும்.
யாரை ஆதரிக்க வேண்டும்?
திறந்த மனதோடு இருக்கக்கூடிய பொதுமக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய அளவுகோல் என்ன? பெரியார் இந்தத் தேர்தலைப் பற்றி என்ன சொல்லுகிறார்? யாரை ஆதரிக்கச் சொல்லுகிறார்? எப்பொழுதும் தமிழ்மக்கள் எதிர்பார்ப்பது வழமையான ஒன்றாகும். தந்தை பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்திற்கு எந்தவித சுயநலமோ, பதவிக் கண் ணோட்டமோ, விருப்பு-வெறுப்பு என்பதோ என்றைக்கும் இருந்தது கிடையாது.
நம்முடைய மக்களின் நலன் முக்கியம். மக்களின் இழிநிலையைப் போக்க எந்தக் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்பதை தந்தை பெரியார் சொல்லியதற்குப்பிறகு அதற்குப் பிறகு அவரைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்ற பெரியார் தொண்டர்களாகிய எங்களுக்கும் அந்தக் கடமை உண்டு.
அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலை
அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படுவார்கள். நாங்களோ அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலைப்படக் கூடிய வர்கள். எனவே அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையைப் பற்றிய கவலை திராவிடர் கழகத்திற்கு உண்டு. எவ்வளவு சோதனைகள் எங்களுக்கு ஏற்பட்டாலும் அறிவார்ந்த முறையிலே சமுதாயத் திற்குத் தேவையான, சமுதாயத்தை முன்னேற்றக் கூடிய கருத்துகளைச் சொல்லுகிறவர்கள் நாங்கள்.
தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் பற்றிய நூல் பாமர மக்கள் ஏமாந்து விடக்கூடாது. எச்சரிக்கையாக இருந்து ஓட்டுப் போட வேண்டும் என்பதற்காக தி.மு.க ஆட்சியின் சாதனைகளும் அ.தி.மு.க அணியின் வேதனைகளும் என்னும் தலைப்பில் நாங்கள் தயாரித்த நூலை நீங்கள் வாங்க வேண்டும். மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் ஏராளமான தகவல்கள் இந்த நூலிலே உள்ளன.
துளி அளவும் மாறாமல் கலைஞரின் பணி
நமது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஈரோடு குருகுலத்திலே பயின்றவர். அவர் அன்றைக்கு எந்த முடிவோடு பயின்றாரோ அந்த எண்ணம் இன்றளவும், துளி அளவும் மாறாமல் அன்றைக்கு தான் ஏற்றுக்கொண்ட லட்சியம் என்னவோ அதே லட்சியத்தோடு, மாறாமல், ஆட்சி என்பது மக்களுக்குத் தொண்டாற்றக்கூடிய ஒரு வாய்ப்பு என்று கருதி, நாள்தோறும் மக்கள் நலனே முக்கியம் என்று கண்ணும் கருத்துமாகப் பணியாற்றிக் கொண்டு வருகின்ற முதல்வர் கலைஞர் அவர்களின் தகத்தகாய பொற்கால ஆட்சியில் பயன் பெறாதவர்களே கிடையாது.
திருவாரூரில் கலைஞர் பேச்சு
திருவாரூரில் நேற்று கலைஞர் அவர்கள் பேசும்பொழுதுகூட, நான் யாரையும் எதிர்த்துப் பேசி இங்கே போட்டியிட வரவில்லை. எல்லோரும் எனக்கு உறவினர்கள் என்ற பந்தத்தோடு, பாசத்தோடுதான் வந்திருக்கிறேன். என் மண்ணை நேசிக்கிறேன்; திருவாரூர் மக்களை நேசிக்கிறேன் என்று பண்போடு, அரசியல் நனி நாகரித்தோடு பேசினார்.
யார் வரக்கூடாது என்பதற்கு பதினாயிரம் காரணங்கள்
தேர்தலில் யார் வர வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. ஆனால் யார் வரக்கூடாது என்பதற்குப் பதினாயிரம் காரணங்கள் உண்டு. ஏப்.13 அன்று நீங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று பொத்தானை அழுத்தும்பொழுது ஒளிவிடுகின்ற வெளிச்சம்தான் அடுத்து 5ஆண்டுகாலம் தமிழ கத்தை ஒளிரச் செய்ய நிர்ணயம் செய்யப் போகிறது.
எங்கள் பணி-எக்ஸ்ரே பணி
எங்களுடைய பணி என்பது எக்ஸ்ரே போன்ற பணி. உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகக் காட்டுகின்ற பணி. ஃபோட்டோகிராபி பணி அல்ல - டச் செய்து அழகாகக் காட்டுவதற்கு. எக்ஸ்ரேயில் உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகக் காட்டினால்தான் நோயாளிக்கு அடுத்த கிசிச்சையைச் செய்ய முடியும்.
இந்த நாட்டிலே இப்பொழுது நடைபெறுகின்ற போராட்டம் வெறும் அரசியல் போராட்டமல்ல. இனப் போராட்டம்; ஆரியர்-திராவிடர் போராட்டம். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால், கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போன்ற நிலைக்குத்தான் நாம் ஆளாக நேரிடும்.
கதாநாயகன், கதாநாயகி
2006இல் தி.மு.க. தேர்தல் அறிக்கையை கலைஞர் வெளியிட்டார். அதை கதாநாயகன் என்று அன்றைக்குச் சொன்னார்கள். 2011இல் தி.மு.க வெளியிட்டிருக்கின்ற தேர்தல் அறிக்கையோ கதாநாயகி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. நல்ல கதாநாயகனும், நல்ல கதாநாயகியும் சேர்ந்தால் நல்ல குழந்தை பிறக்கும். அது சமதர்மக் குழந்தையாக வரும். சமதர்ம ஆட்சி தமிழகத்திலே மலரும். கலைஞர் அவர்கள் 7000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தார்.
கல்விக்கடன் ரத்து
இப்பொழுது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் முழுவதும் ரத்து என்று அறிவித்தார் (கைதட்டல்).
இந்தப் பிள்ளைகளுக்கு கலைஞர் தாயுமானார், தந்தையுமானார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு கலைஞர் ஆட்சி இருக்கிறது. தலைசிறந்த மனிதாபிமானத்தின் உச்சமாக ஆட்சி திகழ்கிறது.
முதலில் மனிதனுக்கு மூளை சரியாக இயங்க வேண்டும். அப்புறம் வயிறு இயங்க பார்க்கப்படும். கலைஞர் ஆட்சியில் மூளை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார்கள். நமது இன எதிரிகளும் மூளைக்குத்தான் விலங்கு போட் டார்கள். எனவேதான் மூளை சரியாக இருக்கவேண்டும் என்றும், எங்கும் கல்வியைப் பரவச் செய்தார் கலைஞர்.
பசியாத நல்வயிறு
பார்த்த துண்டோ!
என்று புரட்சிக் கவிஞர் எழுதினார்.
பசியாத வயிறு கிடையாது. பணம் நிறைய சேர்ந்தாலும் பசியாத வயிறு இருக்கும். நோய் வந்தாலும் பசி எடுக்காது.
புரட்சிக்கவிஞர் அப்படிச் சொல்லவில்லை. பசியா நல்வயிறு பார்த்ததுண்டோ என்று கேட்டார். பசியாத வயிறு இருக்கக்கூடாது என்று கருணையோடு நினைத்தார் அண்ணா. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொன்னார் அல்லவா?
அண்ணா சொன்னார்- ஒரு படி நிச்சயம்
வறுமையாலே-பசியாலோ, பஞ்சத்தாலோ மக்கள் இருக்கக்கூடாது என்று கருதித்தான் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வரும்பொழுது 1967லே சொன்னார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு படி நிச்சயம் என்று சொன்னார் அன்றைக்கு.
அதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு கலைஞர் செயல்பட்டார். அண்ணாவை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டார். அண்ணா ஆட்சியின் தொடர்ச்சிதானே இப்பொழுது நடைபெறுவது? முன்பாகத்தை அண்ணா எழுதினார். அடுத்த பாகத்தை கலைஞர் எழுதிக்கொண்டிருக்கிறார்.
ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்
ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குப் போடுவோம் என்று 2006ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவர், இந்த அம்மையார் சீறிப் பாய்ந்தார்.
உங்களால் கொடுக்க முடியுமா? இதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டார். பொறுத்திருந்து பாருங்கள். கொடுக்கிறோமா இல்லையா? என்று கலைஞர் சொன்னார். அடுத்து இந்த அம்மையார் நான்கு நாள்கள் கழித்து நாங்களும் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக பத்து கிலோ அரிசி கொடுப்போம் என்று சொன்னார்.
காப்பியடித்துச் சொன்னார்
அவர் சொன்ன பிற்பாடு இந்த அம்மையார் காப்பியடித்துச் சொன்னார். அதனால் இந்த அம்மையார் மீது மக்களிடம் நம்பகத்தன்மை இல்லை என்ற நிலைதான் இன்றைக்கும் இருக்கிறது. முதலில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு போட்டார் கலைஞர். அதற்குப் பிறகு அண்ணா நூற்றாண்டு விழா வந்தது. யாரும் கேட்கவில்லை. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்றார். கலைஞர் அரசின் மக்கள் நலத்திட்டங்களைப் பார்த்து மத்திய அரசே வியப்படைந்தது.
இடதுசாரி மாநிலங்களில் இல்லை
ஏழைகளுக்காகவே வாழ்கிறோம் என்று இடது சாரிகள் சொல்லுகிறார்கள். கேரளாவிலோ, மேற்கு வங்காளத்திலோ ஒரு கிலோ அரிசியை 15 ரூபாய்க்கு, 18 ரூபாய்க்கு விற்றார்கள். அந்தக் காலத்திலேயே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று போட்ட ஒரே ஆட்சி கலைஞருடைய ஆட்சிதான் என்று அவர் கையொப்பமிட்டு நிலைநாட்டினார்.
1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி
அண்ணா நூற்றாண்டில் வெறும் வெளிச்சம் மட்டும் போட்டால் போதாது அண்ணா வினுடைய எண்ணத்திற்கு செயல் உரு கொடுக்க வேண்டும் என்று கருதி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
என்ன இப்படி அறிவித்துவிட்டாரே என்று மேடையில் இருந்தவர்களுக்கு ஒரு தேக்கநிலை இருந்தது. எங்களுக்கெல்லாம் ஓர் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் கலைஞர் அவர்கள் பெரியாரிடத்திலே பயின்றவர்-ஈரோட்டுக் குருகுலத்திலே கணக் கெல்லாம் சரியாகப் போட்டு வைத்துவிட்டு ஏற்பாடெல்லாம் பார்த்துவிட்டு-குதிர் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு-
நினைவுக் குதிர்
தன்னுடைய நினைவுக் குதிர் அது எப்பொழுதும் குறையாத நினைவுக் குதிர்; அதையும் தெளிவாக வைத்துக்கொண்டு ரொம்ப அழகாக இந்தத் திட்டத்தை வெளியில் சொன்னார். ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ என்று அறிவித்தார். இது ஏதோ ஒரு வாரம் போடுவார்கள், பத்துநாள் போடுவார்கள் என்று நினைத்தார்கள். எதிர்க்கட்சித் தலைவராலே குறை சொல்ல முடிந்ததா? வரவேற்கவும் முடியவில்லை; குறை சொல்லவும் முடியவில்லை.
ரசம் வைக்க வேண்டாமா?
அதற்காக என்ன சொன்னார், அரிசி மட்டும் போதுமா? ரசம் வைத்து சாப்பிட வேண்டாமா? குழம்பு வைத்து வைத்து சாப்பிட வேண்டாமா என்று கேட்டார்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
அது கலைஞருக்குத் தெளிவாகத் தெரியும். எதையும் அலட்சியப்படுத்தக் கூடியவர் அல்லர். அவ்வளவு முதிர்ச்சி அடைந்த தலைவராக இன்றைக்கு அவர் காட்சியளிக்கின்றார்.
அப்படியா? என்று நினைத்து, உடனே உணவு அமைச்சர் எ.வ.வேலுவை அழைத்தார். இதற்கு என்ன வழி? நாளைக்கே திட்டத்தோடு வாருங்கள் என்று சொல்லிவிட்டு, அவரே விளக்கமும் சொன்னார். அடுத்து தாய்மார்களுக்கு குழம்பு, ரசம் வைக்க 50 ரூபாய்க்கு பத்து மளிகைப் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இன்றைக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு மளிகைப் பொருள் கிடைக்கிறதா-இல்லையா? சொன்னது போல் செயல்படக்கூடிய ஆட்சி- கலைஞர் ஆட்சி போல் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? (பலத்த கைதட்டல்). கலைஞர் மீது நம்பகத்தன்மை மக்களுக்கு வந்திருக்கிறது. சொன்னதையும் செய்து சொல்லாததையும் கூடுதலாக செய்யக்கூடியவர் கலைஞர் என்ற பெருமையை அவர் உருவாக்கி யிருக்கின்றார்.
அரசு ஊழியர்கள் அம்மா ஆட்சியில் பட்டபாடு
தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதைப் பாருங்கள். அரசு அலுவலர்களின் குறையை அவ்வப்பொழுது களைந்திடவும், அரசு ஊழியர் சங்கங்களின் குறைகளை கேட்டு உரிய காலத்தில் தீர்வுகாணவும் ஆணையம் ஒன்றினை அமைப்போம். -இது கலைஞருடைய அறிக்கை. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் பாருங்கள். அரசு ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது சேவை நமக்கு முழுவதுமாக சென்றடையும் வகையில் இனிமையான (அ.தி.மு.க தேர்தல் அறிக்கை), சுமுகமான சூழல் உருவாக்கப்பட்டு, அவர்களது மனநலம் பேணப்பட்டு, தமிழக அரசு ஊழியர்கள் திறம்பட பணியாற்ற உதவிடுவோம் என்று கூறப்பட்டி ருக்கிறது.
அரசு ஊழியர்களின் மனநலனையும் இனி பார்க்கப் போகிறார்கள். ஏனென்றால் சென்ற ஆட்சியிலேயே அரசு ஊழியர்களின் மன நலனைப் பார்த்தவர்கள். இந்த அம்மாவை நினைத்தாலே அரசு ஊழியர்களுக்கு மனநலம் போய்விடுகிறதே. அரசு ஊழியர் தலைவர்கள் எல்லாம் இங்கே இருக்கி றார்கள். கோ.சூரியமூர்த்தி இங்கே இருக்கிறார். படாத பாடுபட்ட அரசு ஊழியர்கள் இருக்கி றார்கள். ஜெயலலிதா ஆட்சியிலே சாலைப் பணியாளர்கள் செத்தவர்கள் எத்தனைபேர்? நினைத்துப் பார்க்க வேண்டாமா?
இந்தத் தேர்தலே அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது அல்லவா? புளுகுவதற்கு எல்லை வேண்டாமா? செத்துப் போன கோயபெல்ஸ் இன்றைக்கு உயிரோடு வந்தால்கூட, அ.தி.மு.க தேர்தல் அறிக்கையைப் பார்த்து தற்கொலை செய்துகொள்வான் (கைதட்டல்).
கெட்டிக்காரன் புளுகே எட்டுநாள்தான்
காமெடி தேர்தல் அறிக்கை இவர்களுடைய நிலைமை என்ன? நமக்கு சோர்வு ஏற்பட்டால், நமக்கு களைப்பு ஏற்பட்டால் காமெடி காட்சிகளை தொலைக்காட்சியில் பார்ப்போம். அதற்குப் பதிலாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் படித்தாலே போதும் (பலத்த கைதட்டல்). இதைவிட நல்ல நகைச்சுவை-கிச்சி கிச்சி மூட்டுவது வேறு எதுவும் கிடையாது. (கைதட்டல்).
ஆறாவது ஊதியக் குழுவால் களையப்படாமல் இருக்கும் எஞ்சிய முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை விரைவாக களைவதற்கு உரிய நடவடிக்கைகள் ஏற்படுத்துவோம் என்று சொல்கிறார். ஆறாவது ஊதியக் குழுவை மருத்துவமனையில் அறிவித்த தலைவர் கலைஞர், அவர் மருத்துவ மனையில் இருக்கிறார். உடனே அறிவித்தார். நான் அவரை மருத்துவமனையில் சந்தித்துக் கேட்டேன், என்னங்க வந்திருக்கிறது? உடல்நலம் இல்லாத நிலையில் என்ன அவசரம் - உடனே அறி விக்கிறீர்கள் என்று கேட்டேன். அய்யோ, உங்களுக்குத் தெரியாதய்யா.
உடனே கம்யூனிஸ்ட் நண்பர்கள் கொடிபிடிக்கப் பார்ப்பார்கள். அவர்களுடைய கையில் இருக்கின்ற கொடியை நாம பிடுங்கிவிட வேண்டாமா? எனக்குத் தெரியும் இது என்று சொன்னார். இன்றைக்கு இடதுசாரி களுடைய நிலை என்ன? அரசு ஊழியர்கள் அனு பவித்து வரும் சலுகைகள் தற்பொழுது தொடரும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு ஞாபகம் வராதா? இரவு 12 மணிக்கு அவர்கள் பட்டபாடு தெரியாதா? இரவு 12 மணிக்கு அரசு ஊழியர்களை எழுப்பினால் போலீஸ் தான் வந்திருக்கிறது போலியிருக்கிறது என்று நினைக்கின்ற அளவுக்கு அரசு ஊழியர்கள் கொடுமை அனுபவித்தவர்கள் ஆயிற்றே!
டெஸ்மா, எஸ்மா, அம்மா இதை இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா (கைதட்டல்). அரசு ஊழியர்கள் அவ்வளவு பேருக்கும் மறுவாழ்வு கொடுத்த ஆட்சி கலைஞரின் பொற்கால ஆட்சி! (கைதட்டல்). இந்த அம்மையார் காலத்தில் நிறுத்தப்பட்ட சம்பளம் உள்பட சேர்த்துக் கொடுக்கக்கூடிய அளவுக்கு கலைஞர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி மேலும் பல கருத்துகளை எடுத்துக்கூறி விளக்கினார்.
கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
-தமிழர் தலைவர் வருணனை
காமராசர் அவர்கள் வந்ததற்குப் பிறகு, கலைஞர் அவர்கள் வந்ததற்குப் பிறகு, கல்வி நீரோடை இன்றைக்கு நாடெல்லாம் பாய்ந்திருக்கிறது. மன்னர்கள் ஆட்சி காலத்திற்கு முன்பு ஒரு விழுக்காடு இருந்த கல்வி அறிவு இன்றைக்கு 72 விழுக்காடு வளர்ந்திருக்கிறது. படித்தவர்கள் வந்திருக்கிறார்கள். தடுக்கி விழுந்தால் கலைஞர் ஆட்சியில் பொறியாளர்கள் மீதுதான் விழ வேண்டும். டாக்டர்கள் மீதுதான் விழ வேண்டும். அந்த அளவுக்கு படித்தவர்கள் வந்திருக்கிறார்கள். படிப்பு என்பதிலே முக்கியமானது தொழில் கல்வி படிப்புதான். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அவர் நுழைவுத் தேர்வை கொண்டு வந்தார். அதன் விளைவு நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே படித்து முன்னேறி வந்தார்கள். கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்புக் கிட்டவில்லை.
தி.க.வும், தி.மு.க.வும் 21 ஆண்டுகள் போராடின
திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக்கழகமும் 21 ஆண்டுகளாகப் போராடி அந்த நுழைவுத் தேர்வை ஒழித்தோம். அதனால்தான் கல்விக்கண் திறக்கப்பட்டது. எங்கு பார்த்தாலும் பள்ளிக் கட்டடங்கள், பொறியியல், கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளைக் காணலாம்.
தேவடியாகுப்பம்
நம்முடைய நிலை என்ன தெரியுமா? திருவண்ணா மலைக்கு அருகில் உள்ள ஓர் ஊருக்குப் பெயரே தேவடியாகுப்பம் என்று இருந்தது. அவ்வளவு இழிவாக நம்மை வைத்திருந்தார்கள். தஞ்சையிலே தொம்பன்குடிசை என்று ஒரு பகுதி இருந்தது. நமக்குத் தெரிந்த ஒரு ஆட்சி வந்த பிறகு தான் அந்தப் பகுதிக்கு தொல்காப்பியர்சதுக்கம் என்றே பெயர் சூட்டப்பட்டது.
இன்றைக்கு சென்னை மாநகர மேயராக வந்திருக் கின்றவர் மா.சுப்பிரமணியன். அவர் ஒரு சீரிய பகுத்தறிவாளர். அவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி நடக்கக் கூடியவர். கார்ப்பரேசன் பள்ளிக் கூடங்களில் படிக்கும் பள்ளிப் பிள்ளைகளுக்கெல்லாம் இலவசமாக மடிக்கணினியை வழங்கினார்.
ஒரு காலத்தில் கார்ப்பரேசன் பள்ளிக் கூடம் என்றால் கீழ்த்தரமான பள்ளிக்கூடமாக நினைக்கப்பட்டது.
கார்ப்பரேசன் பள்ளிகளில் மடிக்கணினி
இன்றைக்கு அந்த நிலையை மாற்றி உயர்தர பள்ளிகளுக்கு ஈடாக கார்ப்பரேசன் பள்ளிகள் எந்த வகையிலும் குறைந்தவையல்ல என்று சாதனைப்படைத்து வருகிறார்.
திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது கூட முதல்வர் கலைஞர் சொன்னார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தோம். வேறுபாடு இல்லாமல் அதை அனைத்துப் பிள்ளைகளுக்கும் கொடுங்கள் என்று கூட்டணிக் கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர்.
அனைவர்க்கும் அனைத்தும் பாகுபாடு இன்றி அனைத்துப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று கலைஞர் அறிவித்தாரே!
அனைவர்க்கும் அனைத்தும் வழங்கக் கூடியவர்தான் கலைஞர் அவர்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் - இந்த அம்மையார் அப்படியே காப்பியடித்து வெளியிட்டிருக்கின்றார்.
காப்பி அடிப்பு
இந்த அம்மையாரை யாராவது நம்புவார்களா?
கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்து - தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி
என்ற பாடலுக்கு ஏற்ப தேர்தல் அறிக்கையை இந்த அம்மையார் வெளியிட்டிருக்கின்றார்.
(தமிழர் தலைவர் கி.வீரமணி உரையிலிருந்து - சென்னை பெரியார் திடல் 24.3.2011)
சூரியனை மூடச் சொல்லுமா தேர்தல் ஆணையம்? தமிழர் தலைவர் தர்க்கரீதியான கேள்வி
தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றம் கண்டித்த பிறகு தான் தனது போக்கை மாற்றிக் கொள்வேன் என்று இருக்கக் கூடாது. அதற்கு முன்னாலேயே அறிவுபூர்வமான சிந்தனை வரவேண்டும். பெரியார் சிலை, அண்ணா சிலை, காமராஜர் சிலை, எம்.ஜி.ஆர் சிலைகளை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சொல்வதா?
அதற்கும், ஓட்டுப் போடுவதற்கும் என்ன சம்பந்தம்? அப்படிப் பார்த்தால் தேர்தல் ஆணையம் இப்படி உத்தரவு போடுகிறது என்று வைத்துக் கொள்வோம். எல்லோரும் ஏப்ரல் 13ஆம் தேதி வரை கையை கட்டிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கையை நீட்டினால் அது காங்கிரஸ் சின்னம் (கைதட்டல்).
சூரியன் நாளை முதல் உதயமாகக் கூடாது. தேர்தல் ஆணையத்தின் ஆணை இது. காரணம் என்ன வென்றால் சூரியன் தேர்தல் சின்னம்; ஆகவே அதை மூடி விட வேண்டும் என்று சொன்னால் அறிவுக்குப் பொருத்தமா? (கைதட்டல்).
இலை இருக்கக் கூடாது, எல்லா மரத்திலும் இருக்கின்ற இலைகளையும் கழிச்சிக் கட்ட வேண்டும்.
மாம்பழம் எங்கேயும் இருக்கக் கூடாது, கடைகளிலும் விற்கக் கூடாது என்ற உத்தரவு போடுவார்களா? என்னய்யா அர்த்தம், அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டாமா? பகுத்தறிவாளர்கள் நாங்கள். எங்களுக்கு அரசியல் கண்ணோட்டமில்லை. நாட்டு மக்கள் முன்னேற்றக் கண்ணோட்டம், விஞ்ஞானக் கண்ணோட்டம் தான் உண்டு. கேலிப்பொருளாக தேர்தல் ஆணையம் ஆகக் கூடாது. நியாயத்தை நிலை நாட்டக் கூடியவர்களாக ஆகுங்கள்.
மக்கள் உங்கள்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை இழக்கும்படி நடந்து கொள்ளாதீர்கள்.
(தமிழர் தலைவர் கி.வீரமணி உரையிலிருந்து - சென்னை பெரியார் திடல் 24.3.2011)
இதுகூடத் தெரியவில்லை அம்மாவுக்கு?
இது அ.தி.மு.க. தேர்தல் அறிக் கையில் சொல்லப்பட்டிருக்கிறது - கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையில் இருப்பதாகும். இதில் கொஞ்சமாவது யோசனை செய்து எழுதியிருக்கின்றனரா? நான் கடுமையான வார்த்தைகள் சொல்பவன் அல்ல. அது நமக்குத் தேவையும் அல்ல. கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி அவரவர்கள் குடிவந்து விட்டார்கள். அதுவே இந்த அம்மாவுக்குத் தெரியவில்லை (பலத்த சிரிப்பு, கைதட்டல்).
வீட்டு வசதி சாத்தியம் இல்லை என்கிறார் ஜெயலலிதா. எங்கே பார்த் தாலும் வீடுகள் கட்டிக் கொடுத் திருக்கிறார் கலைஞர்.
ஒரு தெளிவு இருக்க வேண் டாமா? மக்கள் எதைச் சொன்னாலும் நம்புவார்கள் என்று நினைப்பதா? மக்களை எப்படி எடை போடு கிறார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.
எனவே இது அந்த அம்மாவின் அறியாமையைக் காட்டுகிறது. வாக்காளர்களை எவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறார் என்பதைப் பற்றி பொது மக்கள் சிந்திக்க வேண்டும். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் எங்களின் நோக்கம். கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறையில் இருப்பதாலும், மக்களுக்கு நிதிச் சுமையை ஏற்றக் கூடிய ஏமாற்று வேலை என்பதாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நவீன பசுமைத் திட்டத்தை ஏற்படுத்தும் என்கிறது அதிமுக தேர்தல் அறிக்கை. நவீன பசுமை வீட்டுத் திட்டத்தில் எப்பொழுதும் காய்கறிகள் எல்லாம் மேலேயே தொங்கும் (பலத்த கைதட்டல்). முருங்கைக்கீரை, முளைக்கீரை எல்லாம் பக்கத்திலேயே குடி இருக்கும்.
நவீன பசுமை வசதித் திட்டம். அனைவருக்கும் குறைந்த விலை யில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள சூரியசக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப் படும் என்று தேர்தல் அறிக்கை யிலே அம்மையார் சொல்லி யிருக்கிறார்.
பாவம், ஒன்று தெரிந்து கொள் ளுங்கள் - இந்த அம்மாவுக்கு மேல் உதிப்பது சூரிய வெளிச்சம் தான். (கைதட்டல்). சூரிய வெளிச்சத்தை ஜெயலலிதா வால் கூடத் தடுக்க முடியாது (கை தட்டல்).
கலைஞர் கட்டிய வீட்டிற்குள் சூரிய வெளிச்சம் வருகிறதோ இல்லையோ, இந்த அம்மா கட்டுகிற வீட்டில் சூரிய வெளிச்சம் வரும் என்றால் இந்த அம்மையார் தன் னுடைய தோல்வியை பெருமன தோடு ஒப்புக் கொண்டுவிட்டார்; ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார் (பலத்த கைதட்டல்).
எழுதியவன் ஏட்டைக் கெடுத் தான்.
படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்.
எழுதிக் கொடுத்தவன் இஷ்டத் திற்கு எழுதிக் கொடுத்துவிட்டான். இந்த அம்மா அதைப் பார்க்கவில்லை. சூரியன் என்றாலே இந்த அம்மா வுக்கு அலர்ஜி ஆச்சே. என்னய்யா யாரோ தி.மு.க. காரன் நமது கட்சிக்குள்ளேயே புகுந்திருக்கிறான் என்று நினைக்கும்.
இந்த அம்மா சூரிய வெளிச்சம் - சூரிய மின்சார சக்தியைத்தானே நம்ப வேண்டியிருக்கிறது? எனவே வீடுகளைக் கட்டிக் கொடுத்தவர் களை நம்புவார்களா? கட்டப் போகிறோம் என்று சொல்கிறவர் களை நம்புவார்களா? நினைத்துப் பார்க்க வேண்டும்.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் உரையிலிருந்து சென்னை பெரியார் திடல் 24.3.2011
பேசு நா இரண்டுடையாய் போற்றி, போற்றி!
ஆரிய மாயைபற்றி அண்ணா சொன்னது
எவ்வளவு சரி என்பது புரிகிறதா?
இலவச டி.வி., இலவச கியாஸ் அடுப்பு என்று தி.மு.க., தந்தது கண்டும், மேலும் சில இலவசங் களை தி.மு.க. தந்தபோது அக்கிர கார சோ இராமசாமிகளின், அவரது சீடக் கோடி வைத்திய நாதன்களின் குடுமிகள் ஆடியது கொஞ்சமா, நஞ்சமா? இலவசங்கள் மூலம் பொருளாதாரமே பாழ்பட்டு விடுகிறதே என்று அங்கலாய்த் தார்கள்.
இப்போது சிறீரங்கம் அய்யங் கார் அம்மையார் தி.மு.க. தேர்தலை மிஞ்ச இலவச ஏலத்தைப் போடத் துவங்கி விட்டவுடன்,
அவாள் அப்படிச் செய்யும்போது இவாளால் சும்மாயிருக்க முடியுமோ என்று ராகத்தை தலைகீழாக மாற்றி வாசிக்கத் துவங்கி விட்டனரே!
இதுதான் ஆரியம்!
இரட்டை நாக்கு பேர்வழிகளைப் புரிந்து கொண்டு,
நல்லாட்சி மலர தி.மு.க. கூட்டணிக்கே வாக்களியுங்கள்.
----------------”விடுதலை” 24-3-2011
தி.மு.க.வையே ஆதரிக்க வேண்டும் - ஏன்?
தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும் - அ.தி.மு.க. அணியின் வேதனைகளும் எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள நூல் திராவிடர் கழக வெளியீடாக வந்துள்ளது. நேற்று சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் அந்நூல் வெளியிடப்பட்டது.
80 பக்கங்களைக் கொண்ட இந்நூலுக்கான நன்கொடை வெறும் பத்தே ரூபாய்தான். அடக்க விலைக்கும் குறைவாகவே வழங்கப்படுகிறது. வெளியீட்டு நிகழ்ச்சியிலேயே 960 புத்தகங்களை பொது மக்கள் பெற்றுக் கொண்டார்கள்.
தி.மு.க. ஆட்சி கடந்த அய்ந்து ஆண்டுகளில் எத்தகைய சாதனைகளைச் செய்துள்ளது. சொன்னதை எப்படியெல்லாம் நிறைவேற்றியுள்ளது என்பது புள்ளி விவரங்களுடனும் ஆதாரங்களுடனும் ஒரு பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.
வேறு எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் செய்ய நினைக்காத - செய்யத் துணியாத சமூகப் புரட்சித் திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றியிருக்கிறது.
குறிப்பாக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, தமிழ் செம்மொழி, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு, நாடெங்கும் 240 இடங்களில் ஜாதிஒழிப்பு - தீண்டாமை ஒழிப்புத் திட்டமான பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள், தீட்சிதர்ப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் கொள்ளை போன சிதம்பரம் நடராசன் கோயிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தமை, வடலூரில் வள்ளல் இராமலிங்க அடிகளார் அவர்களால் உண்டாக்கப்பட்ட சத்ய ஞான சபையில் அவர் கொள்கைக்கு விரோதமாக உருவ வழிபாடு நடத்தி, பகற் கொள்ளையடித்த பார்ப்பன அர்ச்சகரை சட்ட ரீதியாக வெளியேற்றியமை - இன்னோரன்ன திட்டங்களை கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியேயன்றி வேறு எந்த ஆட்சியாலும் செய்திருக்க முடியுமா என்பது காரண காரியங்களோடு இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
தீண்டாமை வெறியின் காரணமாகத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் மற்றும் கொட்டக்கச்சியேந்தல் ஆகிய ஊராட்சி களில் தேர்தலை நடத்திக் காட்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை, துணைத் தலைவர்களை தலைநகரமான சென்னைக்கு அழைத்து வந்து பாராட்டு விழா நடத்திய சமூகப் புரட்சிக் கொள்கையையுடையது தான் தி.மு.க. ஆட்சியாகும்.
தொழிற் கல்லூரிகளில் சேர்ந்திட நுழைவுத் தேர்வு என்கிற பார்ப்பன வஞ்சகம் தி.மு.க. ஆட்சியால்தான் சட்ட ரீதியாகத் தடுக்கப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாகக் கூறி, உரிய முறையைப் பின்பற்றாத தால்தான் நீதிமன்றத்தில் தோல்வி காணப்பட்டது.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறிய யோசனையை அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளாததால்தான் அந்த நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் சமூக நீதியில் உண்மையான அக்கறை கொண்ட கலைஞர் அவர்கள், கழகத் தலைவர் கூறிய யோசனையின் அடிப்படையில் கல்வியாளர்கள் குழு ஒன்றை ஏற்படுத்தி, அவர்கள் தந்த கருத்தின் அடிப்படையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தைச் செய்ததால் நீதிமன்றத்திலும் அச்சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பும் பெறப்பட்டது.
இந்த நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமாக மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கில் நுழைய முடிந்தது. முதல் தலைமுறையைச் சேர்ந்த இவர்கள் தொழிற் நுட்பப் பட்டதாரிகளாகக் கம்பீரமாக வெளிவந்து, சமூக நிலையிலும் பொருளாதார நிலையிலும் தலை தூக்கி நிற்கும் ஓர் உன்னத நிலை முகிழ்த்துக் கிளம்பியது.
சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்த்தெடுக்கப் பட்டாலன்றி சம அந்தஸ்துடன் சமூகத்தில் வீறுநடை போட முடியாது என்னும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட - அதனையே சுவாச மாகக் கொண்ட ஒருவர் முதல் அமைச்சராகத் தமிழ் நாட்டில் 5ஆம் முறையாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டதால் இத்தகு சாதனைகள் எட்டப்பட்டன.
சமூகத்தில் பெரும்பான்மையினரான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள்தான் பெரும்பாலானவர்கள் ஆவார்கள். ஆனால் அவர்கள் சமூக நிலையிலும், கல்வி ரீதியிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கிடந்தார்கள். அவர்களைக் கைதூக்கி விடுவதுதான் சமூக ஜனநாயகம் என்று உணர்ந்த, அந்தத் திசையில் செயல்பட்டு வரும் தி.மு.க. ஆட்சியை மீண்டும் கொண்டு வர மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான இந்த வெகு மக்கள் முன் வருவார்களாக!
----------------”விடுதலை” தலையங்கம் 24-3-2011
Friday, March 25, 2011
Wednesday, March 23, 2011
ம.தி.மு.க. - தே.மு.தி.க.பற்றி அ.தி.மு.க. கணித்தது என்ன?

ம.தி.மு.க. - தே.மு.தி.க.பற்றி அ.தி.மு.க. கணித்தது என்ன?
ம.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துவிட்டது; 2006 ஆம் ஆண்டு தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து 35 இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க.வுக்கும் - ம.தி.மு.க.வுக்கும் இடையில் தொகுதி ஒதுக்கீட்டில் ஒரு நெருடல் ஏற்பட்டது. 22 இடங்களை அளிக்க தி.மு.க. முன்வந்தது. 25 இடங்களில் விடாப்பிடியாக நின்றது ம.தி.மு.க.
இந்த நிலையில், 3 இடங்களுக்காக தி.மு.க. கூட்டணி உறவை முறித்துக்கொண்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து 35 இடங்களில் தேர்லில் போட்டியிட்டது.
2011 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தியது.
இன்னொரு பக்கத்தில் காங்கிரசுடனும், அ.தி.மு.க. பேரம் பேசிக்கொண்டு இருந்தது.
தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதி என்ற நிலை திட்டவட்டமாகத் தெரிந்த நிலையில், அவசர அவசரமாக தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகளை அளித்து ஒப்பந்தம் செய்துகொண்டது அ.தி.மு.க.
மற்ற கூட்டணிக் கட்சிகளோ அ.தி.மு.க. தலைமையைச் சந்திக்க ஊசி முனையில் தவம் கிடந்தன.
இந்த நிலையில் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, அதன் கூட்டணிக் கட்சிகளை அதிர்வுப் பள்ளத் தாக்கில் உருட்டித் தள்ளியது அ.தி.மு.க.
சுயமரியாதை எரிமலைக் கட்டுத் தறியில் இருந்து அறுத்துக் கொண்டு கிளம்பிவிட்டது, அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளுக்கு.
சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட விஜயகாந்த் என்ற தன்னேரில்லாத நடிகர் - தலைவரை நோக்கிப் படையெடுத்தனர்.
இனி அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தோள் தட்டினார் தோழர் தா. பாண்டியன்.
மூன்றாவது அணிபற்றிக் கூடி முடிவெடுப்போம் என்று அவர்கள் சொன்ன தொனியில், நெருப்புத் துண்டுகள் சீற்றத்துடன் வெளிவந்தன.
சுயமரியாதையின் வெப்பம் 24 மணிகள்வரைகூட தாக்குப் பிடிக்கவில்லை. ஜில்லிட்டு விட்டது. இடதுசாரிகளில் சி.பி.எம். கூட்டணித் தலைவரைத் தனியாக சந்தித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைவிடக் கூடுதல் இடங்கள் பெறுவதில் மிகக் கவனமாக இருக்கும். இந்த முறையும் அதுதான் நடந்தது - அது எப்படியோ போகட்டும்!
ம.தி.மு.க. கடந்த 5 ஆண்டுகாலமாக அ.தி.மு.க.வின் நகமும் சதையுமாக உடன்கட்டை ஏறும் உணர்வோடு அ.தி.மு.க.வுடன் கைகோத்து இருந்து வந்திருக்கிறது.
தே.மு.தி.க.வுடன் உறவு என்றவுடன் ஜெயலலிதா அம்மையாருக்கு மற்ற கட்சிகள் எல்லாம் கடுகுகளாகத் தென்பட்டுவிட்டன.
இந்த இடத்தில் மலரும் நினைவு பின் திரையில் ஓடக்கூடிய முக்கியமான தகவல் ஒன்று இருக்கிறது.
2006-களில் தே.மு.தி.க.வுக்கும், அ.இ.அ.தி.மு.க.வுக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பிரயோகங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
ஜெயலலிதா அம்மையார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
இந்தத் தேர்தலில் தேசிய முற்போக்குத் திராவிட கழகம் சாதித்துவிட்டது என்கிறார்கள். அந்தக் கட்சி வெறும் 3 சதவிகித இடங்களில்தான் வெற்றி பெற்று இருக்கிறது. இதே 3 சதவிகித இடங்களை நமது தோழமைக் கட்சியான ம.தி.மு.க. கூடப் பெற்றிருக்கிறது (தினத்தந்தி, 24.10.2006, பக்கம் 2) என்று அறிக்கை வெளியிட்டவர்தான் ஜெயலலிதா.
இதே கருத்தை இன்னும் கொஞ்சம் விலாவாரியாக அறிக்கை வாயிலாகத் தெரிவித்தவர் அன்றைய அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரான ஓ. பன்னீர்செல்வம்.
நேற்று தோன்றிய தே.மு.தி.க. முன்னுக்கு வந்துவிட்டதாகவும், தனக்கென வாக்கு வங்கியை உருவாக்கிவிட்டதாகவும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு கருத்து விதைக்கப்பட்டு வருகிறது - தே.மு.தி.க. வெறும் 3 சதவிகித இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
இதே வெற்றியை ம.தி.மு.க.வும் பெற்றிருக்கிறது என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதில் கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் என்னவென்றால், தே.மு.தி.க. 100 சதவிகித இடங்களில் போட்டியிட்டது, வெற்றி பெற்றது 3 சதவிகிதமாகும். ஆனால், ம.தி.மு.க.வோ 17.5 சதவிகித இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. 3 சதவிகித இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது என்பதே உண்மை. 100 சதவிகிதம் எங்கே? 17.5 சதவிகிதம் எங்கே? அந்த வகையில் பார்த்தால் ம.தி.மு.க.வின் வெற்றி மகத்தான ஒன்றாகும் (தினத்தந்தி, 27.10.2006, பக்கம் 8).
அடடே, அரசியலில்தான் எத்துணை எத்துணை அந்தர்பல்டி - அசகாய குட்டிக்கர்ணம்!
தே.மு.தி.க.வைவிட ம.தி.மு.க.தான் மக்களிடத்தில் செல்வாக்குடைய கட்சி - வாக்கு வங்கிக் கட்சி என்று அறிக்கை வெளியிட்ட அதே அ.தி.மு.க.தான்-
தே.மு.தி.க.வுக்குப் பட்டுக் கம்பளம் விரித்து - பூர்ண கும்பம் கொடுத்துத் தோட்டத்துக்கு அழைத்து 41 இடங்களைத் தூக்கிக் கொடுத்துத் துந்துபி முழக்கத்துடன் வழியனுப்பி வைத்திருக்கிறது.
தே.மு.தி.க.வைவிட மக்கள் செல்வாக்கான கட்சி என்று அ.தி.மு.க. தலைமையாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட ம.தி.மு.க.வுக்கோ ஆறில் ஆரம்பித்து பன்னிரெண்டில் முற்றுப்புள்ளி வைத்து அவமானப்படுத்தி - தோட்டத்தின் கதவைத் தடார் என்ற சத்தத்துடன் சாத்திக் கொண்டது.
அரசியலில் ஆயிரம் ஆயிரம் வேறுபாடுகளைக் கூட கலைஞர் அவர்களிடத்தில் காணக் கூடும்.
அதேநேரத்தில், அடுத்தவரை, அடுத்த கட்சியினரை இப்படியெல்லாம் அவமதித்தார் என்று ஒரு விரலை மடக்க முடியுமா?
அ.தி.மு.க.வில் இப்பொழுது நேசக்கரம் நீட்டியுள்ள கூட்டணிக் கட்சிகள் எத்தனை நாள்களுக்கு ஜெயலலிதா அம்மையாருடன் தாக்குப் பிடிக்கும்?
நாடு அறிந்த ஒன்றுதானே!
---------------- கருஞ்சட்டை "விடுதலை” 23-3-2011
Tuesday, March 22, 2011
கலைஞர் யார்? ஜெயலலிதா யார்?

கடந்த காலத்தில் என்னென்ன சாதித்தோம்? எதிர் காலத்தில் என்னென்னவற்றை சாதிக்க இருக்கிறோம்? என்று பட்டியல் போட்டுக் காட்டிக் கம்பீரமாகத் தேர்தலில் மக்களைச் சந்திக்கும் திராணி உள்ள கட்சிதான் தி.மு.க. எதிர் அணியில் இருப்பவர்களை இந்தத் தராசில் எடை போட முடியுமா என்றால் அது முடியாது.
மக்களுக்கு நலன் என்பதைவிட, மக்களைத் துச்சமாக பாதிக்கச் செய்து துன்புறுத்தும் போக்குகள்தான் எட்டுப் பங்கு அதிகமாகும்.
பெயரில் அண்ணாவைத் தாங்கி இருக்கும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் அண்ணா ஏற்றுக் கொண்ட கொள்கையின் அடிப்படையில் பணிகள் நடைபெற்று இருக்கின்றனவா?
கட்சியில் திராவிட என்னும் இன பண்பாட்டுச் சொல் இடம் பெற்று இருக்கிறதே - அதன் அடிப்படையிலாவது காரியங்கள் செய்யப்பட்டுள்ளனவா?
இதுபோன்ற கேள்விகளை ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.இ.அ.தி.மு.க.வை நோக்கிக் கேட்கவே கூடாது.
கட்சியின் அடிப்படையைப் புரிந்து கொண்டு தம்மை இணைத்துக் கொண்டவர் அல்ல அவர்.
அதனால்தான் கட்சியின் வேட்பாளர் பட்டியலை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் சன்னதிக்கு எடுத்துச் சென்று அந்தச் சாமியின் காலடியில் கொண்டு போய் வைத்து விட்டு, வெளியிட்டனர்.
அப்படி வெளியிடப்பட்ட பட்டியலின் கதி என்ன? ஊரே சிரிக்கிறது! ஊருக்கு ஊர் உட்கட்சிப் போராட்டங்கள்; பட்டியலை மாற்ற வேண்டிய அவசியங்கள் எல்லாம் ஏற்பட்டதுதான் மிச்சம். திருவொற்றியூர் அம்மனின் காலடி சக்தியைப்பற்றி இதற்குப் பிறகாவது அம்மையார் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா?
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போதும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போதும்கூட, அங்கு சென்று அம்மனின் காலடியில் வைத்துப் பூசித்துத்தானே பட்டியலை வெளியிட்டார்கள்? பிள்ளை பிழைத்ததா? தோல்வியின் சுமையில்தானே அழுந்திப் போனார்கள்?
ஒரு நிருவாகத்தை நடத்துவதற்கு அதன் அலுவலர் கள் தான் அடிப்படை. அவர்களையே அச்சுறுத்துவதும், அடிமையாக நடத்த ஆசைப்படுவதும் சரியானதுதானா? அந்தக் கொடுங்கோன்மைகளை எதிர்த்து -உரிமைக்காகக் குரல் எழுப்பிய லட்சோப லட்ச அரசுப் பணியாளர்களின் குரல் வளையை நெரிக்கும் வகையில், எஸ்மா டெஸ்மா என்ற ரவுலட் சட்டங்களைக் கொண்டு வந்து, ஒரே ஆணையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் பேர்களை வீட்டுக்கு அனுப்பினாரே, முதல் அமைச்சர் ஜெயலலிதா? அதன் விளைவு என்ன? அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுதான் மிச்சம்.
அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட்டு கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்த நிலையில், பழைய ஆணையைத் தூக்கி எறிந்து, அரசு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தினாரே - ஒரு முதல் அமைச்சர் என்பவர் அரசு ஊழியர்களுக்குத் தந்தை என்ற நிலையில் உள்ளவர் - அந்த உணர்வோடு, ஒரு சிறு போராட்டத் துக்கும் இடமின்றி வேலைகள் வீறு நடைபோட்டு நடக்கின்றனவே, இது அல்லவோ ஆட்சி!
இன்றைக்கு அரசுப் பணியாளர் அவர்தம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஒரு கோடி பேர் உள்ளார்களே. அந்த ஒட்டு மொத்தமான வாக்குகள் தி.மு.க.வுக்கும் அதன் அணிக்கும்தான் கிடைக்கப் போகின்றன என்பதில் எவ்வித அய்யப்பாட் டுக்கும் இடம் இல்லவே இல்லை.
அரசின் மொத்த வருமானத்தில் 90 விழுக்காட்டுக்கு மேல் அரசு ஊழியர் சம்பளத்துக்கே போகிறது என்று சொன்னவர் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. அதாவது உண்மையா?
சற்றும் நிதானமின்றிச் சீறி எழுகின்ற சினத்தினால் காரியங்கள் சீர் கெட்டுப் போய்விடுகின்றன. ஒவ்வொரு நாளும் எதிரிகளை வருந்தித் தேடிக் கொள்வதில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஈடு அவரேதான் - வேறு யாருமிலர்.
முதல் அமைச்சர் என்கிற முறையில் அவரிடம் தேங்கிக் கிடந்த கோப்புகளில் எண்ணிக்கைக்கு அளவேயில்லை. காரணம், எளிதாக அவருடன் தொடர்பு கொள்ள முடியாததுதான். அரசு அலுவலர்களுக்கே இந்த நிலை என்றால் பொது மக்களின் நிலை என்ன?
முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு கொடுக்க வந்து, சந்திக்க முடியாமையால் மனம் உடைந்து, நஞ்சுண்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் உண்டு. அப்படி ஒரு பட்டியலைக்கூட தினமணி (23.5.2002) வெளியிட்டதுண்டு.
அத்தகைய ஒரு மாஜி முதல் அமைச்சரைத்தான் தினமணி வகையறாக்கள் விழுந்து விழுந்து கற்பனைச் செய்திகள் என்கிற தூண்களைக்கொண்டு முட்டுக் கொடுத்து நிமிர்த்தப் பார்க்கின்றன.
யார் மறந்தாலும் பழி வாங்கப்பட்ட லட்சோப லட்ச தமிழர்கள் இனவுணர்வோடு அ.தி.மு.க., பொதுச் செய லாளர் ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் என்பதில் அய்யமில்லை
---------------"விடுதலை” தலையங்கம் 22-3-2011
வைகோவின் அரசியல் பாதை எப்படி அமைய வேண்டும்?
சகோதரர் வைகோவுக்கு தமிழர் தலைவர் திறந்த மடல்
ஆரிய மாயை உங்களை வஞ்சம் தீர்த்துவிட்டது
துணிந்து முடிவு எடுங்கள் தி.மு.க. உறவுதான் கொள்கை ரீதியானது!
வைகோ அவர்களையும், அவர் பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய ம.தி.மு.க.வையும் அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அம்மையார் அவமதித்து, வஞ்சம் தீர்த்த நிலையில், வைகோ அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய திறந்த மடல் இதோ:
அன்புள்ள ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சகோதரர் மானமிகு வைகோ அவர்களுக்கும், அவரது கட்சியின் சகோதரர்களுக்கும் உங்கள் தாய்க் கழகத்தின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குத் தொண்டன் மிகுந்த பாசத்துடன் எழுதும் உரிமை வேண்டுகோள் இது.
அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கள் கட்சியை தொகுதிப் பங்கீடு என்ற ஒரு சாக்கைப் பயன்படுத்தி, திட்டமிட்டே வெளியேற்றியது கண்டு - தங்களுக்கும், தங்களை நம்பி தொடர்ந்து பின்பற்றும் உடன்பிறப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள அவமரியாதை கண்டு எங்கள் மனம் வேதனைப்படுகிறது.
தான் ஆடாவிட்டாலும்...
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடக்கூடிய அளவுக்கு கொள்கை லட்சிய முறையில் தந்தை பெரியார் என்ற மூல வேரிலிருந்து கிளைத்தவர்கள் அல்லவா நாம் அனைவரும்?
தங்களுக்குத் தொகுதிகளைக் குறைத்துக் கொடுத்ததைவிடக் கொடுமை, தங்களை (தங்கள் என்று சொல்லும்போது உங்களுடன் உள்ள உடன்பிறப்பு, தோழர்களையும் இணைத்தே சொல்வ தாகக் கொள்ள வேண்டுகிறோம்) அக்கூட்டணி யிலிருந்து அவமானப்படுத்தி, அதன் மூலம் ஆத்திரம் கொப்பளிக்க தாங்கள் இரவெல்லாம் பேசி முடிவு எடுக்க வைத்ததன் ஆரிய மாயை பற்றி எம்மைப் போன்ற - அவரை அணுஅணுவாக உணர்ந்தவர் களுக்கு இதில் வியப்போ, அதிர்ச்சியோ ஏற்பட வில்லை. இது தங்களுக்கு என்றோ ஒரு நாள் நடைபெறும் என்பதை எதிர்பார்த்தவர்கள் நாங்கள் - விரும்பியவர்கள் அல்லர்.
வெளியிலிருந்து முதலாளித்துவ சக்திகள் தங்களை வெளியேற்ற எவ்வளவு முழு முயற்சி எடுத் துக் கொண்டுள்ளன என்கிற செய்திதான் மேலும் ஓர் அதிர்ச்சியாக உள்ளது!
வஞ்சத்தைத் தீர்த்த அக்ரகாரம்
கடந்த காலத்தில் அந்த அம்மையாரோடு தாங்கள் ஒத்துப்போன முறை - அவர்கள் கட்சிக்காரர்கள்கூட அந்த அளவுக்குச் செய்திருக்க மாட்டார்கள் என்ற அளவு பேசப்பட்ட ஒன்று.
திருமங்கலத்தில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மறைந்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தலில், அந்த அம்மையார் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கி, தான் ஏதோ வெற்றியின் முகப்பில் உள்ளதாக ஒரு படம் காட்டச் செய்த முயற்சிக்கு நீங்கள் ஒத்துழைப்புத் தந்ததோடு, தமிழக சட்டமன்றத்திலும் - அ.தி.மு.க.வோடு இணைந்தே இடைத் தேர்தல் புறக்கணிப்பு, சட்டமன்ற வெளிநடப்பு போன்றவற்றிலும் ஒன்றிய நிலையிலேயே செயல்பட்டீர்கள்!
என்றாலும் ஆரியம் தனது வஞ்சகத்தைத் தங்கள் மீது சமயம் பார்த்துக் காட்டி, தங்களை அழித்துவிட தனது அஸ்திரத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.
ஜெயலலிதாவின் கடிதம் எத்தகையது!
தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அந்த அம்மையார் வற்புறுத்தும் கடிதமாக அவர் எழுதிய கடிதத்தின் வாசகங்கள் அமையாது, தங்களுக்கு நிரந்தர வழியனுப்பு உபசாரப் பத்திர மாகவே காட்சி அளிப்பது - அவாளின் இயல்பின் இலக்கணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
அவரிடம் உள்ள அகந்தை, ஆணவம், தன் முனைப்பு இவைபற்றிக் கூறியிருக்கிறீர்கள். இது ஒன்றும் தோண்டித் துருவிக் கண்டுபிடிக்க வேண் டியதல்ல. அவரிடம் கூட்டுச் சேர்ந்திருந்த பா.ஜ.க. தலைவர்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் முதலிய பலரும் ஏற்கெனவே பட்டு அனுபவித்து அறிந்த செய்தியாகும்.
சோ - குருமூர்த்தி - ஜெயலலிதா - இனம் இனத்தோடு!
அவரது தற்போதைய ஆலோசகர் சோ. இராமசாமி அய்யர்களும், சுப்ரமணிய சுவாமி அய்யர்களும்தான் - அதன் இனம் இனத்தோடு என்ற உண்மைக்கேற்ப,
இவர்கள் இருவருக்கும், அம்மையாருக்கும் தங்கள் கட்சி நிலைப்பாட்டில் - குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சினையில் எந்த சிந்தனைப் போக்கு என்பது உலகறிந்த உண்மையல்லவா?
தங்களுக்கு அம்மையார் ஆட்சியில் இழைக்கப்பட்ட பொடா கொடுமையை தாங்கள் அரசியல் காரண மாக மறந்திருக்கலாம்; ஆனால் இன உணர்வு, நியாய உணர்வோடு நாங்கள் என்றும் மறந்ததில்லை - சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பதும் இயல்பானதே!
எண்ணெய்யும் நீரும் கலப்பது இயல்பானதல்ல; நீரும் நீரும் கலப்பதே இயல்பு என்னும் உண்மையை அறியாததல்ல!
வைகோவின் அரசியல் பாதை எப்படி அமைய வேண்டும்?
அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை நாங்கள் சும்மா இருப்போம் என்கிற நிலைப்பாடு சரியாக அமையுமா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். என்றைக்கிருந்தாலும் நாம் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள் என்பதால் தாங்கள் தங்களது கட்சியின் எதிர்காலத்தைப்பற்றி சற்று உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா?
சுயமரியாதை உணர்வோடு தீர்மானம் நிறை வேற்றியுள்ளீர்கள்; என்றாலும், மேலும் தங்கள் அரசியல் பாதை எப்படி அமைந்தால் சிறப்பானதாக அமையும் என்பதற்கு தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூடச் சொல்ல மாட்டேன்; தனி அரசியல் கட்சியானாலும் தி.மு.க. என்ற தங்களின் தாய்க் கழகத்தின் கொள்கை, லட்சியங்களில்தான் அதிகமான ஒத்துப் போகின்ற தன்மைகள் பளிச்சிடும் நிலை உண்டு. அதை யொட்டி தாங்கள் 2004இல் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாகப் பிரச்சாரம் செய்தீர்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றைப் பற்றி வற்புறுத் தினீர்கள்.
- இவைபோன்ற பல்வேறு பிரச்சினைகளில் நெருக்கமாக இருக்கும் ஒரே அரசியல் கட்சி, தி.மு.க. வாகவும் - அதன் தலைவர் கலைஞருமாகத்தான் இருப்பார்கள். ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் நீரடித்து நீர் விலகாது என்னும் பழமொழிக்கொப்ப, நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க லட்சிய ரீதியான உணர்வு படைத்தவர்கள்.
தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப் பாட்டினை எடுங்கள். எனவே, நிதானமாக யோசியுங்கள். துணிந்து ஒரு நிலைப்பாட்டினைத் தோழர்களோடு கலந்து எடுங்கள். ஆட்சிக்கு வருமுன்னரே இப்படித் தங்களை அலட்சியப்படுத்திய ஜெயலலிதா, தப்பித் தவறி வந்தால் எப்படி விஸ்வரூபம் எடுத்து அழிக்க முற்படக் கூடும் என்பதையும் எண்ணுங்கள்.
தி.மு.க.தான் கொள்கை ரீதியாக உடன்படும் கட்சி!
தேர்தலில் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வருவது கொள்கை ரீதியாக நமக்குத் தேவையானது. உரிமையுடன் அவரிடம் ஈழப் பிரச்சினை உள்பட அனைத்துக்கும் வற்புறுத்தி வாதாடலாம், செயல்பட வைக்கலாம்.
வேகாத வெயிலையும் பொருட்படுத்தாது, பல மணி நேரம் நீதிமன்றங்களில் வந்து காத்திருந்த தலைவர் கலைஞர் அவர்கள் - தங்களை அம்மையார் பொடாவில் போட்டு வதைத்தபோது!
அது மட்டுமல்ல; அண்மையில்கூட அவரது ஆட்சியில் கைது செய்த நிர்ப்பந்த நிலை ஏற்பட்ட போதுகூட, தங்களை சிறையில் வைத்திருப்பதை விரும்பாது, மனிதநேயத்தோடு அரசு வழக்குரை ஞருக்கே சொல்லி, மறுப்புச் சொல்லாதீர்கள் என்று கூறிய மனித நேயத்தைக் கொட்டியவர் நமது கலைஞர். தங்களுக்குரிய மரியாதையை இந்த அணியில் எப்போதும் நீங்கள்பெற முடியும்.
உள்நோக்கமற்ற வேண்டுகோள்
நாம் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்பதால் நம் தமிழினம் உலகம் முழுவதும் உரிமைக் களத்தினில் வெற்றி பெற உதவிடும். இது வெறும் அரசியல் வியூகம் அல்ல - நல்லெண்ணத்தோடும், கவலையோடும் ஒரு சகோதரரின் அறிவுப்பூர்வமான வேண்டுகோள். எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களைக் கருதியோ அல்ல - இந்த வேண்டுகோள்.
மனதிற்பட்டது - தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை.
பகுத்தறிவாளர்களாகிய நாம் தொலைநோக்குப் பார்வையோடும் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதால்தான் இந்த வேண்டுகோள். சிந்திக்க, செயலாற்றுக!
-------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் -"விடுதலை” 22-3-2011
ஆரிய மாயை உங்களை வஞ்சம் தீர்த்துவிட்டது
துணிந்து முடிவு எடுங்கள் தி.மு.க. உறவுதான் கொள்கை ரீதியானது!
வைகோ அவர்களையும், அவர் பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய ம.தி.மு.க.வையும் அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அம்மையார் அவமதித்து, வஞ்சம் தீர்த்த நிலையில், வைகோ அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய திறந்த மடல் இதோ:
அன்புள்ள ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சகோதரர் மானமிகு வைகோ அவர்களுக்கும், அவரது கட்சியின் சகோதரர்களுக்கும் உங்கள் தாய்க் கழகத்தின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குத் தொண்டன் மிகுந்த பாசத்துடன் எழுதும் உரிமை வேண்டுகோள் இது.
அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கள் கட்சியை தொகுதிப் பங்கீடு என்ற ஒரு சாக்கைப் பயன்படுத்தி, திட்டமிட்டே வெளியேற்றியது கண்டு - தங்களுக்கும், தங்களை நம்பி தொடர்ந்து பின்பற்றும் உடன்பிறப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள அவமரியாதை கண்டு எங்கள் மனம் வேதனைப்படுகிறது.
தான் ஆடாவிட்டாலும்...
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடக்கூடிய அளவுக்கு கொள்கை லட்சிய முறையில் தந்தை பெரியார் என்ற மூல வேரிலிருந்து கிளைத்தவர்கள் அல்லவா நாம் அனைவரும்?
தங்களுக்குத் தொகுதிகளைக் குறைத்துக் கொடுத்ததைவிடக் கொடுமை, தங்களை (தங்கள் என்று சொல்லும்போது உங்களுடன் உள்ள உடன்பிறப்பு, தோழர்களையும் இணைத்தே சொல்வ தாகக் கொள்ள வேண்டுகிறோம்) அக்கூட்டணி யிலிருந்து அவமானப்படுத்தி, அதன் மூலம் ஆத்திரம் கொப்பளிக்க தாங்கள் இரவெல்லாம் பேசி முடிவு எடுக்க வைத்ததன் ஆரிய மாயை பற்றி எம்மைப் போன்ற - அவரை அணுஅணுவாக உணர்ந்தவர் களுக்கு இதில் வியப்போ, அதிர்ச்சியோ ஏற்பட வில்லை. இது தங்களுக்கு என்றோ ஒரு நாள் நடைபெறும் என்பதை எதிர்பார்த்தவர்கள் நாங்கள் - விரும்பியவர்கள் அல்லர்.
வெளியிலிருந்து முதலாளித்துவ சக்திகள் தங்களை வெளியேற்ற எவ்வளவு முழு முயற்சி எடுத் துக் கொண்டுள்ளன என்கிற செய்திதான் மேலும் ஓர் அதிர்ச்சியாக உள்ளது!
வஞ்சத்தைத் தீர்த்த அக்ரகாரம்
கடந்த காலத்தில் அந்த அம்மையாரோடு தாங்கள் ஒத்துப்போன முறை - அவர்கள் கட்சிக்காரர்கள்கூட அந்த அளவுக்குச் செய்திருக்க மாட்டார்கள் என்ற அளவு பேசப்பட்ட ஒன்று.
திருமங்கலத்தில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மறைந்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தலில், அந்த அம்மையார் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கி, தான் ஏதோ வெற்றியின் முகப்பில் உள்ளதாக ஒரு படம் காட்டச் செய்த முயற்சிக்கு நீங்கள் ஒத்துழைப்புத் தந்ததோடு, தமிழக சட்டமன்றத்திலும் - அ.தி.மு.க.வோடு இணைந்தே இடைத் தேர்தல் புறக்கணிப்பு, சட்டமன்ற வெளிநடப்பு போன்றவற்றிலும் ஒன்றிய நிலையிலேயே செயல்பட்டீர்கள்!
என்றாலும் ஆரியம் தனது வஞ்சகத்தைத் தங்கள் மீது சமயம் பார்த்துக் காட்டி, தங்களை அழித்துவிட தனது அஸ்திரத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.
ஜெயலலிதாவின் கடிதம் எத்தகையது!
தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அந்த அம்மையார் வற்புறுத்தும் கடிதமாக அவர் எழுதிய கடிதத்தின் வாசகங்கள் அமையாது, தங்களுக்கு நிரந்தர வழியனுப்பு உபசாரப் பத்திர மாகவே காட்சி அளிப்பது - அவாளின் இயல்பின் இலக்கணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
அவரிடம் உள்ள அகந்தை, ஆணவம், தன் முனைப்பு இவைபற்றிக் கூறியிருக்கிறீர்கள். இது ஒன்றும் தோண்டித் துருவிக் கண்டுபிடிக்க வேண் டியதல்ல. அவரிடம் கூட்டுச் சேர்ந்திருந்த பா.ஜ.க. தலைவர்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் முதலிய பலரும் ஏற்கெனவே பட்டு அனுபவித்து அறிந்த செய்தியாகும்.
சோ - குருமூர்த்தி - ஜெயலலிதா - இனம் இனத்தோடு!
அவரது தற்போதைய ஆலோசகர் சோ. இராமசாமி அய்யர்களும், சுப்ரமணிய சுவாமி அய்யர்களும்தான் - அதன் இனம் இனத்தோடு என்ற உண்மைக்கேற்ப,
இவர்கள் இருவருக்கும், அம்மையாருக்கும் தங்கள் கட்சி நிலைப்பாட்டில் - குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சினையில் எந்த சிந்தனைப் போக்கு என்பது உலகறிந்த உண்மையல்லவா?
தங்களுக்கு அம்மையார் ஆட்சியில் இழைக்கப்பட்ட பொடா கொடுமையை தாங்கள் அரசியல் காரண மாக மறந்திருக்கலாம்; ஆனால் இன உணர்வு, நியாய உணர்வோடு நாங்கள் என்றும் மறந்ததில்லை - சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பதும் இயல்பானதே!
எண்ணெய்யும் நீரும் கலப்பது இயல்பானதல்ல; நீரும் நீரும் கலப்பதே இயல்பு என்னும் உண்மையை அறியாததல்ல!
வைகோவின் அரசியல் பாதை எப்படி அமைய வேண்டும்?
அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை நாங்கள் சும்மா இருப்போம் என்கிற நிலைப்பாடு சரியாக அமையுமா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். என்றைக்கிருந்தாலும் நாம் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள் என்பதால் தாங்கள் தங்களது கட்சியின் எதிர்காலத்தைப்பற்றி சற்று உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா?
சுயமரியாதை உணர்வோடு தீர்மானம் நிறை வேற்றியுள்ளீர்கள்; என்றாலும், மேலும் தங்கள் அரசியல் பாதை எப்படி அமைந்தால் சிறப்பானதாக அமையும் என்பதற்கு தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூடச் சொல்ல மாட்டேன்; தனி அரசியல் கட்சியானாலும் தி.மு.க. என்ற தங்களின் தாய்க் கழகத்தின் கொள்கை, லட்சியங்களில்தான் அதிகமான ஒத்துப் போகின்ற தன்மைகள் பளிச்சிடும் நிலை உண்டு. அதை யொட்டி தாங்கள் 2004இல் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாகப் பிரச்சாரம் செய்தீர்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றைப் பற்றி வற்புறுத் தினீர்கள்.
- இவைபோன்ற பல்வேறு பிரச்சினைகளில் நெருக்கமாக இருக்கும் ஒரே அரசியல் கட்சி, தி.மு.க. வாகவும் - அதன் தலைவர் கலைஞருமாகத்தான் இருப்பார்கள். ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் நீரடித்து நீர் விலகாது என்னும் பழமொழிக்கொப்ப, நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க லட்சிய ரீதியான உணர்வு படைத்தவர்கள்.
தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப் பாட்டினை எடுங்கள். எனவே, நிதானமாக யோசியுங்கள். துணிந்து ஒரு நிலைப்பாட்டினைத் தோழர்களோடு கலந்து எடுங்கள். ஆட்சிக்கு வருமுன்னரே இப்படித் தங்களை அலட்சியப்படுத்திய ஜெயலலிதா, தப்பித் தவறி வந்தால் எப்படி விஸ்வரூபம் எடுத்து அழிக்க முற்படக் கூடும் என்பதையும் எண்ணுங்கள்.
தி.மு.க.தான் கொள்கை ரீதியாக உடன்படும் கட்சி!
தேர்தலில் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வருவது கொள்கை ரீதியாக நமக்குத் தேவையானது. உரிமையுடன் அவரிடம் ஈழப் பிரச்சினை உள்பட அனைத்துக்கும் வற்புறுத்தி வாதாடலாம், செயல்பட வைக்கலாம்.
வேகாத வெயிலையும் பொருட்படுத்தாது, பல மணி நேரம் நீதிமன்றங்களில் வந்து காத்திருந்த தலைவர் கலைஞர் அவர்கள் - தங்களை அம்மையார் பொடாவில் போட்டு வதைத்தபோது!
அது மட்டுமல்ல; அண்மையில்கூட அவரது ஆட்சியில் கைது செய்த நிர்ப்பந்த நிலை ஏற்பட்ட போதுகூட, தங்களை சிறையில் வைத்திருப்பதை விரும்பாது, மனிதநேயத்தோடு அரசு வழக்குரை ஞருக்கே சொல்லி, மறுப்புச் சொல்லாதீர்கள் என்று கூறிய மனித நேயத்தைக் கொட்டியவர் நமது கலைஞர். தங்களுக்குரிய மரியாதையை இந்த அணியில் எப்போதும் நீங்கள்பெற முடியும்.
உள்நோக்கமற்ற வேண்டுகோள்
நாம் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்பதால் நம் தமிழினம் உலகம் முழுவதும் உரிமைக் களத்தினில் வெற்றி பெற உதவிடும். இது வெறும் அரசியல் வியூகம் அல்ல - நல்லெண்ணத்தோடும், கவலையோடும் ஒரு சகோதரரின் அறிவுப்பூர்வமான வேண்டுகோள். எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களைக் கருதியோ அல்ல - இந்த வேண்டுகோள்.
மனதிற்பட்டது - தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை.
பகுத்தறிவாளர்களாகிய நாம் தொலைநோக்குப் பார்வையோடும் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதால்தான் இந்த வேண்டுகோள். சிந்திக்க, செயலாற்றுக!
-------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் -"விடுதலை” 22-3-2011
Wednesday, March 16, 2011
தமிழர்களே, திராவிடர்களே, இன உணர்வாளர்களே, சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
பிராமண சங்கத்தின் ஆதரவு அ.தி.மு.க.வுக்காம்
தமிழர்களே, உங்கள் கடமை என்ன?
தமிழ்நாடு வாக்காளப் பெருமக்களே,
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 13-4-2011 அன்று நடைபெற விருக்கும் நிலையில் உண்மையான போட்டி
1. கலைஞர் தலைமையில் உள்ள தி.மு.க.கூட்டணிக்கும்
2. ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க. கூட்டணிக்கும்
தான் என்பது உலகறிந்த செய்தியாகும்!
இதில் தமிழ்நாடு பிராமண சங்கம் கோவையில் கூடி ஜெயலலிதா கூட்டணிக்கே தங்கள் ஆதரவு என்று தெளிவாக, எவ்விதக் குழப்பமும் இன்றி, இனம் இனத்தோடு என்பதற்கொப்ப திட்டவட்டமாக தீர்மானம் போட்டு அறிவித்துவிட்டார்கள்.
இதோ நேற்றைய (பார்ப்பன) இனமலர்தான் என்பதை மார்தட்டிக் கூறும் வகையில் பார்ப்பன நாளேடு தினமலர் (15-3-2011) 15-ஆம் பக்கத்தில் உள்ள செய்தி இதோ: வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவர் ஸ்ரீராமன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், 13ஆம் தேதி கோவையில் நடந்தது. மாநில தலைவர் சேலம் ஆடிட்டர் ஸ்ரீராமன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட தலைவர் விஜயன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என்றும், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டளிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. நிறுவனத் தலைவர் வெங்கட்ரமணன் பேசினார். தமிழகத்தின், 24 மாவட்டங்களில் இருந்து, 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப் பினர்கள் கலந்துகொண்டனர். மாநில பொருளாளர் ஆலங்குடி வெங்கட்ராமன் நன்றி கூறினார்.
(தினமலர், 15.3.2011, பக்கம் 15)
இந்நிலையில், சூத்திர, பஞ்சம மக்களுக்காகவே உள்ள ஆட்சியான கலைஞர் ஆட்சியை ஆதரிக்கவேண்டியது உண்மைத் தமிழர்களின் உயிரினும் மேலான கடமை அல்லவா?
ஆயிரம் ஊழல் குற்றச்சாற்று, வழக்குகள் எல்லாம் அவாளிடம் இருந்தபோதிலும், ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பார்ப்பன ஏடுகள், ஊடகங்கள் எப்படியெல்லாம் தூக்கிப் பிடிக்கின்றன பார்த்தீர்களா?
இதே அளவு இன உணர்வு, மான உணர்வு நமக்கும் வேண்டாமா?
தமிழர்களே, திராவிடர்களே, இன உணர்வாளர்களே, சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
தி.மு.க. கூட்டணி வெற்றி, திராவிடர் தம் கொள்கை லட்சியங்களின் வெற்றி!
மறவாதீர்! மறவாதீர்!!
------------------”விடுதலை” 16-3-2011
தமிழர்களே, உங்கள் கடமை என்ன?
தமிழ்நாடு வாக்காளப் பெருமக்களே,
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 13-4-2011 அன்று நடைபெற விருக்கும் நிலையில் உண்மையான போட்டி
1. கலைஞர் தலைமையில் உள்ள தி.மு.க.கூட்டணிக்கும்
2. ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க. கூட்டணிக்கும்
தான் என்பது உலகறிந்த செய்தியாகும்!
இதில் தமிழ்நாடு பிராமண சங்கம் கோவையில் கூடி ஜெயலலிதா கூட்டணிக்கே தங்கள் ஆதரவு என்று தெளிவாக, எவ்விதக் குழப்பமும் இன்றி, இனம் இனத்தோடு என்பதற்கொப்ப திட்டவட்டமாக தீர்மானம் போட்டு அறிவித்துவிட்டார்கள்.
இதோ நேற்றைய (பார்ப்பன) இனமலர்தான் என்பதை மார்தட்டிக் கூறும் வகையில் பார்ப்பன நாளேடு தினமலர் (15-3-2011) 15-ஆம் பக்கத்தில் உள்ள செய்தி இதோ: வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவர் ஸ்ரீராமன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், 13ஆம் தேதி கோவையில் நடந்தது. மாநில தலைவர் சேலம் ஆடிட்டர் ஸ்ரீராமன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட தலைவர் விஜயன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என்றும், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டளிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. நிறுவனத் தலைவர் வெங்கட்ரமணன் பேசினார். தமிழகத்தின், 24 மாவட்டங்களில் இருந்து, 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப் பினர்கள் கலந்துகொண்டனர். மாநில பொருளாளர் ஆலங்குடி வெங்கட்ராமன் நன்றி கூறினார்.
(தினமலர், 15.3.2011, பக்கம் 15)
இந்நிலையில், சூத்திர, பஞ்சம மக்களுக்காகவே உள்ள ஆட்சியான கலைஞர் ஆட்சியை ஆதரிக்கவேண்டியது உண்மைத் தமிழர்களின் உயிரினும் மேலான கடமை அல்லவா?
ஆயிரம் ஊழல் குற்றச்சாற்று, வழக்குகள் எல்லாம் அவாளிடம் இருந்தபோதிலும், ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பார்ப்பன ஏடுகள், ஊடகங்கள் எப்படியெல்லாம் தூக்கிப் பிடிக்கின்றன பார்த்தீர்களா?
இதே அளவு இன உணர்வு, மான உணர்வு நமக்கும் வேண்டாமா?
தமிழர்களே, திராவிடர்களே, இன உணர்வாளர்களே, சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
தி.மு.க. கூட்டணி வெற்றி, திராவிடர் தம் கொள்கை லட்சியங்களின் வெற்றி!
மறவாதீர்! மறவாதீர்!!
------------------”விடுதலை” 16-3-2011
Friday, May 08, 2009
தொலைநோக்குப் பார்வை தேவை!
நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மற்ற மற்ற மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டாலும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை வித்தியாசமான பிரச்சினைகள் தலை தூக்கி நிற்கின்றன.
நடைபெறவிருப்பது மக்களவைத் தேர்தல்; இந்தத் தேர்தலில் தேசிய கட்சிகள் பல்வேறு மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து மாநிலங்களிலும் தனித்து நிற்கக் கூடிய அளவுக்கு எந்தத் தேசிய கட்சிகளும் இந்தியாவில் இப்பொழுது இல்லை.
மாநில அளவில் மாறுபட்ட நிலையிலும்கூட மத்திய ஆட்சியில் கூட்டணி வைத்துக்கொண்டிருந்த நிலையும் இந்தியாவில் உண்டு; எடுத்துக்காட்டாக மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரசும் எதிர் துருவத்தில் இருந்தாலும் மத்தியில் காங்கிரசோடு இணைந்து செல்லும் நிலையெல்லாம் இருந்திருக்கிறது.
கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் காங்கிரசை எதிர்த்து நிற்பார்கள்; மற்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு ஆதரவு காட்டுவார்கள்.
குறிப்பிட்ட மாநிலங்களில் காங்கிரஸ்பற்றி குற்றமாகத் தெரிவது வேறு மாநிலங்களில் தெரியாமல் மறைந்து போய்விடும் - இப்படி ஒரு விசித்திரமான அரசியல் போக்கு இந்தியாவில் உண்டு.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தி.மு.க. கூட்டணியில் மூன்றாண்டு இருந்த இடதுசாரிகள் அகில இந்திய அளவில் அக்கட்சிகளின் தலைமையெடுத்த முடிவுக்கிணங்க தி.மு.க.வின் எதிர் அணியில் தஞ்சம் புகுந்துள்ளன.
இந்தப் புதிய சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல, மூன்றாண்டுகள் வரை தி.மு.க. ஆட்சியில் தெரிந்திராத அறிந்திராத குறைபாடுகள், இப்பொழுது திடீரென்று தெரிய ஆரம்பித்திருக்கின்றன போலும்! குற்றப் பத்திரிகையைப் படிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதுவரை கடுமையாக இவர்களால் விமர்சிக்கப்பட்ட அ.இ. அ.தி.மு.க. புதிய கூட்டணி உறவு என்ற நிலையில் பாராட்டப்படும் நிலையை அடைந்திருக்கிறது.
எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிடலாம்.
தமிழக அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. மற்றும் பா.ம.க. கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டை வைத்து எதிர் காலத்தில் தமிழக அரசியல் கட்சிகளிடையே கூட்டணி சம்பந்தமாக பல்வேறு கருத்துகளை பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன. அப்படிப்பட்ட செய்திகளில் ஒன்றுதான் அ.தி.மு.க.வுடன் இடதுசாரிக் கட்சிகள் எதிர்காலத்தில் தேர்தல் உறவு வைத்துக் கொள்ளும் என்ற செய்தி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இந்தக் கருத்தை நான் மறுக்கிறேன்.
ஏனெனில், தமிழகத்தில் மதவெறி அபாயம் கவ்வியிருந்த நேரத்தில், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்குப் பெரும் பின் னடைவை ஏற்படுத்திய கட்சிதான் அ.இ.அ.தி.மு.க. இன்றுவரை மக்கள் நலம் பயக்கக் கூடிய திட்டங்களைத் தீட்டவோ அல்லது மத நல்லிணக்கத்தை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லவோ அ.தி.மு.க. முன்வரவில்லை. அப்படிப்பட்ட அ.தி.மு.க. வோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இடதுசாரிக் கட்சிகளோ கூட்டணி வைத்துத் தேர்தலில் போட்டியிடுவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. (தீக்கதிர், 21.6.2008).
- இவ்வாறு கூறியிருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் என். வரதராசன் ஆவார்.
இந்தக் கருத்துக்குப் பதவுரையோ, பொறுப்புரையோ தேவைப்படாது. இந்தத் தெளிவான நிலையை எடுத்தவர்கள் இப்பொழுது அதற்கு நேர்மாறான ஒரு நிலையை எடுத்துள்ளார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.
அ.தி.மு.க.மீது வைத்துள்ள குற்றச்சாற்று என்பது சாதாரணமானது அல்ல; அடிப்படையான ஆழமான குற்றச்சாற்று ஆகும். இந்த 11 மாதங்களில் அ.தி.மு.க. தன் நிலைப்பாட்டில் மாற்றம் பெற்றதும் இல்லை. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சினையான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ராமனைக் காட்டி முடக்கும் அ.தி.மு.க.வின் நிலை ஒன்று போதாதா?
உண்மை நிலைகள் இவ்வாறு இருக்க, தாங்கள் இருக்கும் அணி இலட்சிய அணி என்றும், இயற்கையான அணி என்றும் பேசுவதெல்லாம் யாரை ஏமாற்ற? பொதுமக்களின் பாமரத்தனம் கைகொடுக்கும் என்று நினைத்தால் அதைவிட மோசடி வேறு ஒன்று இருக்கத்தான் முடியுமா?
ஈழத் தமிழர் பிரச்சினையில் கூட தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் அடிப்படையில் மாறுபாடுகள் இருக்கின்றன.
அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குள்ளும் இப்பிரச்சினையில் மாறுபட்ட நிலைப்பாடுகள் உண்டே! அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகள் பிரச்சினையில் ஜெயலலிதா கொண்டுள்ள அழுத்தமான கருத்தினை அக்கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.வோ, பா.ம.க.வோ ஏற்றுக்கொள்கின்றனவா?
தொடக்கத்தில் இருந்ததைவிட இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் போக்கில் மாறுதல்கள் தெரியத் தொடங்கியுள்ளன. தி.மு.க.வை நம்பி மத்தியில் மீண்டும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைக் கொண்டு வந்தால் ஆக்க ரீதியான முறையில் மேலும் புதிய முடிவுகளை மேற்கொள்ளும் நிலையை தி.மு.க. கண்டிப்பாக உருவாக்கும்.
காரணம் தொடர்ச்சியாக இந்தப் பிரச்சினையில் தி.மு.க.வுக்கு சீரான அக்கறையிருந்து வந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாதே!
இந்த நிலையில் ஈழப் பிரச்சினையைக் காரணமாக்கி மத்தியில் பா.ஜ.க.வை அமர வைத்தால் ஈழப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக் காது; மேலும் மிகக் கடுமையான சீரழிவை நாடு சந்திக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுவிடும்; மதச்சண்டைகள் தெருக்களில் வழிந்து ஓடிக்கொண்டிருக்கும். வரும் தேர்தலில் ஒரு திசையில் மட்டும் பார்வை செலுத்தாமல் பல நோக்கிலும் தொலைநோக்கோடு அணுகவேண்டியது பகுத்தறிவுள்ள அனைவரின் கடமையாகும். வெறும் உணர்ச்சிகள் கைகொடுக்காது - எந்த இடத்திலும் அறிவை ஆளுமை உடையதாக வைத்திருக்கவேண்டும்.
---------------"விடுதலை" தலையங்கம் 8-5-2009
நடைபெறவிருப்பது மக்களவைத் தேர்தல்; இந்தத் தேர்தலில் தேசிய கட்சிகள் பல்வேறு மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து மாநிலங்களிலும் தனித்து நிற்கக் கூடிய அளவுக்கு எந்தத் தேசிய கட்சிகளும் இந்தியாவில் இப்பொழுது இல்லை.
மாநில அளவில் மாறுபட்ட நிலையிலும்கூட மத்திய ஆட்சியில் கூட்டணி வைத்துக்கொண்டிருந்த நிலையும் இந்தியாவில் உண்டு; எடுத்துக்காட்டாக மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரசும் எதிர் துருவத்தில் இருந்தாலும் மத்தியில் காங்கிரசோடு இணைந்து செல்லும் நிலையெல்லாம் இருந்திருக்கிறது.
கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் காங்கிரசை எதிர்த்து நிற்பார்கள்; மற்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு ஆதரவு காட்டுவார்கள்.
குறிப்பிட்ட மாநிலங்களில் காங்கிரஸ்பற்றி குற்றமாகத் தெரிவது வேறு மாநிலங்களில் தெரியாமல் மறைந்து போய்விடும் - இப்படி ஒரு விசித்திரமான அரசியல் போக்கு இந்தியாவில் உண்டு.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தி.மு.க. கூட்டணியில் மூன்றாண்டு இருந்த இடதுசாரிகள் அகில இந்திய அளவில் அக்கட்சிகளின் தலைமையெடுத்த முடிவுக்கிணங்க தி.மு.க.வின் எதிர் அணியில் தஞ்சம் புகுந்துள்ளன.
இந்தப் புதிய சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல, மூன்றாண்டுகள் வரை தி.மு.க. ஆட்சியில் தெரிந்திராத அறிந்திராத குறைபாடுகள், இப்பொழுது திடீரென்று தெரிய ஆரம்பித்திருக்கின்றன போலும்! குற்றப் பத்திரிகையைப் படிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதுவரை கடுமையாக இவர்களால் விமர்சிக்கப்பட்ட அ.இ. அ.தி.மு.க. புதிய கூட்டணி உறவு என்ற நிலையில் பாராட்டப்படும் நிலையை அடைந்திருக்கிறது.
எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிடலாம்.
தமிழக அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. மற்றும் பா.ம.க. கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டை வைத்து எதிர் காலத்தில் தமிழக அரசியல் கட்சிகளிடையே கூட்டணி சம்பந்தமாக பல்வேறு கருத்துகளை பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன. அப்படிப்பட்ட செய்திகளில் ஒன்றுதான் அ.தி.மு.க.வுடன் இடதுசாரிக் கட்சிகள் எதிர்காலத்தில் தேர்தல் உறவு வைத்துக் கொள்ளும் என்ற செய்தி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இந்தக் கருத்தை நான் மறுக்கிறேன்.
ஏனெனில், தமிழகத்தில் மதவெறி அபாயம் கவ்வியிருந்த நேரத்தில், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்குப் பெரும் பின் னடைவை ஏற்படுத்திய கட்சிதான் அ.இ.அ.தி.மு.க. இன்றுவரை மக்கள் நலம் பயக்கக் கூடிய திட்டங்களைத் தீட்டவோ அல்லது மத நல்லிணக்கத்தை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லவோ அ.தி.மு.க. முன்வரவில்லை. அப்படிப்பட்ட அ.தி.மு.க. வோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இடதுசாரிக் கட்சிகளோ கூட்டணி வைத்துத் தேர்தலில் போட்டியிடுவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. (தீக்கதிர், 21.6.2008).
- இவ்வாறு கூறியிருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் என். வரதராசன் ஆவார்.
இந்தக் கருத்துக்குப் பதவுரையோ, பொறுப்புரையோ தேவைப்படாது. இந்தத் தெளிவான நிலையை எடுத்தவர்கள் இப்பொழுது அதற்கு நேர்மாறான ஒரு நிலையை எடுத்துள்ளார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.
அ.தி.மு.க.மீது வைத்துள்ள குற்றச்சாற்று என்பது சாதாரணமானது அல்ல; அடிப்படையான ஆழமான குற்றச்சாற்று ஆகும். இந்த 11 மாதங்களில் அ.தி.மு.க. தன் நிலைப்பாட்டில் மாற்றம் பெற்றதும் இல்லை. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சினையான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ராமனைக் காட்டி முடக்கும் அ.தி.மு.க.வின் நிலை ஒன்று போதாதா?
உண்மை நிலைகள் இவ்வாறு இருக்க, தாங்கள் இருக்கும் அணி இலட்சிய அணி என்றும், இயற்கையான அணி என்றும் பேசுவதெல்லாம் யாரை ஏமாற்ற? பொதுமக்களின் பாமரத்தனம் கைகொடுக்கும் என்று நினைத்தால் அதைவிட மோசடி வேறு ஒன்று இருக்கத்தான் முடியுமா?
ஈழத் தமிழர் பிரச்சினையில் கூட தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் அடிப்படையில் மாறுபாடுகள் இருக்கின்றன.
அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குள்ளும் இப்பிரச்சினையில் மாறுபட்ட நிலைப்பாடுகள் உண்டே! அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகள் பிரச்சினையில் ஜெயலலிதா கொண்டுள்ள அழுத்தமான கருத்தினை அக்கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.வோ, பா.ம.க.வோ ஏற்றுக்கொள்கின்றனவா?
தொடக்கத்தில் இருந்ததைவிட இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் போக்கில் மாறுதல்கள் தெரியத் தொடங்கியுள்ளன. தி.மு.க.வை நம்பி மத்தியில் மீண்டும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைக் கொண்டு வந்தால் ஆக்க ரீதியான முறையில் மேலும் புதிய முடிவுகளை மேற்கொள்ளும் நிலையை தி.மு.க. கண்டிப்பாக உருவாக்கும்.
காரணம் தொடர்ச்சியாக இந்தப் பிரச்சினையில் தி.மு.க.வுக்கு சீரான அக்கறையிருந்து வந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாதே!
இந்த நிலையில் ஈழப் பிரச்சினையைக் காரணமாக்கி மத்தியில் பா.ஜ.க.வை அமர வைத்தால் ஈழப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக் காது; மேலும் மிகக் கடுமையான சீரழிவை நாடு சந்திக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுவிடும்; மதச்சண்டைகள் தெருக்களில் வழிந்து ஓடிக்கொண்டிருக்கும். வரும் தேர்தலில் ஒரு திசையில் மட்டும் பார்வை செலுத்தாமல் பல நோக்கிலும் தொலைநோக்கோடு அணுகவேண்டியது பகுத்தறிவுள்ள அனைவரின் கடமையாகும். வெறும் உணர்ச்சிகள் கைகொடுக்காது - எந்த இடத்திலும் அறிவை ஆளுமை உடையதாக வைத்திருக்கவேண்டும்.
---------------"விடுதலை" தலையங்கம் 8-5-2009
Friday, November 21, 2008
என் கையில் இருப்பது எழுதுகோல்! -தர்ப்பைப்புல் அல்ல! கலைவாணர் என்.எஸ்.கே. பதிலடி

கலைவாணர் - சீரிய பகுத்தறிவாளர்
அண்ணா அவர்களையும், பெரியாரையும் கவர்ந்த அந்த அற்புதமான நடிப்புத்தான் என்னே!
மாணிக்கவாசகர் எனும் படத்தில் அரண்மனை நிர்வாகியாகக் கலைவாணர் நடிக்கிறார். அவருக்கும் அரசருடைய குடும்பப் புரோகிதருக்கும் தகராறு ஏற்படுகிறது.
புரோகிதர் அரச குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், நிர்வாகிக்கு உரிய மரியாதை கொடுக்க மறுத்து அவரை மிரட்டுகிறார். அதற்குச் சற்றும் பணியாத நிர்வாகி (கலைவாணர்) தம் நிர்வாக உடையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, மேசை முன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
நிர்வாகி (கலைவாணர்) கால் மேல் கால் போட்டபடியே புரோகிதரைக் கீழும் மேலும் அலட்சியமாக முறைத்துப் பார்த்த வண்ணம் தலையை ஆட்டிக் கொண்டே என் கையில் இருக்கும் இது என்ன தெரியுமா? எழுதுகோல்! நினைவிருக்கட்டும். தருப்பைப்புல் அல்ல! தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு; ஜாக்கிரதை! என்று சொல்கிறார். இதுதான் மாணிக் கவாசகர் படத்தில் கலைவாணருக்குப் பாராட்டும் பெருமையும் பெற்றுக் கொடுத்த வசனமும் நடிப்பும். பெரியாரின் பழக்கம் ஏற்படக் காரணமாய் இருந்தவை.
***********************************************
கலைவாணரின் கலை உலகப் புகழை விண்முட்ட உயர்த்திய படம் சகுந்தலா. இந்தப் படத் தில் கலைவாணர் மீனவராக நடிக்கிறார். கதாநாயகி சகுந்தலை ஆற்றில் தவறவிட்ட மோதிரத்தை மீன் ஒன்று விழுங்கிவிடுகிறது. அடுத்த நாள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் வலையில் அம்மீன் அகப்படுகிறது. மீனை அறுத்துப் பார்க்க மோதிரம் கிடைக்கிறது. மோதிரத்தை அரசனிடம் கொண்டு கொடுக்கிறார் மீனவர். இந்தப் படத்தில் கலைவாணர் மீனவராக நடித்த காட்சியும், பாடலும் நாட்டு மக்கள் அனை வரையும் கவர்ந்துவிட்டன. கலைவாணர் மீனவர் உருவத்தில் இருந்தபடி பானை ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு, பானை மீது தட்டி தாளம் போட்டவாறு பாடுகிறார்: காலையிலே எழுந்திருச்சி கஞ்சித் தண்ணி இல்லாமே கஷ்டப்படுறேனே கடவுளே - நான் கஷ்டப் படுறேனே கடவுளே என்பதுதான் அந்தப் பாட்டின் பல்லவி. இவரது அந்தப் பாட்டிலும் நடிப்பிலும் அன்று மயங்காதவர்களே இல்லை என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு அற்புதமாக அமைந்திருந்தது.
*******************************************
கலைவாணர் பிறந்த நாஞ்சில் நாட்டை உள்ளடக்கிய திருவிதாங்கூர் ராச்சியத்தை ஆண்டு வந்தவர் சித்திரைத் திருநாள் மகாராசா ஆவார். இவரும், அரச குடும்பத்தாரும் கலை வாணரின் மேலான ரசிகர்கள். கலைவாணர் நடித்த படங்களை அரண்மனையில் திரை யிட்டுப் பார்த்து மகிழ்வர்.
கலைவாணரின் சகுந்தலா படத்தைப் பார்த்த பிறகு சித்திரை மன்னருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது. கலைவாணரை நேரில் பார்க்க வேண்டும். அவரைப் பாராட்ட வேண்டும். அவருக்குப் பரிசளிக்க வேண்டும் என்று எண்ணினார்.
சென்னைக்கு வந்தார். அப் போது சென்னையில் கலைவாணரும் மதுரமும் நியூடோன் ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். மன்னர் சித்திரைத் திருநாள் அங்கு சென்று அவர்களைப் பார்த்து அறிமுகம் செய்து கொண்டார். மன்னரின் விருப்பப்படி மன்னர் நடுவில் அமர கலைவாணரும் மதுரமும் மன்னரின் இரு பக்கங்களிலும் அமர போட்டோவும் எடுத்துக் கொண்டார்.
மன்னாதி மன்னர்களும் மதிக்க, முடிசூடா மன்னராகப் பெருவாழ்வு வாழ்ந்த பெருமைக்கு உரியவர் கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள்.
****************************************
கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கைகள் அவருடையவை. வாரி வாரி வழங்கிய வள்ளல் என வாழ்ந்த அவருடைய கைகள் நீண்டவைகளும்கூட.
அவர் அருள் உள்ளம் கொண்டவர். மனிதநேயம் மிக்கவர் என்பதற்கு இரண்டொரு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.
ஒரு நாள் அவரது வீட்டின் முன்புள்ள தெருவில் வெந்து அவிக்கும் வெயிலில், கையில் உண்டியலை ஏந்தியவாறு கோவிந்தா! கோவிந்தா! என்று கூறிக் கொண்டே தரையில் உருண்டு கொண்டிருந்தான் ஒரு கோவிந்தன்.
கலைவாணர் அவனைக் கூப்பிட்டு, இப்படி உருண்டு உடலைக் கெடுத்துக் கொள்கிறாயே உனக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு கிடைக்கும்? என்று கேட்டார். அய்ந்து ரூபாய் கிடைக்கும் என்றான். அந்தக் காலத்தில் ரூபாய் அய்ம்பதைக் கொடுத்து இந்தத் தெருவிலாவது உருளாமல் போ. வேறு வேலை செய்து பிழைத்துக் கொள் என்றார்.
*************************************************
அவருடைய சிலை திறப்பு விழா நடக்கின்ற இந்த நேரத்தில் அவரோடு நெருங்கிப் பழகிய என் போன்றோர்க்கு ஆயிரத் தெட்டு எண்ணங்கள், நெஞ்சத்திலே அலைமோதத்தான் செய்யும். அவைகளையெல்லாம் எடுத்து விளக்கிக் கொண்டிருப்பதற்கு நேரமில்லை. என்னுடைய உடல்நிலை அதற்குத் தகுந்ததாகவும் இல்லை. ஆனால் நெஞ்சத்திலே எண்ணி, எண்ணி இன்றல்ல என்றென்றும், நாம் மட்டும் அல்ல; நாட்டு மக்கள் அனைவரும் போற்றிப் பாராட்டத்தக்க தலைசிறந்த தமிழ்மகனாக வாழ்ந்தவர் நம்முடைய கலைவாணர் அவர்கள். அவருடைய சிலையினை உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலக் குழுவினர் அமைத்துக் கொடுத்திருப்பது மற்றொரு பொருத்தமானதாகும். அவர்கள் உலகத் தமிழ் மாநாட்டிற்கு ஒரு ஊர்வலத்தின் மூலம் சிறந்த மதிப்பினைத் தேடிக் கொடுத்தார்கள்.
அதைப் போலவே அவர்கள் ஏற்றுக் கொண்ட இந்தச் சிலையமைப்பின் காரியத்தின் மூலமும் அவர்கள் கலைத் துறைக்கு நிரந்தரமான ஒரு தொண்டினை நிறைவேற்றிக் கொடுத்திருக் கின்றார்கள். அந்தக் குழுவினருக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றுபோல் என்றென்றும் கலை உலகத்திலே உள்ளவர்கள், கலையுலகத்தாலே பயன் பெற்ற வர்கள், சீர்திருத்த உலகத்திலுள்ளவர்கள். சமூகத்தின் தொண்டர்கள் அனைவரும் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களைப் போற்றுவார்களென்பதில் எனக்கு ஒரு துளி அய்யப்படும் இல்லை என்பதை தெரிவித்துக் கொண்டு, அவருடைய சிலையினை மகிழ்ச்சியாடும் பெருமிதத்தோடும் திறந்து வைக்கிறேன் என்று அறிஞர் அண்ணா பேசினார்.
****************************************
ரஷ்யா சென்று வந்த கலைவாணர் கூறிய செய்திகள்:
நான் நல்லதம்பி என்ற சினிமா படத்தின் மூலம் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தேன். ஆனால் அதற்காக நம் அரசாங்கத்திடமிருந்து ஒரு பாராட்டுக் கடிதம் கூட வரவில்லை. இதை எண்ணிப் பார்க்கும்போது வெட்கப்பட வேண்டியிருக்கிறது.
மேலும் நான் ரஷ்யா சென்று திரும்பியது குறித்து நம் அரசாங்கமும் காங்கிரசு நிறுவனமும் கவனிக்கவே இல்லை. ஒரு காங்கிரஸ்காரர் கூட என்னை விசாரிக்கவில்லை. இவர்கள் வெளிநாடு செல்லும் நம்நாட்டுக் கலைஞன் ஒருவனை வழியனுப்பவுமில்லை என்பதையும், அவன் திரும்பி வரும்போது வரவேற்கவுமில்லை என்பதையும் எண்ணிப் பார்க்கையில் நான் வெட்கித் தலை குனிய வேண்டியதாகின்றது.
--------------------நன்றி: "விடுதலை" 21-11-2008
Subscribe to:
Posts (Atom)